Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி?

Featured Replies

ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி?

 

2015ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­ப­தற்கு மூன்று பௌத்த குரு­மாரே வெவ்­வேறு வகை­களில் செய­லாற்­றி­யி­ருக்­கி­றார்கள். முத­லா­மவர் மாது­ளு­வாவே சோபித தேரர். இரண்­டா­மவர் கிரம்பே ஆனந்த தேரர். மூன்­றா­மவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோ­ராவர். முத­லி­­ரு­வரும் ஒரு­வ­கை­யிலும் மூன்­றா­மவர் வேறு­வ­கை­யிலும் பங்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவின் விட­யத்­திலும் உயர் நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் விட­யத்­திலும் மஹிந்த ராஜ­பக் ஷ நடந்து கொண்ட முறைகள் மாது­ளு­வாவே சோபித தேர­ருக்கு வெறுப்­பேற்­றி­யி­ருந்­தன. இது பற்றி இவர் பல­முறை மஹிந்­த­விடம் எடுத்துக் கூறியும் கூட உதா­சீ­னப்­ப­டுத்­தப்­பட்டார்.

கோட்டே நாக­வி­கா­ரையின் உயர் மத குரு­வான மாது­ளு­வாவே சோபித தேரர் அதன் பிற­குதான் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு எதி­ராகக் கிளம்­பினார். தலதா மாளி­கையில் பூஜை செய்து நாடு முழுக்க வாழும் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த 40 கிளை­களை நிறுவப் போவ­தாகக் கூறி விட்டு யார் உத­வி­னாலும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி போட்­டி­யிட்டால் தோற்கும். குறிப்­பாக ரணில் போட்­டி­யி­டா­விட்­டால்தான் வெல்லும் என்றார். இதனால் ரணில் போட்­டி­யி­டு­வது தடுக்­கப்­பட்­டது.

கிரம்பே ஆனந்த தேரர் அனு­ரா­த­புர ஸ்ரீ சாரா­நந்த விகா­ரா­தி­ப­தியும் ராமன்யா நிகா­யாவின் உப­தே­ச­கரும் தலைமைப் பிக்­கு­வு­மாவார். இவர் டி.எஸ். சேனா­நா­யக்­கவின் காலத்­தி­லி­ருந்தே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ர­வாளர். 2004 ஆம் ஆண்­டி­லி­ருந்து இக்­கட்சி தொடர் தோல்­வி­களைக் கண்­டதால் விரக்­தி­யுற்­றி­ருந்த இவர் இக்­கட்­சிக்குள் பிள­வு­களும் ஏற்­பட்­டி­ருந்­ததால் மேலும் கவ­லைக்­குள்­ளானார்.

2014 ஆம் ஆண்டு ரணில் பிரிவு, கரு பிரிவு, சஜித் பிரிவு என மூன்­றாக இக்­கட்சி காணப்­பட்­டது. இந்­நி­லை­யில்தான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை மீண்டும் ஆட்­சிக்குக் கொண்டு வர 17 திட்­டங்­களை கிரம்பே ஆனந்த தேரர் ரணி­லிடம் வழங்­கினார். இவை 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்­டு­வரை ஐக்­கிய பிக்­குகள் முன்­ன­ணி­யோடு கலந்து அவர் தயா­ரித்­த­தாகும். இதை அவர் கைய­ளித்த பின் டி.எஸ். சேனா­நா­யக்க போன்ற சிரேஷ்ட தலை­வர்கள் ஸ்தாபித்து நாட்டின் கௌர­வத்தைக் காத்து ஆட்சி புரிந்த இக்­கட்சி இந்த அள­வுக்கு பல­வீ­ன­முறக் காரணம் இவைதாம் என விளக்கி மீளக் கட்­ட­மைக்­கு­மாறும் கோரினார்.

மக்­களின் தேவை­களைச் செவி­ம­டுத்தல், மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்தல், தேசிய பழக்க வழக்­கங்­களை இனங்­கண்டு செயற்­ப­டுதல் ஆகி­ய­வையும் அவற்றில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. அந்த அறிக்­கையை கிரம்பே ஆனந்த தேரர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­கு­ழு­வுக்கும் தபாலில் அனுப்பி வைத்தார். இதை வாசித்­தோ­ருக்கு உயர்­பீ­டத்தில் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்­தது. ஜோன் அம­ர­துங்­கவும், லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் சில­ரோடு ரணிலைக் கண்டு அவ­ரிடம் இதைக்­கூ­றி­ய­போது முதலில் நிரா­க­ரித்த அவர் இவர்­களின் வற்­பு­றுத்­தலால் வாசிக்கும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. அதன் பின் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு தொலை­பேசி மூலம் தலைவர் நேர­டி­யாக சந்­திக்கத் தயார் என கிரம்பே ஆனந்த தேர­ருக்கு அறி­வித்­தது.

