Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு

Featured Replies

BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு

ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தனது கட்சிக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தம்தான் என்று கூறுகிறார்.

ஹஃபீஸ் சயீத்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர், ஹஃபீஸ் சயீத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி என்று கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" நடவடிக்கையை ஜமாத்-உத்-தவா அமைப்பு எதிர்கொண்டிருப்பதால் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என பாகிஸ்தான் கருதுகிறதா என்று ஹஃபீஸ் சயீதிடம் பிபிசி உருது செய்தியாளர் ஷஃபி நகி ஜாமய் கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ஹஃபீஸ் சயீத், தனக்கு அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்றும், அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்.

மேலும், "அமெரிக்கா மற்றும் இந்தியா கொடுக்கும் அழுத்தத்தால்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அந்த நாடுகளின் கண்ணோட்டத்தில் இருந்தே பேசுகிறார் என்பதும் எனக்கு புரிகிறது" என்கிறார் அவர்.

மோடிபடத்தின் காப்புரிமைAFP

தன் மீதான அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றங்கள் தன்னை நிரபராதி என்றே அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டும் சயீத், ஆனால், சில அரசியல்வாதிகள் வேறொரு கோணத்தில் வேலை செய்வதோடு, தனக்கு எதிராக பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டினார்

"எங்களுடைய பங்களிப்பைப் பற்றி உலகமே அறிந்திருக்கிறது. பெஷாவரில் குழந்தைகள் தாக்கப்பட்டபோது உதவி செய்வதற்கு முதலில் சென்றவர்கள் நாங்கள்" என்கிறார் ஹஃபீஸ் சயீத்.

அதேபோல், நாடு முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பிரசாரம் செய்வதோடு, அதற்கான பிரசுரங்களை விநியோகம் செய்கிறோம். இவர்கள் அனைவரும் எங்களுக்கு எதிராக எந்த நோக்கத்தில் செயல்படுகிறார்கள் என்று புரியவில்லை என்கிறார் ஹஃபீஸ் சயீத்.

'அமெரிக்காவுடன் சண்டை இல்லை'

அமெரிக்கா ஹஃபீஸ் சயீத் மீது இலக்கு வைத்து தாக்குவது பற்றி கேட்டதற்கு அவ்வாறு கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகள் என்று அவர் மறுத்தார்.

"அமெரிக்காவுடன் எங்களுக்கு எந்தவித பிணக்கும் இல்லை, நாங்கள் காஷ்மீரைப் பற்றி பேசுகிறோம், எங்களுக்கு எதிராக சொல்லப்படுவது அனைத்தும் இந்தியாவின் கோணத்தில் இருந்து சொல்லப்படுவதே. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பேசுகிறது" என்கிறார் ஹஃபீஸ் சயீத்.

ஹஃபீஸ் சயீத்படத்தின் காப்புரிமைAFP

ஆப்கானிஸ்தானில் பிரதானமாக செயல்பட்டு வரும் ஹக்கானி நெட்வொர்க்குடன் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவதைப் பற்றி பேசிய சயீத், "ஹக்கானி அமைப்பினருக்கு அவர்களது சொந்த நலன்கள் முக்கியமானது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்கள். நாங்கள் காஷ்மீருக்காக போராடுகிறோம். சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை, காஷ்மீருக்காக போராடுபவர்களையே நாங்கள் சரியானவர்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

"அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் இருக்கக்கூடாது, அது திரும்பிச் செல்லவேண்டும் என்று ஹக்கானி அமைப்பு கூறினால் அதை எங்களால் புரிந்துக்கொள்ள முடியும். எங்களுக்கும், அவர்களுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை" என மேலும் தெரிவித்தார்.

"இந்தியாவும், அமெரிக்காவும் குழப்பம் விளைவிக்கின்றன"

"அமெரிக்காவுக்கு ஹக்கானி நெட்வொர்க் பிரச்சனை, இந்தியாவுக்கும், எங்களுக்கும் பிரச்சனை. எனவே, இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து குழப்பம் விளைவிக்கின்றன" என்று சொல்கிறார் ஹஃபீஸ் சயீத்.

