Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலிபோர்னியாவில் 13 குழந்தைகளை அறையில் கட்டி அடைத்து வைத்த பெற்றோர் கைது

Featured Replies

கலிபோர்னியாவில் 13 குழந்தைகளை அறையில் கட்டி அடைத்து வைத்த பெற்றோர் கைது

Parents-arrested-13-children-in-a-room-i

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 13 குழந்தைகளை அறை ஒன்றில் அடைத்துவைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டள்ளனர். கலிபோர்னியவைச் சேர்ந்த 57 வயதான டேவிட் அலன் ரேபின் (David Allen Turpin) மற்றும் 49 வயதான லூயிஸ் அன்னா ரேபின் (Louise Anna Turpin)  என்னும் தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மகள்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து தப்பி வந்து காவல்துறையினரிடம் முiறியட்டதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 Parents-arrested-13-children-in-a-room-i
தன்னையும் 13 சகோதரர்களை ஒரு அறையில் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாகவும் தம்மைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் பெற்றோரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் நிறைந்த அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகளை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

California.png?resize=800%2C450Parents-arrested-13-children-in-a-room-i

http://globaltamilnews.net/2018/61656/

 

 

பெற்றோரா, பேய்களா?

 

தமது பதின்மூன்று பிள்ளைகள் மீது எவ்வித அக்கறையும் இன்றி, அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி வைத்திருந்த தம்பதியரை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனர்.

4_Parents.JPG

கலிஃபோர்னியா பொலிஸாருக்கு கடந்த ஞாயிறன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தன்னை பதினேழு வயதுப் பெண் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட குரல், தன்னையும் தனது கூடப்பிறந்தவர்கள் பன்னிரண்டு பேரையும் தமது பெற்றோரே சிறைவைத்திருப்பதாகத் தெரிவித்தது.

அதிர்ச்சியடைந்த பொலிஸார், அத்தகவல் பொய்யாக இருக்கலாம் என்று எண்ணினர். எனினும் குறித்த முகவரிக்குச் சென்று பார்ப்பதால் எவ்வித நட்டமும் தமக்கு ஏற்படப்போவதில்லை என்று எண்ணி, தொலைபேசிக் குரல் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றனர்.

அங்கே, குப்பையும் கூளமும் நிறைந்த நாற்றமெடுக்கும் அலங்கோலமான வீட்டில், இரண்டு முதல் 29 வயது வரையான பதின்மூன்று பேர் கட்டில்களில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

அவர்கள் அனைவருமே தகுந்த பராமரிப்பின்றி, போதிய உணவின்றி பட்டினியில் நலிந்துபோய்க் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், அவர்களது பெற்றோர் டெக்ஸாஸில் பாடசாலை ஒன்றை நடத்திவந்ததாகவும் அது நட்டமடையவே கலிஃபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து வந்ததாகவும் தெரியவந்தது.

கிடைத்த தகவல்கள் அடிப்படையில், அந்தக் குழந்தைகளின் பெற்றோரான டேவிட் அலன் டேர்ப்பின் (57), லூஸி அன்னா டேர்ப்பின் (49) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்களான இருவரும் தலா ஒன்பது மில்லியன் டொலர் பிணையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

நன்கு கற்றறிந்தவர்களாக இருந்தும் தமது குழந்தைகளை ஏன் இவ்வாறு கேவலமாக நடத்தினர் என்பது குறித்து உடனடியாக தகவல் எதையும் பெறமுடியவில்லை என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/29472

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.