Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?

Featured Replies

  • கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?
ranil-maithiri-88f-750x400.jpg

கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு?

 
 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்­டாம் திகதி நாட்­டில் நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைத் தோற்­க­டித்து பொது எதி­ரணி வேட்­பா­ள­ரா­ன மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்­மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் அதி­கப்­ப­டி­யான ஆத­ரவு வாக்­கு­க­ளால் பெரு வெற்­றி­யீட்டி அர­ச­த­லை­வ­ரா­கப் பத­வி­யேற்று மூன்று ஆண்­டு­கள்  கழிந்­து ­விட்­டன.

வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள தமிழ் மக்­கள் மகிந்­த­ரா­ஜ­பக்ச அரசை வௌியேற்றி மாற்­றத்­தைக் கொண்டு வர வேண்­டும் என்ற நோக்­கு­டன் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் கூட்டு அரசு பொறுப்­பேற்று 100 நாள் வேலைத்­திட்­ட­மும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கூட்டு அர­சுக்கு தமிழ்­ தே­சி­யக் ­கூட்­ட­மைப்­பும் விரும்­பியோ,விரும்­பா­மலோ தனது ஆத­ரவை இன்­று­வரை வழங்கி வரு­கின்­றது. மூன்று வரு­ட­கால ஆட்­சி­மு­டி­வ­டைந்து அரசு தனது நான்­கா­வது வருட ஆட்­சியை ஆரம்­பித்­துள்ள நிலை­யில், தமிழ்­மக்­க­ளின் இனப்­பி­ரச்­சினை மற்­றும் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்­தில் மைத்­திரி அரசு ஆர்­வம் காட்­டாது புறம் போக்­கா­கவே நடந்து வரு­கி­றது என்­ப­தில் எள்­ள­ள­வும் சந்­தே­க­மில்லை.

சி்ங்கள மக்­க­ளை­யும் படை­யி­ன­ரை­யும் திருப்­திப்­ப­டுத்­தும் நோக்­கில் செயற்­ப­டுகிறது கூட்டு அரசு

 

கூட்டு அரசு பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளை­யும், படைத்­த­ரப்­பை­யும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தி­லும், பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­ட­மி­ருந்­து எழு­கின்ற கேள்­வி­க­ளுக்கு முரண்­பா­டான பதில்­களை வழங்­கு­வ­தி­லும் இன்­று­வரை காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ ருக்­கின்­றது. தமிழ்­மக்­க­ளின் உரி­மை­களை மறுத்­து­வ­ரும் கூட்டு அரசு , சமூ­கத்­தின் மத்­தி­யில் தனது போலி முகத்­தைக் காட்டி பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் ஏமாற்றி வரு­வ­தாக தமிழ்­மக்­கள் முற்று முழு­தாக நம்­பு­கின்ற நிலை­யில், தற்­போ­தைய கூட்டு அரசு மீதான நம்­பிக்­கை­யை­யி­ழந்து தமிழ் மக்­கள் விரக்­தி­யின் விளிம்­புக்கே சென்­று­விட்­டுள்­ள­னர்.

இலங்கை அர­சி­ய­லில் கொழும்பு ஆட்­சி­யா­ளர்­கள் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வே­தும் காணாது அதனை இழுத்­த­டிக்க முயல்­வ­தும், காலத்­தைக்­க­டத்­தி­வ­ரு­வ­தும், தமிழ்­மக்­க­ளுக்கு இந்­த­நாட்­டில் என்­ன­தான் பிரச்­சினை இருக்­கி­றது என்று கேள்வி கேட்­ப­தும், புதி­ய­ வி­ட­யங்­க­ளல்ல.

70 ஆண்­டு­க­ளாக மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சு­கள், எப்­படி தங்­கள் இஷ்­டம் போல் தமி­ழர்­கள் பிரச்­சி­னை­க­ளைக் கையாண்­டார்­களோ அதைப் போன்றே கூட்டு அர­சும் அந்­தப் போக்­கி­லேயே நடந்து வரு­கின்­றது.

கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னைக்கு விமோ­ச­னம் கிடைக்­கும். புதிய அரசு மூலம் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டும் என தமிழ்த்­த­லை­மை­கள் எவ்­வ­ள­வு­தான் எடுத்­துக்­கூ­றி­னா­லும் தமிழ் மக்­கள் எந்த ஆட்­சித்­த­ரப்­பி­ன­ரை­யும் நம்­பத் தயா­ரில்லை என்­பதை இந்­தக் கூட்டு அர­சின் மூன்று வரு­ட­கால ஆட்சி தெட்­டத்­தௌி­வாக உணர்த்தி வைத்­துள்­ளது.

இந்த அர­சில் அங்­கம் வகிக்­கும் அமைச்­சர்­க­ளின் செயற்­பா­டு­க­ளும், பேச்­சுக்­க­ளும் தமிழ்­மக்­களை ஏமாற்­று­வ­தும், குழப்­பு­வ­து­மா­கவே இருக்­கின்­றன. கடந்த வரு­டம் தமிழ்­மக்­கள் காணா­மல் போன தம­து­உ­ற­வு­கள் தொடர்­பில் கண்­ட­றிந்து உண்மை நிலை­யைச் சொல்­லுங்­கள் எனக் கேட்டு போராட்­டங்­களை வரு­டம் முழு­வ­தும் பல­கோ­ணங்­க­ளில் நடத்­தி­யி­ருந்­த­னர். பூர்­வீக நிலங்­களை விடு­விக்­காது அரச படை­கள் அவற்­றைத் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­துக் கொண்டு இருப்­பது எந்த வகை­யில் நியா­யம் எனக்­கேட்­டும் சாத்­வீ­கப் போராட்­டங்­க­ளைச் சளைக்­காது முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­டாத நிலை­யில் பல ஏக்­கர் காணி­கள் படை­யி­னர் வசம்

இன்­றைய கூட்டு அர­சா­னது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் காரணமாக முல்­லைத்­தீவு, மன்­னார், யாழ்ப்­பா­ணம் போன்ற மாவட்­டங்­க­ளில் படை­யி­னர் ஆக்­கி­ர­மித்­தி­ருந்த காணி­க­ளில் சில­வற்றை விடு­வித்­தி­ருந்­தா­லும், இன்­ன­மும் பொது­மக்­க­ளது பல­நூற்­றுக்­க­ணக்­கான ஏக்­கர் காணி­கள் படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்­ளன. படை­யி­னரோ, தேசி­ய­பா­து­காப்பு கருதி அக்­கா­ணி­களை மக்­க­ளி­டம் திருப்­பிக்­கொ­டுக்­க­ மு­டி­யாது எனக் கையை விரிக்­கின்­ற­னர். படை­யி­னர் தேசிய பாது­காப்­பைக் கார­ணம் காட்டி தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­ற­னர். வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பரம்­பரை நிலங்­களை படை­யி­னர் தம­து­ட­மை­யாக்­கிக் கொண்டு அவற்றை கடந்த பல ஆண்­டு­கள் கால­மாக கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­பது, விடு­விக்­கா­மல் சொந்­தம் கொண்­டா­டு­வது பெரும் மனித உரிமை மீறல் என்று தமிழ் மக்­கள் தரப்­பு­கள் மட்­டு­மன்றி பன்­னாட்­டுச் சமூ­க­மும் தீவி­ர­மா­கக் குற்­றம் சாட்டி வரு­கின்­றன.

இன்­றைய கூட்டு அரசு, பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வச­தி­களைச் செய்து கொடுக்­கத்­த­வ­றி­விட்­டுள்­ள­து­டன் பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்­க­ளின் நியா­ய­மான போராட்­டங்­கள்­கு­றித்து அக்­கறை காட்டி செயற்­ப­ட­வும் தவறி விட்­டுள்­ளது. 30 வரு­ட­கா­லப்­போர் கார­ண­மாக, பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­கள் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும் கூட இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­ப­மு­டி­யா­மல் ஏக்கப் பெருமூச்­சு­டன் முகாம்­க­ளி­லும் பிற இடங்­க­ளி­லும் தொடர்ந்­தும் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்­டிக்­கின்­ற­னர்.