மோடி டிரம்ப்படத்தின் காப்புரிமைEPA

பாகிஸ்தானுக்கு செய்யும் உதவிகளை அமெரிக்கா நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது பற்றி ஹஃபீஸ் சயீத் என்ன சொல்கிறார்?

"பிரச்சனை இருந்த காலங்களில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு உதவி செய்தது. ஆனால், ஆஃப்கானிஸ்தானில் தனது தோல்விக்கு காரணமாக பாகிஸ்தானை பலிகடாவாக்குகிறது அமெரிக்கா" என்று சொல்கிறார் சயீத்.

"இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்கா எங்கள் மீது குற்றம் சுமத்துவதுதான். அமெரிக்கா வெற்றியடையவில்லை, ஆனால் அதற்கான முழு காரணம் பாகிஸ்தான் என்று சொல்வது வருந்தத்தக்கது" என்று அவர் கூறினார்.

"காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு தேவை"

இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவுகள் சிறப்பாக இருக்கவேண்டும் என்று ஹஃபீஸ் விரும்புகிறாரா என்று கேட்டோம். தற்போதைய நிலையில், பிரச்சனைக்கு எந்த தீர்வும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

ஹஃபீஸ் சயீத்படத்தின் காப்புரிமைARIF ALI/AFP/GETTY IMAGES

"பாகிஸ்தானும், இந்தியாவும் சமரச போக்கை கடைபிடிக்கவேண்டும், ஆனால், அதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான காஷ்மீர் என்ற அடிப்படை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும், நாங்கள் வலியுறுத்துவது அதைத்தான்" என ஹஃபீஸ் சயீத் மேலும் கூறுகிறார்,

"இல்லாவிட்டால் தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை. இதைத்தான் நாங்கள் அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் சொல்கிறோம். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள், அப்படியே இந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வை ஏற்படுத்துங்கள் " என்றார் அவர்.

"ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பிரச்சனைகள் பல இருக்கும். எப்போதும் போர்ச்சூழல் நிலவுவதை நாங்கள் விரும்பவில்லை. பாகிஸ்தான் மீது தடை விதிப்பது அவர்களின் விருப்பம். எங்களுக்கு தேவையானது பாகிஸ்தான் - இந்தியா சமரசமே. "

இதனிடையே, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர் கான், பிபிசி செய்தியாளர் பர்ஹத் ஜாவேதுக்கு அளித்த பேட்டியில் ஜமாத்-உத்-தாவாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதில் அமெரிக்க தலையீடு ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கை ஆபரேஷன் ரத்-உல்-பஸாத்தின் ஒரு பகுதி என்று தெளிவுபடுத்தினார்.

சர்வதேச அளவில் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் இதுபோன்ற விவகாரத்தில் நன்கு சிந்தித்தே செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் டிவிட்டர் செய்தி குறித்து ஹஃபீஸின் கருத்து என்ன?

சிக்கலான காலங்களில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைத்திருக்கிறது, ஆனால், தற்போது தனது தோல்விக்கு பாகிஸ்தானை அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது என்று ஹஃபீஸ் சயீத் கூறினார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நேட்டோ அமைப்பு ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் முகாம்கள் அமைத்தது. அவர்களுக்கு நாங்கள் உதவி செய்தோம். கராச்சியில் இருந்து டோர்கம் (Torkham) வரை செல்வதற்கு அனைத்து சாலைகளையும் அமெரிக்காவிற்கு கொடுத்தோம் என்று ஹஃபீஸ் குறிப்பிட்டார்.

"நாங்கள் இவ்வாறு அனைத்து விதத்திலும் அமெரிக்காவிற்கு உதவி செய்தோம். அதன்பிறகும், அமெரிக்கா எங்களை எதிரிகளாக பாவிக்கிறது. பாகிஸ்தானில் நடைபெறும் எல்லா தீவிரவாத நடவடிக்கைகளும் ஆஃப்கானிஸ்தானில் இருந்தே வருகிறது. பாகிஸ்தானும், பாகிஸ்தான் மக்களும் இதுவரை செய்த உதவிகளுக்கான தண்டனையை இப்போது நாங்கள் எதிர்கொள்கிறோம்'' என்று ஹஃபீஸ் சயீத் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-42562297

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.