Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருளைப் பேசத் துணிதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேசாப் பொருளைப் பேசத் துணிதல்

வா. மணிகண்டன்

புனிதப்படுத்தப்பட்ட ஒன்றைப் பற்றி யாராவது பேசும் போது வெறியெடுத்தவர்களைப் போலக் கிளம்புவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. தீபாபவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்றால் ‘நீ யாருடா?’ என்பார்கள். விநாயகர் சதுர்த்திக்காக நீர் நிலைகளைக் கெடுக்க வேண்டாம் என்றால் ‘எங்களுக்குத் தெரியும்..நீ கிளம்பு’ என்பார்கள். கிறித்துவத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? இஸ்லாம் பற்றி நீ விமர்சனம் செய்ய முடியுமா? என்று அடுக்குவது வழக்கம். 

 

இதைச் சமீபமாக என்று கூடச் சொல்ல முடியாது. காலங்காலமாக வல்லான் சொல்வதுதானே நியாயம்? வரலாற்றில் ஏகப்பட்ட தகவல்கள் முற்றாக அழிக்கப்பெற்று தமக்குப் பிடித்த வகையில் வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலத்தில் விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் இடமில்லாமல் வெர்ச்சுவல் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. அலைபேசியில் அழைத்துப் பேசி பதிவு செய்து ‘அவனை ஒரு வழியாக்கிட்டேன்’ என புளகாங்கிதம் அடைகிற மனநிலைதான் பெருகி வளர்ந்திருக்கிறது. 

 

சமீபகாலத்தில் அறிவு சார்ந்து நிகழ்ந்த ஆழமான விவாதம் என்று எதைச் சொல்ல முடியும்? தொலைக்காட்சிகளுக்கு அன்றைக்கு எது சூடோ அதுதான் விவாதப் பொருள். நான்கைந்து பேர்களை அழைத்து வைத்துக் கத்தவிட்டு டி.ஆர்.பியை ஏற்றிக் கொண்டு சமோசா கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இங்கே எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்கள்தான் ஆயுள் என்பது துரதிர்ஷ்டம். ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு மட்டையைச்  சுழற்றுகிறவர்கள்தான் சுற்றிலும் இருக்கிறார்கள்.

 

இப்படியே எதைப் பற்றியும் அறிவார்ந்த விமர்சனங்களும் விவாதங்களுமில்லாமல் ஒரு தசாப்தத்தைக் கடத்தினால் எந்தச் சலனமுமற்ற மொன்னையான சமூகமாக தமிழ் சமூகம் மாறிவிடும் அல்லது எதைப் பற்றியும் புரிதலில்லாத ரவுடிக் குழுக்களாக மாறியிருப்போம். ஆண்டாளையும் தீபாவளிவையை மட்டுமில்லை. பெரியாரைப் பற்றிப் பேசினாலும் ஒரு குழு கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும். அம்பேத்கரைப் பற்றிய கேள்விகளை எழுப்பினாலும் அடி விழும். தமிழ் தேசியத்தைப் பற்றிய குரல் எழுப்பினால் கழுத்தை நெரிப்பார்கள். இந்திய தேசியம் பற்றி விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருவார்கள். தகவல் தொடர்பு எளிமையாக்கப்பட்டு அவை நம் விரல்களுக்கிடையில் வந்த பிறகு எல்லாவற்றையும் புனிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘அதைப் பத்தி நீ பேசக் கூடாது’ என்று தடுத்து எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக ஆதரிக்கும் சிறு சிறு குழுக்கள் நிறைய உருவாகியிருக்கின்றன. 

 

நாகரிகம் என்பதே உருமாறி, அழிந்து, புதுப்புது வடிவங்களை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதுதான். நிரந்தரம், சாஸ்வதம் என்றெல்லாம் எதுவுமில்லை. உரையாடல்கள் வழியாக ஒவ்வொன்றும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் அழிந்து போவதும்தான் அந்தச் சமூகத்தை பக்குவப்பட்ட சமூகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. அதற்கு அனுமதிக்காமல் வெற்றுப் பெருமையைக் கத்தியபடியே தடியைத் தூக்கிக் கொண்டு நின்றால் எதைப்பற்றியுமே துணிந்து ஒரு கருத்தைச் சொல்ல இயலாத சூழல்தான் உருவாகும். பிறகு விவாதமாவது வெங்காயமாவது. இன்றைக்கு நாம் வரலாறு என்று படித்துக் கொண்டும் நம்பிக் கொண்டும் இருப்பது முழுமையான வரலாறுதானா என்ற கேள்வி எழ வேண்டியதில்லையா? கடவுள்களின் வரலாறுகளும் கதைகளும் புனிதமாக்கப்பட்ட சம்பவங்களும் அப்படியே நிகழ்ந்தவைதானா? இன்றைக்கு நாம் தலைவர்களாகக் கருதிக் கொண்டிருப்பவர்களை மறுவிவாதங்களுக்கு உட்படுத்த வேண்டியதில்லையா? நன்மைகளையும் தீமைகளையும் தொடர்ந்து விவாதத்துக்குட்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியது சமூகத்தில் முக்கியமான செயல்பாடு.

