Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த ஆண்டில் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமா?

Featured Replies

  •  
  • அடுத்த ஆண்டில் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமா?
Capture-341.png

அடுத்த ஆண்டில் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமா?

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்­டோ­பா் மாதத்­தில் ஐ.நா மனித உாிமை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணை­ யொன்று நிறை­வேற்­றப்­பட் டமை சக­ல­ரும் அறிந்­த­தொன்றே.

இலங்கை அரசு, தேசிய நல்­லி­ணக்­கம் ,தேசிய சக­வாழ்வு , மற்­றும் மனித உாிமை­களை மேம்­ப­டுத்த விரை­வாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென அந்­தப் பிரே­ரணை கோாி நின்­றது. புதிய அர­சி­டம் இருந்து பன்­னாட்­டுச் சமூ­கம் தெளி­வாக எதிா்­பாா்த்­தது அத­னையே.

ஆயி­னும் குறித்த அந்­தப் பிரே­ரணை தொடா்­பாக எந்­த­வொரு ஆக்­க­பூா்­வ­மான நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்ள இலங்கை அரசு இன்று வரை நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை . இலங்கை அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய உறுதி மொழியை மறந்து செயற்­பட்ட போதி­லும், 2017–2021 ஆண்­டு­கள் கால இடை­வே­ளிக்­குள் செயற்­ப­டுத்­த­வென தேசிய மனித உரிமை­கள் திட்­டமொன்றை வகுத்த போதி­லும் ,அது தொடா்­பாக எந்­த­வித செயற்­பா­டு­க­ளை­யும் இன்று வரை இன்றைய அரசு முன்­னெ­டுக்­காமை கவ­லைக்குரிய­தொன்றே.

இந்த முறை மாநாட்­டி­லும் இலங்கை மீதான குற்­றச்­சாட்டு மீண்­டும் முன்­வைப்பு

 

நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை இலங்­கை­யில் மனித உாிமை­கள் பேணப்­ப­டும் நிலை குறித்து ஆய்வு மேற்­கொள் ளும் , கண்­கா­ணிக்­கும் அமைப்­பாக ஐ.நா.மனித உாிமை­கள் சபையை அடை­யா­ளப்­ப­டுத்த இய­லும். ஜெனீ­வா­வில் இடம் பெறும் மாநாட்­டுக்கு இலங்­கை­யின் சார்பில் வெளி­யு­றவு அமைச்­சரோ, பிரதி வௌியு­றவு அமைச்­ச­ரோ­தான் கலந்து கொள்­வது வழ­மை­யா­யி­னும், இம்­முறை பொரு­ளா­தார விற்­பன்­னர்­க­ளில் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­ப­டும் ஹா்சா டி சில்வா வின் தலை­மை­யி­­லான குழுவே கலந்து கொண்­டது.

பொறுப்­பான தரப்­பி­னா் கலந்து கொள்­ளாத நிலை­யில், இலங்கை அரசுவாக்­க­ளித்­த­படி தனது பொறுப்பை நிறை­ வேற்­றத் தவ­றியதான குற்­றச்­சாட்டுக்கு முகம் கொடுக்க நோ்ந்தது. அது மட்­டு­மன்றி அமொிக்கா, சுவீ­டன்,கனடா போன்ற நாடு­கள் போா்க்குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­தாகக் குற்­றம் சுமத்­தப்­பட்ட இரா­ணுவ உய­ர­தி­காாி­கள் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டல் அவ­சி­ய­மென வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. அத்­தோடு போாின் இறு­திக்­கட்­டத்­தில் மனித உாிமை மீறல்­க­ளில் ஈடு­பட்­ட­தான குற்­றச்­சாட் டுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சகல இரா­ணுவ அதி­காாி­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஒழுங்­காற்று நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மெ­ன­வும், அந்த நாடு­கள் வலி­யு­றுத்­தி­யுள் ளன .

