Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எனது பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம் இது’

Featured Replies

‘எனது பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம் இது’
 
 

“சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம் அற்றதொன்றாகும். இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரனை நீக்குவதாக கட்சியின் மையச் செயற்குழு முடிவெடுத்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆரம்பத்தில் இருந்தே தமிழரசுக்கட்சி என் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதனை நான் தான் புரிந்து கொள்ளவில்லை, என் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் மற்றும் என் மீதான அச்சுறுத்தல் என அனைத்தையுமே தமிழரசுக்கட்சி தான் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இவ்வாறு இருந்து கொண்டு, இதர கட்சியினரை குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும்.

இனிமேல் என்னால் அரசியலில் இருந்து விலகி, சாதாரண ஒரு வாழ்க்கையைத் தொடரமுடியாது. காரணம் பின்புலத்தில் எனக்கு பாதுகாப்பு பிரச்சினை என்பது பாரதூரமானதாக உள்ளது. இதை நன்கு அறிந்துள்ள கட்சி இவ்வாறு என்மீது தாக்குதல் மேற்கொள்ள முனைவது ஜனநாயகம் அற்றது.

நான் உயிருக்கு பயப்படுபவர் அல்ல. நானும் திருப்பி அடிப்பேன். நான் அரசியலை வடிவாக படித்துவிட்டேன். கட்சி என் மீது மேற்கொண்ட குற்றங்கள், தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவேன்.

2015 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எந்த ஒரு முடிவும் கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், அது தொடர்பான நடவடிக்கையாகவே என்னை கட்சியிலிருந்து விலக்குதல் என்பது, எந்த விதத்தில் நியாயம், இதனை விட இந்த விவகாரம் தொடர்பில் என் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

என்மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என கட்சி அறிவித்தது. இதன்படி என்னை விசாரணைக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தேன். கொழும்பு செல்வதுக்கான வாகன வசதியும் இல்லை. அத்தோடு பாதுகாப்பு பிரச்சினையும் இருந்தது. இதனை விசாரணை குழுவில் அங்கம் வகித்த சட்டத்தரணி தவராஜாவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். அதனை அவர் எழுத்தில் கோரிய நிலையில், எனது தரப்பு முழு விடயத்தையும் நான் எழுத்து மூலம் வழங்கியிருந்தேன்.

விசாரணை முடிவில் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் இருக்கலாம் எனவும் கட்சியின் மகளீர் விவகார செயலாளராக பதவி வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது முதல் 5 வருடங்கள் என கூறப்பட்டு பின்பு 3 வருடங்களுக்கு என கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது கட்சியில் இருந்து நிறுத்துவது என்ன, என்பது எனக்கு புரியவில்லை. கட்சி என் மீது திட்டமிட்டே இவற்றை செய்கிறது. இது தொடர்பாக எனக்கு எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் கட்சியினால் வழங்கப்படவில்லை. நானும் இவ்விடயத்தை பத்திரிகை செய்தி வழியாகவே அறிந்து கொண்டேன். இச்செய்தி தொடர்பான முழுமையான எனது விளக்கத்தை அறிக்கை வடிவில் விரைவில் வெளிப்படுத்துவேன்” என தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/எனது-பலத்தை-நிரூபிக்க-வேண்டிய-காலம்-இது/71-212038

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் தங்கள் பலம் என்ன என்று நிருபிக்கிறதிலேயே கண்ணாயிருந்தால் அவர்களை நம்பியிருக்கும் தமிழ் மக்களின் நிலை கவலைக்கிடம் தான். பணம் - அரசியல் செல்வாக்கு - பலப்பரீட்சை இவையனைத்தும் அரசியல்வாதிகளை கபோதிகளாக்கி முடிவில் எங்களை  அழிவின்பாதைக்கே கொண்டுசெல்லும். 

அரசியல் வரட்சியில் உலவும் சில புலம்பெயர் நபர்களால் அவர்களது மடைமையின் விளைவாகப் போடப்பட்ட திட்டங்களுக்காக அனந்தி சசிதரன் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். எதையும் ஆய்ந்தறிந்து முடிவெடுக்கும் அறிவாற்றலும் பக்குவமும் இல்லாத புலம்பெயர் குழப்பவாதிகளின் கதைகளை நம்பி வேலை செய்த அனந்தி அவர்கள் இன்று அரசியலில் மிக இடரான இடத்தில் விடப்பட்டுள்ளார்.


அனந்தி என்பவரைப் பற்றி சொல்வதானால், தனது கணவரை எப்படியும் உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் இராணுவ, புலனாய்வு உயர் மட்டத் தொடர்புகள் வரை முயன்று களைத்துப் போயிருந்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் ஒரு அரசியல் அடையாளமாக அரசியலில் இறக்கப்பட்டவர். காலப்போக்கில் தனக்கு கிடைக்கும் ஊடக வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனது காதல் கதையைச் சொல்வதில் அதிக நேரத்தை விரையமாக்கினார்.

அடித்தள மக்களின் துன்பங்களை நெஞ்சார உணர்ந்து களத்தில் நிற்கக் கூடியவராக அவர் இருக்கவில்லை. கொஞ்சம் அதிகாரத்தையும் புகழ்வெளிச்சத்தையும் அதிக நேசிக்க ஆரம்பித்து விட்டார். அனந்தி மீது நடவடிக்கை எடுக்க தமிழர்சுக் கட்சிக்கு அருகதையில்லை என்பது வேறு. ஆனால் அனந்தி அதிகார அரசியலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் அவரது பண்புநிலையை அவர் எழிலன் அண்ணையின் மனைவியாக சாதாரணமானவராக இருந்த காலத்திலேயே அவரை அறிந்தோர் வியப்படைய மாட்டார்கள்.

Edited by தம்பியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.