Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக ஊட­கங்கள் மீதான தடை முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலை மூடி மறைக்க உத­வி­யதா?

Featured Replies

சமூக ஊட­கங்கள் மீதான தடை முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலை மூடி மறைக்க உத­வி­யதா?

samakalamsocialmedia25-03-2018-4b1e8461b58442aeeae2df52f595b7ea2302ec3c.jpg

 

 

 

எந்­த­வி­த­மான உத­வியும் அற்ற நிலையில் இருந்த அப்­பாவி முஸ்­லிம்கள் மீது நன்­றாக திட்­ட­மி­டப்­பட்டு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட இன­வாத தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவர்கள் முஸ்­லிம்­க­ளது வீடு­களை உடைத்­தார்கள். பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் தீ வைத்­தார்கள். முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை எரித்­தார்கள். புனித குர்ஆன் பிர­தி­களை தீயிட்டுக் கொளுத்­தி­னார்கள். முடிந்­த­வ­ரையில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை சூறை­யாடி காலி செய்த பின்பே அவற்­றுக்கு தீ வைத்­தார்கள். ஜனா­தி­ப­தியும், பிர­தமரும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்­லிம்­களைக் காப்­பாற்றத் தவ­றி­விட்­டனர். பாது­காப்பு வழங்க வேண்­டிய பொலி­ஸாரும், விஷேட அதி­ரடி படை­யி­னரும் காடை­யர்­க­ளுக்கு துணை நின்று சேதங்­களை அதி­க­மாக்­கினர்.

இப்­போது முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தின் மீதும் பாது­காப்பு படைகள் மீதும் பூரண நம்­பிக்கை இழந்த நிலையில் உள்­ளனர்.

இந்­நி­லையில், சமூக ஊட­கங்கள் மீது விதிக்­கப்­பட்ட தடை­யா­னது, அர­சாங்கம் கண்­டி­யிலும் அதனை அண்­மித்த ஏனைய பகு­தி­க­ளிலும் இன­வா­தி­க­ளிடம் இருந்து அப்­பாவி முஸ்­லிம்­களை பாது­காக்கத் தவ­றி­விட்­டது என்ற மாபெரும் குற்­றச்­சாட்டை மூடி மறைக்க உத­வி­யுள்­ளது.

இன­வாத கூலிப்­ப­டை­யி­னரின் தாக்­குதல் திட்டம் பற்றி முன் கூட்­டியே புல­னாய்வுத் தக­வல்கள் கிடைத்த போதிலும் அதனை தடுத்து நிறுத்த அர­சாங்கம் எந்த ஒரு முன்­னேற்­பாட்டு நட­வ­டிக்­கை­யையும் எடுக்கவில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு உள்­நாட்டு, வெளி­நாட்டு சக்­தி­க­ளுக்­காக பணி­பு­ரியும் இந்த இன­வாத கூலிப்­ப­டை­யினர் திகன, தெல்­தெ­னிய, அக்கு­றணை மற்றும் அவற்றை அண்­மித்த மலை­யகப் பிர­தேசங்­களில் கோடிக்­க­ணக்­கான ரூபாய் மதிப்­புள்ள முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை நாசப்­ப­டுத்தி உள்­ளனர். பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் இர­வோடு இர­வாக தமது வாழ்­வா­தா­ரங்­களை இழந்து நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளனர்.

திகன சம்­ப­வங்கள் இடம்­பெற்ற முதல்­வார காலப்­ப­கு­தியில் அச்சு ஊட­கங்கள் அந்தச் சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்­களை வழங்­கு­வதில் பிர­தான பங்கு வகித்­தன. முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட சொத்து இழப்­புக்­களை அவர்கள் விரி­வாக வெளி­யிட்­டனர். ஆனால், இரண்­டா­வது வாரம் முதல் இந்த ஊட­கங்கள் தமது போக்கில் மாற்­றங்­களை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கின. பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் தீவிரப் போக்கு உள்­ள­வர்கள் எனக் குற்றம் சாட்டி இன­வா­தி­களின் வெறித்­த­னத்தை மூடி மறைக்கும் முயற்­சி­களை மேற்­கொண்­டன.

