Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலைக் காப்­பாற்­றுமா கூட்­ட­மைப்பு?

Featured Replies

ரணிலைக் காப்­பாற்­றுமா கூட்­ட­மைப்பு?

samakalamraniltna25-03-2018-0f3b5543c2da0079be0acf637d2643294f2c7874.jpg

 

என்.கண்ணன்

 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு கூட்டு எதி­ரணி சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம், இன்­னொரு அர­சியல் குழப்­பத்­துக்கு பிள்­ளையார் சுழி போடப்­பட்­டி­ருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி வெற்றி பெற்ற பின்னர், ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான ஒரு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

முதலில் கூட்டு ஆட்­சியைக் கவிழ்க்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தோற்­றுப்­போக, கடை­சியில் அது பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யாக மாறி­யது.

கண்டி வன்­மு­றை­களை அடுத்து அந்த முயற்­சியும் கைவி­டப்­பட்­டது.

இப்­போது மீண்டும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ரணை விவ­காரம் இலங்கை அர­சி­யலில் சூட்டைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தவிர, கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த 51 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைந்து கையெ­ழுத்­திட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை, சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைத் தோற்­க­டிப்­ப­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது என்று ஐ.தே.க. தீர்­மா­னித்­துள்­ளது.

இந்தப் பிரே­ர­ணையை வரும் ஏப்ரல் 4ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுத்துக் கொண்டு, வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வாக்­கெ­டுப்பில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காப்­பாற்­றப்­ப­டு­வாரா, அல்­லது கவிழ்க்­கப்­ப­டு­வாரா என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

ஐ.தே.கவினர், இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை இல­கு­வாகத் தோற்­க­டித்து விடலாம் என்று நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்­தாலும், உள்­ளூர அவர்­க­ளுக்­குள்­ளேயும் பதற்றம் இருக்கத் தான் செய்­கி­றது.

ஏனென்றால், ஐ.தே.கவுக்கு, என்று பாரா­ளு­மன்­றத்தில் தனிப் பெரும்­பான்மை பலம் கிடை­யாது. அதை­விட, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையை எதிர்க்­கின்ற சிலரும், ஐ.தே.கவுக்குள் இருக்­கின்­றனர்.

எனவே, இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து ஐ.தே.க. அலட்­சி­ய­மா­கவோ அலட்டிக் கொள்­ளா­மலோ இருந்து விட முடி­யாது. வாக்­கெ­டுப்பு முடியும் வரை நிச்­ச­ய­மற்ற நிலை ஒன்று இருக்­கவே செய்யும்.

பாரா­ளு­மன்­றத்தில், இப்­போது ஐ.தே.க.வுக்கும் அதன் கூட்­டா­ளி­க­ளுக்கும், மொத்தம் 107 ஆச­னங்கள் இருக்­கின்­றன. எனினும், விஜே­தாச ராஜபக் ஷவும், அத்­து­ர­லியே ரத்­தன தேரரும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளிப்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்­சி­களில் விஜே­தாச ராஜபக் ஷவே முனைப்­புடன் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் உள்­ளன.

எனவே, இப்­போ­தைய நிலையில், ஐ.தே.க. தரப்­புக்கு 105 ஆச­னங்கள் தான் இருக்­கின்­றன. இதிலும், எத்­தனை பேர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக வாக்­க­ளிக்கப் போகி­றார்கள் என்ற சந்­தேகம் இருக்­கி­றது.

ஏனென்றால், ஏற்­க­னவே பாலித ரங்க பண்­டார, வசந்த சேன­நா­யக்க உள்­ளிட்ட பலர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கி­றார்கள்.

அவர்­களும், இன்னும் சிலரும் கூட்டு எதி­ர­ணி­யுடன் கைகோர்த்துக் கொண்டு, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்கும் முயற்­சி­களில் பங்­கா­ளி­க­ளாக மாறக் கூடிய வாய்ப்­பு­களை நிரா­க­ரிப்­ப­தற்­கில்லை.