அப்­போது கிராம்பே ஆனந்த தேரர் வேண்டாம். முதலில் பிக்­குகள் முன்­ன­ணி­யோடு பேசுங்கள். பிறகு என்­னோடு பேசலாம் என்றார். அதற்கு ரணில், இல்லை முதலில் உங்­க­ளோடு பேசி­விட்டு ஐந்து நாட்­க­ளுக்குள் பிக்­குகள் முன்­ன­ணி­யோடு பேச­வ­ருவேன் எனக் கூறி செய்­தி­ய­னுப்­பினார். அதன்­படி 2014 ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் தன்­னைக்­கா­ண­வ­ரு­மாறு கிராம்பே ஆனந்­த­தேரர் ரணிலை அழைத்தார். லக் ஷ்மன் கிரி­யெல்ல, ஹெரிசன் உட்­பட சிலர் உடன் சென்­றனர்.

கிராம்பே ஆனந்த தேரர் அவர்­களை வர­வேற்று பத்து நிமி­டங்­களில் கட்­சியின் வர­லாற்­றையும் இதற்­கான தனது அர்ப்­ப­ணிப்­பையும் ஞாகப்­ப­டுத்தி விஷ­யத்­துக்கு வந்தார். கட்சி நலனை முன்­வைத்தே கருத்­துக்­களை முன்­வைத்தார்.

முன்பு தன்­னைக்­காண தனது விகா­ரைக்கு வரக்­கூ­டாது என அவர் ரணி­லிடம் கூறி­யி­ருந்­த­போதும் இந்த சந்­திப்­பின்­போது மூன்று வரு­ட­கா­ல­மாக இருந்த கோபத்தைக் கைவிட்டு அன்­பா­கவே பேசினார். எனினும் தீர்க்­க­மான வேண்­டுகோள் அவ­ரது பேச்சில் இருந்­தது.

2004 ஆம் ஆண்டு நீங்கள் தோற்­றபின் 2005 ஆம் ஆண்டு மிலிந்த மொர­கொ­ட­வோடு வந்து நான் உங்­க­ளிடம் என்ன கூறினேன். ஜன­நா­யகத் தலைவர் எனும் வகையில் கட்­சி­யி­லி­ருந்தும் வில­கு­மாறு கூறினேன் அல்­லவா? ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் நீங்கள் தோற்­றவர் எனவே விரும்­பி­ய­வ­ரிடம் தலை­மையைக் கொடுத்து பின்­னா­லி­ருந்து ஒத்­து­ழைத்து கட்­சியைப் பலப்­ப­டுத்த வேண்டும் என்றேன்.

காரணம் 1965 ஆம் ஆண்டு டட்லி சேனா­நா­யக்க ஒதுங்கி ஜே.ஆர். முன்­வந்­த­போது கட்­சியைச் சேர்ந்தோர் ஜே.ஆர். அல்ல டட்­லியே தலை­மைக்குத் தேவை என்­றார்கள். அவ்­வாறே நீங்­களும் இப்­போது தலை­மை­யி­லி­ருந்தும் அகன்றால் இன்னும் 10 வரு­டங்­களில் நீங்­களே தேவை என மக்கள் கோரு­வார்கள் வில­கா­விட்டால் 10 வரு­டங்­க­ளுக்குப் பின் நீங்கள் ஒதுங்க வேண்டும் என ஊர்­வலம் போவார்கள். அதுவே இப்­போது ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்றார். உடனே அனை­வரும் அதன்­ப­டியே செய­லாற்­று­வ­தாக ஏற்றுக் கொண்­டார்கள். ஐந்து நாட்கள் கழித்து ரணில், கரு ஜய­சூ­ரிய, ரவி கரு­ணா­நா­யக்க, சஜித் பிரே­ம­தாஸ, சுஜீவ சேன­சிங்க, மங்­கள சம­ர­வீர, திஸ்ஸ அத்­த­நா­யக்க ஆகியோர் உட்­ப­டச்­சிலர் கொள்­ளுப்­பிட்டி தர்­ம­சித்­தி­யா­ராம எனும் விகா­ரையில் பிக்­குகள் முன்­ன­ணியைச் சந்­தித்­தனர். கட்­சியைப் பல­வீ­னப்­ப­டுத்தும் பல விட­யங்­களும் இங்கு ஆரா­யப்­பட்­டன. ஒரே தலை­மையற்ற தலைமைக் குழுவை உரு­வாக்கி கட்சி பலப்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் நான் உங்­க­ளுக்கு அதி­கா­ரத்தைப் பெற்றுத் தருவேன் என கிரம்பே ஆனந்த தேரர் உறு­தி­ய­ளித்தார். அதற்கு உடன்­பட்ட ரணில் இரு மணித்­தி­யா­லங்கள் கழிந்து பெரு­மூச்­சோடு நான் சுகப்­பட்­ட­தாக உணர்­கிறேன். எனது உள்­ளத்தில் இருந்த பெரிய பாரத்தை நீங்­களும் பொறுப்பு ஏற்­றீர்கள் என்றார்.

