Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்­வ­தேச மய­மான இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு

Featured Replies

சர்­வ­தேச மய­மான இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு

 

போர்க்­குற்றம் விசா­ரிக்­கப்­பட்டுத் தண்­டனை பெற, போர் வீரர்கள் சம்­ம­திப்­பார்­களா? அரசு அவர்­களைப் பயன்­ப­டுத்தி விட்டு விசா­ர­ணைக்கும் தண்­ட­னைக்கும் கைய­ளிக்க விரும்­புமா? போர் வீரர்கள் உயிர்த்­தி­யாகம் செய்து கைப்­பற்­றிய இடங்­களை மீண்டும் தாரை­வார்க்க அவர்கள் இட­ம­ளிப்­பார்­களா? தம்­மோடு கலந்­து­கொள்­ளாமல் தீர்வு காண இசை­வார்­களா எனும் நிலைப்­பா­டு­களே தற்­போது பல்­லின தேசிய இணக்­கப்­பாட்டுத் தீர்­வுக்கு முட்­டுக்­கட்­டை­க­ளாக இருக்­கின்­றன.

அப்­ப­டி­யானால் போர்க்­குற்­றத்­தி­லி­ருந்து போர் வீரர்கள் விலக்கு அளிக்­கப்­பட்டு அதற்குப் பக­ர­மாக கைப்­பற்­றிய இடங்­களை மீளவும் வழங்கத் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வுக்கும் போர் வீரர்­களை இணங்கச் செய்ய வேண்டும். இதைப் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் விரும்­பு­வார்­களா? இதற்கு இணங்­கினால் விசா­ரிக்­கவும் முடி­யாது, தண்­டிக்­கவும் முடி­யாது. அது போல் கைப்­பற்­றிய இடங்­க­ளையும் தீர்­வையும் வழங்­கு­வதன் மூலம் போர்க்­குற்­றத்­தி­லி­ருந்து அரசு விலக்­குப்­பெற சிங்­கள மக்கள் சம்­ம­திப்­பார்­களா? தீர்வு இல்­லா­த­தால்­தானே போர் நிகழ்ந்­தது எனக் கூறி­னாலும் கூட தீர்வு எப்­போதும் எப்­படி என்­ப­தெல்லாம் இவர்­க­ளுக்­குட்­பட்ட செயற்­பா­டு­க­ளாகும். ‘இவற்றைக் கூறிக் கூறித்தான்’ அழிவு யுத்தம் செய்­தார்கள். போர்க்­குற்­றத்­துக்­கான விசா­ர­ணை­யிலும் தண்­ட­னை­யி­லுமே கைப்­பற்­றப்­பட்ட இடங்­களும் தீர்வும் கிடைக்கும் எனத் தமிழ்த் தரப்­பினர் நம்­பு­கின்­றனர். எனவே முதலில் போர்க்­குற்ற விசா­ர­ணை­யையே வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் எனக் கூறலாம்.

இந்த நிலைப்­பா­டு­க­ளால்தான் தென்­னா­பி­ரிக்­காவின் கற்றுக் கொண்ட பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் எனும் அணு­கு­முறை இலங்­கையில் எடு­ப­டாது போயிற்று. அதா­வது அது பாதிப்பை விளை­வித்­தோரும் பாதிக்­கப்­பட்­டோரும் இணங்கி விட்டுக் கொடுத்து தமக்கு நிகழ்ந்­த­வற்றை பாடங்­க­ளாக எடுத்­துக்­கொண்டு நல்­லி­ணக்கம் கண்­டு­கொள்­வ­தாகும். மண்­டே­லாவும், போத்­தாவும் கையாண்ட இந்த அணு­கு­முறை பல்­லாண்­டு­க­ளாக நிற­வெ­றியை தென்­னா­பி­ரிக்­காவில் அடி­யோடு அழித்து விட்­டது. விதே­சி­ய­ரான போத்­தா­வு­ட­னேயே சுதே­சி­ய­ரான மண்­டேலா இணங்க முடி­யு­மானால் சுதே­சி­யர்­க­ளான சிங்­க­ள­வரும் தமி­ழரும் ஏன் இணங்­கிக்­கொள்ள முடி­யாது என வினவ முடியும். போத்தா அதி­கா­ரத்தை இழக்கும் நிலை­யி­லேயே இணங்­கினார். தற்­போ­துள்ள சூழலில் ஐ.நா.வின் கடும் அழுத்­தத்தின் மூலமே ஓர் இணக்­கப்­பாட்டை எட்­டலாம் எனத் தமிழ்த்­த­ரப்­பினர் நம்­பு­கின்­றார்கள் போல் தெரி­கி­றது. தமிழ்த்­த­ரப்­பினர் மைத்­திரி அரசு போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்று 30/1 தீர்­மா­னத்­துக்கும் உட்­பட்­டி­ருப்­பதால் ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரல் தமது நோக்­கத்தை நிறை­வேற்­றித்­தரும் எனவும் நம்­பு­கி­றார்கள் என நினைக்­கிறேன்.

