Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சியல் குழப்பம் நீடிக்­கக்­கூ­டாது

Featured Replies

அர­சியல் குழப்பம் நீடிக்­கக்­கூ­டாது

 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த   ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன பெரும் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து அர­சி­யலில் பெரும் குழப்­பகர­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து முன்­னெ­டுத்து வரும் தேசிய அர­சாங்கம் நீடிக்­குமா என்ற கேள்­வியும் தற்­போது எழுந்­துள்­ளது.  

தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் பின்­ன­டைவைக் கண்­ட­தை­ய­டுத்து இரு கட்­சிகளுக்­குள்ளும் நெருக்­கடி நிலை முற்­றி­யுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை தொடர்ந்தும் 2 வருட காலத்­துக்கு ஆட்சி முடி­யும்­வரை முன்­னெ­டுப்­பது தொடர்பில் குழப்­பகர­மான நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

நல்­லாட்­சியை தொட­ர­வேண்­டு­மானால் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­க­வேண்­டு­மென்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அவ்­வாறு செய்­யாத பட்­சத்தில் அர­சாங்­கத்தில் தாம் தொடர்ந்தும் அமைச்சுப் பத­வி­களை வகிக்­க­மு­டி­யாது என்று சுதந்­திரக் கட்­சியின் பல அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இதே­போன்றே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்த ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து நல்­லாட்­சியை கொண்­டு­ ந­டத்­து­வது கடினம் என்­ப­தனால் ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்­க­வேண்­டு­மென்றும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­யா­ன­தை­ய­டுத்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜனா­தி­ப­தியை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

இதன் தொடர்ச்­சி­யாக நேற்று முன்­தினம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இந்தச் சந்­திப்­பின்­போது தேர்தல் தோல்­விக்­கான கார­ணங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தானால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரும் ஒரு­மித்த நிலைப்­பாட்டில் பய­ணிக்க வேண்டும். இல்­லையேல் ஆட்­சியைக் கொண்டு நடத்­து­வ­தென்­பது கடி­ன­மான காரி­ய­மாகும் என்று கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்கள் எடுத்­துக்­கூ­றி­ய­துடன் இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் தெளிவாக பேசி முடி­வொன்­றினை எடுக்­க­வேண்டும் என்று இந்தச் சந்­திப்பில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தச் சந்­திப்­பை­ய­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு­வினை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் மாலை சந்­தித்து பேசி­யி­ருந்தார். மாலை 5.30 மணி முதல் இரவு 8மணி வரை நடை­பெற்ற இந்தச் சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது ஆலோ­ச­னை­களை தெரி­வித்­துள்­ளனர். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தோல்வி ஏற்­பட்­ட­தற்­கான கார­ணங்கள் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விளக்­கி­யுள்­ளனர். ஜனா­தி­பதி மீதும் பெரு­ம­ள­வானோர் குற்­றச்­சாட்­டு­க்களை முன்­வைத்­துள்­ளனர். தற்­போதைய நிலையில் கட்சித் தலைமை பத­வியில் மாற்றம் செய்­ய­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் சிலர் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது மிகு­தி­யா­க­வுள்ள 2 வருட காலத்­துக்கு தனி­யாக ஆட்சி அமைக்­க­வேண்­டு­மென்று பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இந்த விட­யங்கள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­து­ரை­யாடி உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பிர­தமர் இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­வித்­துள்ளார்.

இந்தக் கூட்­டங்­க­ளை­ய­டுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தி­ன­மி­ரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்­பின்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாட்­டினை தெரி­விக்­கு­மாறு ஜனா­தி­பதி கேட்­ட­தாகத் தெரி­கின்­றது. இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யாடி முடி­வினை அறி­விப்­ப­தாக பிர­தமர் கூறி­யி­ருக்­கின்றார்.

