Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டிக்குளம் பாடசாலை மீது வான்குண்டு வீச்சு:

Featured Replies

யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது சிறிலங்கா வான்படையினரின் மிக் ரக விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வடமராட்சி கல்வி வலயத்தின் 2 பாடசாலைகள் சுண்டிக்குளத்தில் இயங்கி வரும் நிலையில் அப்பாடசாலைகளில் ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சிறிலங்கா வான்படையினரின் மிக் ரக விமானங்கள் 5 குண்டுகளை வீசியுள்ளன.

இதில் ஆசிரியயையான கேசவஞானி சத்தியவதி (வயது 20), மாணவர்களான கணபதிப்பிள்ளை நிரோஜன் (வயது 12), இ.ஜெகதீபன் (வயது 14) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக படுகாயமடைந்த ஆசிரியையான கேசவஞானி சத்தியவதி தெரிவித்ததாவது:

"காலை 9 மணிக்கு பாடசாலை தொடங்கி பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மிக் ரக விமானங்கள் கடற்பகுதியால் வந்தன. மிக் ரக விமானங்கள் குண்டுகளை வீசும் சத்தம் கேட்ட போதே தாக்குதல் நடத்தப்படுவது எமக்கு தெரிந்தது. 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தபோது தான் குண்டுகள் வீழ்ந்தன" என்றார்.

"தாக்குதல் இடம்பெற்ற வேளையில் பேரிரைச்சல் தவிர வேறு எந்த ஒலியும் தமக்கு கேட்கவில்லை என்றும் குண்டுவெடித்த போதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதை தாம் உணர்ந்து கொண்டதாக" படுகாயமடைந்த மாணவன் கணபதிப்பிள்ளை நிரோஜன் தெரிவித்தார்.

சுண்டிக்குளம் முகத்துவாரத்தில் கடந்த ஜனவரி முதல் இயங்கி வரும் இப்பாடசாலையில் 175 வரையிலான மாணவர்களுககு 6 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஓகஸ்டில் சிறிலங்காப் படையினர் தொடக்கிய படை நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த உடுத்துறை மகாவித்தியாலம், ஆழியவளை சி.சி.த.க. ஆகிய பாடசாலைகள் இடம்பெயர்ந்து விசுவமடு புன்னை நீராவியில் இயங்கி வந்தன.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் தொழில் நிமித்தம் சுண்டிக்குளம் பகுதியில் தங்கியிருந்தன. இதனால் பாடசாலை ஜனவரியிலிருந்து சுண்டிக்குளம் முகத்துவாரத்தில் ஒரு ஆலமரத்தின் கீழ் இயங்கத் தொடங்கியது.

பின்னர் யுனிசெஃப் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இரண்டு கொட்டகைகள் போடப்பட்டு அதில் ஒன்றில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொட்டகையை பாதுகாப்பின் நிமித்தம் தாம் வெட்டை வெளியில் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் அடையாளங்களுடன் அமைத்ததாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையுடன் இணைக்கப்பட்ட நிலையில் இப்பாடசாலை இயங்கும் விபரம் சிறிலங்கா கல்வி உயர்மட்டத்தினருக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது.

சுண்டிக்குளம் முகத்துவாரப் பகுதியில் தற்போது இறால் பிடிபடுவது அதிகமாக உள்ளதால், அதிக தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலையை குறி வைத்துத்தான் 5 குண்டுகள் வீசப்பட்டன என்பதனை கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் இன்று பிற்பகல் 12.05 மணிக்கு சிறிலங்கா வான்படையினரின் கிபீர் ரக விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளன.

http://www.eelampage.com/?cn=31164

சுண்டிக்குளம் பாடசாலை மீது விமானத் தாக்குதல்: ஆசிரியர், பிள்ளைகள் காயம்

இன்று திங்கட் கிழமை காலை 9.45 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் விமானங்கள் சுண்டிக்குள பாடசாலை மீது மேற்கொண்ட வான் வழித்தாக்குதலில் இருபாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெண் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த மாணவர்கள் 7ம் வகுப்பில் கல்வி கற்கும் கே.நிரோஜன், 9ம் வகுப்பில் கல்வி கற்கும் ஜெயதீபன் எனவும் ஆசிரியை கே.சத்தியாவதி எனவும் இனம் காணப்பட்டுள்ளது.

சுண்டிக்குளம் கிளிநொச்சியில் இருந்து வடகிழக்காக 21 கிலோமீற்றர் தொலைவிலும் வடமராச்சியின் தெற்குப் பகுதியிலும் அமைந்துள்ளது

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

kifir190320074jv0az6.jpg

kifir190320074jv0az6.jpg

kifir190320074jv0az6.jpg

kifir190320074jv0az6.jpg

இது நல்ல அழகான படம்! பார்த்துப் பார்த்து சந்தோசப்படுவோம்! ..... இல்லையேல் கட்டிப் பிடித்து அழுவோம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.