Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்!

Featured Replies

இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்!

 

இலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல்! நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்!

இலங்கை கிரிக்கெட் ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கையின் தேசியக்கொடியைப் பிடித்துக்கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்த காட்சி அனைத்து இலங்கை ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது.

இந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணி வீரர்களுடன் இலங்கை அணியின் கொடியை தூக்கி கொண்டு மைதானம் முழுவதும் சென்றுள்ளார்.

இந்தக் காட்சி அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், இலங்கை ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு இலங்கையர்கள் முழுமையான ஆதரவை வழங்கி வந்ததனர்.

இதனால் இலங்கையர்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ரோஹித் ஷர்மா இவ்வாறு செயற்பட்டுள்ளார். கிரிக்கெட் என்பது ஜென்டில்மென் விளையாட்டு என கூறப்படுவதனை இந்திய அணி உறுதி செய்துள்ளதாக பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் ஷர்மா அவர்களின் நன்றி உரையிலும் இலங்கை ரசிர்களுக்கு தனது மனம் நிறைந்த நன்றியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/sports/Action-done-by-the-Indian-team-for-Sri-Lankan-fans

  • தொடங்கியவர்

ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக்; கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்: வென்றது கிரிக்கெட்


 

 

india-sri-lanka-fans-join-hands-to-celebrate

 

 

வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தி கோப்பையை வென்றதைக் கொண்டாடியது இந்திய வீரர்கள் மட்டுமல்ல இலங்கை வீரர்களும்தான். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் இந்திய - இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை இணைத்துள்ளது.


கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. 
எப்படி இசைக்கு எல்லைகள் மொழிகள் இல்லையோ, கலைக்கு தேசங்கள் பேதங்கள் இல்லையோ அப்படித்தான் விளையாட்டுக்கும் என உணர வைத்திருக்கிறார்கள் நேற்று இந்திய வெற்றியை கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள்.


கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. 
தினேஷ் கார்த்திக் களமிறங்கும் போது 2 ஓவர்களில் 34 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற கடினமான நிலை, பயங்கர அழுத்தமான சூழலே நிலவியது. அத்தகைய நெருக்கடியில் தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 22 ரன்கள் விளாசியது சாதாரண விஷயமல்ல.  


இந்நிலையில் 7 பந்துகளில் 2 பவுண்டரிக்கள்  சிக்ஸர்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்த தினேஷ் கார்த்தியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிகெட் வென்றது, ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்றெல்லாம கொண்டாடப்படுகிறது. ரோஹித் சர்மா மைதானத்தில் இலங்கை அணியின் கொடியை ஏந்தி உலாவர, வங்கதேச வீரர்களைக் கடுப்பேற்றும் வகையில் மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இலங்கை வீரர்கள் பாம்பு நடனம் ஆடி வங்கதேச வீரர்களை கிண்டல் செய்தனர்.

இந்திய வெற்றியை இலங்கை கொண்டாடியதன் மூலம் கிரிக்கெட் வென்றிருக்கிறது என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

http://www.kamadenu.in/news/sports/909-india-sri-lanka-fans-join-hands-to-celebrate.html?utm_source=site&utm_medium=slider_widget_kamadenu&utm_campaign=slider_widget_kamadenu

 

 

“இனி இல்லை பாம்பு டான்ஸ்” இந்தியாவுக்குச் ‘சியர்’- இந்திய வெற்றியைக் கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்

 

 
srilankan%20fans

இந்திய வெற்றியைக் கொண்டாடும் இலங்கை ரசிகர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள்.   -  படம். | ஏ.எஃப்.பி.

நிதஹாஸ் முத்தரப்பு டி20 போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச வீர்ர்களுக்கும் இலங்கை வீரர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், இலங்கையின் தோல்வி ஆகியவை காரணமாக இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை ரசிகர்கள் ஏகோப்பித்த ஆதரவு வழங்கினர்.

அதுவும் தினேஷ் கார்த்திக் இறங்கி அடித்த அடியை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்திய, இலங்கை ரசிகர்களின் நம்பிக்கை அவர்களது உற்சாகத்தில் தெரிந்தது.

ரசிகர்களின் ஒருபகுதியினர் “இனி இல்லை பாம்பு டான்ஸ்” இந்தியாவுக்கு சியர் என்றும் பேனர் காண்பித்தனர்

ஏற்கெனவே இந்திய அணி மீது இலங்கை ரசிகர்களுக்கு கோபம் இருந்தது, அது 2011 உலகக்கோப்பையில் தோனி கடைசியில் சிக்ஸ் அடித்து கோப்பையை வென்றது முதலே இலங்கை ரசிகர்கள் இந்திய அணியின் தோல்விகளை ரசிப்பதாக மாறியது.

லீக் போட்டியில் ஓய்வறை கண்ணாடிக் கதவை உடைத்ததனால் இலங்கை ரசிகர்களின் ஆதரவை வங்கதேசம் இழந்தது.

இதனை வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் தனது பேட்டியில் குறிப்பிட்டார், ஆனால் அவரது பேச்சில் வருத்தம் தொனிக்கவில்லை, மாறாக, “வெளிநாட்டு ரசிகர்களின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை.

ஆதரவு அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும். யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. களத்தில் நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்று ஆதரவு தேவையில்லை என்ற தொனியில் பேசினார்.

மாறாக ரோஹித் சர்மாவோ, “ரசிகர்கள் ஆதரவு அபாரம். இந்தியாவுக்கு வெளியே ஆடுகிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை” என்றார்.

இந்திய அணி விக்கெட் வீழ்த்தும் போதும் ரன் இல்லாத பந்துகளை வீசிய போதும் பலத்த ஆதரவு இருந்தது. மாறாக இந்திய விக்கெட்டுகள் விழும்போது மவுனம் காத்தனர்.

fans2jpg

வெற்றிக்குப் பிறகு...   -  படம். | ஏ.எஃப்.பி.

 

இதனையும் ரோஹித் சர்மா கவனித்துள்ளார், “40 ஓவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். பீல்டிங்கில் ரன்களைத் தடுக்கும் போதும், பேட்டிங் இறங்கும்போதும் பலத்த ஆதரவு அளித்தனர், இது மிக முக்கியமானது” என்றார்.

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை எக்ஸ்ட்ரா கவரில் மெஜஸ்டிக் சிக்ஸ் அடித்தவுடன் இலங்கை ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட காட்சிகளும் இடம்பெற்றன. இருநாட்டு ரசிகர்களும் பாம்பு டான்ஸ் ஆடினர்.

இலங்கை வெற்றி பெற்றால் வெடிவெடித்து கொண்டாடுவது போல் இந்திய வெற்றிய பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

http://tamil.thehindu.com/sports/article23292902.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.