(லங்­கா­தீப 31.12.2017)

அதன் பின் தலைமைக் குழு செயற்­பட பொருள்­வ­சதி செய்­வ­தா­கவும் பொறுப்­பு­களை எல்­லோரும் ஏற்­கு­மாறும் ரணில் கூறினார். திட்­ட­மிட்­ட­படி இக்­குழு செயற்­ப­டு­கை­யில்தான் மாது­ளு­வாவே சோபித தேரரின் பொது அபேட்­சகர் பற்­றிய செய்தி வெளி­யா­னது. நீதி­யான சமூ­கத்­துக்­கான மக்கள் நட­வ­டிக்கை எனும் பொது அபேட்­ச­க­ருக்­கான கொள்­கை­யோடு 11 திட்­டங்­க­ளுக்­கு­மான உறுதிப் பிர­மாணம் முன்­வைக்­கப்­பட்­டது. முடிவில் கிரம்பே ஆனந்த தேரர் அதற்கு உடன்­பட்டு பொது அபேட்­ச­க­ருக்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ரவு என வாக்­க­ளித்தார். இதன் மூலம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்டுத் தலை­மை­க­ளோடு கட்­சி­யையும் கூட கிராம்பே ஆனந்த தேரர் மாது­ளு­வாவே சோபித தேர­ரிடம் வழங்­கி­விட்டார். அதற்குப் பின் பொருந்­தி­ய­படி ரணிலைத் தவிர்த்து விட்டு பொது அபேட்­ச­க­ராக ஷிராணி பண்­டா­ர­நா­யக்க, ஏ.டி. ஆரி­ய­ரத்ன, கரு ஜய­சூ­ரிய ஆகியோர் பற்றிச் சிந்­தித்­தனர். அதன் பிறகு பொது அபேட்­சகர் எனும் தீர்­மா­னத்தின் கீழ் ஒன்று திரண்ட பல தேரர்கள் மற்­று­முள்ள தேரர்­க­ளையும் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை உட்­பட பல மதத் தலை­வர்­க­ளையும் சந்­தித்து ஆட்சி மாற்­றத்தைப் பற்றி வலி­யு­றுத்­தினர்.

முதலில் பௌத்த சிங்­க­ள­வரைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கரு ஜய­சூ­ரி­யவைப் பற்றி யோசித்­தனர். அவரே பொது அபேட்­ச­க­ரா­கலாம் எனக் கேள்­விப்­பட்­டதும் மஹிந்த ராஜபக் ஷவின் தரப்­பினர் அதைத் தடுக்கப் பல்­வேறு தந்­தி­ரங்­க­ளையும் கையாண்­டனர். இந்­நி­லையில் மாது­ளு­வாவே சோபித தேரர் அத்­தங்­கனே ஷாசன ரத்ன தேரர், தல்­பொத தம்­ம­ஜோதி தேரர், கெர­கொல்லே பிய­தஸ்ஸி தேரர், களு­தர சோம தேரர், கோன­கல ஞான­லோக தேரர், பேரா­தெ­னிய தம்ம சேன தேரர், பின்­ன­வல யஸஸ்ஸி தேரர், மஹமான் கட­வல பிய­ரத்ன தேரர், மீவெல்­லேவே தம்­ம­கித்தி தேரர் ஆகியோர் நாடு முழுதும் சென்று பொது அபேட்­ச­க­ருக்­கான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தனர். இந்­நி­லையில் மாது­ளு­வாவே சோபித தேர­ரோடும் கிரம்பே ஆனந்த தேர­ரோடும் இணைந்து 38 அமைச்­சர்கள் செயற்­ப­டவும் முன்­வந்­தனர்.

