Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் கலந்துரையாடவில்லை – கோத்தா

Featured Replies

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் கலந்துரையாடவில்லை – கோத்தா

 

Gotabaya Rajapaksa, Sri Lanka's former defence secretary and brother of former President Mahinda Rajapaksa speaks to the members of the Foreign Correspondents Association of Sri Lanka in Colombo2020 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடனோ, பசில் ராஜபக்சவுடனோ இன்னமும் பேசவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சகோதரர்கள் (மகிந்த, பசில்) இணங்கினால், 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று முன்னர் கூறியிருந்தீர்கள், இப்போது அதற்கான இணக்கத்தைப் பெற்றுவிட்டீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

“நாங்கள் இதுபற்றி இன்னமும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடவில்லை. அதற்கு இன்னமும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

2020 அதிபர் தேர்தல் குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக இருக்கும்.

சரியான நேரம் வரும் போது, மகிந்த ராஜபக்ச ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.

2020 அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீங்களே போட்டியிடுவீர்கள் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மகிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் கூறிவருகிறார்கள். உங்களின் அனுமதியுடன் தான் அவர்கள் அதனைக் கூறுகிறார்களான என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

“இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. இவர்கள் மாத்திரமன்றி வேறு பலரும் அவ்வாறு கூறுகிறார்கள்.

அதிபர் வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில்  மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார்.  அதுபோல, சிறிலங்காவின்  இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பிரிவு மக்கள், தமது அதிபர் வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/11/news/29707

  • தொடங்கியவர்

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து கோத்­தபாய

 

எதிர்­வரும் 2020 ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யி­டு­வது தொடர்­பாக, மஹிந்த ராஜ­பக்­ ஷவு­டனோ, பசில் ராஜ­பக்­ ஷவு­டனோ இன்னமும் பேச­வில்லை என்று   முன்னாள் பாது­காப்புச் செய லர் கோத்­தபாய ராஜ­பக்­ ஷ தெரி­வித்­துள்ளார்.

ஊடகம்  ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வி­யி லேயே அவர் இதனைக் கூறி­யுள்ளார்.

எனது சகோ­த­ரர்கள் இணங்­கினால், 2020 ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யிடத் தயார் என்று முன்னர் கூறி­யி­ருந்­தீர்கள், இப்­போது அதற்­கான இணக்­கத்தைப் பெற்­று­விட்­டீர்­களா என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­துள்ள கோத்­தபாய ராஜ­பக்­ ஷ“நாங்கள் இது­பற்றி இன்­னமும் ஒன்­றாக அமர்ந்து கலந்­து­ரை­யா­ட­வில்லை. அதற்கு இன்­னமும் நேரம் இருக்­கி­றது என்று நினைக்­கிறேன்.

2020 அதிபர் தேர்தல் குறித்து இப்­போது கலந்­து­ரை­யா­டு­வது, மிகவும் முற்­கூட்­டிய நட­வ­டிக்­கை­யாக இருக்கும்.

சரி­யான நேரம் வரும் போது, மஹிந்த ராஜ­பக்­ ஷ ஏனைய கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஒரு முடி­வுக்கு வருவார் என்று தெரி­வித்­துள்ளார்.

2020 அதிபர் தேர்­தலில் வேட்­பா­ள­ராக நீங்­களே போட்­டி­யி­டு­வீர்கள் என்று விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, மகிந்­தா­னந்த அளுத்­க­மகே போன்­ற­வர்கள் கூறி­வ­ரு­கி­றார்கள். உங்­களின் அனு­ம­தி­யுடன் தான் அவர்கள் அதனைக் கூறு­கி­றார்­களா  என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­துள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷ

“இல்லை. அது அவர்­களின் தனிப்­பட்ட கருத்து. இவர்கள் மாத்­தி­ர­மன்றி வேறு பலரும் அவ்­வாறு கூறு­கி­றார்கள். ஜனா­தி­பதி  வேட்­பா­ளரை நிறுத்தும் போது எந்­த­வொரு அர­சியல் கட்­சியும், நாட்டின் அர­சியல் சூழலைக் கவ­னத்தில் எடுக்கும் என்று நான் நினைக்­கிறேன். குறித்த கட்சி அல்­லது குழுவின் சார்பில்  மிகப் பொருத்­த­மா­னவர் தான் போட்­டி­யி­டுவார்.  அதுபோன்று , இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பிரிவு மக்கள், தமது அதிபர் வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/article/31542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.