Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 ஆவது தடவை களமிறங்குவது குறித்து இன்னும் தீர்மானமில்லை

Featured Replies

2 ஆவது தடவை களமிறங்குவது குறித்து இன்னும் தீர்மானமில்லை

04-2027387554e426c290c1775bb66c4fa66d3f2468.jpg

 

ஆனாலும் அரசியல் பயணம் தொடரும் என்கிறார் ஜனாதிபதி

மனித உரிமை விவகாரத்தில் அவசரம் காண்பிக்க முடியாது என் மீதான ரவியின் விமர்சனம் நியாயமற்றது

இரு விசாரணை அறிக்கைகளும் ஒன்றாகவருமென நினைக்கவில்லை

10 வருடங்களில் 10 டிரில்லியன் ரூபா நாட்டுக்கு கடன் ஏற்பட்டுள்ளது

கோத்தபாய ராஜபக் ஷ கைது விவகாரத்தில் நடந்தது இதுதான்

பொதுப்பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை

(நமது நிருபர்)

இரண்­டா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா இல்­லையா என்­பது தொடர்பில் இன்­னமும் தீர்­மானம் எடுக்­க­வில்லை. அடுத்த தேர்­த­லுக்கு வரு­வேனா விடு­வேனா என்­பது தொடர்பில் உரிய நேரத்­தி­லேயே தீர்­மானம் எடுக்க முடியும். ஜனா­தி­பதி பதவி இருக்­கின்­றதோ இல்­லையோ எனது அர­சியல் பயணம் தொடரும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடை­பெற்­றி­ருந்தால் அது குறித்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு கால அவ­காசம் கோரி­யுள்ளோம். எமக்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்தில் அவ­ச­ரப்­போக்கை நாம் காண்­பிக்க முடி­யாது. இவ்­வாறு அவ­சரம் காட்­டப்­பட்டால் அது இனங்­க­ளுக்­கி­டையே பேதங்­களை உரு­வாக்­கி­விடும். எனவே, இந்த விட­யத்தில் பொறு­மை­காப்­பது அவ­சியம் என்றும் ஜனா­தி­பதி

சுட்­டிக்­காட்­டினார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மத்­திய வங்கி ஆணைக்­குழு அறிக்கை பொய்­யெ­னக்­கூ­று­கின்றார். நான் வெளி­யிட்ட அறிக்­கை­யையும் விமர்­சித்­துள்ளார். சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் ஆலோ­சித்த பின்­னரே நான் எனது அறிக்­கை­யினை வெளி­யிட்­டி­ருந்தேன். ரவி கரு­ணா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் பிணை முறி தொடர்பில் கருத்து தெரி­விக்க முனைந்­த­போது முதலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதனை தடுத்­தி­ருந்தார். இரண்­டா­வது தட­வை­யாக சபா­நா­யகர் அதற்கு இணங்­க­வில்லை. இவ்­வா­றி­ருக்­கையில் என்­மீது குற்­றம்­சாட்­டு­வது நியா­ய­மற்­றது என்றும் ஜனா­தி­பதி கூறினார்.

தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்கள், மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றுக்­காலை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

இந்த சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இச்­சந்­திப்பில் பிரதி சபா­நா­யகர் திலங்க சுமத்­தி­பால , பிரதி அமைச்சர் லசந்த அழ­கி­ய­வண்ண , ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர் இங்கு கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி மேலும் கூறி­ய­தா­வது:-

மத்­திய வங்கி பிணி­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை என்­னிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. என்­னிடம் இந்த அறிக்கை சமர்ப்­பித்­த­வுடன் அதனை வெளி­யி­டு­மாறு கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன. அர­சியல் நோக்­கம்­கொண்டே இந்­தக்­கோ­ரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன.

