Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி

Featured Replies

மக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி

 

 

நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithri-palasrisena56.jpg

இனம், சமயம், நிறம் என்ற பேதமின்றி இந்த நாட்டின் அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது ஜனநாயக சமூகமொன்றையும் தூய அரசியல் இயக்கமொன்றையும் எதிர்பார்த்தேயாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் மக்களுடன் செயற்பட்டு அந்த சவாலை வெற்றிகொள்வதாக தெரிவித்தார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இனம், சமயம் என்ற பேதங்களின்றி நாட்டின் அனைத்து இனங்களினதும் உரிமைகளுக்காகவும் தான் முன்னிற்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்தியில் பின்தங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியை துரிதப்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தன்னுடன் செயற்படும் புதிய அமைப்பொன்றை மாவட்டத்தில் தாபிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச்செய்வதற்கு இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

நாட்டை முன்கொண்டுசெல்வதற்கும் தூய அரசியல் இயக்கத்திற்காகவும் இனம், சமயம் என்ற பேதங்களின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தானும் தயாரில்லை என்றும் குறிப்பிட்டார்.

விளையாட்டரங்கில் நிரம்பியிருந்த மக்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பெரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன்கிரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீ லங்கா மக்கள் தேசியக் கட்சியின் தலைமை செயலாளர் விஷ்னு காந்தன், மட்டக்களப்பு பட்டிருப்பு, கல்குடா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொருளாளர் ஏராவூர்பற்று

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் தம்பிநாயகம் கலேந்திரன் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

http://www.virakesari.lk/article/29740

  • தொடங்கியவர்

நாட்டின் அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் திருடர்கள் – ஜனாதிபதி

 

 

நாட்டின் அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் திருடர்கள் – ஜனாதிபதி
 

மக்களின் பணத்தை திருடியவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில மட்டக்களப்பு – மாவடிவேம்பு பகுதியில் இன்று மாலை இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் திருடர்கள் என குறிப்பிட்டார்.

ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளை போன்று இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாமல் இருப்பதற்கு அதுவே காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி 2008 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அப்பாவி ஏழை மக்களின் கோடிக்கணக்கான பணத்தை திருடியவர்களுக்கு தாம் ஒருபோதும் மன்னிப்பு வழங்குவதில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய இலங்கையை உருவாக்குவதாக தான் சர்வதேச தலைவர்களுக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் அதனை செயற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் பட்டதாரிகளின் பிரச்சினைகளை தாம் நன்கு அறிந்திருந்ததாகவும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.

 

http://newsfirst.lk/tamil/2018/01/நாட்டின்-அரசியல்வாதிகளி/

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் லட்சகணக்கான தமிழ்  மக்களை அழிக்க காரணமானது சொல்லுது கேளுங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.