Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரக்தியில் இந்­தி­ரா­பு­ரம் கிரா­ம மக்­க­ள்!!

Featured Replies

  • விரக்தியில் இந்­தி­ரா­பு­ரம் கிரா­ம மக்­க­ள்!!
20171010_103929-750x430.jpg

விரக்தியில் இந்­தி­ரா­பு­ரம் கிரா­ம மக்­க­ள்!!

 

முக­மாலை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்து மக்­க­ளது இடப்­பெ­யர்வு இடம்­பெற்று எதிர்­வ­ரும் 26 ஆம் திக­தி­யு­டன் (26.03.2018 ) 18 வரு­டங்­கள் பூர்த்­தி­டை­கின்­றன. இத்­தனை நீண்ட கால­மாக ஏனைய பிர­தே­சங்­க­ளில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் பளைப் பிர­தேச , வேம்­பொ­டு­கேணி கிராம அலு­வ­லர் பிரி­வில் உள்ள இந்­தி­ரா­பு­ரம் கிராம மக்­கள், தம்மை எப்­போது தமது காணி­ க­ளில் மீளக்­கு­டி­ய­மர்த்­து­வார்­க­ளென பெரும் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

கடந்த 1997ஆம் ஆண்டு முதல் அரச படை­யி­னர் பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சத்­தில் நிலை கொண்­டி­ருந்த வேளை­யில், 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி ( 26.03.2000 ) நள்­ளி­ரவு வேளை­யில் மக்­கள் ஆழ்ந்த உறக்­கத்­தி­லி­ருந்த போது திடீ­ரெ­னக் கேட்ட வெடிச் சத்­தங்­க­ளால் அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட்டு காலை வரை வெளியே செல்ல முடி­யா­மல் வீடு­க­ளுக்­குள் முடங்­கி­யி­ருந்­த­னர்.

தொடர்ச்­சி­யான எறி­க­ணை­கள் மற்­றும் துப்­பாக்­கிச்சூட்டுச் சத்­தங்­கள், பளைப் பிர­தே­சத்­தையே உலுக்­கின. வெடிச் சத்­தங்­க­ளுக்­கி­டை­யில் அய­லில் உள்ள ஆல­யங்­க­ளில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர். இப்­போது போன்ற தொடர்பாடல் வச­தி­கள் அந்த வேளை­யில் இல்­லா­த­தால் என்ன நடக்­கி­றது என்று தெரி­யா­மல் ஒவ்­வொ­ரு­வ­ரும் தடு­மா­றிக் கொண்­டி­ருந்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்கு கடற்­க­ரை­யூ­டாக ஊடு­ரு­விய விடு­த­லைப் புலி­கள், இத்­தா­வில் கச்­சார்­வெ­ளி­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தி­ன­ரின் முகாம்­க­ளைத் தாக்­கி­யுள்­ள­னர் என அடுத்த நாள் காலை­யில் பொது­மக்­கள் அறிந்­து­கொண்­ட­னர்.இத­னால் பளை நக­ரம் மற்­றும் முக­மா­லைப் பகு­தி­க­ளில் படை­யி­ன­ரும், இடைப்­பட்ட பகு­தி­யில் போரா­ளி­க­ளும் காணப்­பட்­ட­தால், பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சம் இரு வேறு பிர­தே­சங்­க­ளாக காணப்­பட்­டது.

இத­னால் பச்­சி­லைப்­பள்ளி மேற்­குப் பகு­தி­யில் வாழ்ந்த மக்­கள், படை­யி­ன­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் முதன்­மைச் சாலை­யூ­டாக தென்­ம­ராட்சி, வட­ம­ராட்சி, வலி­கா­மம் பகு­தி­க­ளுக்கு கால்­ந­டை­யாக இடம்­பெ­யர்ந்­த­னர். ஏனைய பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­கள் பின்­னர் வாக­னங்­க­ளி­லும், கால்­ந­டை­யா­க­வும், கிளாலி ஊடாக தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­திற்கு அழைத்து வரப்­பட்டு ஏனைய பகு­தி­க­ளுக்­குச் சென்­ற­னர்.