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் தொகை 20,000எனக் கூறப்­ப­டு­கி­றது. இத்­தனை பேர் என்­றா­வது கண்டு பிடித்­தார்­களே? இன்ன தொகை எனத் தெரிந்து கொள்­வ­தற்­கா­கவா 8 ஆண்­டுகள் கழிந்­தி­ருக்­கி­றது. அப்­ப­டி­யானால் தேடித்­தி­ரி­யாமல் விசா­ரித்­துத்தான் அறிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஒரு­வ­ரேனும் உயி­ரோடு இருப்­ப­தாகக் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லையே. இதன் மூலம் காணா­ம­லாக்­கப்­பட்ட 20,000 பேரும் உயி­ரோடு இருக்­கின்­றார்­களா எனும் கேள்வி எழத்தான் செய்­கி­றது. அப்­ப­டி­யானால் அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டி­ருப்­பதும் 1200, கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பதும் எதற்கு? நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்­கா எனும் கேள்­வியும் எழத்தான் செய்­கி­றது. பாதிக்­கப்­பட்டோர் நஷ்ட ஈடு பெறு­வது போர் வீரர்­களை போர்க் குற்­றத்­தி­லி­ருந்து விலக்கு அளிப்­ப­தாக அமை­யாதா?

காணா­ம­லாக்­கப்­பட்டோர் விவ­கார அலு­வ­லகம் விசா­ரித்துத் தண்­டனை வழங்கும் நீதி­மன்­ற­மல்ல. மனத்­தேற்­றத்­துக்­கான நிலையம் என அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கி­றாரே. இதன் மூலம் போர்க்­குற்ற விலக்கே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது எனக்­கூற முடி­யாதா?

இலங்­கை­ய­ர­சுக்குச் சார்­பற்ற 7 பேர் இதற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால் போர்க்­குற்ற விசா­ர­ணை­யாக அமைய இட­முண்டு என பேரி­ன­வாத முனைவர் குண­தாஸ அம­ர­தாஸ கூறி­யி­ருப்­பினும் அது நீதி­மன்­ற­மல்ல என மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருப்­பதன் மூலம் போர்க்­குற்­ற­மில்லை என உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ளைக்­கொடி விவ­கா­ரமும் இவ்­வாறு நஷ்ட ஈடு வழங்­கப்­பட்டு தீர்க்­கப்­பட்டு விடுமா? இப்­ப­டி­யான அணுகு முறை­யிலா ஐ.நா. இலங்­கைக்­கான போர்க்­குற்ற விவ­கா­ரத்தை அணுக நினைத்­தி­ருக்­கி­றது. இரா­ணு­வத்தை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ விசா­ரிக்­கவும் தண்­டிக்­கவும் விட­மாட்டேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­வதன் அர்த்தம் இது­தானோ?

ஒரு வகையில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நஷ்ட ஈட்டை வழங்­கு­வது போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்புக் கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்று 30/1 தீர்­மா­னத்­தையும் நிறை­வேற்­றி­ய­தா­கவே அமை­கி­றது. இதற்­கெ­னத்தான் மைத்­திரி ஐ.நா.விட­மி­ருந்து இரு தவ­ணைகள் பெற்­றி­ருந்தார் என்­பதும் தெரி­கி­றது.

பாதிக்­கப்­பட்டோர் நஷ்ட ஈடு பெற்­றுக்­கொண்டு போர்க்­குற்ற விலக்கை அளிக்க சம்­ம­தித்­தார்­களா? 8 வரு­ட­காலம் இழுத்­த­டித்­தது வறு­மைக்கு உட்­பட்டு நஷ்ட ஈட்­டை­யா­வது பெற்று மன ஆறுதல் பெறுவோம் எனும் மன நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கா? இன்­னொரு வகையில் நஷ்ட ஈடு வழங்­கு­வ­தும்­கூடப் போர்க் குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவே அமையும்.

