Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும்

Featured Replies

பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும்

 

இலங்கை மத்­திய வங்­கியில் கடந்த 2015 பெப்­ர­வரி முதல் 2016 மார்ச் 31 வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அந்த அபிப்­பி­ர­ாயங்­களில் அனே­க­மா­னவை அக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்­களின் போது மோச­டிகள் நிகழ்ந்­த­தாக கூறு­கின்­றன. நிதி, அதி­கார ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கங்கள், சிறப்­பு­ரிமை துஷ்­பி­ர­யோகம் என அப்­பட்­டி­யலை குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் நீட்டிச் செல்­லலாம்.

 இந் நிலையில் இலங்கை மத்­திய வங்­கியின் பிணைமுறி விநி­யோ­கத்தின் போது உண்­மை­யி­லேயே மோசடி இடம்­பெற்­றதா என ஆராய ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது.

 பிர­த­மரின் பிட்­டி­பன உண்­மையைத் தேடும் குழு, 2015 பாரா­ளு­மன்றின் கோப் குழு, 2016 ஆம் ஆண்டின் கோப் குழு ஆகி­யன இந்த பிணை முறி தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை செய்து அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கும் சட்ட மா அதி­ப­ருக்கும் சமர்ப்­பித்­தி­ருந்த நிலையில், இந்த ஆணைக்குழு அமைக்­கப்பட்­டது. பிட்­டி­பன குழுவின் அறிக்­கைக்கும் கோப் குழுவின் அறிக்­கை­க­ளுக்கும் இடையில் இருந்த பல்­வேறு முரண்­பா­டுகள் கூட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவை அமைப்­பதில் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருக்­கலாம்.

எது எப்­ப­டியோ, கடந்த ஆண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்த, உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி. சித்­ர­சிறி தலை­மை­யி­லான மூவர் கொண்ட விசா­ரணை ஆணைக் குழு அதன் இறுதி அறிக்­கையை கடந்த 2017 டிசம்பர் 30 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­தது. இதனைத் தொடர்ந்து அந்த அறிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, அதில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களை மையப்­ப­டுத்தி கடந்த மூன்றாம் திகதி விசேட அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்டார்.

அதில் முக்­கிய விட­யங்­க­ளாக பின் வரும் விட­யங்­களை அவ­தா­னிக்­கலாம்.

1. முன்னாள் மத்­தி­ய­வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­திரனினதும் வங்கி உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னதும் வெளி­யி­லி­ருந்து செயற்­பட்ட சில நபர்­க­ளி­னதும் நிறு­வ­னங்­க­ளி­னதும் பங்­கேற்­பு­டனும் பேர்­ப்பச்­சுவல் டிரசரீஸ் நிறு­வனம் சட்­டத்­திற்கு முர­ணான வகையில் இலா­பத்தை ஈட்­டி­யுள்­ளமை:

2015 பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை­முறி ஏலத்தின் மூலம் பேர்ப்­பச்­சுவல் நிறு­வனம் ஆகக்­கு­றைந்தது 688 மில்­லியன் ரூபாவை இலா­ப­மாக ஈட்­டி­யுள்­ளது. இத்­தொ­கை­யா­னது விசா­ர­ணைக்கு உட்­பட்ட காலப்­ப­கு­தியில் ஈட்­டிய இலா­ப­மாகும். விசா­ர­ணை­க­ளி­லி­­ருந்து வெளிப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் இரண்டாம் நிலைச் சந்­தையில் இடம்­பெற்ற கொடுக்கல் வாங்­கல்­களின் மூலம் பேர்ப்­பச்­சுவல் நிறு­வனம் பெற்றுக் கொண்­டுள்ள ஆகக்­கு­றைந்த இலாபம் 11145 மில்­லியன் ரூபா­வாகும். இதனால் ஊழியர் சேம­லாப நிதி உள்­ளிட்ட இத­னுடன் தொடர்­பு­டைய அரச நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்ட நட்டம் 8529 மில்­லியன் ரூபா ஆகும்.

2. மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் முடி­வுகள் தொடர்பில் மத்­திய வங்­கியின் உய­ர­தி­கா­ரிகள் செய­லி­ழந்த நிலையில் இருந்­துள்­ளனர். அர்ஜுன மகேந்­திரன் முறை­கே­டான முறை­யிலும் தவ­றான முறை­யிலும் தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு பிணை­முறி ஏலம் தொடர்­பான செயற்­பா­டு­களில் சம்பந்­தப்­பட்­டி­ருப்­ப­துடன் உள்­ளக தக­வல்­களை வெளித்­த­ரப்­பி­ன­ருக்கு பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்றார் . இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் ஒரு குறிப்­பிட்ட தரப்­பி­ன­ருக்கு இலா­ப­மீட்­டக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