இரண்டு வாரத்தில் ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நான் எண்­ணி­யி­ருந்­த­போ­திலும் உட­ன­டி­யாக சட்­டமா அதிபர், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், மற்றும் மத்­தி­ய­வங்கி ஆணை­யாளர் உட்­பட பல தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி இதனை வெளி­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தேன். இந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இரண்டு லொறியில் ஏற்­றக்­கூ­டிய ஆவ­ணங்கள் இருக்­கின்­றன. அறிக்­கை­யி­லுள்ள விட­யங்­களில் வழக்­கு­களை தாக்கல் செய்­வ­தற்­காக சில விட­யங்­களை இர­க­சி­ய­மாக வைத்­தி­ருக்­கு­மாறு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கையும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையும் சில தினங்­க­ளுக்குள் ஒன்­றாக என்­னிடம் கைய­ளிக்­கப்­படும் என்று நான் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. மத்­திய வங்கி பிணை முறி ஆணைக்­குழு அறிக்கை வந்­த­வுடன் அதனை வெளி­யி­டு­மாறு வலி­யு­றுத்­திய தரப்­பினர் இரண்­டா­வது அறிக்கை வந்­ததும் அமை­தி­யா­கி­விட்­டனர். இந்த இரண்டு அறிக்­கைகள் குறித்தும் பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­ப­ட­வேண்டும்.

10 திரி­லியன் கடன்

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த 10 வரு­ட­கா­லத்தில் வெளி­நாட்டு கடன்­களின் தொகை 10 திரி­லியன் ரூபா­வாக அமைந்­தி­ருக்­கின்­றது. இத­னைநாம் சாதா­ர­ண­மாக பார்க்கும் போது 1இலட்சம் கோடி ரூபா கடன் உள்­ளது. ஆனால் இதற்­கான கணக்கு வழக்­குகள் நிதி அமைச்சில் ஒழுங்­காக இல்லை. இத­னால்தான் பெற்ற கடன் தொகையின் கணக்­கினை உரிய வகையில் வெளிக்­காட்­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை நான் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன்.

அர­சாங்­கத்தின் வரு­மானம் திறை­சே­ரி­யி­லி­ருந்து தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு செல்­கின்­றது. இவ்­வா­றான செயற்­பாட்­டால்தான் அரச வரு­மானம் குறை­கின்­றது. அர­சாங்­கத்­துடன் சம்­பந்­தப்­பட்ட வர்த்­த­கர்கள் இலாபம் ஈட்டும் வகையில் அர­சாங்க வரு­மானம் பகி­ரப்­ப­டு­கின்­றது. வரவு, செல­வுத்­திட்­டத்தில் ஒதுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­படும் நிதியில் 50 அல்­லது 60 சத­வீ­த­மான நிதியே செல­வி­டப்­ப­டு­கின்­றது. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் அதி­கூ­டிய விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்பில் நுகர்வோர் அதி­கா­ர­சபை நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும்.

 இந்த நிலை­யில்தான் உள்­ளூ­ராட்சி தேர்தல் அறி­விக்­கப்­பட்டு பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற வகையில் நீதி­யான நியா­ய­மான தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும். வாக்­க­ளிப்பு நிலை­யத்­திலும் வாக்கு எண்ணும் நிலை­யத்­திலும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்று தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வரை நான் கேட்­டுக்­கொண்­டுள்ளேன். ஏனெனில் தற்­போ­தைய நிலையில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு குழுக்கள் இருக்­கின்­றன. வாக்­கெண்ணும் நிலை­யத்தில் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­டதும் வெற்­றி­பெற்­ற­வரைத் தவிர மற்­றை­ய­வர்கள் அந்த முடி­வினை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். போதைப்­பொருள், கசிப்பு, என்­ப­வற்­றுக்கு அடி­மை­யா­கி­யுள்ள குழு­வினர் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தவும் முயற்­சிப்­பார்கள். இதனால் அனைத்துத் தொகு­தி­யிலும் நீதி­யான தேர்­தலை நடத்­து­மாறும், பாது­காப்பை அதி­க­ரிக்­கு­மாறும் நான் கோரி­யுள்ளேன்.

