Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Featured Replies

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

 

 

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொரை கைப்பற்றி உள்ளது. #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal

 
முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
 
ஆக்லாந்து:
 
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. 
 
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அகர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரிச்சர்ட்சன், டை இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
 
இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் ஷார்ட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் வார்னர் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அகர் 2 ரன்களில் அவுட் ஆனார். 
201802211718278760_1_tri-sseries._L_styvpf.jpg
அணியின் ஸ்கோர் 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆடுகளம் ஈரமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஆஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 121 ரன்கள் எடுத்திருந்ததால், 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த வெற்றியின் மூலம், முத்தரப்பு டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. ஐ.சி.சி. தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக அகர் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக கிளென் மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார். #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/21171828/1147074/Australia-defeats-New-Zealand-in-T20-tri-series-final.vpf

  • தொடங்கியவர்

3 நாடுகள் போட்டியில் கோலி விரும்பினால் ஓய்வு கொடுக்கப்படும் - கிரிக். வாரியம் அறிவிப்பு

 

 
 

இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் விராட் கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #Nidahastrophy #ViratKohli

 
 
 
 
3 நாடுகள் போட்டியில் கோலி விரும்பினால் ஓய்வு கொடுக்கப்படும் - கிரிக். வாரியம் அறிவிப்பு
 
மும்பை:

விராட் கோலி தலைமையிவான இந்திய கிரிக்கெட் அணி தற்பேது தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. வருகிற 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது.

இந்தப்போட்டி மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொழும்பு பிரேம தாச மைதானத்தில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவர் ஓய்வு கேட்க இருக்கிறார்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் விராட் கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

இலங்கையில் நடைபெறும் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். விளையாடுவதா? வேண்டாமா? என்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த சீசனில் கடைசி தொடர் என்பதால் அவர் விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3 நாடுகள் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் இந்த வாரம் இறுதியில் அறிவிக்கப்படும்.

விராட் கோலியின் ஆட்டம் தென்ஆப்பிரிக்கா பயணத்தில் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 14 இன்னிங்சில் 871 ரன் குவித்துள்ளார். #Nidahastrophy #ViratKohli #Kohli #BCCI

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/22111331/1147167/If-Virat-Kohli-wants-to-rest-for-tri-nation-series.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.