Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இலங்கையை சூறையாடாதீர்’

Featured Replies

‘இலங்கையை சூறையாடாதீர்’
 

 

கண்டியில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு, சாரதி ஒருவர் மீதான தாக்குதலே வழிசமைத்துள்ளதெனத் தெரவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் குழாமைக் கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

இந்தப் பிரச்சினைதொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார்.  

கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (11) இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், யுத்தத்தால், இந்நாட்டு இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் இல்லாமல் செய்யப்பட்டதாகவும் யுத்தத்துக்குப் பின்னரும், அவ்வாறு அவர்களது வாழ்வை அழிக்க, ஒருபோதும் இடமளிக்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.  

பெரும்பான்மையின சாரதி ஒருவர் மீது, முஸ்லிம் இளைஞர்கள் சிலர் நடத்திய தாக்குதலே, கண்டி மாவட்டத்தில் வன்செயல்கள் ஏற்படக் காரணமாகின என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்கு காரணமாகவர்களுக்கு தண்டனை வழங்க, விரைந்துச் செயற்படுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை, கண்டிக்குள் மாத்திரம் கட்டுப்படுத்திக்கொள்ளக் கிடைத்தமை, அதிர்ஷ்டவசமாகுமென்றும் குறிப்பிட்டார். 

கண்டியில் ஏற்பட்ட நிலைமை, நாடு முழுவதும் பரவுமென்று, பலர் அச்சம் தெரித்தனர். அந்த அச்சம், தமது மனங்களிலும் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஆனால், தாம் அச்சமடந்தவாறான சம்பவங்கள் இடம்பெறவில்லையென்றும் அதனைத் தடுத்து நிறுத்த தம்மால் முடிந்ததாகவும், இதற்காக, பாதுகாப்புத் தரப்பினருக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் கூறினார்.  

யுத்தம் காரணமாக, சுமார் 30 வருடங்களாக நாம், போரிட்டுக் கொண்டோம். அதனால், இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனதெனக் குறிப்பிட்ட அவர், இல்லாமல் போன ஒற்றுமையை, மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்காக, அந்தந்தத் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவை அனைத்துக்கும் முதலாக, நாம் அனைவரும் இலங்கையினம் என்ற உண்மையை, அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். 

நாட்டின் பெரும்பான்மை இனத்தினரான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினமாக உ ள்ள முஸ்லிம்களுக்கும் இடையில், நாட்டுக்குள் சிற்சில பிரச்சினைகள் எழுந்து வருகின்றவென்றுச் சுட்டிக்காட்டிய பிரதமர், இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவை இரகசியமல்லவென்றும் கூறினார்.  

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென்று, இரு தரப்பினரும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், பேச்சுவார்த்தைகள் மூலம், இணக்கத்தை ஏற்படுத்தும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார்.    

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையை-சூறையாடாதீர்/150-212525

  • தொடங்கியவர்

சிறு­பான்மையின மக்­களின் உரி­மை­களை பாது­காப்பேன்

05-0085eef1460f1c479872dddc1f2ab8fc8ac06c71.jpg

 

மூவின மக்­களின் எதிர்­பார்ப்பும் முழு­மை­யாக நிறை­வே­ற­வில்லை என்­கிறார் பிர­தமர் 

(ஆர்.யசி)

மூவின மக்­களும் இணைந்து நல்­லாட்­சியினூடாக நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த எம்மை  தேர்ந்­தெ­டுத்த போதிலும் எம்மால் மக்­களின் எதிர்­பார்ப்பை முழு­மை­யாக பூர்த்தி செய்ய முடி­யாது போயுள்­ளது. எனினும் மக்­களின் நம்­பிக்­கையை வெற்­றி­கொள்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். எமது ஆட்­சியில் சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் நிச்­ச­ய­மாக பாது­காக்­கப்­படும். அதனை குழப்ப ஒரு­சிலர் எடுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக நாம் கட்­டா­ய­மாக சட்ட நட­வ­டிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

கொலன்­னாவை சேத­வத்த வேகே­ர­கொ­டள்ள புராண பெளத்த விகா­ரைக்கு நேற்று காலை விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைக் குறிப்­பிட்டார்.  அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்  

நேற்­றைய தினம் ( நேற்று) நான் கண்­டிக்கு விஜயம் மேற்­கொண்டு அங்கு இன முரண்­பா­டு­களில் சேத­மான பகு­தி­களை பார்­வை­யிட்டேன். அதேபோல் நான் வாக­னத்தில் பய­ணிக்கும் போதும் ஒரு­சில காட்­சி­களை அவ­தா­னித்­துக்­கொண்­டுதான் சென்றேன். அப்­போது சில பகு­தி­களில் பெளத்த தேரர்கள் மக்­க­ளுடன் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­ததை நான் அவ­தா­னித்தேன். பெளத்த தேரர்கள் சாதா­ரண மக்­க­ளுடன் இணைந்து ஒற்­று­மை­யினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அதே­போன்று அம்­பாறை சம்­ப­வத்தின் போதும் பெளத்த தேரர்­களும், கிறிஸ்­தவ மத தலை­வர்­களும் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு சென்று நிலை­மை­களை அவ­தா­னித்­தனர். எனவே சிறு­பான்மை இன மக்கள் மீது நாம் அக்­க­றை­யுடன் தான் உள்ளோம் என்­பது இதில் தெளி­வாக வெளி­ப­டு­கின்­றது. பெளத்த தேரர்கள் முஸ்லிம் மக்கள் விட­யத்தில் மனி­தா­பி­மா­ன­மாக நடந்­து­கொண்­டதை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது. 

