Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு துரி­த­க­தியில் தீர்­வு­காண முய­ல­வேண்டும்

Featured Replies

தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு துரி­த­க­தியில் தீர்­வு­காண முய­ல­வேண்டும்

 

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வா­னது தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­திலும் அன்று ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை அறிந்­தி­ருந்தும் கூட அதற்கு தீர்­வு­காண இத­ய­சுத்­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­க­வில்லை. இதனால் யுத்­தத்தில் பெரும் அழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் சுமந்து வாழ­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில்தான் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றது. யுத்தப் பாதிப்­புக்­க­ளுக்­குள்­ளான தமிழ் மக்­களும் தமக்கு விடிவு ஏற்­படும் என்று கருதி ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தமது ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தனர்.

இதன்­மூ­லமே நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. புதிய அர­சாங்­க­மா­னது தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைத் தரும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்து காத்­தி­ருந்­தனர். அர­சாங்கம் பத­வி­யேற்­ற­வுடன் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்த போதிலும் அந்த செயற்­பா­டா­னது மிகவும் மந்­த­க­தி­யி­லேயே நடை­பெற்­றது.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­துடன் வலி­காமம் வடக்குப் பகு­தியில் 4000 ஏக்கர் வரை­யான காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தன. கிழக்கில் சம்­பூர்ப்­ப­கு­தியில் 800 ஏக்கர் காணி மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இதே­போன்று வன்­னிப்­ப­கு­தி­யிலும் சொற்ப அள­வான காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆனாலும் தமிழ் மக்கள் எதிர்­பார்த்­ததைப் போன்று துரி­த­க­தியில் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் அதி­பா­து­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் பொது­மக்­களின் காணி­களை படைத்­த­ரப்­பினர் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தனர். யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் பொது­மக்­களின் காணிகள் முழு­மை­யாக படைத்­த­ரப்­பி­னரால் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­க­ வேண்டும். ஆனால் இந்த விட­யத்தில் படைத்­த­ரப்­பினர் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்­ள­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­பின்னர் காணிகள் விடு­விக்­கப்­பட்­ட­போ­திலும் பெரு­ம­ள­வான காணிகள் இன்­னமும் படைத்­த­ரப்­பினர் வசமே உள்­ளன.

இதே­போன்றே தமிழ் மக்­களின் காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்­கான தீர்வு, அர­சியல் கைதிகள் விவ­காரம், மக்­களின் மீள் குடி­யேற்றம் உட்­பட பல்­வேறு அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது தீர்வைக் காண­வில்லை. இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண அர­சாங்கம் முயன்­ற­போ­திலும் அந்த முயற்­சிகள் பாதிக்­கப்­பட்ட மக்­களை திருப்­திப்­ப­டுத்தும் வகையில் அமை­ய­வில்லை.

இதனால் காத்­தி­ருந்த மக்கள் வெறுப்­படைந்த நிலையில் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­தனர். வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வரையில் தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெற்­றி­ருந்த போதிலும் தமது பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான அழுத்­தங்­களை அர­சாங்­கத்­திற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வழங்­க­வில்லை என்று தமிழ் மக்கள் அதி­ருப்தி அடைந்­தனர். இத­னால்தான் தாமா­கவே மக்கள் போராட ஆரம்­பித்­தனர்.

தமது காணி­களை விடு­வித்து தரு­மாறு கோரியும் காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்­பதை கண்­ட­றிந்து உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் மக்கள் வடக்கு, கிழக்கில் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். காணா­மல்­போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி 300 நாட்­க­ளுக்கு மேலாக மக்கள் வடக்கு, கிழக்கில் போரா­டு­கின்­றனர். இதே­போன்றே தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி வடக்கில் தொடர் போராட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

முல்­லைத்­தீவு, கேப்­பாப்­பு­லவு மக்கள் தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி 303 நாட்­க­ளுக்கு மேலாக தொடர்ச்­சி­யான போராட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். மக்­களின் போராட்டம் கார­ண­மாக கேப்­பாப்­புலவு, பிலக்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஒரு தொகுதி காணி கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும் கேப்­பாப்­பு­லவு பூர்­வீகக் குடி­யி­ருப்பு மக்கள் தொடர்ச்­சி­யாக தமது போராட்­டங்­களை முன்­னெ­டுத்தே வந்­தனர். இதன் கார­ண­மாக நேற்று அந்த மக்­க­ளுக்கு சொந்­த­மான 133 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள கேப்­பாப்­புலவு கிரா­மத்தில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருந்த முகாம்­களை அகற்றி இந்த காணி­யினை விடு­விப்­ப­தற்­காக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் மூலம் 148 மில்­லியன் ரூபா படைத்­த­ரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அமைச்சர் டி.எம். சுவாமி­நா­தனின் ஏற்­பாட்­டி­லேயே இந்த நிதி வழங்­கப்­பட்டு 133 ஏக்கர் காணிகள் நேற்று விடு­விக்­கப்­பட்­டன.

