Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்

Featured Replies

லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்

லெனின் சிலையை இடித்து அவரது தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்

திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலை ஜேசிபி கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு திரிபுரா மாநிலத்திலுள்ள பெலோனியா என்ற நகரில், கல்லூரி ஒன்றுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் முழு உருவ சிலை ஒன்று அமைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றதையடுத்து இந்த சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

இடதுசாரிகளின் தேர்தல் வெற்றியை குறிக்கும் லெனின் சிலையைதான் பாஜகவினர் இடித்து தள்ளியுள்ளனர். நேற்றைய தினம் (திங்கட்கிழமை) சுமார் மதியம் 2.30 மணிக்கு அந்த பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டு, ’பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷத்திற்கு இடையே லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டது.

லெனின் சிலையை இடித்து அவரது தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்

இந்த சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், 25 ஆண்டுகளாக திரிபுராவில் அசைக்க முடியாத கட்சியாக விளங்கிய இடதுசாரிகள், மத்தியில் ஆளும் பாஜாகவிடம் தோற்றுப்போனது.

மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் வெறும் 16 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 43 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 48 மணி நேரத்தில், திரிபுரா மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சிலை எப்போது செய்யப்பட்டது?

2013 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் 60 தொகுதிகளில் 49 தொகுதிகளை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றிபெற்றது. அதனை குறிக்கும் வகையில், 3 லட்ச ரூபாய் செலவில் உள்ளூர் சிற்பக் கலைஞர் கிருஷ்ணா தேப்நாத் லெனின் சிலையை வடிவமைத்தார். 11.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஃபைபர் கிளாஸால் செய்யப்பட்டது என்று ’தி இந்தியன் எக்ஸ்பிரஸின்’ செய்தி கூறுகிறது.

இடிக்கப்பட்ட சிலையிலிருந்து தலை துண்டாக விழுந்ததாகவும், அதை பாஜக தொண்டர்கள் காலால் எட்டி உதைத்து கால்பந்து விளையாடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக சிபிஎம் கட்சியின் பெலோனியா நகர செயலாளர் தபாஸ் டட்டா ’தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம்’ தெரிவித்துள்ளார்.

லெனின் சிலை இடிப்பு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவரும் நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும், நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவே ராமசாமி சிலை இடிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

http://www.bbc.com/tamil/india-43298923

  • தொடங்கியவர்

"ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்"

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்ட நிலையில், நாளை தமிழகத்தில் ஈ.வே. ராமசாமியின் சிலையும் அகற்றப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹெச். ராஜா தன் பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளார்.

ஹெச்.ராஜாபடத்தின் காப்புரிமைHRAJABJP

பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா இன்று காலையில் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டிருந்த எச். ராஜா, "லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை" என்று கூறியிருந்தார்.

பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: பதிவை நீக்கினார் ஹெச். ராஜா

அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

" ஹெச்.ராஜா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்"

ராஜாவின் இந்தப் பேச்சு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "ஹெச். ராஜா எப்போதுமே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். அவரைக் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. - சங் பரிவார்க் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்விளைவு வந்தால், அதன் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா? சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் இந்த ஆசாமிமீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்று கூறியிருக்கிறார்.

"கை, கால்கள் துண்டு துண்டாக்கப்படும்"

ம.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுவரும் நிலையில், அங்கு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, "ஈ. கொசுவைப் போன்றவர்கள் எல்லாம் பெரியாரை விமர்சிக்கின்றனர். தைரியமிருந்தால் நாள் குறித்து பெரியாரின் சிலையை உடைக்க வாருங்கள். பெரியாரின் சிலையை உடைக்க முயல்பவர்கள் கை, கால்கள் துண்டு, துண்டாகும்" என்று கூறினார்.

"ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

ஆனால், ஹெச். ராஜாவின் இந்தப் பதிவு, விளம்பரத்திற்கானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். "ஹெச். ராஜாவின் நோக்கம் பரபரப்பு ஏற்படுத்துவதுதான். தன்னைப் பற்றி எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியாரின் சிலையைத் தொட்டுப்பார்த்தால் என்ன நடக்குமென்று தெரியும்" என்று தெரிவித்திருக்கிறார் சீமான்.

பா.ஜ.கவின் கருத்து அல்ல: தமிழிசை

பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனகள் எழுந்து வருகின்றன.