கரு ஜய­சூ­ரிய பொது அபேட்­ச­க­ராகத் தெரிவு செய்­யப்­பட்டால் அவர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் இணை­ய­வி­ருந்­தனர். ஒரு­முறை மாது­ளு­வாவே சோபித தேரரைக் காண வந்து மஹிந்த ராஜபக் ஷ நாட்டை அழிப்­ப­தாகக் கூறிய மூவர் இப்­போது மஹிந்­த­வோடு இருக்­கின்­றனர்.

 (லங்கா தீப 31.12.2017)

பொது அபேட்­ச­க­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவில் கரு ஜய­சூ­ரி­யவின் பெயர் முன்­வைக்­கப்­பட்­ட­துமே சஜித் பிரே­ம­தாஸ அதை எதிர்த்தார். யானைச் சின்­னத்­தோடும் பச்சை நிறத்­தோடும் கண்­டிப்­பாக ரணில் போட்­டி­யிட வேண்டும் எனவும் இன்றேல் தான் போட்­டி­யிடப் போவ­தா­கவும் அவர் கூறினார். விஜே­தாஸ ராஜபக் ஷ, ரவி கரு­ணா­நா­யக்க, லக்ஷ்மன் கிரி­யெல்ல, மங்­கள சம­ர­வீர ஆகியோர் அதை எதிர்த்­தார்கள். எனினும் சஜித் பிரே­ம­தாஸ இத் தேர்­தலில் ரணில் போட்­டி­யிட்டால் அவரை வெல்ல வைப்பேன் எனவும் சூளு­ரைத்தார். இதனால் மனம்­மா­றிய ரணில் அடுத்த நாள் நான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­லேயே போட்­டி­யி­டுவேன் எனக் கூறி­விட்டார். உடனே கிராம்பே ஆனந்த தேரர் ரணிலைக் கண்டு நீங்­களா போட்­டி­யிடப் போகி­றீர்கள் எனக் கேட்டார். ஆம், நானே தான் என ரணில் கூறி­யதும் யார் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்கள் என கிராம்பே ஆனந்த தேரர் கேட்டார்.

ஏன் இப்­படிக் கூறு­கி­றீர்கள் என ரணில் வின­வி­ய­போது வெற்­றி­பெறும் அள­வுக்கு வாக்­குகள் இல்லை என்­பதால் தான் சொல்­கிறேன். அப்­படி இருக்­கு­மானால் 27 முறையும் தோற்­பீர்­களா என கிராம்பே ஆனந்த தேரர் கூறி­யதும் இரு­வ­ருக்கும் இடையில் தர்க்கம் நிகழ்ந்­தது. முடிவில் கிராம்பே ஆனந்த தேரர் “நீங்கள் 27 இலட்சம் வாக்­கு­களைப் பெற்று தோற்ற கணக்கில் சஜித்தும் இருக்­க­வில்­லையா? அப்­போது அவர் உங்­களை வெற்றி பெற வைத்­துக்­காட்­டி­யி­ருக்­கலாம் தானே. இதில் ஒரு சதி இருக்­கி­றது. எனக் கூறி­யதும் ரணில் திடுக்­குற்றார். பிறகு தேரர், நீங்கள் உலகம் ஏற்­றுக்­கொண்ட தலை­வ­ராக இருந்தும் ஏன் இதை அறி­ய­வில்லை? மஹிந்­தவை ஆத­ரிக்கும் வியா­பா­ரி­களும், அர­சியல் தலை­வர்­களும் இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்றார்.

உடனே ரணில் நல்­லது. நான் ஒத்­து­ழைக்­கிறேன் யார் அந்த பொது அபேட்­சகர்? எனக் கேட்டார். அதற்கு தேரர் கரு ஜய­சூ­ரி­யவே பொது அபேட்­சகர். அவர் வென்று ஆறு மாதத்தில் இரா­ஜி­னாமாச் செய்வார். ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து நேர்­மை­யான தேர்­தலை நடத்­திய பின் சென்று விடுவார் என்றார். சரி போகா­விட்டால் என்ன செய்­வது என ரணில் வின­வி­ய­போது, இல்லை நிச்­சயம் அவர் போய்­வி­டுவார்.

