Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்பு

Featured Replies

பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்பு

பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனை உளவு பார்த்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய்யுடன், பல்பொருள் அங்காடி ஒன்றின் மேசையில் மயக்க நிலையில் காணப்பட்ட மற்றொருவர் அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது.

30 வயதாகும் யூலியா ஸ்க்ரிபால் மற்றும் அவரது தந்தையான 66 வயதாகும் செர்கெய் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று வில்ட்ஷிர் என்னும் பகுதியில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

எந்த "தெரியாத பொருள்" இவர்கள் இருவரையும் மயக்க நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் அதிகாரிகளுக்கும் "சிறியளவிலான அறிகுறிக்காக" சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடப்பதற்கு காரணமான விடயத்தை பற்றி தன்னிடம் "தகவல் ஏதுமில்லை" என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், போலீசார் வேண்டுகோள் விடுக்கும்பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான ஸ்க்ரிபாலின் மனைவி, மகன் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்ததால், கடந்த 2010 ஆம் நடந்த "உளவாளிகள் இடமாற்ற" நிகழ்வை தொடர்ந்து பிரிட்டனால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்புபடத்தின் காப்புரிமைASSOCIATED PRESS

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கொவ், இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்த துயரமான நிலைமையை கவனித்து வருகிறோம். ஆனால், அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும், அவர் என்ன செய்தார் என்பது பற்றிய தகவலும் எங்களிடம் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியிலுள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தின் கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

யார் இந்த செர்கெய் ஸ்க்ரிபால்?

ரஷ்ய ராணுவத்திலிருந்து ஓய்வுப் பெற்ற புலனாய்வு அதிகாரியான கோல் ஸ்க்ரிபால் கடந்த 2006 ஆம் ஆண்டு ரஷ்யாவால் 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்ஐ6 சார்ந்த ரகசியங்களை பெறுவதற்காக செயற்பட்டு கொண்டிருந்த ரஷ்ய உளவுத்துறை முகவர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்ததற்காக இவர் கைதுசெய்யப்பட்டார்.

எஃப்.பி.ஐயினால் கைது செய்யப்பட்ட 10 ரஷ்ய உளவாளிகள் விடுக்கப்பட்டதற்கு பதிலாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் செர்கெய் ஸ்க்ரிபால் உள்பட நான்கு உளவாளிகளை ரஷ்யா விடுவித்தது. அதன் பிறகு அவர் பிரிட்டனுக்கு சென்றுவிட்டார்.

http://www.bbc.com/tamil/global-43303428

  • தொடங்கியவர்

பிரிட்டன் : ரஷ்ய உளவாளியை பாதித்த விஷம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை

 

முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கி ஸ்கிரிபாலையும், அவரது மகள் யூலியாவையும் சாலிஸ்பர்ரி நகரில் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்து எப்படி வந்தது என்பதை கண்டுபிடிப்பதில் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

ஆய்வு செய்யும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர்படத்தின் காப்புரிமைPETER MACDIARMID/LNP

சாலிஸ்பர்ரி நகரில் பென்ச் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள் இருவரும் இன்னும் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்களோடு இருக்கின்ற ஒரு போலீஸ் அதிகாரிதான் மக்களோடு பேசி கொண்டிருக்கிறார். ஆனால், நிலைமை மிகவும் மோசமாகவே இருப்பதாக பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பிரிட்டனின் மறுமொழி மென்மையாக இருக்காது என்று அமைச்சர் அம்பர் ராட் தெரிவித்திருக்கிறார்.

ஆம்பர் ராட்

பிரிட்டனின் தெருக்களில் நடைபெறும் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என்று அவர் ரேடியோ 4இல் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

உளவாளியான செர்கி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கிற விஷத்தை பயன்படுத்தி இருப்பதாக அரசு விஞ்ஞானிகள் இனம்கண்டுள்ளனர்.

ஆனால், தற்போதைய நிலையில் இந்த தகவலை பொதுவாக அறிவிக்கப் போவதில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

செர்கே ஸ்கிரிபால் மற்றம் அவருடைய மகள் யுலிபாபடத்தின் காப்புரிமைEPA/ YULIA SKRIPAL/FACEBOOK

சிரியாவில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சரின் வாயுவை மற்றும் 1995ம் ஆண்டு டோக்கியோ நகர ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை விட அரிய விஷமாக இது இருப்பதாக இந்த விசாரணையில் மிகவும் தொடர்புடைய வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு மலேசியாவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 'விஎக்ஸ்' நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் போல இது இல்லை என்று கூறப்படுகிறது.

66 வயதான செர்கே ஸ்கிரிபால், MI6க்கு ராணுவ ரகசியங்களை விற்றுவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றிருந்தார். ஆனால், 2010ம் ஆண்டு "உளவாளிகளை திரும்ப ஒப்படைத்தல்" என்ற ஒப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.

http://www.bbc.com/tamil/global-43332310

  • தொடங்கியவர்

உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள்,ரஷ்யராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரீசா மே தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு ரஷிய பொறுப்பு: பிரிட்டன் பிரதமர் தெரீசா மேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதற்கான "அதிக வாய்ப்புகள்" இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரகத்தை வெளியுறவுத் துறை அலுவலகம் கேட்டுள்ளது.

செவ்வாயன்று "நம்பகமான பதில்" எதுவும் வரவில்லையேல் ரஷ்யா சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு பிரட்டன் வரும் என மே தெரிவித்துள்ளார்.

நரம்பு மண்டலத்தை உடனடியாக பாதிக்கக்கூடிய அதீத விஷத்தன்மை கொண்ட `நோவிசாக்` என்னும் ரசாயனம் பயன்படுத்துப்பட்டுள்ளதாக மே தெரிவித்தார்.

"இது நமது நாட்டிற்கு எதிரான நேரடியான தாக்குதலாக இருக்கலாம் அல்லது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ரசாயணம் மீது தங்களுக்குள்ள கட்டுப்பாட்டை இழந்து பிறரின் கையில் அது செல்ல ரஷ்யா அனுமதித்துள்ளது" என மே தெரிவித்தார்.

தாக்குதலுக்கு ரஷிய பொறுப்பு: பிரிட்டன் பிரதமர் தெரீசா மேபடத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைEPA/ YULIA SKRIPAL/FACEBOOK

ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான சர்வதேச அமைப்பிடம் முழுமையான விளக்கத்தை ரஷ்ய தூதர் வழங்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்

"இது தொடர்பான விரிவான நடவடிக்கைகளை எடுக்க பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்றும், ரஷியாவிடமிருந்து போதிய விளக்கம் வரவில்லையெனில் புதனன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும்" என்றும் மே தெரிவித்தார்.

மேயின் பேச்சு, "பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி" என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சகாரவா விவரித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டபோது, முதலில் இந்த விஷயத்தின் மூலக் காரணங்களை ஆராய வேண்டும் பின் இதுகுறித்து பேசலாம் என பிபிசியிடம் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

http://www.bbc.com/tamil/global-43381925

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.