இவ்­வா­றான நிலை­யில்தான் நேற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேசியிருந்தனர். இவ்­வாறு அர­சாங்­கத்­துக்குள் தற்­போது பெரும் நெருக்­கடி நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் நீடிக்­குமா என்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமைப் பத­வியில் தொடர்ந்தும் நீடிப்­பாரா என்ற கேள்­விகள் எழுந்­துள்­ளன.

தற்­போது நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் 45 சத­வீ­த­மான வாக்­கு­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன பெற்­றுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்சி 32 சத­வீ­த­மான வாக்­கு­க­ளையும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து 14 வீத­மான வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு 3 வீத­மான வாக்­கு­க­ளையும் ஜே.வி.பி. 6.27 சத­வீ­த­மான வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளன. பொது­ஜன பெர­மு­ன­வை­விட ஏனைய கட்­சிகள் பெற்ற வாக்­குகள் அதி­க­மா­கவே உள்­ளன. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ 47 சத­வீ­த­மான வாக்­கு­களை பெற்­றி­ருந்தார். ஆனால் இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் 45 சத­வீ­த­மான வாக்­கு­களே அவ­ரது அணிக்கு கிடைத்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் நல்­லாட்சி அர­சாங்கம் தொட­ர­வேண்­டுமா அல்­லது அதில் மாற்­றங்­களை செய்­ய­வேண்­டுமா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் 62 வீத­மான மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தி­ருந்­தனர். அதே­போன்று அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது பெரும்­பான்மை ஆச­னங்­களை கைப்­பற்­றி­யி­ருந்­தது. 106 ஆச­னங்­களைக் கைப்­பற்­றிய தனிக் கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்சி திகழ்ந்­தது. இந்­த­நி­லையில் தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வந்­தி­ருந்தார். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அன்று வழங்­கப்­பட்ட மக்கள் ஆணை­யா­னது 5 வருட பத­விக்­கா­லத்தைக் கொண்­ட­தாகும்.

இத­ன­டிப்­ப­டையில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் இந்த அர­சாங்­க­மா­னது பத­வியில் இருந்­தே­யா­க­வேண்டும். தற்­போது நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெரும்­பான்மை ஆச­னங்­களை பொது­ஜன பெரமுன பெற்­றது என்­ப­தற்­காக ஆட்­சியை மாற்­ற­வேண்­டிய அவ­சியம் இல்லை. ஆனாலும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் எழுந்­துள்ள முரண்­பா­டான நிலைமை கார­ண­மா­கவே பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­க­வேண்­டு­மென்று சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் கோரி வரு­கின்­றனர். இவர்­க­ளது இந்த நிலைப்­பாட்­டுக்கு ஜனா­தி­ப­தியும் தலை­சாய்ப்­ப­தா­கவே அவ­ரது செயற்­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது தனித்து ஆட்சி அமைப்­ப­தற்­கான நிலைமை ஏற்­படும். ஆனால் அவ்­வாறு தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு 113 உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவு தேவை­யாகும். இதற்­கான வழி­வ­கை­களை அந்தக் கட்சி மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமை பேச்சு நடத்­தி­யுள்­ள­தா­கவே தெரி­கி­றது.

தற்­போ­தைய நிலையில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ

பக் ஷ கோரிக்கை விடுத்திருக்கின்றார். அவரது கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனெனில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய பாராளுமன்றத்துக்கான ஆணை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. எனவே அதற்குள் தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் எதுவுமில்லை.

எனவே இத்தகைய நிலையில் நல்லாட்சியை 2 வருடகாலத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ளவேண்டும். இந்த 2 வருடகாலத்துக்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகவுள்ளது. இவ்வாறு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் உரிய வகையில் நிறைவேற்றப்படுமானால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அதற்குரிய வகையிலான ஆணையினை வழங்குவார்கள்.

எனவே தற்போதைய அரசியல் குழப்பமானது நீடிக்கக்கூடாது. ஜனாதிபதியும் பிரதமரும் தீர்க்கமான தீர்மானத்துக்கு வந்து நல்லாட்சியை தொடரவேண்டும். இதுவே இன்றைய தேவையாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.