இதனால், ஐ.தே.க வைப் பொறுத்­த­வ­ரையில், அறுதிப் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்கு, நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைத் தோற்­க­டிப்­ப­தற்கு, ஏனைய கட்­சி­களின் உத­வியை நாட வேண்­டிய தேவை நிச்­ச­ய­மாக உள்­ளது.

இந்தக் கட்­டத்தில் கூட்டு அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்­லது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நிலைப்­பாடு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தா­கி­றது.

எப்­ப­டி­யா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் உள்ள 44 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வையும் பெற்றுக் கொள்­வதில், கூட்டு எதி­ரணி உறு­தி­யாக இருக்­கி­றது. அதற்­காக பல்­வேறு மட்­டங்­களில் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டன. பேரங்கள் பேசப்­பட்­டன. தூதுகள் அனுப்­பப்­பட்­டன.

கூட்டு எதி­ரணி சமர்ப்­பித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் கூட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையெ­ழுத்­திட்­டி­ருக்­கி­றார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள், இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கப் போவ­தாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறி­விக்­க­வுள்­ள­தாக, அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கூறி­யி­ருந்தார்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கட்­டுப்­பாட்டில் உள்ள- பிரே­ர­ணையில் கையெ­ழுத்­திட்­ட­வர்கள் போக, எஞ்­சி­யுள்ள 40 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், நினைத்தால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை இந்தக் கண்­டத்தில் இருந்து இல­கு­வாக காப்­பாற்றி விடலாம்.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள ஒரு பகுதி தலை­வர்கள், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையின் கீழ் அர­சாங்­கத்தில் இருக்க விருப்பம் இல்லை. அவர்­களில் பல­ருக்கும் மஹிந்த அணி­யுடன் இர­க­சிய ‘டீல்’ இருக்­கி­றது.

எனவே அவர்கள் ஆட்சிக் கவிழ்ப்­புக்குத் துணை போவ­தற்குத் தயா­ரா­கவே இருக்­கி­றார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக இருப்­பதால் தான் இவர்கள் அவ­ருடன் ஒட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, அவர் மீதான பற்­றி­னாலோ பாசத்­தி­னாலோ அல்ல.

எனவே, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால், இவர்­களைத் தடுக்க முடி­யாது. ஆனாலும், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கும் விசு­வா­ச­மான சில­ரேனும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இருக்­கி­றார்கள். அவர்கள் மஹிந்த ராஜபக் ஷவைக் கடு­மை­யாக எதிர்ப்­ப­வர்கள்.

அத்­த­கை­ய­தொரு அணி, நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைத் தோற்­க­டிக்­கவும், தேவைப்­பட்டால், ஐ.தே.க.வுடன் இணைந்து கொள்­ளவும் தயா­ராக இருக்­கி­றது.

எனவே, கூட்டு அர­சாங்­கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள், ஆத­ர­வ­ளித்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் இல­கு­வாக தப்­பித்துக் கொள்­ளலாம்.

அதே­வேளை, அவர்கள் எதிர்த்து வாக்­க­ளிப்­பதால் மாத்­திரம், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பத­விக்கு ஆப்பு வைத்து விட முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷ அணி­யுடன், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் இணைந்தால் கூட, 96 பேர் தான் இருப்பர்.

இந்தக் கட்­டத்தில், அர­சாங்­கத்­துக்கு வெளியே இருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஜே.வி.பி.யும் தான் தீர்­மா­ன­க­ர­மான சக்­தி­க­ளாக இருக்கும்.

ஜே.வி.பி. இன்­னமும் தனது முடிவை அறி­விக்­க­வில்லை. எனினும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­களோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களோ இல்­லாமல் ஜே.வி.பி.யால் கூட தன்­னிடம் உள்ள 6 உறுப்­பி­னர்­களைக் கொண்டு, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பத­வியைக் காப்­பாற்றி விட முடி­யாது.

16 ஆச­னங்­களைக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால், இதனை மிக இல­கு­வாகச் செய்ய முடியும். கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள சிவ­சக்தி ஆனந்தன் தவிர மற்­றைய 15 உறுப்­பி­னர்­களும், ஆத­ரவு அளித்தால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வேறு எந்தக் கட்­சி­யி­னதும் ஆத­ரவு இன்­றியே தப்­பித்துக் கொள்வார்.