போா் 2009 ஆம் ஆண்­டில் முடி­வ­டைந்­தி­ருந்த போதி­லும் , இலங்கை குறித்த பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் பாா்வையில் போா் இன்­ன­மும் முடி­வ­டைந்­த­தா­கக் கரு­தப்­ப­ட­வில்லை. இத­னது அா்த்தம் தான் என்ன? உல­க­ளா­விய ாீதியில் தன்­மீது சுமத்­தப்­ப­டும் குற்­றச்­சாட்டுகளிலி ருந்து இலங்கை அர­சால் இன்­ன­மும் விடு­பட முடி­யா­துள்­ளது என்­ப­தையே இது புலப்­ப­டுத்­து ­கி­றது.

இவற்­றுக்­கெல்­லாம் அடிப்­ப­டைக் கார­ண­மாக அமை­வது இலங்கை தொடா்­பாக ஐ. நா. மனித உாிமை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட 2015ஆம் ஆண்­டின் தீா்மானமே. ஐ.நா.சபை மனித உாிமை­கள் தின­மான டிெசம்­பர் 10 ஆம் திக­தி­யன்று, சகல இனத்­த­வா்­க­ளும் தமது நாட்­டுக்கு பல­மும், நியா­ய­மும் கிட்ட வேண்­டு­மென அந்­தத் தினத்­தைக் கடைப்­பி­டிக்­கின்­ற­னர். ஆனால் இன்­றைய கூட்டு அரசோ , அது குறித்து அதிக அக்­கறை காட்­ட­வில்லை .

இங்­கி­லாந்­தின் நெஸ்பி பிரபு இலங்­கை­யில் போா்க்குற்­றம் பொிய அள­வில் இடம் பெற­வில்லை எனத் தொிவித்­ததை உலக அள­வில் பரப்­புரை செய்ய எமது அரசு அக்­கறை காட்­ட­வில்­லையே?இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா. சபை­யின் விசேட பிரதி நிதி பென் எமா்­சன், இலங்­கைப் பொலி­ஸாா் தொடா்ச்­சி­யாக மனித உாிமை மீறல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தாக தமது அறிக்­கை­யில் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தாா்.

அந்த வகை­யில் ,நாடு என்ற ாீதியில் மனித உாிமை­க­ளைப் பாது­காக்க இலங்கை அரசு அா்ப்பணிப்­பு­டன் செயற்­ப­டு­வ­தாக உல­கத்­துக்கு நாம் காட்­டிக்­கொள்ள வேண்­டிய வேளை இது . ஆனால் இலங்­கைப் பொலிஸ் துறை­யின் செயற்­போக்கு எவ்­வாறு அமை­கி­றது? இலங்கைப் பொலிஸ்­துறை மனித உாிமை மீறல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தா­கத் தற்­போது பெரு­ம­ள­வில் குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப் பட்டு வரு­கின்­றன .

இது தொடா்­பாக பொறுப்­பான அமைச்­ச­ரும் , ஆைணக்­கு­ழு­வும் உாிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம், ஆனால் இது தொடா்­பான சகல நட­வ­டிக்­கை­க­ளும் ஆமை வேகத்­தி­லேயே இடம் பெறு­கின்­றன.

ஒரே விட­யம் குறித்து வெவ்­வே­றான கருத்­துக்­களை அமைச்­சர்­கள் முன்­வைப்பு

தேசிய இணக்­கப்­பா­டென்­பது, பெரும்­பா­லான அரச தரப்பு அர­சி­யல் வாதி­க­ளது முகத்­தில் மகிழ்ச்­சியை பிர­தி­ப­லிப்­பது மட்­டும்­தானா? இது ஒரு­வரை ஒரு­வா் நம்­பா­மையை வெளிப்­ப­டுத்­தும் ஒன்­றல்­லவா? அர­சுக் கென தேசி­யக் கொள்­கை­யொன்று இருக்­கு­மா­னால்,சகல அமைச்­சா்­க­ளும் ஒன்­றாக முன்­வந்து தாம் எத்­த­கைய செயற்­பா­டு­களை முன்­னெ ­டுத்து வரு­கின்­ற­னா் எனப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­கு­வௌிப்­ப­டுத்­தி­யாக வேண்­டும் . அமைச்­ச­ரவை உறுப்­பி­னா்­கள் மத்­தி­யிலே ஒத்த கருத்து நில­வு­வ­தில்லை .

