Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை

Featured Replies

வன்முறையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை

 

இதுவரை 146 பேர் கைது; சூத்திரதாரிகள் 10 பேருக்கும் 14 நாள் தடுப்புக்காவல்

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி மாவட்டம் எங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளை திட்டம் தீட்டி அரங்கேற்றியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ''மகசொஹொன் பலகாய''வின் தலைவர் அமித் வீரசிங்க, சிங்கள தேசிய சக்தியின் பிரதானி சுரேந்ர சுரவீர மற்றும் பிக்கு ஒருவர் உள்ளிட்ட 10 பேரிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று 4 ஆம் மாடியில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் ஒப்புதலுடன் பெறப்பட்டுள்ள 14 நாள் தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமையவே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி குறித்த 10 பேரிடமும், கண்டி வன்முறைகளுக்கு எங்கிருந்து நிதி கிடைத்தது என்பதை வெளிப்படுத்த ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவ்விசாரணைகளுக்கு சமாந்தரமாக வக்கிரமான முறையில் பின்னணியில் இருந்து வன்முறைகளுக்கு தலைமையளித்தவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 இதனைவிட கைது செய்யப்பட்டுள்ள வன்முறைகளின் சூத்திரதாரிகளிடம், அவர்களுக்கு வன்முறை தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்த அரசியல்வாதிகள், வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் அறியவும் கண்டியின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறை செயல்களுடனான அவர்களது தொடர்பு மற்றும் அவர்களது எதிர்கால இனவாத திட்டங்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கும் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கண்டி வன்முறைகளில் பங்கேற்ற, ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, தெல்தெனிய, மெனிக்ஹின்ன, பூஜாபிட்டிய, கட்டுகஸ்தோட்டை, வத்தேகம, பல்லேகலை, ஹசலக, கடுகண்ணாவ, அலவத்துகொட, ஹதரெலியத்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 11 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் கைதாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார். நேற்று முன்தினமாகும் போது நாம் 71 பேரை வன்முறைகளில் ஈடுபட்டமை, ஊரடங்கை மீறியமை தொடர்பில் கைது செய்தோம். நேற்று காலை 6 மணியாகும் போது மேலும் 65 பேரை எம்மால் கைதுசெய்ய முடிந்தது. எனவே நாம் இதுவரை கண்டி வன்முறைகள் தொடர்பில் 146 பேரைக் கைது செய்துள்ளோம்.

இதனைவிட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு முன்னெடுக்கும் இந்த வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நால்வர் கண்டியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஏனையோர் வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள். திகனையைச் சேர்ந்த இருவர், தெல்தெனியவைச் சேர்ந்த ஒருவர், யக்கலையைச் சேர்ந்த ஒருவர், பலாங்கொடையைச் சேர்ந்த ஒருவர், சிலாபத்தை சேர்ந்த மூவர், தம்புள்ளையைச் சேர்ந்த ஒருவர், பேராதனையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் திகன, பூஜாப்பிட்டிய பகுதிகளில் வன்முறைகளுக்கு திட்டமிடும் போது கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த 10 பேரிடமும் கண்டி வன்முறைகளுக்கு எங்கிருந்து நிதி கிடைத்தது, அவர்களுக்கு வக்கிரமான முறையில் பின்னணியில் இருந்து வன்முறைகளுக்கு தலைமையளித்தவர்கள், வன்முறை தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்த அரசியல்வாதிகள், வெளிநாட்டு சக்திகள், கண்டியின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறை செயல்களுடனான அவர்களது தொடர்பு மற்றும் அவர்களது எதிர்கால இனவாத திட்டங்கள் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

இந்த 10 சூத்திரதாரிகளின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் மேற்பார்வையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான சிறப்புக் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-10#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.