 

2002ஆம் ஆண்­டின் சமா­தான  உடன்­ப­டிக்­கைப்­படி இரு­வேறு
பகு­தி­கள், வெவ்வேறு த­ரப்­புக்­கள் வசம்

பின்­னர் பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சம் போரா­ளி­க­ளின் வசம் வந்­த­து­டன், 2002 ஆம் ஆண்­டில் சமா­தான உடன்­ப­டிக்­கை­யின் பிர­கா­ரம் மக்­கள் தத்­த­மது சொந்த இடங்­க­ளைப் பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். தமது இருப்­பி­டங்­க­ளைப் பார்­வை­யி­டச் சென்ற பிர­தேச மக்­க­ளின் ஓலை வீடு­கள், இருந்த இடம்­தெ­ரி­யா­மல் காணப்­பட்­ட­தெ­ன­வும் ,கல்­வீ­டு­க­ளின் கூரை­கள், கத­வு­கள் அகற்­றப்­பட்டு வன்­னிப் பகு­திக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சமா­தான உடன்­ப­டிக்­கை­யின் பிர­கா­ரம், முக­மா­லைக்கு அப்­பால் தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் படை­யி­ன­ரும் , முக­மா­லை­யி­லி­ருந்து பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தே­சம் போரா­ளி­க­ளின் வச­மும் இருந்­தன. மீண்­டும் போர் ஆரம்­பிக்­கப்­பட்ட வேளை­யில் பச்­சி­லைப் பள்­ளிப் பிர­தே­சத்­தில் இருந்­த­வர்­கள் ஆனை­யி­றவு ஊடாக வன்­னிப் பிர­தே­சத்­திற்­குச் சென்­ற­னர்.

2009 ஆம் ஆண்டு போர் முடி­வ­டைந்த பின்­னர் 2011 ஆம் ஆண்டு தொடக்­கம் பச்­சி­லைப்­பள்ளி பகு­தி­யில் மக்­கள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­ட­னர். 2012 ஆம் ஆண்­டில் வேம்­பொ­டு­கேணி கிராம அலு­வ­லர் பிரி­வி­லும், இத்­தா­வில் பிரி­வி­ல் ஒரு பகுதியிலும் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்டு மக்­கள் மீளக்­கு­டி­ய­மர்ந்­த­னர்.

2011 ஆம் ஆண்டு முதன்­மைச் சாலை மற்­றும் தொட­ருந்­துப் பாதை ஆகி­ய­வற்­றின் புன­ர­மைப்­புக்­காக வெடிப் பொருள்­கள் அகற்­றும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு, வேம்­பொ­டு­கே­ணி­யி­லி­ருந்து முக­மாலை வரை­யான 2 கிலோ மீற்­றர் தூர­மான பகு­தி­யில், 500 மீற்­றர் தூரம் 9 மாதங்­க­ளில் வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்டு சாலை­கள் புன­ர­மைக்­கப்­பட் டன. அந்த வேளை­யில் முதன்­மைச் சாலை­யின் இரு­பு­ற­மும் சுமார் 200 மீற்­றர் தூரம் வரை வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்டு கைய­ளிக்­கப்­பட்­டன.

