Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தியை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்த சென்னை மாணவர்

Featured Replies

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தியை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்த சென்னை மாணவர்

 

 
raja-Eswara-prabu

பாக். ஜலசந்தி கடலில் நீந்தி தனுஷ்கோடி வந்த மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடலை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை பாக். ஜலசந்தி கடற்பகுதி ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள மணல் தீட்டுகளான ஆதாம் பாலமும் பாக். ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் கொண்டது.

பாக். ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்தி கடந்தார். தொடர்ந்து 5.4.1966-ல் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக். ஜலசந்தியை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்தி கடந்தார்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் குமார் ஆனந்தன். நீச்சல் வீரரான இவர் 1971-ல் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச்சென்று சாதனை படைத்தார். 12.4.1994-ல் பன்னிரண்டே வயதான குற்றாலீசுவரன் பாக். ஜலசந்தியை நீந்திக் கடந்தார்.

இந்நிலையில், இந்திய அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ராஜ ஈஸ்வர பிரபு (20) தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக, கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்தியா-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகு, ஒரு நாட்டுப் படகில் ராஜ ஈஸ்வர பிரபு மற்றும் அவருடன் மீனவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து ராஜ ஈஸ்வரபிரபு ‘தி இந்து’விடம் கூறியதாவது: தலைமன்னாரில் நீந்த தொடங்கியதில் இருந்து 6 மணி வரையிலும் இருளாக இருந்ததால், முதலில் மெதுவாக நீந்தினேன். பின்னர் சூரியன் உதயமானதும் எனது வேகத்தை அதிகரித்தேன். இலங்கை கடற்படையினர் சர்வதேச எல்லை வரையிலும் பாதுகாப்புக்காக உடன் வந்தனர். பின்னர், இந்திய கடலோரக் காவல்படையினர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

raja%20Eswara%20prabu%20at%20dhanushkodi

தனுஷ்கோடி கரைக்கு வந்த ராஜ ஈஸ்வர பிரபுவுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு .

நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்தது. கடலில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் இருந்தன. ஜெல்லி மற்றும் ஆபத்தான மீன்களை எதிர்கொள்ள உடம்பில் பிரத்யேக பசையை (பேஸ்ட்) பூசி இருந்ததால் அம்மீன்களால் பிரச்சினை ஏற்படவில்லை. சிறுவயதில் இருந்தே நீச்சலில் ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே நீச்சல் பயிற்சியை முறையாக கற்க தொடங்கினேன். விரைவில் ஆங்கில கால்வாய் உட்பட மற்ற 6 கால்வாய்களையும் நீந்தி கடக்க வேண்டும் என்பதே லட்சியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமன்னாரில் அதிகாலை 3 மணியளவில் நீந்த தொடங்கிய ராஜ ஈஸ்வர பிரபு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு பிற்பகல் 2 மணி 56 நிமிடங்களுக்கு வந்தடைந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23346654.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

பாக். ஜலசந்தி

பாக்கு நீரிணை,  இப்ப பாக்  ஜலசந்தி  ஆகிவிட்டது

  • தொடங்கியவர்

'8.25 மணி நேரத்தில் பாக்நீரிணையை நீந்திக் கடந்த ஆந்திர போலீஸ்!' - புதிய சாதனை

 
 

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக்நீரிணை கடல் பகுதியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் 8.25 மணி நேரத்தில் நீந்தி கடந்து புதிய சாதனை படைத்தார்.

பாக்நீரிணை நீந்தி சாதனை படைத்த ஆந்திர போலீஸ்

 

வெளிநாடுகளில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவற்றை நீந்தி கடப்பதை போல் இந்தியா - இலங்கை இடையேயான பாக்நீரிணை பகுதியையும் நீந்திக் கடந்து சாதனைச் செய்யும் முயற்சிகளில் நீச்சல் வீரர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். 

1960-ம் ஆண்டு முதல் இது வரை இந்தச் சாதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 1994-ம் ஆண்டு 12 வயதே நிரம்பிய குற்றாலீஸ்வரன் என்ற சிறுவன் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான 32 கி.மீ  தூரம் கொண்ட பாக்நீரிணை பகுதியை 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்து பெரும் சாதனை படைத்தார். நேற்று (சனிக்கிழமை) சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ்வரபிரபு தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியினை 11.58 மணி நேரத்தில் நீந்திக் கடந்தார். 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தலைமைக் காவலரான மோது கூரி துளசி சைத்தன்யா என்பவர் இன்று தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணை பகுதியினை 8மணி 25 நிமிடங்களில் நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்தார். இன்று அதிகாலை 1 மணிக்கு தலைமன்னார் துறைமுக பகுதியில் இருந்து நீந்தத் துவங்கிய துளசி சைத்தன்யா இன்று காலை 9.25 மணிக்குத் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரை ஏறினார். மிகக் குறைந்த நேரத்தில் பாக்நீரிணையை நீந்திக் கடந்து வந்த தலைமை காவலர் துளசி சைத்தன்யாவை மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ், மீன் துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் மற்றும் மதுரை மாவட்ட நீச்சல் கழகத்தினர், சைத்தன்யாவின் குடும்பத்தினர், பெற்றோர்கள், தனுஷ்கோடிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் வரவேற்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சாதனைப் படைத்த சைதன்யா கூறுகையில் ''எனது 9 வயதில் நீச்சல் ஆர்வம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டேன். தொடர்ந்து பயிற்சி செய்து மாநில, தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றேன். 2011-ல் நடந்த போலீஸ் தேர்வில் சிறந்த பங்களிப்பிற்காக தேர்வானேன். இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தில் நடந்த உலக போலீஸார் போட்டியில் பங்கேற்று 3 வெண்கல பதக்கங்கள் பெற்றேன். 

 

 தற்போது பயிற்சியாளர் கணேஷ் அளித்த பயிற்சியின் மூலம் இந்தச் சாதனையை படைத்துள்ளேன். இதைவிடக் குறைந்த நேரத்தில் இந்தத் தூரத்தை கடக்க எண்ணினேன். ஆனால் அதிகமான நீரோட்டம் மற்றும் ஜெல்லி மீன்கள் இடையூறினால் அது நிறைவேறவில்லை. இதனைத் தொடர்ந்து உலகில் உள்ள முக்கிய கால்வாய்களை நீந்தி சாதனை படைக்க ஆர்வமாக உள்ளேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு, இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் வழிகாட்டியாக உதவிய கமாண்டர் உன்னி, நிகழ்ச்சி மேலாளர் முரளி மற்றும் நண்பர்கள், குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/120174-the-ap-police-record-swim-across-the-palk-strait-area-in-825-hours.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.