யுத்­தத்­திற்குப் பின்னர் முதற்­ற­ட­வை­யாக நாடு­த­ழு­விய ரீதியில் உள்­ளூ­ராட்­சித்­தேர்தல் நடத்­தப்­ப­டு­கின்­றது. 341 சபை­களில் 339 சபை­களில் சுதந்­தி­ரக்­கட்­சி­யா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­கவும் நாம் போட்­டி­யி­டு­கின்றோம். இத­னை­விட எமது கூட்­ட­ணியில் தொண்­டமான், சேவல் சின்­னத்­திலும் அதா­வுல்லா குதிரை சின்­னத்­திலும் போட்­டி­யி­டு­கின்­றனர். இவர்­க­ளது வாக்­கு­களை எல்லாம் இணைத்தே எமது முடிவை அறி­விப்போம்.

பல்­க­லைக்­க­ழக மாணவர் போராட்டம்

சைட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­றனர். தேர்தல் காலத்தில் அமை­தியை குலைக்கும் வகையில் இவர்கள் கொண்­டு­வ­ரப்­பட்டு போராட்­டத்தில் இறக்­கி­வி­டப்­பட்­டுள்­ளனர். புதி­தாக பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு இணைந்த மாண­வர்கள் அச்­சு­றுத்­தப்­பட்டு இத்­த­கைய போராட்­டத்தில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். எனது நண்­பரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவே சைட்­டத்தை கொண்­டு­வந்தார். அப்­பாவி மாண­வர்கள் மீதான அடக்­கு­முறை குறித்தும் தேர்தல் அமை­தியை குலைக்கும் வகையில் இடம்­பெறும் போராட்டம் தொடர்­பிலும் பிக்­கு­மா­ண­வர்­களின் நட­வ­டிக்கை குறித்தும் நான் கவ­லை­ய­டை­கின்றேன்.

முன்­னைய அர­சாங்­கத்­தி­லி­ருந்து நான் வெளி­யே­று­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­ப­தியும் எனது நண்­ப­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் எனக்கு தனிப்­பட்ட கோபம் எதுவும் இருக்­க­வில்லை. கட்­சிக்­குள்ளும் அர­சாங்­கத்­திற்­குள்ளும் ஜன­நா­யகம் இல்­லா­தி­ருந்­தமை 18ஆவது திருத்­தத்தைக் கொண்­டு­வந்து தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட முனைந்­தமை கார­ண­மா­கவே நான் வெளி­யே­றி­யி­ருந்தேன். நான் பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் போது ஊழல் மோச­டி­களை ஒழிக்கும் விட­யமே பிர­தா­ன­மான பிர­சா­ர­மாக இடம்­பெற்­றது. ஆனால் எமது அர­சாங்கம் பத­வி­யேற்று இரண்டு மாதத்தில் பெரும் கொள்ளை மத்­திய வங்­கியில் நடை­பெற்­றுள்­ளது. இந்த நிலை­யில்தான் அது­கு­றித்து விசா­ரணை நடத்த நான் நட­வ­டிக்கை எடுத்தேன்.

நாளையை எதிர்­பார்த்து நான் செயற்­ப­ட­வில்லை. இவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­த­மை­யினால் என்னை தனிப்­பட்ட முறையில் தற்­போது விமர்­சித்து வரு­கின்­றனர். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பொய் என்­கிறார். இந்த அறிக்கை விடயம் தொடர்பில் அவர் பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு தட­வைகள் கருத்து தெரி­விக்க முயற்­சித்­துள்ளார். அதன்­போது முதற்­ற­டவை பிர­தமர் அதனை தடுத்தார். இரண்­டா­வது தட­வை­யாக சபா­நா­யகர் அதற்கு அனு­மதி மறுத்­துள்ளார். ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் நான் விடுத்த அறி­விப்பு தவறு என்று ரவி கூறு­கின்றார். அறிக்கை கிடைத்­ததும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள் எனது செய­லாளர் உட்­பட பல­ரு­டனும் கலந்­து­ரை­யாடி ஆலோ­சனை பெற்றே அந்த அறிக்­கை­யினை வெளி­யிட்டேன். இந்த விட­யத்தில் பெரும் சவால்கள் இருக்­கின்ற போதிலும் என்னால் ஆகக்­கூ­டிய அள­விற்கு முடிந்­த­வற்றை மேற்­கொள்வேன்.