3 அர்ஜுன மகேந்­தி­ரனை மத்­திய வங்கி ஆளுநர் பத­விக்கு நிய­மிப்­பது தொடர்­பான பிர­தமர் ரணிலின் அதி­கா­ரங்கள் முறை­யா­னது. எனினும் பாரா­ளு­மன்­றத்தில் அர்ஜுன மகேந்­திரன் மற்றும் சம­ர­சிறி ஆகியோர் பற்­றியும் அதிலும் குறிப்­பாக அர்ஜுன மகேந்­திரன் கொடுத்த வாக்­கு­றுதி மீது நம்­பிக்கை வைத்து செயற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பிர­தமர் தெரி­வித்­தமை நடந்­தி­ருக்­கவே கூடா­தது. இந்த விட­யங்கள் கோப் விசா­ர­ணைக்­கு­ழுவின் முன்­னி­லை­யிலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதும் பிர­தமர் அர்ஜுன மகேந்­திரன் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

4. அலோ­சியஸ் குடும்­பத்­தி­ன­ருக்கு சொந்­த­மான, அவர்­களின் நிர்­வா­கத்தின் கீழி­ருந்த வோல்ட் அன் றோ நிறு­வ­னத்­தினால் பென்ட் ஹவுஸ் நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான பென்ட் ஹவுஸ் மாடி வீட்­டுக்கு மாதாந்த வாடகை செலுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பொறுப்புக் கூற வேண்டும். அதனால் அவ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழ் வழக்கு தொடுக்­கப்­பட வேண்டும்., ஆணைக்­கு­ழுவின் முன்னால் பொய் சாட்­சியம் அளித்­தமை தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் பிர­காரம் குற்­ற­வியல் விசா­ரணை நடத்­தப்­படல் வேண்டும்.

5. ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் நிதி முறை­கே­டான விதத்தில் உப­யோ­கப்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. அதன் உண்­மை­யான தொகையை அறி­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யான ஆய்வு (தட­யவியல் தணிக்கை பரி­சோ­தனை) மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இத­னுடன் தொடர்­பு­டை­யோரின் பெய­ர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன.

6. தண்­டனை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக பேர்ப்­பச்­சுவல் நிறு­வ­னத்தின் அர்ஜுன் அலோ­சியஸ், கசுன் பலி­சேன மற்றும் அறிக்­கையில் பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்­க­ளாக இனங்­காணப் பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக குற்­ற­வியல் மற்றும் சிவில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படல். அர­சுக்கு ஏற்­பட்ட நட்­டத்­தினை ஈடு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படல் . அதற்குத் தேவை­யான சட்ட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படல்.

7. இலங்கை மத்­திய வங்­கியில் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயல்கள் இடம்­பெ­று­வதை தவிர்ப்­ப­தற்கும் ஆணைக்­கு­ழுவின் தற்­கால பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யிலும் பழைய சட்­டத்தை இரத்துச் செய்து புதிய நாணயச் சட்­ட­மூ­லத்தை அறி­மு­கப்­ப­டுத்தல்.

பதிவு செய்­யப்­பட்ட பங்குப் பத்­தி­ரங்கள் மற்றும் கட்­டளைச் சட்­டங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தல். நாணய சபை உறுப்­பி­னர்­க­ளையும் மத்­திய வங்கி ஆளு­நரையும் நிய­மிப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையின் அனு­ம­தியைப் பெறல். அரச கடன் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டு­களை கடும் கண்­கா­ணிப்­புக்குள் கொண்­டு­வரல்.

7. மத்­திய வங்­கியின் கணக்­காய்வு செயற்­பா­டுகள் உரிய முறையில் நடை­பெ­றாது இருப்­பதால் அதன் கணக்­காய்வு பிரி­வினை முற்­றிலும் மாற்­றி­ய­மைத்தல்.

மத்­திய வங்­கிக்­கென பிரத்­தி­யேக சட்ட பிரி­வினை ஸ்தாபித்து அதனை வினைத்­திறன் மிக்­க­தாக ஆக்­குதல். 2008 முதல் 2015 வரையில் இடம்­பெற்ற பிணை­முறி வழங்கல் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான உரிமை இவ் ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்கப் பெறா­மை­யினால் அதைப்­பற்­றிய விசா­ரணை மேற்­கொள்ளல்.

8. பேன் ஏசியா வங்­கி­யு­ட­னான கொடுக்கல் வாங்­கல்கள் மற்றும் அதன் முன்னாள் தலை­வரின் செயற்­பாடுகள் ஆகி­யன ஆராய்ந்து பார்க்­கப்­படல்.

