Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று

Featured Replies

மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று

 

 

வடக்கின் பிர­பல பாட­சா­லை­க­ளான மகா­ஜனா கல்­லூரி மற்றும் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி அணி­க­ளுக்­கி­டை­யி­லான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இன்று ஆரம்­ப­மா­கும் இப்­போட்­டி­யா­னது தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மைதா­னத்தில் இரு நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது.  

கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் சம­ரா­னது இம்­முறை 18ஆவது முறை­யா­கவும் நடத்­தப்­ப­டு­கின்­றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வ­ரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றில் மகா­ஜனா கல்­லூரி அணி 5 முறையும் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி 4 முறையும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 

அதே­வேளை இத் தொடரின் ஏனைய 8 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி சம­நி­லையில் நிறை­வ­டைந்­துள்­ளன.

கடந்த வருடம் நடை­பெற்ற போட்­டியும் சம­நி­லையில் முடி­வ­டைந்த நிலையில் இத் தொடரில் இறு­தி­யாக வெற்­றி­பெற்ற அணி­யாக மகா­ஜனா கல்­லூரி விளங்­கு­கி­றது. 

இன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டித் தொடரில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/30924

 

 
1-3-1.jpg

ஸ்கந்தா – மகா­ஜ­ன­ ‘வீரர்­க­ளின் போர்’ இன்று!!

வீரர்­க­ளின் போர் என வர்­ணிக்­கப்­ப­டும் சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூ­ரிக்­கும் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான இரண்டு நாள்­க­ளைக் கொண்ட டெஸ்ட் ஆட்­டம் தெல்­லிப் பழை மகா­ஜ­னக் கல்­லூரி மைதா­னத்­தில் இன்று ஆரம்­ப­மா­கி­றது.

2001ஆம் ஆண்டு இந்­தத் தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது­வரை 17 ஆட்­டங்­கள் நடை­பெற்­றுள்­ளன. 18ஆவது ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. முடி­வ­டைந்த 17 ஆட்­டங்­க­ளில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி 4 ஆட்­டங்­க­ளி­லும், சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி 3 ஆட்­டங்­க­ளி­லும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 10 ஆட்­டங்­கள் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தன.

http://newuthayan.com/story/70854.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வீரர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் மகாஜனாக் கல்லூரி

Heros-696x460.jpg
 

யாழ் மண்ணில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொண்ட பாடசாலைகளான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிகள் பங்குபெறும் 18 ஆவதுவீரர்களின் சமர்கிரிக்கெட் பெரும் போட்டி (BIG MATCH) இன்று (23) கோலகலமாக ஆரம்பமாகியிருந்தது.  

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந் இரண்டு நாட்கள் கொண்ட இந்த வருடாந்த சமரின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மகாஜனாக் கல்லூரி அணியின் தலைவர் தயுஸ்டன் தங்கராசா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தாளிகளான ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர்களுக்கு கொடுத்திருந்தார்.

இதன்படி கனேஷமூர்த்தி நிகர்ஜன் மற்றும் ஸ்ரீரஞ்சன் டிலுக்ஷன் ஆகியோருடன் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆரம்பம் செய்திருந்தது.

தொடக்க வீரர்களில் ஒருவரான டிலுக்ஷனின் விக்கெட்டினை அவர் வெறும் 5 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றிருந்த நிலையில் மகாஜனாவின் வலதுகை சுழல் வீரரான சரூஜன் சுரேஷன் கைப்பற்றி மைதான சொந்தக்காரர்களுக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றினை வழங்கியிருந்தார்.

தொடர்ந்த போட்டியில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிகர்ஷன் புதிதாக ஆடுகளம்  நுழைந்த J. கலிஷ்டனுடன் இணைந்து போட்டியினை நகர்த்தினார். இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் ஸ்கந்தவரோதயா கல்லூரி இரண்டாம் விக்கெட்டினை பறிகொடுத்திருந்தது. மகாஜனாக் கல்லூரியின் தலைவர் தயுஸ்டனின் சுழலில் வீழ்ந்த கலிஷ்டன் 20 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.   