இரண்டு ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். முன்­னைய ஊழல்­மோ­சடி தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் ஏன் நடத்­தப்­ப­ட­வில்லை என்று கேள்வி எழுப்­பு­கின்­றது. அந்த விட­யங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­துடன் வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. மத்­திய வங்கி பிணை மோசடி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது அமைச்­சர்­களின் தொலை­பே­சிகள் ஒட்­டுக்­கேட்­கப்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. ஆனால் அலோ­சி­யஸின் தொலை­பே­சியில் உள்­வந்த மற்றும் வெளிச்­சென்ற அழைப்­புகள் குறித்தே விசா­ர­ணைகள் நடை­பெற்­றது. இத்­த­கைய விசா­ர­ணை­களின் போது அதி­கா­ரிகள் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். எனவே இத்­த­கைய அச்­சு­றுத்­தல்­களை தடுக்க நாம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி: தேசிய பொரு­ளா­தாரம் வீழ்ச்­சிப்­போக்கில் உள்­ள­தாக குறிப்­பிட்­டீர்கள், பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப என்ன நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளீர்கள்?

பதில்: பொரு­ளா­தாரம் வீழ்ச்­சிப்­போக்கில் செல்­வ­தாக நான் கூற­வில்லை. பொரு­ளா­தாரம் வீழ்ச்­சிப்­போக்கில் செல்­வ­தற்­கான காரணம் குறித்தே நான் தெரி­வித்­தி­ருந்தேன். பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்ப பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அர­சாங்­கத்தில் ஒரு­ப­கு­தி­யினர் இதனைக் கட்­டி­யெ­ழுப்ப முய­லும்­போது மற்­றொரு பகு­தி­யினர் அதனை வீழ்த்த முயல்­கின்­றனர்.

கேள்வி: நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று மூன்று வரு­டங்­க­ளா­கி­விட்­டது. எத்­தனை வரு­டங்கள் பத­வியில் நீடிக்க முடியம் என்று அபிப்­பி­ராயம் கேட்­டி­ருந்­தீர்கள்? எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் நீங்கள் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வீர்­களா?

பதில்: நான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவோ, அல்­லது ஜனா­தி­ப­தி­யா­கவோ வரும்­போது எந்த எதிர்­பார்ப்பும் இல்­லா­ம­லேயே நான் வந்தேன். எமது நாட்டின் வர­லாற்றில் பிர­த­ம­ரா­கவோ அல்­லது எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவோ இருக்கும் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக வந்­துள்­ளனர். நான் இரண்­டு­மின்றி ஜனா­தி­ப­தி­யா­னவன். அமைச்­ச­ராக இருந்து 45 நாட்­களில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றவன். இரண்­டா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி தேர்­தலில் வரு­வேனா? விடு­வேனா என்­பது குறித்து இன்­னமும் தீர்­மா­னிக்­க­வில்லை. தற்­போது எமது பொறுப்­பினை நான் உரிய வகையில் ஆற்­றி­வ­ரு­கின்றேன். எனது அர­சியல் பயணம் தொடரும் இரண்­டா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்த இது­வரை தீர்­மா­னிக்­க­வில்லை. எனக்கு சக்தி இருக்­கும்­வ­ரையில் அர­சி­யலில் ஈடு­ப­டுவேன். ஜனா­தி­பதி பத­வியோ, அல்­லது வேறு பத­விகள் இருக்­கின்­ற­னவோ, இல்­லையோ எனது பயணம் தொடரும், அர­சி­யலில் 50 வரு­டத்தை கடந்­து­விட்டேன்.

