Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள்....பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை; தேர்தலை நடத்துங்கள் என்­கிறார் மஹிந்த

Featured Replies

பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள்

p18-29ab0328b11b6ea6bf2ca1eb3fbf815b1ea52e5a.jpg

 

பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை; தேர்தலை நடத்துங்கள் என்­கிறார் மஹிந்த

(எம்.சி.நஜி­முதீன்)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு மக்கள் செய்­தி­யொன்றை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக பொதுத்தேர்­தலை நடத்த வேண்டும். அப்­பொதுத் தேர்தல் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக்­கொண்டே நாம் ஆட்­சி­ய­மைப்போம். மாறாக ஐக்­கிய தேசியக் கட்சி­யையோ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையோ இணைத்து புதிய ஆட்சி தொடர்­வ­தற்கு  நாம் தயா­ரில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சேன ஒரு­போதும் எனக்கு வழங்க மாட்டார். அத்­துடன் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் எமக்­கி­ருப்­ப­தனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­தித்­துவம் பற்றி அலட்­டிக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றும் மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன பெரு­வெற்றி பெற்­றது. அவ்­வெற்­றியை பெற்­றுத்­தந்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கிறேன். குறு­கிய காலத்தில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஊடாக பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இப்­பெ­ரிய வெற்­றி­பெற்­றுள்ளோம். 232 சபை­களில் நாம் வெற்­றி­பெற முடிந்­துள்­ளது. மஹ­ர­கம, மஹி­யங்­கனை, பண்­டா­ர­வளை, பேரு­வளை, திரப்­பன ஆகிய சபை­களில் நாம் ஆத­ரவு வழங்­கிய சுயேச்சை குழு­வி­னரே வெற்­றி­பெற்­றுள்­ளனர். ஏனைய பிர­தான கட்­சிகள் கடு­மை­யான பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளன. 

இத்­தேர்­த­லா­னது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களைத் தெரி­வு­செய்யும் தேர்­த­லாக அமை­யாது தேசிய முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பா­கவே அமைந்­தது. எமக்கு கிடைத்­தி­ருக்கும் வெற்­றியை வைத்துப் பார்க்­கும்­போது நாட்டை பிரிக்கும் அர­சி­ய­ல­மைப்பு, தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தல், வரிச் சுமை, மக்­க­ளுக்­கான சலு­கை­களை இல்­லாது செய்தல், அர­சியல் பழி­வாங்கல்,இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரான கெடு­பி­டிகள் என்­ப­வற்­றுக்கு எதி­ரா­கவே மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர்.

நாம் ஆட்­சியில் இருக்கும் போதும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­களை எதிர்­கொண்­டுள்ளோம். அச்­சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள வேலைத்­திட்­டங்­களை முன்­னி­றுத்­தியே தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். எனினும் இம்­முறை அர­சாங்கம் எதிர்த்­த­ரப்­பினர் மீது சேறு பூசி பிர­சாரம் மேற்­கொண்டு தேர்­தலை வெற்­றி­கொள்­ளலாம் எனக் கரு­தியே பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர். ஆகவே ஜன­வரி எட்டாம் திகதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றது போல் வெற்­றி­பெ­று­வ­தற்கே அர­சாங்கம் எதிர்­பார்த்­தது. அதற்கு மக்கள் தகுந்த பதி­ல­ளித்­துள்­ளனர்.

 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு மக்கள் செய்­தி­யொன்றை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும் என அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கிறோம். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நாட்டில் நிலவும் ஸ்திர­மற்ற நிலையைப் போக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி அப்­பெ­று­பே­று­களின் பிர­காரம் ஸ்திர­மான அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும்.மேலும் மூன்று மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. அம்­மா­காண சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லையும் நடத்த வேண்டும்.

 கலப்புத் தேர்தல் முறையில் சிக்கல் நிலை உள்­ளது. பெறு­பேறு வெளி­யிடும் நட­வ­டிக்கை இன்னும் முழுமை பெற­வில்லை. அத்­துடன் சில தேர்தல் பெறு­பே­று­களில் சிறிய திரிபு நிலை காணப்­ப­டு­கி­றது. அதனால் சில பிர­தே­சங்­களில் பெற்­றி­பெற்ற தரப்பை விட தோல்­லி­ய­டைந்த தரப்­பினர் அதிக பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்­றுள்­ளனர். பாரா­ளு­மன்றில் அவ­ச­ர­மாக நிறை­வேற்­றிய திருத்­தத்தின் மூலமே குறித்த சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

 உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் முழு­மை­யான பெறு­பே­றுகள் வெளி­யான பின்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் தெரி­வா­கி­யுள்ள உறுப்­பி­னர்­களை அழைத்து தங்­களின் பிர­தே­சங்­களில் எவ்­வாறு வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்க வேண்டும் என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­க­வுள்ளோம் என்றார்.