இந்த வகை­யில்தான் போர்க்­குற்ற விவ­கா­ரத்தை ஐ.நா.கையாள விரும்­பு­கி­றதா? இலங்கை அரசு இரா­ணு­வத்தின் தயவில் தங்­கி­யி­ருப்­ப­தாலும் ஸ்திர­மற்ற கட்­ட­மைப்­புடன் இருப்­ப­தாலும் யுத்தக் குற்­றத்தைப் புலி­களும் செய்­தி­ருப்­ப­தாகக் கரு­தி­ய­தா­லுமா ஐ.நா.நஷ்ட ஈடு வழங்கும் தீர்­வுக்கு வந்­தி­ருக்­கி­றது?

ஒரு குற்­றத்­துக்கு விசா­ரித்துத் கண்­டிக்­கவும் செய்­யலாம். நஷ்­ட­ஈடு பெற்று மன்­னிக்­கவும் செய்­யலாம். ஆக போர்க்­குற்­றத்­துக்­கான தீர்­வாக நஷ்ட ஈடு வழங்­கு­வதே எளி­தாகும். எனினும் எதற்­காகப் போர் நிகழ்ந்­ததோ அந்த நோக்கம் நிறை­வே­றா­த­தோடு தொடர்ந்தும் பிரச்­சினை நிலைத்­தி­ருக்கும் அல்­லவா?

பாதிப்பை விளை­வித்தோர் நஷ்ட ஈட்டை வழங்கி பாதிக்­கப்­பட்டோர் அதை ஏற்­றுக்­கொள்­வதா? போர்க்­குற்­றத்­துக்­கான தீர்வு? இறை­மையைக் காப்­பாற்­றிய இரா­ணு­வத்தின் தயவில் அரசு தங்­கி­யி­ருப்­ப­தாலும் பெரும்­பான்மைச் சிங்­கள மக்­களை உட­னடி இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்­டு­வர முடி­யா­த­தாலும் தனது தீவிர தலை­யீடு பிரச்­சி­னையை மேலும் சிக்­க­லாக்­கி­விடும் என ஐ.நா.கரு­து­வ­தா­லுமா இத்­த­கைய மென்­மை­யான அணு­கு­மு­றையைக் கையா­ளு­கி­றது என கேட்கத் தோன்­று­கி­றது.

 மகிந்த போர்க்­குற்­றத்தை ஐ.நா.வில் மறுத்­த­போது ரஷ்யா, சீனா உட்­பட சில நாடுகள் அவரை ஆத­ரித்­தன. காரணம் குற்­றச்­சாட்டை அமெ­ரிக்கா முன் வைத்­தி­ருந்­த­தே­யாகும். அமெ­ரிக்கா எதைச்­செய்­தாலும் அந்­நா­டுகள் அதை எதிர்க்கும் என்­பதால் அது தனிப்­பட்ட முறையில் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஆத­ர­வல்ல. வீட்டோ அதி­கா­ரத்­தையும் கூட ரஷ்­யாவும் சீனாவும் பாவித்­தி­ருக்­கலாம். அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் மேற்கு நாடு­களும் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாட்டைத் தீவி­ரப்­ப­டுத்த இதுவும் ஒரு கார­ண­மா­கி­யது. மகிந்த ராஜபக் ஷ சீனா­வுடன் அதிக நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்­டது இந்­தி­யாவும் அவ­ரோடு அதிக பகை­கொள்ள வழி­கோ­லி­யது. இந்­நி­லையில் அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும் இணை சேர்ந்­ததால் நிலைமை கட்­டு­மீ­றி­யது.