சிவ­சக்தி ஆனந்தன் மாத்­திரம், கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக வாக்­க­ளிக்கக் கூடும்.

ஏற்­க­னவே கூட்­ட­மைப்பின் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கவிழ்க்க தம்­முடன் இணைந்து கொள்ள விருப்பம் வெளி­யிட்­டி­ருப்­ப­தாக கூட்டு எதி­ரணி கூறி­யி­ருந்­தது நினை­வி­ருக்­கலாம்.

சிவ­சக்தி ஆனந்தன், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காப்­பாற்ற முனை­ய­மாட்டார் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அவர், அர­சாங்­கத்தைக் கடு­மை­யாக எதிர்த்து வரு­கிறார். அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சியல் செய்­வ­தாக கூட்­ட­மைப்புத் தலை­மையை விமர்­சித்து வரு­கிறார். இந்த நிலையில் அவர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்க முடி­யாது. அப்­படி ஆத­ரித்தால், அவர் இரட்­டை­வேடம் போடு­வது அம்­ப­ல­மா­கி­விடும்.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காப்­பாற்றக் கூடிய நிலையில் இருந்­தாலும், அதனைச் செய்­வது சுல­ப­மா­ன­தல்ல.

ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சியல் நடத்­து­வ­தாக கடு­மை­யான குற்­றச்­சாட்­டுகள் தமிழ் மக்கள் மத்­தியில் உள்­ளன. அர­சாங்­கத்­துடன் பேரம் பேசு­வ­தில்லை, என்ற குற்­றச்­சாட்டும் உள்­ளது.

இந்தக் குற்­றச்­சாட்­டுகள் மேலோங்­கி­யி­ருந்த நிலையில், உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வேறு, கூட்­ட­மைப்­புக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. எனவே, எடுத்த எடுப்­பி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் காப்­பாற்றும் எந்த முடி­வையும் கூட்­ட­மைப்­பினால் எடுக்க முடி­யாது.

அத்­த­கைய முடிவை எடுக்க முற்­பட்டால் கூட அதற்கு உள்­ளக எதிர்ப்­புகள் கடு­மை­யாக இருக்கும்.

ஆனாலும், கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி நீக்­கப்­பட்டால், அடுத்து அமை­யப்­போகும் அர­சாங்கம் எத்­த­கை­ய­தாக இருக்கும் என்­ப­தையும் யோசிக்­காமல் இருக்க முடி­யாது.

கூட்டு எதி­ர­ணியின் ஆத­ரவு பெற்ற ஒரு அர­சாங்கம் ஆட்­சிக்கு வரக்­கூ­டிய நிலை ஏற்­பட்டால், தற்­போது தமிழ் மக்கள் அனு­ப­விக்­கின்ற ஓர­ளவு ஜன­நா­யக இடை­வெ­ளி­க­ளையும் கூட, இழக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க, மற்றும் பொறுப்­புக்­கூறல் சார்ந்த எல்லா நடவடிக்கைகளும் தடம்புரண்டு விடக் கூடிய சூழலும் உருவாகலாம்.

எனவே, இந்த விடயத்தில் முடிவை எடுப்பதற்கு முன்னர், கூட்டமைப்பு அதிகம் யோசிக்க வேண்டியிருக்கும், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றும் முடிவு ஒன்றை எடுக்க கூட்டமைப்பு முற்படுமானால் அது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடும்.

அதனை கூட்டமைப்பு எதிர்கொள்வதற்கு ஒரு வழி உள்ளது. பேரம் பேசும் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சினைகளில் சிலவற்றை தீர்த்துக் கொள்வதற்கு முற்படலாம்.

கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதன் மூலம் நீக்கப்படும். அதனைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துக் கொள்ள முடியும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, பேரம் பேசும் பலத்தை கூட்டமைப்பு எந்தளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது- அத்தகைய பேரம் பேசலுக்கான வாய்ப்பை, 2015ஆம் ஆண்டைப் போல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் செய்து விடக்கூடுமா என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.