9. பொது­வாக குறிப்­பிட்ட பணத்தை மீளப் பெறுதல் வழ­மை­யான சட்­டத்­தின்­கீழே செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆயினும் அதிக காலம் எடுப்­பதால் அதற்கு மாற்று வழி­யாக இந்த பணத்­தினை மீளப்­­பெ­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூ­ல­மொன்றை நிறை­வேற்ற வேண்டும். அதற்­கான பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­தினைப் பெற்று துரி­த­மாக பணத்தை மீளப் பெற்­றுக்­கொள்ளல்.

10. ஆணைக்­கு­ழுவை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான அனைத்து செல­வினங்­க­ளையும் பேர்ப்­பச்­சுவல் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து அற­விட்­டுக்­கொள்ளல்.

 இந்த 10 விட­யங்­க­ளுமே ஜனா­தி­ப­தியின் கூற்றின் பிர­காரம் மத்­திய வங்கி பிணை முறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்­கையின் முக்­கிய விட­யங்கள்.

 ஜனா­தி­ப­தியின் கூற்றின் பிர­காரம், மத்­திய வங்கி பிணை முறி விநி­யோ­கத்தில் பாரிய மோசடி இடம்­பெற்­றுள்­ளது. மேலே கூறி­யது போன்று நிதி, அதி­காரம் சார் மோச­டிகள் இவ்­வாறு இடம்­பெற்­றுள்­ளன. அதற்கு பொது­வாக எல்லா தரப்­பாலும் குற்­றம்­சாட்­டப்பட்ட மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன், அவ­ரது மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிர­தான நிறை­வேற்று அதி­காரி கசுன் பலி­சேன ஆணைக் குழு, இம்­மோ­ச­டி­க­ளுடன் தொடர்­பு­டைய­வர்கள் என பெயர்­கு­றிப்­பிட்­ட­வர்­களில் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

எனினும் இந்த விவ­கா­ரத்தில் அர­சியல் ரீதி­யாக பெரிதும் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்நோக்­கி­யுள்ள பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் விடயம், ஜனா­தி­ப­தியின் அறி­விப்­புக்கு அமைய சிந்­திக்கச் செய்­கின்­றது. தலையை தடவி கொட்­டுதல் என்­பது போல அர்­ஜுன மகேந்­தி­ரனை நிய­மித்­தது சரி என கூறி­விட்டு பின்னர் பாரா­ளு­மன்றில் மகேந்­தி­ரனை காக்கும் வண்ணம் பேசி­யமை தவறு என கூறு­வது பிர­தமர் விட­யத்தில் தீர்­மானம் எடுக்கும் பொறுப்பை சட்ட மா அதி­ப­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

 ஏனெனில் ஜனா­தி­பதி விசேட உரையில், அறிக்­கையை சட்ட மா அதி­ப­ரிடம் கொடுத்­து­விட்டேன். அவர்கள் ஆராய்ந்து யார் யாருக்­கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டுமோ அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்பர் என சிலே­டை­யாக சொல்­லி­யி­ருந்தார். ஒரு வேளை பிர­த­ம­ருக்கு எதி­ராக நேர­டி­யாக நட­வ­டிக்கை எடுங்கள் என கூறாமல் ஜனாதி­பதி மைத்திரி சிலே­டை­யாக கூட இவ்­வா­றான வார்த்தை­களை பயன்­ப­டுத்தி இருக்­கலாம்.

மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற குறித்த மோச­டியால் அர­சுக்கு ஏற்­பட்ட நட்­டத்தின் மொத்த தொகை 11145 மில்­லியன் ரூபா. இதில் ஊழியர் சேம­லாப நிதி, மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் நிதி, தேசிய சேமிப்பு வங்­கியின் நிதி இலங்கை காப்­பு­றுதி நிறு­வன, காப்­பு­றுதி கூட்­டுத்­தா­பன நிதியம், ஆகி­ய­வற்றின் தொகை 8529 மில்­லியன் ரூபா­வாகும். அதா­வது 8.5 பில்­லியன் ரூபாவுக்கும் அதி­க­மான நிதி மேற்­கு­றிப்­பிட்ட நிறு­வ­னங்­களின் நிதி. எஞ்­சிய தொகை தனியார் துறை­யி­ன­ருக்கு சொந்­த­மா­னது. 70 இலட்சம் தனியார் துறையின் வியர்­வையில் சேமிக்­கப்­பட்­ட­வையே இவ்­வாறு மோசடி செய்­யப்பட்­டுள்­ளது.

 உண்­மையில் இந்த மோச­டி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுடன் முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் சம்­பந்தம் ஒன்றும் இர­க­சி­ய­மல்ல. எனவே அவ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழ் விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்­க­ப்ப­டவேண்டும் என்ற பரிந்துரை நியாயமானது.