ஆறு மாதங்கள் கழிந்த பின் ஒரு நாழிகை கூட கரு ஜய­சூ­ரிய பத­வியில் இருக்­க­மாட்டார் என கிராம்பே ஆனந்த தேரர் உறு­தி­யாகக் கூறினார். இந்த சந்­திப்பு நிகழ்ந்து ஒரு­வாரம் கழிந்த பின் ரணில் போய் சந்­தி­ரிக்­காவைக் கண்டார். அப்­போது கரு ஜய­சூ­ரி­யவைப் பற்றி பேச்சு எழுந்­த­போது விருப்­ப­மின்­மையை வெளிப்­ப­டுத்­திய சந்­தி­ரிக்கா ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரான மைத்­தி­ரிபால சிறி­சேன தற்­போது மஹிந்த ராஜபக் ஷவோடு விர­ச­மாகி இருப்­ப­தாகக் குறிப்­பிட்டார். அதன் பிற­குதான் பொது அபேட்­ச­க­ருக்­கான கவ­ன­ஈர்ப்பு மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது திரும்­பி­யது.

அவரே பொது அபேட்­சகர் எனும் சங்­க­தியை தேரர்கள் வேட்பு மனு­வுக்கு இரு நாட்கள் இருக்­கை­யில்தான் தெரிந்து கொண்­டார்கள். இதைக் கேட்­டதும் மாது­ளு­வாவே சோபித தேரர் கவ­லை­யுற்றார். பின்னர் இவ்­வி­ரு­வ­ரிலும் யாரா­யினும் சரிதான் மஹிந்­தவை அகற்ற வேண்டும் என மாது­ளு­வாவே சோபித தேரர் மனதைச் சரிப்­ப­டுத்திக் கொண்டு தைரி­ய­மாகத் தனது முயற்­சியைத் தொடர்ந்தார். மைத்­தி­ரி­பால சிறி­சேன வேட்பு மனுத் தாக்கல் செய்து முடிந்­ததும் முன்பு கரு ஜய­சூ­ரி­ய­வுக்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணை­வ­தாகக் கூறிய ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 38 அமைச்­சர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வர­வில்லை. எனினும் மைத்­தி­ரி­பால சிறி­சேன வென்­றதும் அவர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வோடு சேர்ந்து கொண்­டார்கள். தலைவர் ரணிலே விட்டுக் கொடுத்­தி­ருக்­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ள­ரான திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வுக்கு என்ன நடந்­தது? தான் செய­லா­ள­ராக இருக்கும் கட்சி மாற்றுக் கட்­சியின் செய­லா­ள­ருக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்­கி­யது அவ­ருக்குப் பிடிக்­க­வில்லை.

இதனால் அவர் மஹிந்த ராஜபக் ஷவோடு சேர்ந்து போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக மைத்­தி­ரி­பா­லவின் கையொப்பம் போல் இட்டு போலி ஆவ­ணத்தை வெளி­யிட்டார். அத்­தோடு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சாய­லுடன் இருந்த ஒரு­வரைத் தேடிப்­பி­டித்து அவ­ரது படத்தை பொது­வி­ளம்­ப­ரங்­களில் வெளி­யிட்டு மைத்­தி­ரியே போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வது போல் பொது­வி­ளம்­ப­ரமும் செய்­தார்கள். இவை இரண்டும் வெற்­றி­பெ­ற­வில்லை. மஹிந்த தோற்றே போனார்.

இதற்கு மாது­ளு­வாவே சோபித தேர­ரி­னதும் கிராம்பே ஆனந்த தேர­ரி­னதும் செய்­கையால் தனக்­கு­ரிய வாக்­கு­வங்­கியில் பாதியை மஹிந்த ராஜபக் ஷ இழந்­தி­ருந்தார். வெற்­றிக்­கம்­பத்தை மைத்­திரி தாண்­டவே சிறு­பான்­மை­களின் வாக்­குகள் அவ­ருக்கு உத­வின. பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒட்­டு­மொத்­த­மாக வாக்­க­ளிக்­கா­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. முஸ்­லிம்கள் ஏன் 100 வீதம் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­தார்கள்?

