Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள நீதிமன்றம்: குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்! தீர்ப்பு - உலகத் தமிழர்கள் குற்றவாளிகள்!

குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்! 61 members have voted

  1. 1. "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்...

    • உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள்!
      21
    • உலகத் தமிழர்கள் குற்றவாளிகள்!
      40

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

திருவாளர். இ. தேவகுரு அவர்கள் மிக நீண்ட காலமாக யாழ் களத்தில் உறுப்பினராக இருந்து (Joined: 14-September 03) யாழ் களம் வெறும் அரட்டை அடிக்கும் களமாக மாறாது காப்பாற்றி, பல அறிவியல் மற்றும் கம்பியூட்டர் தகவல்களை தந்துகொண்டிருக்கும், தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் சிறந்த ஒரு அறிஞர். யாழ் களத்தை அறிவியல்பூர்வமாக கொண்டு நகர்த்துவதற்கு அவர் ஆற்றிய, ஆற்றுகின்ற பணிகள் எண்ணற்றவை. இவர் தனது பல வேலைப் பழுக்கள் மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, இதற்கென நேரத்தை ஒதுக்கி யாழ் கள நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக வந்து, வாதத்தின் தனது தொகுப்புரையை, தீர்ப்பை வழங்கியமைக்கு யாழ் களத்தின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • Replies 55
  • Views 8.9k
  • Created
  • Last Reply

யாழ் கள நீதிமன்றின் கனம் நீதிபதிகள், நடுவர் குழு, இம்மன்றை வழி நடத்திய மாப்பிளை மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் நோர்வேஜியனின் பணிவான வணக்கங்கள்.

மிகவும் சிக்கலான இவ் வழக்கினைச் சிறப்பாக ஆராய்ந்து புரட்டாதி 30-ஆம் நாள் வரை தற்காலிகமாக ஒத்திவைத்து தீர்ப்பளித்தமைக்கு நன்றிகள்.

இங்ஙனம்

உண்மையுள்ள

நோர்வேஜியன்

  • தொடங்கியவர்

யாழ் கள நீதிபதிகளில் ஒருவரான திருவாளர். சாத்திரி அவர்கள் யாழ் களத்தின் ஒரு நீண்டகால உறுப்பினர். தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் ஒரு அறிஞர். நகைச்சுவையாக பல ஆழமான கருத்துக்களைக் கூறுபவர். இவர் தனது பல வேலைப் பழுக்கள் மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, இதற்கென நேரத்தை ஒதுக்கி யாழ் கள நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக வந்து, வாதத்தின் தனது தொகுப்புரையை, தீர்ப்பை விரைவில் வழங்க இருப்பதற்காக யாழ் களத்தின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் திருவாளர். சாத்திரி தனது தீர்ப்புரையை இன்னும் கூற முடியவில்லை.

யாழ் கள நீதிபதிகளில் ஒருவரான திருவாளர் சபேசன் அவர்கள் வெப்ஈழம் - http://www.webeelam.com/ - எனும் இணையத்தளம் மூலமாக பல நல்ல கருத்துக்களைக் கூறிவரும் தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு அறிஞர். யாழ் களத்திலும் திருவாளர். சபேசன் அவர்கள் பல நல்ல கருத்துக்களை கூறியுள்ளார். இவர் தனது பல வேலைப் பழுக்கள் மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, இதற்கென நேரத்தை ஒதுக்கி யாழ் கள நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக வந்து, வாதத்தின் தனது தொகுப்புரையை, தீர்ப்பை விரைவில் வழங்க இருப்பதற்காக யாழ் களத்தின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் திருவாளர். சபேசன் தனது தீர்ப்பின் தொகுப்புரையை இன்னும் கூற முடியவில்லை. ஆனாலும், தனது தீர்ப்பு உலகத் தமிழர்கள் குற்றவாளிகளே என பிரத்தியேகமான செய்தியில் அறிவித்துள்ளார். தான் உலகத் தமிழர்கள் ஏன் குற்றவாளிகள் என்று கருதுவதற்கான விளக்கவுரையை விரைவில் இங்கு வழங்குவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில்.....

முக்கிய அறிவிப்பு

கீழ்வரும் யாழ் கள நீதிமன்ற விதி முறைகளிற்கு அமைய...

விதிமுறை இலக்கம் 5: நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறுவதற்காக யாழ் இணையத்தில் மிகச்சிறப்பாக நடுவுநிலமையுடன் இருந்து கருத்து எழுதும் ஐந்து நீதிபதிகளின் தனித் தனி தொகுப்புரை மார்ச் 30, 2007 அன்று வெளிவிடப்படும். நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புக்களைக் கூறும் பட்சத்தில், பெரும்பான்மையான நீதிபதிகளின் தெரிவே இறுதித் தீர்ப்பாக அறிவிக்கப்படும். உதாரணமாக மூன்று நீதிபதிகள் உலகத் தமிழர்கள்சுத்தவாளிகள் என்றும், இரண்டு நீதிபதிகள் உலகத்தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு கூறும்பட்சத்தில் பெரும்பான்மை நீதிபதிகளின் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள் என்ற தீர்ப்பே இந்த நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பாக அறிவிக்கப்படும்.