 

நாம் நம்பிக் கொண்டிருப்பனவற்றில் பெரும்பாலானவை ஊதிப் பெருக்கட்டவை. கட்டமைக்கப்பட்டவை. மறைத்துத் திரிக்கப்பட்டவை. சரியோ, தவறோ- இவற்றையெல்லாம் யாராவது எங்கேயிருந்தாவது பேச ஆரம்பிக்கட்டும். எல்லாவற்றைப் பற்றியும் முழுமையான அலசல்களும் ஆராய்ச்சிகளும் தேவையாக இருக்கின்றன. எழுப்படும் சர்ச்சைகளுக்கு பொருள் பொதிந்த தர்க்கப் பூர்வமான பதில்களும் பதில் விவாதங்களும் அவசியமாக இருக்கின்றன. ஆனால் அப்படியானதொரு காலகட்டத்தில் நாம் இல்லை என்றுதான் ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன. 

 

எதைப் பற்றியும் உடைத்துப் பேசாமல் எல்லாவற்றையும் பூசி மொழுகி கல் தோன்றி முன் தோன்றாக் காலத்திலேயே என்று இழுத்துக் கொண்டிருந்தால் காட்டுமிராண்டித்தனம்தான் வளரும். வைரமுத்து ஆண்டாள் பற்றிப் பேசிய முழுக்கட்டுரையும் இணையத்தில் இருக்கிறது. முழுமையாக வாசித்து முடிக்க இருபது நிமிடங்கள் ஆகக் கூடும். ஆனால் அதற்குக் கூட பொறுமையில்லை. ‘என்னதான் சொல்ல வருகிறார்’ என்று கூட கவனிக்காமல் அவரை அழைத்து ‘உங்கம்மா கதவைத் திறந்து வெச்சிருந்தாங்களா’ என்று ஒருவர் கேட்கும் ஒலிக்கோப்பைக் கேட்க நேர்ந்தது. அபத்தம். வைரமுத்து பேசியது தவறு என்றால் அதற்கு பதில் சொல்ல தரவுகளைத் தயாரிக்க முடியாதா?

 

எல்லாவற்றிலும் சூடாகவே இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம்? ஆண்டாளைப் பற்றிய விவாதம் ஒரு பக்கமெனில் இயேசுவைப் பற்றிய விவாதமும் நடக்க வேண்டும். நபிகளைப் பற்றிய உரையாடலும் உருவாக வேண்டும். முத்தலாக், மதமாற்றத்தில் ஆரம்பித்து சாதியம், தமிழ் தேசியம் வரைக்கும் எல்லாவற்றைப் பற்றியும் திறந்த மனநிலையுடன் எதிர் தரப்பை அணுகுகிற மனநிலை எல்லாம் எந்தக் காலத்திலும் வராதா? 

 

ஒட்டிப் பேசுவதற்கு சில குழுக்கள் இருப்பின் அதை வெட்டியும் மறுத்தும் விவாதத்தை வளர்த்தெடுக்க இன்னொரு குழு இருக்க வேண்டும். அதுதானே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும்? ‘உங்கம்மா யோக்கியமா?’ என்று ஒருவன் கிளம்பி வந்தால் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று நினைக்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும். எழுதப்பட்ட, நமக்குச் சொல்லப்பட்ட கதைகளையும் புனைவுகளையும் அப்படியே உருவேற்றிக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு எந்தவிதமான வரலாற்று ஆய்வுகளும் விவாதங்களுமில்லாமல் கடத்துவது நாகரிகமடைந்த சமூகத்திற்கு பொருத்தமானதில்லை. அது நம்மைப் பழைய பெருங்காய டப்பாவாகவேதான் வைத்திருக்கும். உள்ளுக்குள் சில சொட்டு ரத்தங்களுடன் கூடிய டப்பாவாக.

 

http://www.nisaptham.com/2018/01/blog-post_12.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

 

சமீபகாலத்தில் அறிவு சார்ந்து நிகழ்ந்த ஆழமான விவாதம் என்று எதைச் சொல்ல முடியும்? தொலைக்காட்சிகளுக்கு அன்றைக்கு எது சூடோ அதுதான் விவாதப் பொருள். நான்கைந்து பேர்களை அழைத்து வைத்துக் கத்தவிட்டு டி.ஆர்.பியை ஏற்றிக் கொண்டு சமோசா கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இங்கே எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்கள்தான் ஆயுள் என்பது துரதிர்ஷ்டம். ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு மட்டையைச்  சுழற்றுகிறவர்கள்தான் சுற்றிலும் இருக்கிறார்கள்.

Bild könnte enthalten: 7 Personen

Bild könnte enthalten: 3 Personen, Text

 

Bild könnte enthalten: 9 Personen, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

தினமும் மாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், இவர்களின் புளித்துப் போன விவாதங்களை கேட்க பிரசர்  ஏறும்.
கலந்து கொள்பவர்களுக்கு சமோசா மட்டுமல்ல, 500 ரூபாயும் கொடுக்கின்றார்கள். 

அதிலும் பா.ஜ.க.வை சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்கிற பெயருடன் வருபவர் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு தொழிலுடன் வருவதை பார்த்து... பலர் அவருக்கு வேறு தொழில்களும், கொடுத்து மகிழ்ந்து இருக்கின்றார்கள்.  :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.