இரண்டாம் வார இறு­தியில் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் முஸ்­லிம்­களை முற்­றாகப் புறந்­தள்ளி அவர்­களை மறந்தே போய்­விட்­டன. முஸ்­லிம்கள் மீது இந்தத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட போது அவர்கள் தங்­க­ளையோ தமது உ.ைட­மை­க­ளையோ பாது­காத்துக் கொள்ள எவ்­வித தயார் நிலை­யிலும் இருக்­க­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் அளுத்­கமை, பேரு­வளை மற்றும் தர்கா நகர் பகு­தி­களில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­போது உள்ளூர் ஊட­கங்கள் அது பற்­றிய செய்­தி­களை வெளி­யிட முற்­றாகத் தவறி இருந்­தன. சர்­வ­தேச ஊட­கங்கள் இது பற்றி விரி­வான தக­வல்­களைத் தரத் தொடங்­கி­யதும் உள்ளூர் ஊட­கங்கள் விழித்துக் கொண்­டன. சர்­வ­தேச ஊட­கங்கள் வெளி­யிட்ட தக­வல்­களால் நாட்டின் நற்­பெ­ய­ருக்கு சர்­வ­தேச மட்­டத்தில் பெரும் களங்கம் ஏற்­பட்­டது.

எவ்­வா­றேனும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திக­னயில் கல­வ­ரங்கள் இடம்­பெற்ற போது உள்ளூர் ஊட­கங்கள் தமது முன்­னைய தவறை உணர்ந்து செயற்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. சர்­வ­தேச ஊட­கங்கள் அண்­மைய கல­வ­ரங்கள் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட்­ட­போது பௌத்த மதத்­துக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் தீவி­ர­வா­தத்­தோடு எவ்­வித தொடர்பும் இல்­லாத போதும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் பௌத்த தீவி­ர­வா­தி­களால் இழைக்­கப்­பட்ட குற்றங்கள் என்றே குறிப்­பிட்­டன.

என்­னு­டைய நண்பர் ஒருவர் வளை­குடா நாடொன்றில் இருந்து என்­னோடு தொடர்பு கொண்டு இது­பற்றி பேசும் போது, ‘எப்­போதும் சிறு­பான்­மை­யி­னரைத் தாக்கிக் கொண்­டி­ருக்கும் இந்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு என்ன நடந்­துள்­ளது?’ என்று கேட்டார். இது முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் இடை­யி­லான பிரச்­சினை அல்ல. சில இடங்­களில் பல தினங்­க­ளாக முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் இருந்து பௌத்த மத­கு­ருமார் அவற்றை காப்­பாற்றி உள்­ளனர் என்று நான் அவ­ருக்கு விளக்கம் அளித்தேன்.

‘அப்­ப­டி­யானால் அர­சாங்கம் என்ன செய்­கின்­றது?’ என்று அவர் அடுத்த வினாவை தொடுத்தார். அர­சாங்கம் ஏன் இதை தடுத்து நிறுத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி அவர்­களை தண்­டித்து சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை நாட்ட முடி­யாது? என்று அவர் கேள்­வி­களை நீட்­டினார். ஆனால், இதற்கு நான் என்ன பதில் சொல்­வது என்­பது தான் இப்­போது முக்­கிய கேள்வி. நல்­லாட்சி என்ற பெயரில் நடக்கும் இந்த வெட்கக் கேடான விட­யங்கள் பற்றி நாம் எப்­படி மற்­ற­வர்­க­ளுக்கு விளக்கம் அளிப்­பது?

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இடம்­பெற்று வரும் தாக்­கு­தல்கள் மற்றும் சதித் திட்­டங்கள் பற்றி அர­சாங்கம் தனது முன்­னேற்­ற­க­ர­மான புல­னாய்வு வலை­ய­மைப்­புக்கள் ஊடாக ஏற்­க­னவே தக­வல்­களை அறிந்து வைத்­துள்­ளது. ஆனால், அதை தடுப்­ப­தற்­கான எந்த நடவ­டிக்­கை­யையும் எடுக்­காமல் இன­வா­தி­க­ளுக்கு பச்சைக்கொடி காட்­டப்­பட்டு வந்­துள்­ளது. அவர்கள் சட்ட ஒழுங்கை மீற தொடர்ந்து அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சம்­ப­வங்கள் இடம்­பெறத் தொடங்­கி­யது முதல் ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் பல தூதுக் குழுக்கள் சந்­தித்து இவற்றை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பல தட­வைகள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளன.