இந்த நிலையில் போர்க்­குற்றச் சாட்டை ஐ.நா.முன்­னெ­டுத்­தி­ருந்தால் வலு­வாக இருந்­தி­ருக்கும் இணக்­க­முள்ள அர­சுக்­காக ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­லேயே தனது நிலைப்­பாட்டை அது தளர்த்­தி­யி­ருக்­கி­றது என நினைக்­கிறேன். அப்­படித் தளர்த்­து­வ­தற்­கா­கவே போர்க்­குற்­றத்தை ஏற்­கவும் பொறுப்­புக்­கூ­றலை ஒப்­புக்­கொள்­ளவும் இணை அனு­ச­ர­ணைக்கு இணங்­கவும் 30/1, தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொள்­ளவும் செய்­தி­ருக்­கி­றது எனவும் நினைக்­கிறேன். இலங்­கையே இவற்றை ஒத்­துக்­கொண்­டபின் இதற்கு ஒத்­து­ழைத்த நாடு­களால் ஆத­ரவு வழங்க முடி­யாது போய்­விட்­டது. போர்க்­குற்­றத்­தையும் ஏற்­றுக்­கொண்டு பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணைக்கும் இணங்கி 30/1 தீர்­மா­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டதும் இலங்கை தனித்து செயற்­ப­டவே முடி­யாது.

அண்­மையில் சுமந்­திரன் ஒரு­வி­ட­யத்தைக் கூறி­யி­ருக்­கிறார். சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் இலங்­கையைப் பாரப்­ப­டுத்த முடி­யாதாம் தற்­போது ஜெனிவா கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரு­கி­றது. இது ஆரம்­ப­மாகு முன்பே பிரிட்டன் ஒழுங்­கு­ப­டுத்­திய உறுப்பு நாடு­களின் கூட்­டத்தில் 26 நாடுகள் பங்கு பற்­றி­யி­ருந்­தன. அதில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் உத்­தி­யோக பூர்வ நிலைப்­பாட்டைக் கேட்­டார்கள். அதில் எத்­த­கைய அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட வேண்டும் என நாம் கூறி­யுள்ளோம். சிலர் ஜெனீ­வா­வுக்குப் போய் தீர்­மா­னங்­களை எரிக்­கி­றார்கள். நாமோ தீர்­மா­னங்கள் வேண்டும் என்­கிறோம். ஐநா மூலம் என்ன செய்­யலாம் எனும் விடயம் மக்­க­ளிடம் சரி­யாகப் போய்ச் சேர­வில்லை. அத­னால்தான் அவர்கள் ஐநாவால் எல்லாம் கிடைத்து விடும் என மக்­களை ஊக்­கு­வித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். ஜெனீ­வாவில் இலங்கை ஏற்­றுக்­கொண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் 36 விட­யங்கள் இருக்­கின்­றன. இவற்றில் 3 பொறுப்புக் கூறல் சம்­பந்­தப்­பட்­ட­வை­யாகும். ஏனைய 33 விட­யங்­களும் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாகும். இவற்றில் பல­வற்றை இலங்கை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

 எனினும் இதில் பய­னில்லை இதைக் கைவிட்­டு­விட்டு இலங்கை அரசை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்த வேண்டும் என்­றெல்லாம் சிலர் கூறி­வ­ரு­கி­றார்கள். இது மக்­க­ளுக்கு தேவை­யா­னது தானா? யாரேனும் பகி­ரங்­க­மாக இலங்கை அரசை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­த­மு­டியும் எனக் கூற­மு­டி­யுமா? இது எவ­ராலும் முடி­யாது. இந்த உண்மை எல்­லோ­ருக்கும் தெரியும். பாது­காப்புச் சபை இந்த விட­யத்தை குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தாது. இந்த விட­யத்தை முன்­னின்று நடாத்­து­கின்ற அமெ­ரிக்­காவே இதைச்­செய்­யாது. காரணம் அமெ­ரிக்­காவே இந்த நீதி­மன்­றத்தை ஏற்றுக் கொள்­ள­வில்லை. 2012 ஆம் ஆண்டு முதல் இந்த தீர்­மா­னத்தை முன்­வைத்து நடாத்­து­கின்ற அமெ­ரிக்­காவே இதைச் செய்­யா­த­போது விஷ­யத்தைப் புரிந்­து­கொண்ட பின்பும் மக்­க­ளிடம் பொய்­யான பரப்­பு­ரை­களைச் செய்து இதைச் செய்வோம் என்­கி­றார்கள். நான் இதைச் சொன்னால் சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு போக­மு­டி­யாது, இலங்­கையை அவ்­வாறு அனுப்ப முடி­யாது எனக் கூறி சுமந்­திரன் இலங்­கையைப் பாது­காக்­கிறார் என ஊட­கங்கள் கூறும் என்­றெல்லாம் சுமந்­திரன் விளக்­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இதைத் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு புதி­தாக வெளி­யிட்­டி­ருக்கும் புதிய சுதந்­திரன் எனும் கட்சிப் பத்­தி­ரி­கையின் வெளி­யீட்டு விழா­வி­லேயே கூறி­யி­ருந்தார். அவ்­வாறு ஊட­கங்கள் கூறு­கையில் எமது உத்­தி­யோ­க­பூர்வ கார­ணத்தை எமது பத்­தி­ரி­கையில் வெளி­யி­டவே புதிய சுதந்­தி­ரனை வெளி­யி­டு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