அந்­தப் பகு­தி­யில் உள்ள கத்­தோ­லிக்க திருச்­ச­பை­ யின் முக­மாலை தேவா­லய நிர்­வா­கத்­தின் வேண்­டு­கோ­ளின் பிர­கா­ரம், இத்­தா­வில் தொடக்­கம் முக­மாலை வரை­யான , வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்ட பகு­தி­யில், 150 மீற்­றர் தூரம்­வரை மீளக்­கு­டி­ய­மர பொது­மக்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இந்­தப் பகு­தி­யில், பெரு­ம­ளவு தென்­னங் காணி­க­ளும், பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யின் முக­மாலை உப அலு­வ­ல­கம், 10 குடி­யி­ருப்­பு­கள் ( இந்­தப் பகு­தி­யில் இன்­ன­மும் மக்­கள் மீளக்­கு­டி­ய­ம­ர­வில்லை ) முக­மாலை தேவா­ல­யம், முக­மாலை றோமன் கத்­தோ­லிக்க தமிழ் கல­வன் பாட­சாலை ஆகி­யவை விடு­விக்­கப் பட்­டன.

இந்­தி­ரா­பு­ரத்­தி­லும் ஒரு பகுதி  மீளக்­கு­டி­ய­மர விடு­விப்பு

மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­காத நிலை­யில், வெளி­யி­லி­ருந்து இயங்­கும் இந்­தி­ரா­பு­ரம் கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத்­தி­னர் மற்­றும் முக­மாலை விநா­ய­கர் சன­ச­மூக நிலை­யத்­தி­னர் மேற்­கொண்ட முயற்­சி­யின் பய­னாக கடந்த 2016 டிசெம்­பர் மாதம் இரண்­டாம் திகதி இந்­தி­ரா­பு­ரத்­தில் வெடி பொருள்­கள் அகற்­றப்­பட்ட 200 மீற்­றர் தூரத்­தில் 150 மீற்­றர் தூர­மும், முக­மா­லை­யில் படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டுப் பகு­தி­யில் காணப்­பட்ட குடி­யி­ருப்பு காணி­க­ளும் மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்டு மக்­கள் மீளக்­கு­டி­ய­மர்ந்­துள்­ள­னர்.

முக­மா­லை­யில் 2012 ஆம் ஆண்டு வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்ட பகு­தி­யில், குடி­யி­ருப்­பு­கள் காணப்­பட்ட பகு­தி­கள் 2017 ஆம் ஆண்டு மீள்­கு­டி­ய­ மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்டு காணி­க­ளைத் துப்­ப­ரவு செய்­யும் பணி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

முதன்­மைச் சாலை புன­ர­மைப்­புக்­குப் பின்­னர் வெடி பொருள்­கள் அகற்­றும் பணி­கள், 2012 ஆம் ஆண்டு தொடக்­கம் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. அபா­ய­க­ர­மான வெடிபொருள்­கள் காணப்­ப­டு­வ­தாக வெடிப் பொருள்­கள் அகற்­றும் பிரி­வி­னர்­கள் தெரி­விப்­ப­தால் , அவை அகற்­றும் பணி­கள் மூன்று நிறு­வ­னங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு, தொடர்ந்து பணி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தைப் பொறுத்த வரை­யில், அது வடக்­குத் தெற்­காக ஆயி­ரத்து 200 மீற்­றர் நீள­மும், கிழக்கு மேற்­காக 800 மீற்­றர் நீள­மும் உள்­ள­டங்­கிய பகு­தி­யைக் கொண்ட பிர­தே­ச­மா­கும். இதில் ஏற்­க­னவே வடக்கு தெற்­காக 200 மீற்­றர்­தூ­ரம் வெடி பொருள்­கள் அகற்­றப்­பட்­ட­தால், மிகு­தி­யாகக் காணப்­ப­டும் ஆயி­ரம் மீற்­றர் தூரத்­தில் வெடிபொருள்­கள் அகற்­றும் பணி­கள் கடந்த ஏழு வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற வரு­கின்­றன.