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்­டு­வரை கல­கொட அத்தே ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்குக் கொடு­மைகள் புரிந்­த ­போது மஹிந்த ராஜபக் ஷ கண்டு கொள்­ளா­தி­ருந்தார். காரணம் சிங்­கள வாக்­கு­வங்­கியில் அவர் 100 வீத நம்­பிக்­கையை வைத்­தி­ருந்­ததால் முஸ்லிம் வாக்­கு­வங்­கியைப் பொருட்­ப­டுத்­தா­த­தே­யாகும். இதனால் வழ­மை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 70 வீதம் வாக்­க­ளிக்கும் முஸ்­லிம்கள் மைத்­தி­ரிக்கு 100 வீதம் கொடுத்­தார்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ தோற்­றபின் சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளால்தான் நான் தோற்றேன் என்று கூறி சிங்­கள மக்­களை உசுப்­பேற்­றி­விட்டார். உண்­மையில் பாதி சிங்­கள மக்­க­ளிடம் மன­மாற்றம் ஏற்­ப­டா­தி­ருந்­தி­ருக்­கு­மாயின் மைத்­திரி வென்­றி­ருக்க மாட்டார். பெரும்­பான்மைச் சமூ­கத்தின் அப­ரித வாக்­கு­க­ளுக்கு முன் சிறுபான்மைகளின் வாக்குகள் கரைந்தே போயிருக்கும் .

உண்மையில் ஜனநாயக மீட்சிக்காகவும் சமூக நீதிக்காகவும் மாதுளுவாவே சோபித தேரர் முன்னெடுத்த போராட்டமே மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைத்திருந்தது. அவர் நினைத்த பொது அபேட்சகர் இப்போது கட்சித்தலைவராக ஆகியிருக்கிறார். இவரது பெயரை முன்வைக்கப்பட்ட போதும் அவர் திருப்தி­­­யுறவில்லை. ரணிலின் பெயர் முன் வைக்கப்பட்டபோது கிராம்பே ஆனந்த தேரர் விரும்பவில்லை. கரு ஜயசூரிய­வின் பெயர் முன்வைக்கப்பட்டபோது சந்திரிகா வேண்டாம் என்றார். ஷிராணி பண்டாரநாயக்கவும் ஏ.டி.ஆரியரத்ன­வும் விடுபட்டார்கள். இவைதாம் நிகழ்ந்தவை­யாகும். 

ஏ.ஜே.எம். நிழாம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-06#page-4

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்­டு­வரை கல­கொட அத்தே ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்குக் கொடு­மைகள் புரிந்­த ­போது மஹிந்த ராஜபக் ஷ கண்டு கொள்­ளா­தி­ருந்தார். காரணம் சிங்­கள வாக்­கு­வங்­கியில் அவர் 100 வீத நம்­பிக்­கையை வைத்­தி­ருந்­ததால் முஸ்லிம் வாக்­கு­வங்­கியைப் பொருட்­ப­டுத்­தா­த­தே­யாகும். இதனால் வழ­மை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 70 வீதம் வாக்­க­ளிக்கும் முஸ்­லிம்கள் மைத்­தி­ரிக்கு 100 வீதம் கொடுத்­தார்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ தோற்­றபின் சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளால்தான் நான் தோற்றேன் என்று கூறி சிங்­கள மக்­களை உசுப்­பேற்­றி­விட்டார். உண்­மையில் பாதி சிங்­கள மக்­க­ளிடம் மன­மாற்றம் ஏற்­ப­டா­தி­ருந்­தி­ருக்­கு­மாயின் மைத்­திரி வென்­றி­ருக்க மாட்டார். பெரும்­பான்மைச் சமூ­கத்தின் அப­ரித வாக்­கு­க­ளுக்கு முன் சிறுபான்மைகளின் வாக்குகள் கரைந்தே போயிருக்கும் .

சிறு பான்மையை நம்பனும் என்று குலையடிப்பதே ராஜதந்திரம் தான் எழுதியவரையும் கொஞ்சம் பார்க்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சிறு பான்மையை நம்பனும் என்று குலையடிப்பதே ராஜதந்திரம் தான் எழுதியவரையும் கொஞ்சம் பார்க்கணும் .

நாளைக்கு ராஜபக்ச வந்தவுடன் இதில் அவர் பெயரை மாற்றி ..எழுதுவார்.....அதாவது யார் வந்தாலும் ஆழும்குடி காத்தான்குடி....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.