 எனினும் ஜனா­தி­பதி பட்டும் படா­மலும் சொன்ன பிர­தமர் விட­யத்தில் கேள்­விகள் தொடர்­கின்­றன. ஏனெனில், இந்த பாரிய மோசடி இடம்­பெறும் போது மத்­திய வங்­கிக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக இருந்­தவர் பிர­தமர் ரணில். அப்­ப­டி­யானால் அவ­ரது பொறுப்பு இங்கு தட்­டிக்­க­ழிக்­கப்­பட முடி­யா­தது. பிர­த­மரை மீறி ரவி கரு­ணா­நா­யக்­கவோ அல்­லது வேறு ஒரு­வரோ மத்­திய வங்­கியில் ஆதிக்கம் செலுத்தி இருப்பார் என்று யாரா­வது நினைப்­பார்­க­ளானால் அது முட்டாள் தன­மா­னது.

எனவே தான் அர்ஜுன மகேந்­தி­ரனை மத்­திய வங்­கியின் ஆளுநர் பத­விக்கு நிய­மித்த பிர­தமர் அதன் பின்னர் பிணை முறி தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் எழும் போது அவரை காப்­பாற்ற எடுத்த முயற்­சிகள் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

 குறிப்­பாக பாரா­ளு­மன்­றத்தில் 2015.03.17 அன்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரது கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போது பிர­தமர் மத்­திய வங்­கியின் ஆளுநர் இத­னுடன் தொடர்­பு­ப­ட­வில்லை. குற்றச்­சாட்­டுக்கள் உண்­மைக்கு புறம்­பா­னவை. மத்­திய வங்கி ஆளுநர் கேள்வி கோரல் மனு நட­வ­டிக்­கை­களில் தலை­யீடு செய்­ய­வில்லை.' என காப்­பாற்றும் பதில்­களை கொடுத்­தி­ருந்தார்.

இந்த மோசடி தொடர்பில் பிர­தமர் ரணில் மீது விரல் நீட்ட நியா­ய­மான கார­ணங்கள் அல்­லது சந்­தே­கங்கள் உள்­ளன.

 குறிப்­பாக காலா காலம் நிதி­ய­மைச்சின் கீழ் இருந்த மத்­திய வங்­கியை பிர­தமர் தனக்கு கீழ் கொண்டு வந்­தமை, சிங்கப் பூர் பிர­ஜையை ஆளு­ந­ராக நிய­மித்­தமை, அவரைக் காப்­பாற்ற அவரின் பதவிக் காலத்தை நீடிக்க முயற்­சித்­தமை, குற்­றச்­சாட்டு எழுந்து பூதா­க­ர­மா­ன­போது கூட அவரை அகற்­றாது அவரின் பதவிக் காலம் நிறை­வுறும் வரை காத்­தி­ருந்­தமை போன்­றன பிர­த­ம­ர் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களாகவுள்ளன.

 அதே போல் 2016 கோப் குழுவில் அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக பல­மான ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்பட்ட சமயம், மனோ கணே­சனின் கட்சி சார்பில் கோப் குழுவை பிரதி நிதித்­துவம் செய்த வேலு குமாரை அதில் இருந்து விலகச் செய்து, அவ­ருக்கு பதி­லாக சுஜீவ சேன­சிங்­கவை உள் நுழைத்த விடயமும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஏனெனில் சுஜீவ சேன­சிங்­க­வுக்கும் அலோசியஸுக்கும் இடையிலான தொடர்புகள் ஆணைக்குழு விசாரணையின் இடை நடுவே வெளிப்படுத்தப்பட்டமை, பிணைமுறி மோசடி நடக்கவே இல்லை என அவர் புத்தகம் எழுதியமை போன்றன அவரது கோப் குழு பிரவேசத்தை சந்தேகப்பட வைக்கின்றது.

எது எப்படி இருப்பினும் தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் உள்ள நிலையில், அடுத்து வரும் நான்கு வாரங்களின் பின்னர் அதிரடி கைதுகள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சிகளை நெறிப்படுத்திய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா தலைமையிலான 10 பேர் கொண்ட சட்டவாதிகளின் கைகளிலேயே இந்த வழக்கு தொடரும் பணியும் ஒப்படைக்கப்பட்டால், அவர்களது ஆலோசனைக்கு அமைய பலர் கைதாகலாம். குற்றவியல் சட்டத்தின் கீழ் அது சாத்தியப்படும்.

 அதேபோன்று பிரதானமாக சட்ட மா அதிபர் நட்டத்தை மீள அறவீடு செய்வதை நோக்காக கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவசரமாக சட்ட திருத்தங்கள், புதிய சட்டவாக்கம் தொடர்பில் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 இவையனைத்தையும் தாண்டி ஜனாதிபதி சொல்லாத அதிர்ச்சிகள், இந்த விசாரணை அறிக்கை மக்கள் மயப்படும் போது வெளிப்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாக உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அறிக்கை மக்கள் மயப்படும் வரை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்.

எம்.எப்.எம்.பஸீர்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-06#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.