வேம்­பொ­டு­கே­ணி­யி­லி­ருந்து முக­மாலை வரை­யான பகு­தி­யில் முதன்­மைச் சாலை­யில் தெற்­குப் புறத்­தில் துப்­ப­ரவு செய்­யப்­பட்ட 200 மீற்­றர் தூரம் தவிர்ந்த ஏனைய ஆயி­ரம் மீற்­றர் தூர­மும், 2 கிலோ மிற்­றர் அக­ல­மும் கொண்ட பகு­தி­க­ளில் வெடி பொருள்­கள் அகற்­றும் பணி ஆரம்­பிக்­கப்­பட்டு ஏழு வரு­டங்­கள் கடந்­துள்ள நிலை­யி­லும் இது­வரை குறித்த பணி பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை.
வெடிபொருள்­கள் அகற்­ற­வ­தற்­கென சில நாடு­கள் நிதி உத­வி­கள் வழங்­கு­கின்ற போதி­லும், இந்­தப் பணி­க­ளைத் துரி­தப்­ப­டுத்த பணி­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் முயற்­சிப்­ப­தா­கத் தெரி­ய­வில்­லை­யென மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

வெடிபொருள்­கள் முழு­மை­யாக அகற்­றப்­பட்டு விட்­டால், தமது பணி­யா­ளர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு இல்­லா­மல் போய்­வி­டு­மென்­ப­தால், வேண்­டு­மென்றே காலங்­க­டத்­து­கி­றார்­கள் என­வும் மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். கடந்த 2016ஆம் ஆண்டு டிெசம்­பர் மாதம் இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தின் ஒரு பகுதி விடு­விக்­கப்­பட்ட தினத்­தில், இன்­ன­மும் ஒரு வரு­டத்­தி­னுள் அனைத்­துக் காணி­க­ளி­லும் வெடிபொருள்­கள் அகற்­றப்­பட்டு மக்­கள் மீளக்­கு­டி­ய­ மர்த்­தப்­ப­டு­வர் என அப் பணி­யில் ஈடு­ப­டு­வோ­ரால் தெரி­விக்­கப்­பட்­ட­தெ­ன­வும், அண்­மை­யில் ஐ.நா.சபை­யின் விசேட பிர­தி­நிதி மற்­றும் மீள்­கு­டி­ய­மர்வு அமைச்­சர் ஆகி­யோர் முக­மா­லைக்கு வருகை தந்­தி­ருந்த போது, இந்த வருட இறு­திக்­குள் வெடி­பொ­ருள்­கள் அகற்­றப்­பட்டு ஒரு பகுதி விடு­விக்­கப்­ப­டு­மெ­ன­வும் தெரி­வித்­த­னர் என­வும் இந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தப் பகு­தி­யில் மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்த அர­சி­யல்­வா­தி­கள் மற்­றும் அரச அதி­கா­ரி­கள் அக்­கறை செலுத்­து­வ­தில்­லை­யெ­ன­வும் அந்த மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­னர். வெடி பொருள்­கள் அகற்­றல் பணி­க­ளைப் பார்­வை­யிட வரும் வெளி­நாட்­டுப் பிர­தி­நி­தி­க­ளுக்கு மீட்­கப்­பட்ட ஒரு தொகுதி வெடி பொருள்­க­ளைக் காட்டி, நிதி பெறு­வ­தில் குறிக்­கோ­ளாக உள்­ள­னரே தவிர, மக்­க­ளின் மீள்­கு­டி­ய­ மர்­வைப் பற்றி இவர்­கள் எள்­ள­ள­வும் சிந்­திப்­ப ­தா­கத் தெரி­ய­வில்­லை­யெ­ன­வும் அந்த மக்­கள் தெரி­வித்­த­னர்.