கேள்வி : 2020 ஆம் ஆண்­டுக்கு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்றா நீங்கள் கோரு­கி­றீர்கள்?

பதில் : நிச்­ச­ய­மாக… அதற்கு முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். மக்­களின் நம்­பிக்கை இல்­லாது ஆட்சி நடத்த முடி­யாது. அது தற்­போது அர­சாங்க தரப்­பிற்கும் நன்கு விளங்­கி­யி­ருக்கும்.

கேள்வி : அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆம் திருத்­தத்தின் பிராரம் குறித்த காலக்­கெடு நிறை­வ­டைய முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் பார­ளு­மன்றில் பிரே­ர­ணை­யொன்று கொண்டு வந்து நிறை­வேற்­றப்­பட வேண்டும். எனவே அப்­பி­ரே­ர­ணையை நீங்கள் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­பீர்­களா?

பதில் : இல்லை. அவ்­வா­றான யோச­னை­யொன்றை முன்­வைக்­கப்­போ­வ­தில்லை. ஏனெனில் நாம் அவ்­வா­றான பிரே­ரணை கொண்­டு­வ­ரும்­போது அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் எதிர்ப்புத் தெரி­விப்பர். ஆகவே அர­சாங்க தரப்பே அவ்­வா­றான பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றிற்கு கொண்டு வர வேண்டும். அவ்­வாறு கொண்­டு­வ­ரப்­ப­டு­மி­டத்து அதற்கு நாம் ஆத­ரவு வாழங்­குவோம். மேலும் அப்­பி­ரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான மக்கள் அப்­பி­ராயம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து அர­சாங்கம் அமைப்­ப­தற்கு நீங்கள் எதிர்­பார்க்­கின்­றீர்­களா?

பதில் : அவ்­வாறு நாம் ஏன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும்? அவ்­வாறு செய்­வ­தாயின் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டி­ய­தில்லை. புதிய அர­சாங்கம் அமைக்க வேண்­டு­மாயின் தேர்தல் நடத்தி அப்­பெ­று­பே­று­க­ளின்­படி அர­சாங்கம் அமைக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளோம். அவ்­விரு தரப்­பி­ன­ரையும் மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 96 ஆச­னங்­களைப் பெற்றோம். எனினும் அதி­லுள்ள சிலர் மக்­களின் ஆணைக்கு புறம்­பாக அர­சாங்­கத்தில் இணைந்து கொண்­டனர். ஆகவே நாம் எதிர்க்­கட்­சியில் அங்கம் வகித்தோம். எமக்கு கிடைக்க வேண்­டிய எதிர்க்­கட்சித் தலை­மை­யையும் இல்­லாமல் செய்­தனர். எனவே எந்­த­வொரு அதி­கா­ரமும் இல்­லாத நிலை­யி­லேயே நாம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­கொண்டு வெற்­றி­பெற்றோம்.

கேள்வி : தங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தல­மைப்­ப­தவி வழங்­கப்­பட்டால் அதனை நீங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்­களா?

பதில் : அது தொடர்பில் கட்­சியே தீர­மா­னிக்க வேண்டும். எனினும் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மைப்­ப­த­வியை வழங்க மாட்டார் என்றே கரு­து­கிறேன்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்­கத்­து­வத்தை வைத்­துக்­கொண்டு கட்­சியை சீர் குலைப்­ப­தாக சிலர் குற்றம் சாட்­டினர். அதன் யதார்த்தம் என்ன?

பதில் : அக்­குற்­றச்­சாட்­டுக்­கான தீர்ப்பை மக்கள் வழங்­கி­யுள்­ளனர்.

கேள்வி : ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் அங்­கத்­து­வ­தத்தை தொடர்ந்தும் பேணு­வீர்­களா?

பதில் : அது பற்றி பின்னர் தீர்­மா­னிப்போம். எனினும் நாட்டு மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் எமக்­கி­ருக்­கின்­ற­போது போலி­யான அங்­கத்­துவம் எமக்­கெ­தற்கு? மரு­தானை டார்லி வீதியில் இருக்கும் கட்­டிடம் மாத்­திரம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யல்ல.

கேள்வி : கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் தங்­களின் தலை­மையில் 96 உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வா­கி­யி­ருந்­தனர். எனவே அவர்­க­ளையும் மேலும் சில­ரையும் இணைத்­துக்­கொண்டு புதிய அர­சாங்கம் அமைக்கும் எதிர்­பார்ப்­பி­ருக்­கி­றதா?