விதிமுறை இலக்கம் 7: மார்ச் 30, 2007 வரை நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளும் யார் என்ற செய்தி இரகசியமாக வைக்கப்படும். மார்ச் 30, 2007 அன்று யாராவது நீதிபதி தனது தொகுப்புரையில் தீர்ப்பை கூறாத பட்சத்தில் மிகுதியாய் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பின் பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும். இறுதித் தீர்ப்பில் 02 நீதிபதிகள் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள் என்றும், 02 நீதிபதிகள் உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் கூறும்பட்சத்தில், நீதிமன்றத்தினால் நடத்தப்படும் பொதுசன வாக்கெடுப்பின் பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும்.

மேற்கூறிய விதிமுறைகளின் அடிப்படையில் யாழ் கள நீதிமன்றத்தில் உலகத் தமிழர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளர்கள் என்பதை அறியத் தருகின்றேன்!

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

:):):):):) தமது வரலாற்று கடமையை செய்ய மறந்து இருக்கும் உலகத்தமிழரின் நிலையை அவர்களுக்கு உணர்த்திய மாப்பிளைக்கு எமது நன்றிகள்
  • கருத்துக்கள உறவுகள்

நீதியாளர்கள் செய்தி.

யாழ் கள 5 நீதிபதிகள் பென்ஜ் அளித்த தீர்ப்பு சரியானது என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறது இந்த நீதிமன்றம். இல்லை என்றால் நீதிமன்ற ஒருங்கமைப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

நீதிமன்ற ஒருங்கமைப்பு பணியை பிற பணிகள் மத்தியிலும் திறம்பட விரைந்து செய்த மாப்பிள்ளையை நீதிமன்றம் பாராட்டிக் கெளரவிக்கிறது.

வழக்கை எந்த வகை குழப்பங்களும் இன்றி நடத்திச் செல்ல உதவிய வக்கீல்களுக்கும் பார்வையாளர்களுக்கு நீதிமன்றம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது..!

யாழ் கள "5" நீதிபதிகள் பென்ஜ்.

  • கருத்துக்கள உறவுகள்

கனம் நீதிபதிகள், அறிஞர்கள், விவாதித்தவர்கள், விவாதிக்க பயந்து ஒழிந்தவர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கம்.

இந்த தீர்ப்புத் தான் வரும் என்று நான் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தேன். இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் இருந்தாலும் சில கருத்துக்களை நான் கூறவிருப்பதால் நீதிபதிகளின் தீர்ப்பை நான் அவமதிப்பதாக யாரும் கருத வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

'குற்றவாளிகள் என கூறி வைக்கப்பட்ட வாதங்களில் பெரும்பாலானவை ஊகத்தின் அடிப்படையில் திட்டித்தீர்க்கும் பாணியில் அமைந்தவையாக காணப்படுகின்றது. அசமந்தபோக்கு என்பதை நிரூபிக்க வேண்டிய சம்பவங்கள் காரணிகள் ஆகியன போதியளவு முன்வைக்கப்படவில்லை"என்று மதிப்பு மிகு தேவகுரு அவர்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார், ஜயா நீதிபதி அவர்களே நானும் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒருவன் தானே அப்படியிருக்கையில் மற்றவர்களைத் திட்டித்தீர்க்க வேண்டிய காரணம் என்னவோ? இவை ஊகத்தின் அடிப்படையில் வைத்த கருத்துக்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்ளோ?

ஜயா நான் தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன் அதாவது நான் ஒரு நாட்டில் இருக்கும் தமிழர்களை மட்டும் வைத்து இந்த விவாதத்தை முன் வைக்கவில்லை, தாயகத்தை விட இரண்டு நாடுகளில் பதினைந்து, பதினைந்து வருடங்கள் வசித்து வரும் அனுபவத்திலும், மக்களுடன் பழகி புரிந்துகொண்டவன் என்ற அடிப்படையிலும், தாயகத்தில் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முன்பே நாட்டை விட்டு வெளியேறியவன் என்ற துணிவிலும் தான் இந்த விவாதத்தை முன் வைத்தேன். இதில் அதிகம் கருத்துக் கூறி இந்த தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை, இதில் பங்கு பற்றிய அனைவருக்கும் நண்றியையும், நல்ல நேர்மையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டும் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.