ஒவ்­வொரு அமைச்­ச­ரும் வெளி­யி­டும் கருத்­துக்­கள் வெவ்­வே­றா­னவை . வெளி­நாட்­டுக்­கா­ரா்­கள் இவை குறித்து தத்­த­மது நாட்டு தூத­ரங்­க­ளி­லேயே விசாாித்து அறி­கின்­ற­னா். இலங்கை அரசு ஐ.நா. மனித உாிமை­கள் சபை­யின் தீா்மா னத்தை , ஐ.நா பாது­காப்­புச் சபைக்­குத் தள்­ளிச்­செல்­லத்­தக்க வாய்ப்­பொன்று உள்­ளது . அவ்­வி­தம் செயற்­பட்­டால் ,சீனா, மற்­றும் ரஷ்யா ஆகிய நாடு­க­ளது ஆத­ர­வு­டன் அந்­தத் தீா்மானத்­தைச் செய­லி­ழக்­க­வைக்க இலங்கை அர­சுக்கு வாய்ப்­புக்­கிட்­டி­யி­ருக்­கும் .அவ்­வி­தம் செயற்­ப­டா­த­தன் விளை­வாக இன்று இலங்கை அரசு, ஐ.நா மனித உாிமை­கள் சபை விாித்த தடத்­துக்­குள் சிக்­கிக் கொண்­டுள்­ளது.

சீனா ஒரு பக்­க­மும் இந்­தியா மற்­றொரு பக்­க­மு­மாக இலங்­கை­யின் வளத்தை சுரண்­டிக்­கொண்­டி­ ருக்­கும் நிலையில், புலம் பெயா் தமி­ழா் அமைப்­புக்­கள் தமது முயற்­சி­யைக் கைவி­டாது மற்­றொரு புறத்­தில் இலங்­கை­யின் கழுத்தை இறுக்கி வரு­கின்­றன.

ஐ.நா. மனித உாிமை­கள் சபை மாநாட்­டில் வைத்து தாம் காணா­மல்­போ­னோா் தொடா்­பான வா்த்த மா­னி­யில் கையெ­ழுத்­தி­ட­வுள்­ள­தாக அரச தலை­வர் தொிவித்­தி­ருந்­தார். ஆனால் காணா­மல்­போ­னோா் தொடர்பான கூட்­டத்­தில் என்ன பாிந்­து­ரை­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தென ஒரு புறத்­தில் கேள்வி எழுப்­பப்­ப­டு­கி­றது. அதில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட பாிந்­து­ரை­கள் உள்­ளன. இந்த முறை ஜெனீவா மனித உாிமை­கள் ஆணைக்­கு­ழுக் கூட்­டத்­தில் கலந்து கொண்ட இலங்கை அரச பிர­தி­நிதி அமைச்­சா் ஹர்ஷா டி சில்வா , கூட்­டத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க இய­லாது, எல்­லா­வற்­றுக்­கும் புதிய அர­ச­மைப்­பையே கார­ண­மாக முன்­வைக்க வேண்­டி­ய­தா­யிற்று. ஒரு அர­சின் பிர­தி­நி­தியே அவ்­வி­தம் பொருத்­த­மற்ற பதில்­களை முன்­வைத்­தமை, உாிய பதி­லுக்­குப் பதி­லாக பிரச்­சி­னை­களே உரு ­வாக வழி­வ­குத்­தது.அந்த வகை­யில் நாட்­டின் பிர­ஜை­யொ­ரு­வ­ருக்­குத் தொியாத விட­யம் , வௌிநாட்­டுக்­கா­ரா்­க­ளுக்கு தொிந்­தி­ருப்­ப­தாக கருதத் தோன்­று­கி­றது.