பதில் : இல்லை… அவ்­வா­றான எதிர்­பார்ப்பு எம்­மிடம் இல்லை. பொதுத் தேர்­தலை நடத்தி அதன் பெறு­பே­று­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு புதிய அர­சாங்கம் அமைப்­ப­த­தையே நாம் விரும்­பு­கிறோம். ஏனெனில் சூழ்ச்சி செய்து அர­சாங்கம் அமைக்கும் எண்ணம் எமக்­கில்லை. ஜன­நா­யக ரீதியில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கே எதிர்­பார்க்­கிறோம்.

கேள்வி : உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தாங்கள் பெரும்­பான்மை பெறாத சபை­களில் வேறு கட்­சி­க­ளுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளீர்­களா?

பதில் : அவ்­வாறு எம்­முடன் இணைந்து அட்­சி­ய­மைப்­தற்கு வேறு தரப்­பினர் ஆர்வம் காட்­டு­கின்­றனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொண்­ட­மானின் கட்சி எம்­முடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தற்­போதே ஆயத்­த­மா­கி­யுள்­ளது.

கேள்வி : அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பார­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ரா­வது தங்­க­ளுடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­னரா?

பதில் : இல்லை. அவ்­வாறு எவரும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை.

கேள்வி : அவர்கள் இணைந்­துகொள் முன்­வந்தால் இணைத்­து­கொள்­வீர்­களா?

பதில் : அதில் அங்கம் வகிக்கும் பல­ருக்கு எம்­முடன் இணை­வ­தற்கு விருப்பம் இல்லை.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட­சியும் இணைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே?

பதில்: கட்சி தலை­மைகள் அதற்கு முற்­ப­டலாம்.எனினும் கிரா­மப்­பு­றங்­க­ளி­லுள்ள மக்கள் அதனை விரும்பப் போவ­தில்லை. அதனால் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களும் அதற்கு இணங்கப் போவ­தில்லை.

கேள்வி : நாட்டின் பொரு­ளா­தா­ர­தத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­க­கைகள் மேற்­கொள்­ளலாம் என எதிர்­பார்க்­கி­றீர்கள்?

 பதில் : முதலில் அதி­கா­ரத்தை வழங்­குங்கள், அதன் பின்னர் செய்து காட்­டு­கிறோம். கடந்த காலங்­க­ளிலும் அதனை நாம் செய்து காட்­டி­யுள்ளோம்.

கேள்வி : ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து புதிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு இட­முண்டு என சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு நடை­பெற்றால் அதனை நீங்கள் எவ்­வாறு எதிர்­கொள்­வீர்கள்?

பதில் : பொறு­தித்­தி­ருந்து பார்ப்போம்… எனினும் அவ்­விரு தரப்­பி­னரும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பா­ளர்கள் என எதிர்­பார்க்க முடி­யாது. மக்கள் எமக்கு வழங்­கி­யுள்ள ஆணையை நிறை­வேற்றும் வகையில் செயற்­ப­டுவோம். ஆகவே நாட்டை இரண்­டாக பிரித்தல், தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தல் என்­ப­வற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்போம். மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைத் தண்­டிப்­ப­தற்கும் நாம் எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டும் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : பொதுத் தேர்­த­லுக்கு சென்றால் நீங்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஊடா­கவா போட்­டி­யி­டு­வீர்கள்?

பதில் : மக்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே அது தொடர்பில் நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான நிலைப்­பாட்டில் உள்­ளீர்கள்?

பதில் : முதலில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் அது பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி : நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யும் நடவடிக்ககைக்கு ஆதரவு வழங்குவீர்களா?

பதில் : ஆம், ஆதரவு வழங்குவேன்.

கேள்வி : வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கான ஆதரவு எவ்வாறுள்ளது.

பதில் : வடக்கு கிழக்கிலும் எமக்கு ஆதரவு உள்ளது. அப்பிரதேசங்களில் எமது பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆகவே இன மத மொழி பேதமின்றி சகல தரப்பினரும் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

கேள்வி : எதிர்க்கட்சி தலமைப் பதவியை இரா. சம்பந்தனால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமா?

பதில் : அது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாது. எனினும் மக்கள் தற்போதைய எதிர்க்கட்சித் தலைமையையும் நிராகரித்துள்ளனர். ஆகவே நாம் தான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறோம்.

கேள்வி : பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதி்ராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வருவீர்களா?

பதில் : தேர்தல் மூலம் மக்கள் வழங்கியிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விட வேறு நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை என்றே கருதுகிறேன். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.