 இதன் மூலம் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு உண்மை நிலையைத் தெளி­வு­ப­டுத்தும் பாரிய சவாலை அவர் எதிர் கொண்­டுள்­ளமை தெளி­வா­கி­றது. வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், சிவா­ஜி­லிங்கம், அனந்தி சசிதரன் ஆகி­யோ­ரையே சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் எதிர் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் தெளி­வா­கி­றது.

சம்­பந்தன் ஐயா புதி­ய­ யாப்பை இயற்றும் விட­யத்தில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­கி­றாரே இதன் அர்த்தம் என்ன? ஐ.நா. உறுதி மொழி கொடுத்­தி­ருக்­கி­றதா? இல்­லா­விட்டால் அவர் இப்­படி உறு­தி­யாகச் சொல்­ல­மாட்டார்? இதற்கு மகிந்­தவின் உத்­த­ர­வா­தத்தை ஐ.நா. பெற்­றுக்­கொ­டுத்­தி­ருந்­தா­லன்றி சம்­பந்தன் இப்­படிக் கூறி­யி­ருப்­பாரா? மகிந்­த­வுக்கு போர்க்­குற்ற விலக்­க­ளிக்க இதற்கு அவரை ஐ.நா. உடன்­ப­ட­வைத்­தி­ருக்­கலாம் அல்­லவா?-

 மைத்­தி­ரியும், ரணிலும், மகிந்­தவும் உள்ளூர் மட்­டத்தில் அர­சியல் முரண்­பா­டு­களை வைத்துக் கொண்­டாலும் ஐ.நா. வின் விட­யத்தில் மீற­மு­டி­யாது. அத­னால்தான் இந்த அர­சுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தைக் கொண்டு வர மகிந்­தவின் ஆட்கள் முயன்­ற­போது மகிந்த பின்­வாங்கி விட்டார். இப்­போது இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது. எனவே தமிழ் மக்கள் விரும்பும் தீர்வோ சிங்­கள மக்கள் விரும்பும் தீர்வோ அல்ல சர்வதேசம் விரும்பும் தீர்வே கிடைக்கும். இதில் சர்வதேசத்துக்கு முரண்படாமல் தமது நோக்கங்களை முன்வைத்துப்பெற மட்டுமே முடியும். இலங்கை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாகவே சர்வதேச தீர்வு அமைய வேண்டும். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் உள்ளடக்கப்படாமல் விட்டதுபோல் நிகழ்ந்து விடக்கூடாது. நாட்டில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இதையே வலியுறுத்துகின்றன. முஸ்லிம்களிடம் தீர்வைத்திணிக்கும் செயற்பாடு நிகழ்ந்து விடக்கூடாது முஸ்லிம்கள் தனிச்சமூகம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தமது தனித்துவத்தைப் பேணி வாழ்வதையும் ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும். செய்வதை ஐ.நா.ஒரேயடியாகச் செய்தால்தான் முழுமையான நிரந்தரத்தீர்வு அமையும்.

 ஐ.நா.வும் சர்வதேசமும் எம்மை கைவிட்டு விட்டது என எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் வருத்தப்படும் நிலை இருக்கக்கூடாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு இரு இனங்களுக்கு மட்டுமே தேவை எனும் கணிப்பு தவறானதாகும். பல்லின நாட்டுக்கு அத்தகைய அணுகுமுறை பிழையானதாகவே அமையும். இனரீதியில் இந்தியா இலங்கையை நோக்கியதால்தான் முஸ்லிம் சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமிடையில் பிளவு ஏற்பட்டது. இதே கணிப்பீட்டை மீண்டும் கொண்டு வராமல் தமிழ் மக்களோடு முஸ்லிம்கள் சமத்துவமாக வாழும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.