அர­சி­யல்­வா­தி­கள் மற்­றும் அரச அதி­கா­ரி­க­ளி­டம் சென்று தம்மை மீளக்­கு­டி­ய­மர்த்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்­டு­கோள் விடுத்­தால், பொது­மக்­க­ளுக்கு முன்­னால் வெடி பொருள்­கள் அகற்­றும் நிறு­வ­னத்­தி­ன­ரு­டன் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு, அவர்­கள் தெரி­விக்­கும் கருத்தை மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கின்­ற­னரே தவிர, வேலை முன்­னேற்ற அறிக்கை தொடர்­பான விவ­ரங்­கள் எத­னை­யும் அர­சி­யல்­வா­தி­களோ, அரச அதி­கா­ரி­களோ கோரிப் பெறு­வ­தில்­லை­யெ­ன­வும் அங்கு சென்று தள நிலை­மையை அவர்­க­ளில் எவ­ருமே பார்­வை­யி­டு­வ­தில்­லை­யெ­ன­வும் அந்தப் ப குதி மக்கள் குற்­றஞ்­சாட்டுகின்றனர்.

இந்­தி­ரா­பு­ரத்­தில் இது­வரை  மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­ப­டா­தோர்
விரக்தி நிலை­யில்

இந்­தி­ரா­பு­ரத்­தில் உள்ள 150 ஏக்­கர் நிலத்­தில் வசித்த 132 குடும்­பங்­க­ளில், 2016ஆம் ஆண்டில் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள மக்­கள் தவிர்ந்த, 1996 ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்து வன்­னிப் பகு­திக்­குச் சென்­ற­வர்­க­ளும், 2000ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்து யாழ்.மாவட்­டத்­திற்­குச் சென்­ற­வர்­களும் இன்­ன­மும் அகதி வாழ்க்கை வாழ்­வதை இந்த அர­சி­யல் வாதி­களோ, அரச அதி­கா­ரிளோ கணக்­கில் எடுப்­ப­தில்லை என­வும் அவர்­கள் மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்­து ­வ­தற்கு உரிய முயற்சி எடுத்­தால், குறு­கிய காலத்­தில் மீளக்­கு­டி­ய­மர்த்­த­ மு­டி­யு­மெ­ன­வும் அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தி­ரா­பும் கிரா­மத்­தில் வெடிப் பொருள்­கள் அகற்­றப்­ப­ட­வில்­லை­யெ­னக் குறிப்­பி­டப்­ப­டும் இடங்­க­ளில் சட்ட விரோத மணல் அகழ்வு, மரங்­கள் தறிப்பு தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன என வெடிப் பொருள்­கள் அகற்­றும் பணி­யில் ஈடு­ப­டும் நிறு­வ­னத்­தி­னர் அறி­விக்­கின்­ற­னர்.

அபா­ய­க­ர­மான வெடி பொருள்­கள் காணப்­ப­டும் பகு­தி­க­ளுக்­குச் செல்­லும் வாக­னங்­கள் மற்­றும் அவற்­று­டன் செல்­ப­வர்­க­ளுக்கு அங்­குள்ள வெடி பொருள்­க­ளால் இது­வரை பாதிப்பு எதுவும் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்­லை­யெ­ன­வும், இந்­தப் பகு­தி­க­ளில் வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்­டும் தமது வரு­மா­னத்­துக்காக குறித்த வெடி­பொ­ருள்­கள் அகற்­றும் நிறு­வ­னத்­தி­னர் குறித்த பணியை நிறை­வேற்றாது காலத்­தைக் கடத்­தி­வ­ரு­கின்­ற­னர் என­வும் மக்­கள் தெரி­வித்­த­னர். –

இடம்­பெ­யர்ந்து உற­வி­னர், நண்­பர்­கள் வீடு­க­ளில் அகதி வாழக்கை வாழும் இந்­தி­ரா­புர மக்­க­ளின் நல­னில் அக்­க­றை­யுள்ள அர­சி­யல்­வா­தி­கள் மற்­றும் அரச அதி­கா­ரி­கள் குறித்த இந்­தப் பகு­திக்கு நேரில் சென்று பார்­வை­யிட்டு மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­ன­வும் அந்­தப் பகு­திப் பொது­மக்­கள் கேட்­டுள்­ள­னர்.

http://newuthayan.com/story/76213.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.