இதனையடுத்து சிறிது நேரத்தில் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியின் தலைவர் பாஸ்கரன் அஜிந்தனுடன் ஜோடி சேர்ந்திருந்த ஆரம்ப வீரர் நிகர்ஜனின் விக்கெட்டும் தயுஸ்டனின் சுழலில் வீழ்ந்தது. நம்பிக்கை தரும் விதமான ஒரு இன்னிங்சினை வெளிப்படுத்தியிருந்த நிகர்ஜன் 86 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இந்த விக்கெட்டினை அடுத்து சுன்னாகம் தரப்பின் மத்திய வரிசை மைதானத் சொந்தக்காரர்களின் (குறிப்பாக அணித் தலைவரின்) சுழலுக்கு தடம்புரளத் தொடங்கியிருந்தது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களில் சிவகுமார் பிரசான் தவிர வேறு எந்த வீரரும் 30 ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.  

பிரசானோடு அணித்தலைவர் அஜிந்தனின் அரைச்சதமும் உதவ 69.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 233 ஓட்டங்களினை முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டது.

ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் அஜிந்தன் 5 பெளண்டரிகள் அடங்கலாக 120 பந்துகளுக்கு சதம் கடந்து 55 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, மகாஜனாக் கல்லூரியின் பந்துவீச்சில் தயுஸ்டன் 70 ஓட்டங்களுக்கு அபாரமாக 7 விக்கெட்டுக்களையும், சரூஜன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆட்டத்தின் முதல் நாளில் மகாஜனாக் கல்லூரி ஆரம்பித்திருந்தது.

மகாஜனாக் கல்லூரிக்காக ஆரம்ப வீரர்களாக பகீரதன் கிருஷான் மற்றும் ரவீந்திரன் தனிஷ்டன் ஆகியோர் வந்திருந்தனர். மெதுவான முறையில் ஓட்டங்கள் சேர்க்க தொடங்கியிருந்த மகாஜனாவின் முதல் விக்கெட் அவ்வணி 27 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது பறிபோயிருந்தது. செளந்தர்ராஜன் தன்சனின் பந்துவீச்சில் பிடிகொடுத்த தனுஷ்டன் வெறும் 2 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

எனினும், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிருஷானின் பெறுமதியான இன்னிங்சோடு முதல் நாள் நிறைவில் மகாஜனாக் கல்லூரி 27 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களுடன் வலுவான நிலையொன்றில் முதல் இன்னிங்சில் காணப்படுகின்றது.

மகாஜனாக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் கட்டாயம் கிடைக்க வேண்டிய அரைச்சதம் ஒன்றினை தவறவிட்டிருந்த கிருஷான் 61 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

களத்தில் நதீஷன் தனுஷன் 33 ஓட்டங்களுடனும் மஹேஷ்வரன் பகீரதன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்  

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 233 (69.1) – பாஸ்கரன் அஜிந்தன் 55, கனேஷமூர்த்தி நிகர்ஜன் 38, தங்கராசா தயுஸ்டன் 70/7(19.1)

மகாஜனாக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 92/2 (27) – பகீரதன் கிருஷான் 46, மஹேஷ்வரன் பகீரதன் 33*

போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சமநிலையில் முடிவடைந்த 18ஆவது ‘வீரர்களின் சமர்’

Battle-of-Heroes-696x464.jpg
 

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 18ஆவது “வீரர்களின் சமர்“ கிரிக்கெட் பெரும் போட்டி (BIG MATCH) சமநிலையில் முடிவடைந்துள்ளது.

 

வெள்ளிக்கிழமை (23) மகாஜனாக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின், முதல் நாளின் முடிவில் மைதான சொந்தக்காரர்களினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் ஆடியிருந்த மகாஜனாக் கல்லூரி அணியினர் 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து உறுதியான நிலையொன்றில் காணப்பட்டிருந்தனர். களத்தில் நதீஷன் ஜனுஷன் 33 ஓட்டங்களோடும், மஹேஷ்வரன் பகீரதன் 4 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (24) தொடர்ந்தது. இன்றைய நாளில் 141 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இன்னிங்சை நம்பிக்கையுடன் தொடர்ந்த மகாஜனாக் கல்லூரி ஆட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரரான பகீரதனின் விக்கெட்டை அவர் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பறிகொடுத்திருந்தது.

