Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுத போராட்டம் மெளனிக்கபட்டதன் பின் கொள்கையில் இருந்து விலகிய கூட்டமைப்பு.

Featured Replies

ஆயுத போராட்டம் மெளனிக்கபட்டதன் பின் கொள்கையில் இருந்து விலகிய கூட்டமைப்பு.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறப்பாக இயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அதன் கொள்கைகளிலிருந்து விலகி செயற்படுவதாக முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதன் தெரிவித்தார்.

ஆயுத போராட்டம் மெளனிக்கபட்டதன் பின் கொள்கையில் இருந்து விலகிய  கூட்டமைப்பு.

அத்துடன் தேசியம் கதைத்துக் கொண்டு தேசியத்தையே முஸ்லிம் ஏகாதிபத்தியத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் தி.தேவறஞ்சனின் இல்லத்தில் நடைபெற்ற நேற்று செவ்வாய்க் கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தான் தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பார்த்தோம், உண்மையிலே “தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான்” தொப்பிகலப் பிரதேசத்தில் வைத்துத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது நாம் அழிவுகளைச் சந்திகத்துக் கொண்டிருக்கின்றோம்,இது வெளி உலகத்திற்குத் தெரியவருகின்றது. இந்நிலையில் அயர்லாந்தில் இருக்கின்ற முறைபோன்று ஒரு அமைப்பை ஏன் நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாது என எனது நண்பரும், சீரேஸ்ட ஊடகவியலாளருமான காலம் சென்ற தாரகி எனப்படும் சிவராம் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கை ஆலோசனை செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கூறி பின்னர் கிளிநொச்சியிலே வைத்து எமக்குரிய ஒரு அரசியல் பிரதிநிதிகளாக இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்றுதான் அதை உருவாக்கினோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாகத்தான் இயங்கியது. ஆனால் போராட்டங்கள் நிறுத்தப்பட்டதன் பிற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளில் பாரிய மாற்றங்களும், அவர்களின் போக்குகளிலும் மாற்றங்களும் காணப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே போட்டிகள், பொறாமைகள், காரணமாக அக்கூட்டமைப்பை இன்னும் பதிவு செய்யவில்லை.

ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாகச் சிதறிப் போவதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் விலகிவிட்டார், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு கோணத்திலிருக்கின்றார். சம்மந்தன் ஐயாவுக்கும் வயது போய்விட்டது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருபோதும் ஒற்றுமையில்லை. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக்திற்கு ஒரு உறுதியான கட்சி வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கின்ற கட்சியை ஆரம்பித்துள்ளோம்.

எமது கட்சியின் நோக்கங்களாக முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கில் யுத்ததினால் கணவனை இழந்த பெண்கள் கிட்டத்தட்ட 80000விதவைப் பெண்கள் உள்ளார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். தமிழர்களிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். முஸ்லிம் ஏகாதிபதிய திமிரை அடக்க வேண்டும்.

சிங்களத் தலைவர்களுடன் எமக்குப் பிரச்சனைகள் இல்லை, ஆனால் முஸ்லிம் தலைவரிகளின் ஏகாதிபத்தியக் குணங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. இவ்விடத்தில் நான் அப்பாவி முஸ்லிம் மக்களைக் குறை கூறவில்லை, இனத்துவேசமாகவும் நான் கூறவில்லை. ஆனால் முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த அறு ஓடும் என்று நாடாளுமன்றத்திலே அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். இதற்கு சம்மந்தன் ஐயாவோ, மட்டக்களப்பு மாவட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலளிக்கவில்லை. இவ்வாறு ஒரு முஸ்லிம் தலைவர் கூறுகின்றபோது அதனை நாம் முறியடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதேபோல் இன்மொரு இடத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லா கூறியுள்ளார் ஓட்டமாவடியிலே உள்ள ஒரு இந்துக் கோயிலை உடைத்து பள்ளிவாசல் கட்டியுள்ளேன் என்று, கடந்த கிழக்கு மாகாண சபையிலே வெறும் 7 ஆசனங்களை எடுத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தை நாம் ஆட்டிப்படைத்தோம் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இதுபோன்ற செயற்பாடுகளை நாங்கள் தடுக்க வேண்டும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Confederation-of-Stability-of-Conflict

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தட்ட இருக்கும் போது உங்களுக்கு தெரியலையா உதுகள் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.