கேள்வி: கணக்­காய்வு சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தீர்கள், இன்­னமும் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை?

பதில்: 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரவு, செல­வுத்­திட்ட விவா­தத்தில் நான் உரை­யாற்­றும்­போது இந்த சட்­ட­மூலம் ஜன­வரி மாதத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று கூறி­யி­ருந்தேன். இவ்­வி­டயம் குறித்து பல தட­வைகள் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் இதற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விரைவில் இந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­படும்.

கேள்வி: ஜெனிவா மனித உரிமை ஆணைக்­குழு கூட்டத் தொடர் மார்ச் மாதத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்று குற்­றம்சா ட்டப்­ப­டு­கின்­றது. இது குறித்து உங்­களின் பதில் என்ன?

பதில்: நான் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்­டது. இந்த மூன்று வரு­டங்­களில் எந்­த­வொரு மனித உரிமை மீறல் சம்­ப­வங்­களும் இடம்­பெ­ற­வில்லை. ஆனாலும் இந்த மூன்று வரு­டங்­க­ளிலும் மனித உரிமை மீறப்­பட்­ட­தாக அங்கு சென்று குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. எனது ஆட்­சியின் கீழ் மனித உரி­மை­களை மீற அனு­ம­திக்க மாட்டேன்.

 முன்­னைய காலத்தில் மனித உரிமை மீறப்­பட்­டி­ருந்தால் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் இதற்கு எமக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் நாம் கோரி­யி­ருந்தோம். இதற்­கி­ணக்க இரண்­டு­வ­ருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட­வ­டக்­கை­களை அவ­ச­ர­மாக செய்ய முடி­யாது. அவ்­விதம் அவ­ச­ரப்­பட்டால் இனங்­க­ளுக்­கி­டையே பேதங்கள் உரு­வாகும். எனவே உரிய கால அவ­கா­சத்­திற்குள் நாம் எமது பணி­யினை செய்வோம்.

ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர், ஐ.நா. செய­லாளர் உட்­பட சர்­வ­தேச தலை­வர்­களை நான் கடந்த மூன்று வரு­டங்­களில் சந்­தித்­துள்ளேன். இவர்கள் எமது அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை பாராட்­டி­யுள்­ளனர். வெளி­நா­டு­களில் இயங்கும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் முன்னாள் புலி­களின் அமைப்­புக்­களும் பதி­வில்­லாத நிறு­வ­னங்­களும் எம்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கின்­றன. எம்மைப் பொறுத்­த­வ­ரையில் நாம் வெளிப்­ப­டை­யாக செயற்­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி: மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­ப­ட­வில்லை என்று பிர­சா­ரக்­கூட்­டத்தில் குற்­றம்­சாட்­டி­யுள்­ளீர்கள். தேர்­த­லுக்கு முன்னர் விவா­தத்தை நடத்த வேண்­டு­மென்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஏன் கோர­வில்லை.

பதில்: சுதந்­தி­ரக்­கட்சி விவா­தத்தை நடத்­து­மாறு கோரி­யது. ஆனால் அடுத்த தரப்­பினர் அதனை ஒத்­தி­வைக்­கு­மாறு கூறி­ன­யுள்­ளனர். 10ஆம் திக­திக்கு முன்னர் விவாதம் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

கேள்வி: ஊழல் மோசடி விசா­ர­ணை­களை நடத்தும் அதி­கா­ரிகள் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தாக நீங்கள் கோரி­யி­ருந்­தீர்கள்? இவ்­வாறு கோரும் நீங்கள் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது­செய்ய முனைந்­த­போது அதனை தடுத்­தீர்கள் தானே?