அமைச்சர் சுவா­மி­நா­தனின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது வர­வேற்­கத்­தக்­க­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் என்­ற­ வ­கையில் தன்னால் இயன்ற செயற்­பா­டு­களை அமைச்சர் முன்­னெ­டுத்து வரு­கின்றார். ஆனாலும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு அமைய துரி­த­மாக அவர்­க­ளது காணி­களை விடு­விக்க முடி­யாத நிலையில் அர­சாங்கம் உள்­ள­மை­யா­னது கவ­லை­யளிக்கும் விட­ய­மா­கவே உள்­ளது.

கேப்­பாப்­பு­லவில் 133 ஏக்கர் காணிகள் நேற்று விடு­விக்­கப்­பட்ட போதிலும் இன்­னமும் 321 ஏக்கர் காணி விடு­விக்­கப்­ப­டாமல் உள்­ளது. எனவே அந்தக்­கா­ணிகள் விடு­விக்­கப்­படும் வரை தமது போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என்று அப்­ப­குதி மக்கள் அறி­வித்­தி­ருக்­கின்­றனர்.

அப்­ப­குதி மக்கள் சார்பில் கருத்து தெரி­வித்­துள்ள ஆறு­முகம் வேலா­யு­தப்­பிள்ளை என்­பவர், எங்கள் நிலங்­களை எங்­க­ளி­டமே தாருங்கள் என்று கேட்டு 300 நாட்கள் போராட்டம் நடத்­தியும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மனச்­சாட்சி உறக்­கத்­தி­லி­ருந்து எழவே இல்லை. எங்­களை இந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் மந்­தை­க­ளாக கரு­து­கி­றது. ஒரு துண்டு நிலம் கூட மிச்­ச­மில்­லாமல் எங்­க­ளிடம் மீள வழங்கும் வரையில் தொடர்ந்தும் போரா­டுவோம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தற்­போது ஒரு­தொ­குதி காணி விடு­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் இந்த மக்கள் தொழில் செய்­யக்­கூ­டிய பகு­தி­க­ளையும் கரை­யோரப்­ப­கு­தி­க­ளையும் முக்­கிய இடங்­க­ளையும் படை­யினர் தம்­வ­சமே வைத்­துள்­ளனர். இதனால் இந்த மக்கள் தொழில் செய்ய முடி­யாத நிலைமை ஏற்­படும் என்றும் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. எனவே கேப்­பாப்­பு­லவு பகு­தியில் பொது­மக்­களின் காணிகள் முழு­வ­தையும் படைத்­த­ரப்­பினர் மீள ஒப்­ப­டைக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். இதற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­த­க­தியில் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

இதே­போன்றே பூந­கரி, இர­ணை­தீவு பகுதி மக்­களும் தம்மை தமது சொந்த இடங்­களில் மீள குடி­யேற்­று­மாறு கோரி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து அந்த மக்­களை தொழில் செய்­வ­தற்கு அனு­மதி அளிப்­பது என்றும் குறிப்­பிட்­ட­ள­வான பகு­தியில் மக்­களை மீளக்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான நில அள­வீ­டு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஆனாலும் இன்­னமும் அந்த மக்­களின் காணி­களும் மீள ஒப்­ப­டை­க்­கப்­ப­ட­வில்லை. யாழ்ப்­பா­ணத்தில் மயி­லிட்­டிப் ப­குதி உட்­பட மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கப்­ப­கு­தியும் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இந்­தப்­ப­கு­தி­யிலும் மக்கள் மீளக்­குடி­யே­றக்­கூ­டிய நிலைமை இன்னும் ஏற்­ப­ட­வில்லை. குடா­நாட்டில் இன்­னமும் பொது­மக்­களின் காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டா­மை­யினால் 30 ஆயிரம் பேர் வரையில் இன்னமும் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களையும் மீளக்குடியேற்றவேண்டியது அவசியமாக உள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் 6 மாத காலத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியேற்றுவேன் என்று உறுதி வழங்கியிருந்தார். ஆனால் அந்த உறுதிமொழி இன்னமும் நிறை வேற்றப்படவில்லை.

எனவே, தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கமானது துரிதகதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணிகளை முழுமையாக விடு வித்து மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். இதேபோன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணும் விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும். இதன்மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.