இந்­தப் புதிய ஆண்­டி­லா­வது தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­யைத் தீர்க்க கூட்டு அரசு அக்­கறை காட்­டுமா?

மலர்ந்­தி­ருக்­கும் இந்­தப்­பு­திய ஆண்­டி­லா­வது கூட்டு அரசு தமிழ்­மக்­க­ளின் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைக்­கத்­த­வ­றி­னால், அது மக்­களை மிகுந்த விரக்தி நிலைக்கு இட்­டுச்­செல்­வ­து­டன், அரசு மீதான வெறுப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­தும். இவை­யா­வும் தவிர்க்க முடி­யா­த­தாகி விடும்.

ஏற்­க­னவே இந்தக் கூட்டு அரசு மீது தமிழ்­மக்­கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரு­கின்ற நிலை­யில், மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்த முகத்­து­டன் தமிழ் மக்­க­ளைச் சந்­திப்­பார்? இந்­தக் கூட்டு அர­சால் தமிழ்­மக்­க­ளுக்கு எந்தவித­மான விமோ­ச­ன­ மும் கிடை­யாது என்ற முடி­வுக்கு தமிழ் மக்­கள் வரு­வ­தும் தவிர்க்­க­ மு­டி­யா­த­தா­கி­வி­டும்.

முன்னை நாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா குமா­ர­துங்க போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­கள் கழிந்த நிலை­ யி­லும், அர­சால் தமிழ்­மக்­க­ளது மனங்­களை வெல்ல முடி­ய­வில்­லை ­யென கடந்த தமிழ்– சி்ங்கள புத்­தாண்டு தினத்­தை­யொட்­டித் தாம் கலந்து கொண்ட நிகழ்­வொன்­றில் வைத்­துக்­கு­றிப்­பிட்­டி­ருந்­தார். போர்­கா­ர­ண­மாக விரக்­தி­யுற்ற தமிழ் மக்­க­ளது உள்­ளங்­க­ளைச் சீர் செய்­யும் பணி­களை இன்­றைய கூட்டு அரசு செய்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி ­ருந்த போதி­லும், யதார்த்­தத்­தில் அத்­த­கைய சமிக்ஞை எத­னை­யும் காண முடி­ய­வில்லை.

கூட்டு அர­சின் மூன்று ஆண்­டு­கால நிர்­வா­கத்­தில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளில் எவை­தான் சீர்­செய்ய்ப்­பட்­டி­ருக்­கின்­றன? காணா­மல் போனோர் விட­யத்­தில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்ன கூறி­னார்­கள் என்­பதை மறந்­து­விட்­ட­னரா தமிழ்­மக்­கள்? அர­ச­த­லை­வர், தலைமை அமைச்­சர், முன்னை நாள் அர­ச­த­லை­வர் சந்­தி­ரிகா போன்­றோர் கூட்டு ஆட்சி அர­சின் மூன்று ஆண்டு கால நிர்­வா­க த்­தில் யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பல தட­வை­கள் வந்து திரும்­பி­யி­ருந்த போதி­லும் அவர்­க­ளால் தமிழ் மக்­க­ளின் மனங்­களை வெல்­ல­மு­டிந்­ததா?

