Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2020 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவோம்

Featured Replies

2020 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவோம்

 

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கவை விரட்டும் சூழ்ச்சி

(ஆர்.யசி)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்­னரும் பிர­தான இரண்டு கட்­சி­களின் தேசிய அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­படும். 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து கள­மி­றங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­ப­தி­யாக்கும் போராட்­டத்தை கையாளும் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியை தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சார கூட்டம் வென்­னப்­புவ பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.   

 அவர் மேலும் உரை­யாற்­று­கையில் புதிய முறையில் இப்­போது தேர்தல் ஒன்றை அனை­வரும் எதிர்­கொண்டு வரு­கின்றோம். கடந்த காலங்­களில் பல்­வேறு சிக்­கல்­களின் மத்­தியில் ஒரு சில­ருக்கு மாத்­திரம் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தும் தேர்தல் முறைமை ஒன்று காணப்­பட்­டது. எனினும் இன்று அவ்­வா­றான சிக்­கல்கள் இல்­லாது ஜன­நா­யக ரீதியில் தேர்தல் ஒன்றை அனை­வரும் சந்­திக்­கின்றோம். பிர­தே­ச­சபை பல­ம­டைய வேண்டும் என்றால் நடை­முறை அர­சாங்­கத்­துடன் பிர­தேச சபைகள் இணைந்து செயற்­பட வேண்டும்.  

பிர­தே­ச­சபை அதி­கா­ரங்கள் வேறு கட்­சிக்கு செல்­லு­மாயின் பிரச்­சி­னைகள் அதி­க­ரிக்கும். அர­சி­யலில் இல்­லாத நபர்­களை மக்கள் ஆத­ரித்து எந்­த­வி­தப்­ப­யனும் இல்லை. அவர்­க­ளிடம் எந்­த­வொரு வேலைத்­திட்­டமும் இல்லை. ஆகவே அவர்­களை மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக நிய­மித்து எந்­த­வித வேலைத்­திட்­டங்­க­ளையும் செய்­து­கொள்ள முடி­யாது. ஊழல் மோச­டிகள் மூல­மாக மக்­க­ளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை. அவ்­வா­றான தலை­வர்­களும் தேவை­யில்லை. மக்­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்­களை செய்­து­கொள்ள அர­சியல் வாதி­க­ளுக்கு கப்பம் கொடுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ இன்று எமது அர­சாங்­கத்தின் மீது குற்றம் சுமத்தி வரு­கின்றார். ஆனால் அவ­ரது காலத்தில் இருந்த மோச­மான சூழ்­நி­லைகள் இன்று இல்லை. பெண்­களை துஷ்­பி­ர­யோகம் செய்து அதனை கொண்­டாடும் நபர்­களோ, கொலை­செய்து, கொள்­ளை­ய­டித்து வாழும் நபர்­களோ எமது கட்­சியில் பிர­தேச சபை­க­ளுக்கு போட்­டி­யி­ட­வில்லை. இந்த தேர்­தலில் நாம் நிச்­ச­ய­மாக வெற்றி பெறுவோம். அதன்­பின்னர் மாகா­ண­சபை தேர்­த­லிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பலத்­தினை தக்­க­வைப்போம்.

எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து விமர்­சிக்கும் வேலை­யினை மட்­டுமே மஹிந்த ராஜபக் ஷ அர­சியல் மேடை­களில் கையாண்டு வரு­கின்றார். இனி விமர்­சிக்க ஒன்றும் இல்லை என தெரிந்­த­வுடன் பிர­தமர் அண்­மையில் நிகழ்­வொன்றில் நட­ன­மா­டி­யதை விமர்­சித்து வரு­கின்றார். அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க நட­ன­மா­டி­ய­தையும் அவர் விமர்­சிக்க ஆரம்­பித்­துள்ளார். ஆனால் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆடிய ஆட்­டத்தை மக்கள் அனை­வரும் இன்றும் மறக்­க­வில்லை. ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டமை, காணாமல் போனமை, தண்­டிக்­கப்­பட்­டமை, பொது­மக்கள் கார­ண­மின்றி கைது­செய்­யப்­பட்­டமை, இரா­ணு­வத்தை வைத்து அச்­சு­றுத்­தி­யமை என்­ப­ன­வற்றை எவ­ராலும் மறக்­க­மு­டி­யாது.

முன்னர் ஐக்­கிய தேசிய கட்­சியின் கூட்­டணி அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­பட்ட நிலை­யிலும் நாட்டின் பொரு­ளா­தாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்­டி­ருந்­தது. அப்­போதும் பிர­த­ம­ராக செயற்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுத்தார்.

ஆனால் அப்­போது பாரிய சூழ்ச்சி ஒன்றை செய்து எமது முதுகில் குத்­தியே எமது அர­சாங்­கத்தை வீழ்த்­தினர். இரண்டு ஆண்­டு­களில் நாம் நாட்டின் பொரு­ளா­த­ரத்தை சரி­யான திசைக்கு கொண்­டு­வந்தோம். இப்­போதும் அதே­போன்று ஒரு நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. பிர­தமர் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தை வீழ்த்தும் சூழ்ச்­சி­யொன்று முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்­றது. ஆனால் நாங்கள் இவற்றில் சிக்­கப்­போ­வ­தில்லை. இம்முறை நாம் ஏமாறப்போவதுமில்லை.

இந்த அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு வரையில் நாம் கொண்டுசெல்வோம். 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக் கட்சியாக உருப்பெற்று இந்த நாட்டின் தனி அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி நாட்டினை பலப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-27#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.