எனினும் இந்த பிர­தே­சங்­களில் ஒரு சிலர் முன்­னெ­டுக்கும் இன­வாத செயற்­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச தரப்­பிடம் சிங்­கள மக்கள் மீதான தவ­றான எண்­ண­மொன்று பரப்­பப்­பட்­டு­விட்­டது. இலங்­கையின் அனைத்து சிங்­க­ள­வரும் இன­வா­திகள் என்ற அவப்­பெ­யரை சம்­பா­திக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு சிலர் செய்யும் இன­வாத செயற்­பா­டுகள் கார­ண­மாக வேறு நாடு­க­ளுடன் எம்­மையும் ஒப்­பிட்­டுப்­பார்க்­கின்­றனர். இப்­போது கூட மத்­திய கிழக்­கிலும் மேற்கு நாடு­க­ளிலும் உள்ள எமது மக்கள் என்­னுடன் தொடர்பு கொண்டு நிலை­மை­களை வின­வு­கின்­றனர். அதே­போன்று சுற்­று­லாத்­துறை கூட நெருக்­க­டியை சந்­தித்­துள்­ளது. சாதா­ரண மக்­க­ளுக்கும் பொரு­ளா­தார ரீதியில் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. இதனால் தென்­னா­சி­யாவில் உள்ள அனைத்து பௌத்­தர்­க­ளுக்கும் அவப்­பெயர் ஏற்­பட்­டுள்­ளது. 

ஒரு சிறிய சம்­பவம் மூல­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த முரண்­பாடு இறு­தியில் இரண்டு இனத்­தவர் மீதான கல­வ­ர­மாக மாற்­ற­ம­டைந்து விட்­டது. ஒரு முச்­சக்­க­ர­வண்டி சார­தியை குடி­போ­தையில் இருந்த முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் தாக்­கி­யதை அடுத்து இந்த பிரச்­சினை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த குற்­றத்தின் முழு­மை­யான குற்­ற­வா­ளி­களை நாம் தண்­டிக்க வேண்டும். ஆகவே இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நிறைவு செய்து குறித்த நபர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என நான் பொலி­சா­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். இந்த வழக்கை கால தாம­தப்­ப­டுத்த வேண்டாம். உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­டமும் நான் தெரி­வித்­துள்ளேன். மேலும் இந்த சம்­பவம் நாடு முழு­வதும் பர­வாது தடுத்­துள்ளோம். 

இலங்­கையில் கடந்த கால யுத்­தத்தில் எமக்கு ஏற்­பட்ட இழப்­புகள் என்­ன­வென்­பதை நாம் நன்கு அறிந்­துள்ளோம். யுத்­தத்தின் பின்னர் மக்­க­ளுக்கு அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்க நாம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். ஒவ்­வொரு இன மக்­க­ளுக்கும் அவர்­க­ளுக்கு உரித்­தான பிர­தே­சங்­களில் வாழ அனு­ம­திக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். நாம் அனை­வரும் இலங்­கையர் என்ற உணர்­வுடன் வாழ வேண்டும். 

எனினும் ஒரு இனத்­த­வ­ருக்கு அதிக சந்­தர்ப்­பங்­களும் ஏனைய இனத்­த­வ­ருக்கு குறைந்த அங்­கீ­கா­ரமும் கிடைத்­துள்­ளன. இது மறைக்­கப்­பட முடி­யாத விட­ய­மாகும். இந்த சம்­ப­வங்கள் குறித்து அனை­வரும் விவா­திக்­கின்­றனர். ஆனால் பிரச்­சி­னை­களை தீர்க்க எவரும் முன்­வ­ர­வில்லை. இன­வா­தத்தை இன­வா­தத்தின் மூல­மாக தீர்க்க முடி­யாது. பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக தீர்க்க வேண்டும். இதில் தேர்தல் முறைமை கூட தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆனால் இதனால் அழி­வது எமது பரம்­ப­ரையும் எதிர்­கா­ல­மே­யாகும். 

 

கடந்த கால யுத்­தத்தில் எமது வாழ்க்கை அழிந்­து­விட்­டது. இனியும் எமது சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை அழிக்க இட­ம­ளிக்க முடி­யாது. தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் மத்­தியில் பிரச்­சி­னைகள் உள்­ளன. அதனை சரி­யாக தீர்க்க வேண்டும். ஆனால் சமூக ஊட­கங்கள் மூல­மா­கவே அதிக நெருக்­க­டி­களை இன்று நாம் சந்­தித்து வரு­கின்றோம். யுத்­தத்தின் பின்னர் அனைத்து தரப்பும் இணைந்து நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கின . மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த எம்மை தெரி­வு­செய்­தனர். ஆனால் மக்­களின் எதிர்­பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய எம்மால் முடியாது போயுள்ளது. எனினும் குற்றங்களை கண்டறிவதில் விரைவான செயற்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு இனத்தவர் மீதான அனாவசியமான அடக்குமுறைகள் காரணமாக இந்த நாட்டில் தொடர்ந்தும் ஒற்றுமையின்மையே நிலவும். அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க முடியாது. எமது ஆட்சியில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிச்சயமாக பாதுகாக்கப்படும். அதனை குழப்ப ஒருசிலர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 
 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.