எனினும், ஜனுஷன் மகாஜனாக் கல்லூரியின் மத்திய வரிசையை அரைச்சதம் ஒன்றின் மூலம் அணித்தலைவர் தயுஸ்டனோடு இணைந்து வலுப்படுத்தியிருந்தார். இப்படியாக இரண்டு வீரர்களும் தமது தரப்புக்கு சிறந்த அத்திவாரம் ஒன்றை உருவாக்க முற்பட்டிருந்த வேளையில் தயுஸ்டனின் விக்கெட் ஸ்கந்தவரோதயா வீரர் ஸ்ரீரஞ்சன் டிலுக்சனின் சுழலில் பறிபோனது. இதனால், மகாஜனா அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 42 ஓட்டங்களை பகிர உதவியிருந்த தயுஸ்டன் 28 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அரைச்சதம் கடந்த ஜனுஷனின் விக்கெட்டும் வீழ்ந்தது. வலதுகை துடுப்பாட்ட வீரரான ஜனுஷன் 7 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை மகாஜனாக் கல்லூரிக்காக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனுஷனின் விக்கெட்டை அடுத்து பின்வரிசை வீரர்களில் மகாஜனாக் கல்லூரியின் பிரதி தலைவர் மஹேந்திரன் சுஜீபன் மாத்திரமே இருபது ஓட்டங்களைக் கடந்திருந்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஓய்வறை நடக்க முடிவில், 59.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்சில் 225 ஓட்டங்களை மகாஜனாக் கல்லூரி பெற்றுக் கொண்டது.

மகாஜனாக் கல்லூரியின் பின்வரிசை துடுப்பாட்டத்திற்கு அழுத்தங்கள் தந்த ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பந்துவீச்சில் டிலுக்ஷன் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் செல்லத்துரை சோபிதன், செளந்தராஜன் தன்சன் மற்றும் அருட்செல்வம் தனுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

 

மகாஜனாக் கல்லூரியின் முதல் இன்னிங்சை அடுத்து 8 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய ஸ்கந்தவரோதயா கல்லூரி நல்லதொரு ஆரம்பத்தை தந்திருந்த போதிலும் பின்னர் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறியிருந்தது.

ஓட்டங்கள் சேர்ப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் விக்கெட்டுக்களும் துரித கதியில் பறிபோயிருந்தன. இதனால் இரண்டாம் இன்னிங்சில் 60 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஸ்கந்தவரோதயா கல்லூரி 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த கணேஷமூர்த்தி நிகர்ஜன் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மகாஜனாக் கல்லுரியின் பந்துவீச்சில் சுஜீபன் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்கந்தவரோதயா கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட, போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த ஆண்டுக்கான வருடாந்த சமர் சமநிலை அடைந்த காரணத்தினால், வீரர்களின் சமர் கிரிக்கெட் தொடர் நடப்பு சம்பியனாக 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை சூடியிருந்த மகாஜனாக் கல்லூரி நீடிக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 233 (69.1) – பாஸ்கரன் அஜிந்தன் 55, கணேஷமூர்த்தி நிகர்ஜன் 38, தங்கராசா தயுஸ்டன் 70/7(19.1)

மகாஜனாக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 225 (59.3) – நதீஷன் ஜனுசன் 57, தங்கராசா தயுஸ்டன் 29, மஹேந்திரன் சுஜீபன் 28, ஸ்ரீரஞ்சன் டிலுக்ஷன் 39/3(09)

ஸ்கந்தவரோதயா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 134 (60)– கணேஷமூர்த்தி நிகர்ஜன் 34, செல்லத்துரை சோபிதன் 19, மஹேந்திரன் சுஜீபன் 34/5(14)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

விருதுகள்

  • சிறந்த களத்தடுப்பாளர் – பிரோஷன் (ஸ்கந்தவரோதயா கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – தங்கராசா தயுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி)
  • போட்டியின் ஆட்ட நாயகன்–தங்கராசா தயுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – நதீஷன் ஜனுசன் (மகாஜனாக் கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர் – மஹேந்திரன் சுஜீபன் (மகாஜனாக் கல்லூரி)

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சமனிலையில் முடிவடைந்த வீரர்களின் போர் கிரிக்கெட்

சமனிலையில் முடிவடைந்த வீரர்களின் போர் கிரிக்கெட்


ஸ்கந்தா மற்றும் மகாஜனா கல்லூரிகளுக்கு இடையிலான வீரர்களின் போர் கிரிக்கெட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

சமனிலையில் முடிவடைந்த வீரர்களின் போர் கிரிக்கெட்

 

சமனிலையில் முடிவடைந்த வீரர்களின் போர் கிரிக்கெட்

 

சமனிலையில் முடிவடைந்த வீரர்களின் போர் கிரிக்கெட்

 

https://news.ibctamil.com/ta/cricket/skanda-vs-mahajana-battle-of-the-heroes-draw

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.