பதில்: கோத்­த­பாய ராஜ­பக்ஷ கைது விவ­கா­ரத்தில் நடந்­தது என்ன என்­பதை அறி­ய­வேண்டும். ஊழல்­மோ­சடி விசா­ர­ணைகள் செல்­வாக்குப் பெற்ற அர­சியல் பிர­மு­கர்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெ­றும்­போது அந்த ஆவ­ணங்­களை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் உள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆரா­ய­வேண்டும். குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யுமா என்­பது தொடர்பில் உரிய முடிவு எடுக்­க­வேண்டும். வழக்கு விசா­ர­ணை­யினை கொண்­டு­செல்ல முடி­யுமா என்­ப­தனை தீர்­மா­னிக்­க­வேண்டும். இவ்­வாறு தீர்­மானம் எடுத்த பின்னர் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­த­ம­ரிடம் நான் கோரி­யி­ருந்தேன்.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ விட­யத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அவரை கைது செய்­வ­தற்­கான ஆணையை வழங்­கி­யி­ருந்­தது. இதன்­போது பொலிஸ்மா அதிபர் என்­னிடம் தொடர்பு கொண்டு இந்த விட­யத்தை தெரி­வித்தார். அந்த வேளையில் பிர­தமர் இந்­தி­யா­விற்கு விஜயம் செய்­தி­ருந்தார். இதன்­போது சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் மீண்டும் விசா­ரணை ஆவ­ணத்தை கொடுத்து பரி­சீ­லித்து பிர­தமர் வந்­த­வுடன் நட­வ­டிக்கை எடுக்­கலாம் என்று பொலிஸ்மா அதி­ப­ரிடம் கூறினேன். பிர­தமர் வந்­த­பின்னர் இது­தொ­டர்பில் அவ­ரி­டமும் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன். ஆனால் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் மூலம் அந்த ஆவ­ணங்கள் பரி­சீ­லிக்­கப்­ப­ட­வு­மில்லை. அதற்­கான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டவும் இல்லை. கைது விட­யத்தில் இதுதான் நடந்­தது.

கேள்வி: அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிர­தான கட்­சி­க­ளி­டையே தோன்­றி­யுள்ள பிணக்கு புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சியில் பாதிப்பை ஏற்­ப­டுத்­துமா?

பதில்: அப்­படிக் கூற முடி­யாது. அது பாரா­ளு­மன்­றத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விடயம். திங்­கட்­கி­ழமை அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களை சந்­திப்­ப­தற்கு அழைப்பு விடுத்­துள்ளேன். பிணை முறி அறிக்­கையில் பக்­கங்­களை காணா­ம­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தொடர்பில் அவர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­க­வுள்ளேன்.

கேள்வி: எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் சிங்­கப்பூர் பிரதமரை சந்தித்தபோது 2018ஆம் ஆண்டுக்குள் புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படவேண்டும். இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று கூறியிருந்தார். உங்களிடம் போசாது இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமரிடம் அவர் பேசியுள்ளார். யுத்தத்தின்போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 8000 பேரே கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரங்களில் வெளிவிவகார அமைச்சு உரிய வகையில் செயறபடவில்லையா?

பதில்: இவ்விடயம் குறித்து ஜெனிவாவிற்கு உரிய பதிலை நாம் அளித்துள்ளோம்.

கேள்வி: பிணைமுறி விசாரணை தொடர்பில் ஏதாவது கால எல்லை உள்ளதா?

பதில்: கூடிய விரைவில் ஊழல் விசாரணைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

கேள்வி: சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கான நித கொடுக்கல் வாங்கலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

பதில்: இந்த விடயத்தில் ஒருவர் மட்டுமல்ல அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்த ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்க நான் அனுப்பியுள்ளேன். இந்த அறிக்கைகள் கிடைத்ததையடுத்து மூன்று தடவைகள் சட்டமா அதிபர், மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன்.

கேள்வி: சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பொது பெரமுனவிற்கு ஆதரவளித்து வருகின்றனர். அவ்வாறு ஆதரவு அளிப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

பதில்: தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் மத்தியக்குழு கூடி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்கு பாடுபடுமாறு சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அதை யார் மீறினாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.