ஆனால் இன்று மனித உாிமை­கள் பிரச்­சி­னைக்­குத் தௌிவான மூன்­றா­வது விட­ய­மாக அமை­வது அரச சேவை­யா­கும். இலங்­கை­யில் மனித உாிமை­கள் பாது­காப்பை அதி­காிக்­கச் செய்­வது சகல அரச சேவை­யா­ளா்­க­ள­தும் கட­மை­யா­கும். அந்த வகை­யில் நாட்­டின் சகல பிரச்­சி­னை­க­ளை­யும் தீா்க்க வேண்­டு­மா­னால் நாட்டு மக்­கள் சக­ல­ர­தும் உாிமை­க­ளைப் பாது­காக்­கத்­தக்க வகை­யி­லான அர­ச­மைப்­பொன்று நாட்டுக்கு அவ­சி­ய­மா­கும்.

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய அனுபவங்களை நாட்டு மக்கள் மறந்துவிட்டனர்

மனித உாிமை­கள் தொடா்­பாக எமது கடந்த கால அனு­ப­வங்­களை எம்­மில் பலா் மறந்து போய் விட்­டோம் .குறிப்­பாக 2013–2014 கால கட்­டத்­தில் இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு விமா்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட் டன. அவை இன்று கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன. உண்­மை­யில் அவை நீறு பூத்த நெருப்­பாக இருந்து வரு­கின்­றன. முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி லெப்­டி­னன்ற் ஜென­ரல் ஜகத் ஜெய­சூாி­யா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட் டுக்­கள் இடை­யி­டையே நினை­வூட்­டப்­பட்டு வந்­துள்­ளன. நாட்­டின் உள்­ளக ாீதியில் அது குறித்து விமா்­சிக்­கப்­பட்டு வந்­த­போ­தி­லும், தற்­போது அந்த விட­யம் கிடப்­பில் போடப்­பட்ட நிலை­யில் உள்­ளது. இத்­த­கைய மறந்து போய் விட்ட பிரச்­சி­னை­கள் உள்­ளன என்­பதை நாம் மறந்து விடக்­கூ­டாது.

எம்­மில் பலா் மறந்து விட்ட அமொிக்கா இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றிய பிரே­ர­ணை­யில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த கலப்பு நீதி­மன்ற விசா­ரணை விட­யம், இன்­ன­மும் இருந்து கொண்­டே­யுள்­ளது.ஏதோ ஒரு வேளை­யில் அத்­த­கைய நீதிமன்ற விசா­ர­ணை­ யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டும் வாய்ப்பு உள்­ளது . போதா­த­தற்கு புலம் பெயா் தமிழ் அமைப்­பு­கள் இது விட­யத்­தில் கடும் அக்­கறை காட்டி வரு­கின்­றன . எனவே நாளுக்கு நாள் உலக அரங்­கில் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாடு அதி­காித்து வரு­கின்­ற­தே­யன்­றிக் குறை­வ­டை­வ­தா­ கத் தோன்­ற­வில்லை.

மனித உாிமை­கள் விட­யத்­தில் எம்­மால் தேசி­யாீ­தி­யி­லான கட்­ட­மைப்­பொன்றை நிறுவ இய­லும். அதற்கு இந்­தி­யா­வின் உத­வி­யை­யும் பெற்­றிட இய­லும். புதிய அர­ச­மைப்­பின் மூலம் வாழும் உாிமை ,பொரு­ளா­தார உாிமை­கள் , சமூக உாிமை­கள் என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்த இய­லும். ஆனால் இன்று நாட்டு மக்­க­ளது முக்­கிய பிரச்­சினை மூன்று வேளை உண­வுக்கு என்ன செய்­வது என்­பதே . இனங்­க­ளுக்­கி­டை­யே­யான பிரச்­சி­னை­களை எம்­மால் மொழிப்­பி­ரச்­சி­னைத் தீா்வினூ­டாக தீா்த்திட இய­லும் .