இன்­றைய கூட்டு அர­சும் சிறு­பா ன்­மை­யி­ன­ரான தமிழ்­மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான உரி­மை­க­ளை­யும் வழங்­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தில் தென்­னி­லங்­கை­யி­லுள்ள கடும் இனம் வாதப்­போக்­கா­ளர்­க­ளும், மகிந்த தரப்பு அணி­யி­ன­ரும் நெருக்­க­டி­க­ளைக் கொடுத்து வரும் நிலை­யில், கூட்டு அரசு இப்­ப­டிப்­பட்ட நெருக்­க­டி­க­ளைத்­தூக்­கி­யெ­றிந்து விட்டு தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னை­களை துணிச்­ச­லோ­டும், நேர்­மை­யோ­டும் தீர்த்து வைப்­ப­தற்கு தனது மிகுதி ஆட்­சிக்­கா­லம் ­மு­டி­வ­டை­வ­தற்கு முன்பாக முன்­வ­ருமா? என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் எழுந்­தா­லும், மைத்­திரி அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­கள் ஒன்று கூட இது­வ­ரை­யில் பூர­ண­மாக நிறை ­வேற்­றப்­பட்­ட­தில்லை என்ற உண்மை பூதா­கா­ர­மா­கத் தலை­தூக்கி நிற்­கி­றதே? தமிழ் மக்­க­ளின் மனி­தா­பி­மான சிறிய தேவை­க­ளைக்­கூடக் கையாள முடி­யாது  இன்­றைய கூட்டு அரசு பின் வாங்கி வரு­கின்­றதோ என்ற அச்­சம், கவலை தமிழ்­மக்­கள் மத்­தி­யில் நிறை­யவே உள்­ளன.

பரப்­பு­ரைக்கு வட­ப­கு­திக்கு வரும் அரச தலை­வர் வழ­மை­யான
வாக்­கு­று­தி­யையே அவிழ்த்­து­வி­டப் போகி­றார்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பரப்­பு­ரைக்­காக வட பகு­திக்கு வர­வி­ருக்­கின்ற அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­ னை­கள் தொடர்­பாக என்ன சாக்­குப்­போக்கு, நொண்­டிச் சாட்­டுக்­களை முன்­வைத்து தம்­மைத் தக்க வைத்­துக் கொள்­ளப் போகின்­ற­னரோ என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் தலை­தூக்கி நிற்­கி­றது.

ஆனா­லும் முழுப்­பூ­ச­ணிக் கா­யைச் சோற்­றில் புதைப்­பது போன்று, ஏதா­வது புனை­க­தை­களை இட்­டுக்­கட்டி தமிழ்­மக்­கள் காது­க­ளில் பூச்­சுற்றித் தத்­த­மது தரப்­பு­க­ளுக்­கான வாக்கு வேட்­டையை இவர்­கள் முன் னெ­டுக்­கத்­தான் போகின்­றார்­கள். அந்த வகை­யில் அவர்­க­ளது வழ­மை­யான பொய் வாக்­கு­று­தி­க­ளுக்கு தாளம் போட எமது தரப்­பி­லும் ஒரு கூட்­டத்­தி­னர் தயா­ராக உள்­ள­னர் என்­பது தான் நிதர்­ச­னம்.

தமிழ் மக்­க­ளின் தற்­போ­தைய அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கும், அவர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த நியா­ய­மான போராட்­டங்­க­ளுக்­கும் இன்­றைய கூட்டு அரசு என்ன பதி­லைக் கொடுக்­கப் போகின்­றது. தமி­ழர்­க­ளின் மனதை வெற்­றி­கொள்­ளும் வகை­யில் ஜனா­தி­ப­தி­யின் வருகை அமை­யுமா? அல்­லது ஏமாற்­றம்­தான் மிஞ்­சுமா?

தமிழ் மக்­க­ளின் கடந்த வரு­டப்­போ­ராட்­டங்­க­ளும், வேண்­டு­தல்­க­ளும் இன்­றைய கூட்டு அர­சால் புறந் தள்­ளப்­பட்டே வரு­வ­த­னால், இந்த வரு­ட­மும் தமிழ்­மக்­க­ளின் தொடர் போராட்­டங்­கள் முழு வீச்­சாக முன்­னெ­ழு­வது தவிர்க்க முடி­யா­த­ தா­கும் என்­ப­தில் சந்­தே­கம் கிடை­யாது.

http://newuthayan.com/story/62525.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.