லெனின் சிலையை இடித்து அவரது தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்படத்தின் காப்புரிமைTWITTER

இந்நிலையில், தன்னுடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தில்லி சென்றிருக்கும் ஹெச். ராஜா, பெரியார் தொடர்பான தன்னுடைய ஃபேஸ்புக் பதிவை அகற்றியுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-43300683

  • தொடங்கியவர்

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வலுக்கும் தலைவர்கள் கண்டனம்

 

 
download%202

எச்.ராஜா, பெரியார் சிலை படம்: எல். சீனிவாசன்

திரிபுராவில் லெனின் சிலையை பாஜகவினர் உடைத்து தள்ளியதை அடுத்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதை குறிப்பிட்டு தமிழகத்தில் பெரியார் சிலையையும் அதேபோல் தகர்ப்போம் என்று முகநூலில் பதிவிட்டதை தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அங்கு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தலைநகர் அகர்தலாவில் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை பாஜகவினர் தொடங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர், தலைவர்கள் படங்கள் கொளுத்தப்பட்டன. தொண்டர்கள் தாக்கப்பட்டனர். முக்கிய சாலையில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது. இதை அங்குள்ள போலீஸார் தடுக்கவில்லை. மாநிலம் முழுதும் வன்முறையை தூண்டிவிட்டுள்ளனர்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, ''லெனின் சிலை இடிக்கப்பட்டதை குறிப்பிட்டு லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம், இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் நாளை தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும்'' என்று பதிவிட்டிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து கட்சித்தலைவர்களும் ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டித்துள்ளனர். எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை ஹெச்.ராஜா நீக்கிவிட்டார்.

மு.க.ஸ்டாலின்:

தந்தை பெரியாரின்  சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

வைகோ:

பெரியாரை நெருங்க விடமாட்டோம். நாள் குறித்து வா.

கள்ளத்தனமாக வராதே. இருட்டில் இரண்டு, மூன்று பேரை வைத்து கூலிக்கு மாரடிக்காதே.

மாறாக, நரேந்திர மோடியின் ராணுவம் பாதுகாப்புக்கு வரட்டும்.காவல் துறை உம்மை பாதுகாக்கத் துடிக்கட்டும். உன் சகல படை. பரிவாரங்களோடு வா. நாள் குறி.

எங்கள் பெரியார் சிலையை உடைக்க வா. நான் வருகிறேன். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வருகிறேன். முடிந்தால் எங்கள் அய்யா பீடத்தைத் தொட்டுப் பார். கை,கால்கள் துண்டாகும்.

திருமாவளவன்:

பெரியார் சிலையை தொட ஹெச்.ராஜா மட்டுமல்ல அவருடைய முப்பாட்டன் வந்தாலும் முடியாது.

வீரமணி:

நேற்றுதான் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவுரையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா, பெரியார் என்று ஒட்டுமொத்த மக்களால் மதிக்கப்படும் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இந்தத் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது? மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது என்பதாலா?

அல்லது மாநிலத்தில் இருக்கக் கூடிய ஆளும் கட்சி பி.ஜே.பி.யின் கோலுக்கு ஆடுகிற, தங்களுக்குச் சாதகமான அல்லது தங்களால் மிரட்டப்படும் ஆட்சியாக இருக்கிறது என்ற நினைப்பிலா?

நாட்டில் கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. சங் பரிவார் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இது அரசியல் அநாகரிகம் ஆகும்.

சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் இந்த நபர் மீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட்):

இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளை தமிழகத்தில் பெரியார் சிலைக்கும் அதுதான் என்று பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்த காலத்திலும் இப்படிப்பட்ட வெறிப்பேச்சுக்கள் தடுக்கப்படாததால் ஹெச். ராஜாவின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சீமான்:

ஹெச்.ராஜாவின் நோக்கமே பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் அல்லவா, பரபரப்புக்கு ஆளாகும் ஆளாக இருக்க வேண்டுமென்பதே. அவர் நோக்கமே விளம்பரம் தேடுவது தான். பெரியார் சிலையை தொட்ட அன்று தெரியும் என்ன நடக்கும் என்று.

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22946115.ece?homepage=true

  • தொடங்கியவர்

பெரியார் சிலை குறித்த சர்ச்சைப் பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்

 

 
praja

பெரியார் சிலை குறித்து  பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து  தெரிவித்ததற்காக பாஜக தேசியச் செயலாளர்  ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் அகற்றினர்.

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''லெனின் யார் அவருக்கு இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை'' என்று பதிவிட்டிருந்தார்.

ஹெச். ராஜாவின் இந்தப் பதிவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தனது கருத்திற்காக  ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிவித்த்துள்ளார்.

இதுகுறித்து  அவர் கூறியுள்ளதாவது:

‘‘நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் நிர்வாகி, எனது அனுமதி இன்றி பதிவு செய்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.

ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது" என்று பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22956602.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.