Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

Featured Replies

உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

 

 

சமகால காலத்தில் கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பான நிலையே காணப்படுகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பில் அடுத்த கட்ட நகர்வு குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை நீக்கி விட்டு மஹிந்தவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தருமாறு ஜனாதிபதி கோரியதாக கூறப்படுகிறது.

அவ்வாறு நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு பெரும்பான்மை பலம் இருந்தால் அதனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நண்பகல் தொடக்கம், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக பதவியேற்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று இந்தக் கடிதம், ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பை திடீரென ரத்துச் செய்துள்ளார்.

அதேவேளை, இன்று காலை மஹிந்தவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜெயந்த சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு, சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு கூட்டு எதிரணி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்சவிடம், சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

http://www.tamilwin.com/politics/01/174455?ref=home-imp-flag

 

 

பிரதமரை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி வாக்குறுதி

 

 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என, பாராளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம தெரிவித்தார்.

Ranil_Maithri_sad.jpg

ஒன்றிணைந்த எதிரணியினருடன் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் என குமார வெல்கம குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/30685

  • தொடங்கியவர்

அவசரமாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடும் ஜனாதிபதி

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கும் இடையில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையில், அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுகள் குறித்து இவரும் கலந்துரையாடி வருவதாக பேசப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க சட்டத்தில் இடமுள்ளதா என்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால், மாத்திரமே அந்த பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்க முடியும் என அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பதவி விலகாத நிலையில், வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமித்தால், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

http://www.tamilwin.com/politics/01/174464?ref=home-latest

  • தொடங்கியவர்

கொழும்பு அரசியலில் மும்முனை போட்டி! ஆட்சியமைக்கப் போவது யார்?

 

தென்னிலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியினருக்கும் மற்றும் மகிந்த அணியினருக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மகிந்த தரப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சியமைக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையின் அண்டை நாடு ஒன்று இதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பேசப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்க தலைமைக்கு ஆதரவு வழங்கிய போதிலும் எதனையும் செய்ய முடியாத நிலைமையில் ரணில் தரப்பு இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தினாலும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்பட மாட்டாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அண்டை நாடொன்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வெவ்வேறு கலந்துரையாடல்களிலும் தற்போதைய அரசியலில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்த போதிலும் கொழும்பு அரசியலில் நடக்கும் அரசியல் மும்முனை போட்டியால், நாட்டில் பெரும் பின்னடைவு எற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன.

 

http://www.tamilwin.com/politics/01/174460?ref=imp-news

 
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் எப்போதும்  தனது பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக
நிறைவேற்றவில்லை என்று நினைக்கின்றேன்.
பிரதமர் ஆயுள் அவருக்கு குறைவாகவே உள்ளது.

  • தொடங்கியவர்

நாடு அபாய கட்டத்தை நோக்கி செல்கின்றது! மகாநாயக்கர் தேரர் அறிவுரை

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து கொழும்பு அரசியல் கடும் நெருக்குதலை எதிர்நோக்கியுள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பல்வேறு தரப்பினர்களும் அலோசனைகளை கூறிவருகின்றனர்.

இந்நிலையில், மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து அவர் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டின் சமகால அரசியல் மோசமான நிலைமையில் சென்றுகொண்டிருக்கின்றது. எனவே, இதற்கு உரிய தீர்வை விரைவாக காணவேண்டும்.

தவறும் பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். தற்போதைய நிலையில் நாடு ஒரு அபாய கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதனை செய்யாமையின் காரணமாகவே தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்ததுள்ளதாக” அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/174500?ref=home-latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.