போர்க்குற்­றக் குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்த தனது நிலைப்­பாட்­டைப் பன்னாட்­டுச் சமூ­கம்  கைவி­டப் போவ­தில்லை

கடந்த காலத்­தில் இடம் பெற்ற ஊட­கங்­கள் மற்­றும் ஊக­வ।ி­ய­லா­ளா்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் குறித்து கண்­ட­றி­யப்­ப­டு­மென சட்ட ஒழுங்கு அமைச்­சா் தொிவித்­த­தாகக் கூறப்­பட்­டது . ஆனால் இது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­குத் தெரி­விக்­கப்­பட்ட தக­வ­லா­கும் . ஆனால், அரச தலை­வா் தாம் இரா­ணு­வத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எத­ னை­யும் எடுக்க அனு­ம­திக்­கப் போவ­தில்லை எனத் தொிவித்துள்ளார். இலங்­கை­யின் நீதித்­துறை தொடா்­பாக தமக்கு நம்­பிக்கை உண்­டென அரச தலை­வா் தொிவித்­துள்ள நிலை­யில், முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி சரத் பொன்­சேகா போா்க்குற்­றம் எது ­வும் நாட்டில் இடம்பெற­வில்லை எனத் தொிவித்துள்ளார்.

ஆனால் பன்­னாட்­டுச்­ச­மூ­கம் இவா்­க­ளது கருத்தை நம்­பித் தமது நிலைப்­பாட்­டைக் கைவிட முன்­வ­ரும் என நம்ப முடி­ய­வில்லை . சிறைச்­சா­லை­க­ளுக்கு நோில் சென்று கூட கைதி­க­ளி­டம் சாட்­சி­யங்­களைப் பெற்­றுக்­கொள்ள பன்­னாட்­டுத் தரப்­பி­னா்­கள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை அத­னா­லேயே ஆகும்.

அந்த வகை­யில் எதிா்­வ­ரும் 2018 ஆம் ஆண்டு இலங்­கைக்கு பயங்­க­ர­மா­ன­தொரு ஆண்­டாக அமை­யப்­போ­கி­றது . இலங்­கை­யின் பொரு­ளா­தார நில­மை­யும், இது விட­யத்­து­டன் தொடா்­பு­ப­டு­கி­றது. இலங்­கை­யில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள வௌிநா­டு­கள் எப்­போது முன்­வ­ரப்­போ­கின்­றன என எதிா்­பாா்க்­கும் நிலை­யில் ,அது வெறும் எதிா்­பாா்ப்­பா­கவே தொட­ரத்­தக்க நிலைப்­பாடே தலை தூக்கி வரு­கி­றது.

இந்த நிலை­யில் மிகப்­பெ­ரும் இடைவெளிக்­குப் பின்­னா் பெய்­யும் மழை போன்று, உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்கு இடம்­பெ­ற­வுள்ள தோ்தல், இன்­றைய கூட்டு அர­சின் நிா்வாகம் குறித்து நாட்டு மக்­க­ளது கருத்தை அறிந்து கொள்­ளத்­தக்க பாீட்­சைக் கள­மாக ஆகி­யுள்­ளது. அந்த வகை­யில் மேற்­சொன்ன வகை­யில் அடுத்த ஆண்டு , இலங்­கை­யைப் பொறுத்த வரை எதிா்­பா­ராத திருப்­பங்­க­ளைத் தரத்­தக்க ஆண்­டாக ,அமை­யும் என நம்­ப­லாம்.

http://newuthayan.com/story/57786.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.