ஆனால், இந்த வேண்­டு­கோள்கள் எல்­லாமே செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே காணப்­பட்­டன. அர­சாங்கம் வேண்­டு­மென்றே வன்­மு­றை­களைத் தடுக்கத் தவ­றி­விட்­டதா? கடந்த ஆண்டில் இவ்­வா­றான சில சம்­ப­வங்கள் இடம்­பெற்றும் கூட இன்னும் அது தொடர்­பாக எவ­ருக்கு எதி­ரா­கவும் உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்கத் தவ­றி­யுள்­ளது ஏன்?

காடை­யர்கள் அர­சாங்­கத்தின் பாதுகாப்பில் உள்­ளனர். அப்­பாவி பொது மக்கள் அவர்­க­ளுக்கு அஞ்சி வாழு­கின்­றனர். முன்­னைய சம்­ப­வங்­களில் தொடர்பு உள்­ள­வர்­க­ளுக்கு எதி­ராக சரி­யான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்தால் நிலை­மை­களை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கலாம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தொடர் வன்­மு­றை­களைத் தடுத்­தி­ருக்­கலாம்.

அர­சாங்கம் தற்­போது எதிர் கொண்­டுள்ள நெருக்­கடி நிலை­களில் இருந்து மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கான ஒரு மூலோ­பா­ய­மா­கவே இவ்­வா­றான வன்­மு­றைகள் தூண்டி விடப்­ப­டு­வ­தாக பல்­வேறு தரப்­பி­னரும் குற்றம் சாட்டி உள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்றில் அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற அல்­லது இருக்­கின்ற அதி­கா­ரத்தை தக்க வைத்துக் கொள்ள நடத்தி வரும் தந்­தி­ரோ­பா­யமே இது­வாகும்.

காடை­யர்கள் பஸ் வண்­டி­க­ளிலும், வேன்­க­ளிலும், லொறி­க­ளிலும், முச்­சக்­கர வண்­டி­க­ளிலும், மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் அழைத்து வரப்­பட்­டுள்­ளனர். மூடி­யி­ருந்த கடை­களை அவர்கள் முதலில் சுத்­தி­யல்கள் கொண்டும் ஏனைய கன­ரக உப­க­ர­ணங்கள் கொண்டும் உடைத்­தனர். பின்னர் அவற்றை முடி­யு­மா­ன­வ­ரைக்கும் காலி செய்­தனர். அதன் பிறகு அவற்றை தீ வைத்துக் கொளுத்­தினர். இந்தச் சம்­ப­வங்­களை முஸ்லிம் வர்த்­த­கர்கள் பலர் நேரில் கண்­டுள்­ளனர். இருந்­தாலும் தடுப்­ப­தற்­கான எந்த வழியும் அவர்­க­ளுக்கு இருக்­க­வில்லை. கைகளைக் கட்டிக் கொண்டு மறை­வாக நின்று பார்த்­த­வாறு கண்ணீர் விட்டு அழு­வதைத் தவிர வேறு எதுவும் அவர்­களால் செய்ய முடி­ய­வில்லை. உணவுப் பொருட்கள் விற்­கப்­படும் கடை­களில் இருந்து பொருட்­களை சூறை­யாடி அந்த இடத்­தி­லேயே காடை­யர்கள் பகிர்ந்து உண்டும் உள்­ளனர்.

சில இடங்­களில் சிங்­கள அய­ல­வர்கள் தாக்­குதல் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஏற்­க­னவே முஸ்­லிம்­க­ளுக்கு தக­வல்­களை வழங்கி உள்­ளனர். அவ்­வா­றான இடங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் அண்­மையில் உள்ள காடு­க­ளுக்குள் தமது குடும்­பங்­க­ளோடு தஞ்சம் புகுந்­துள்­ளனர். சில தினங்­களை அவர்கள் உணவோ தண்­ணீரோ இன்றி கழிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அவர்கள் காடு­க­ளுக்குள் பதுங்கி இருந்த போது காடை­யர்கள் வீடு­களை உடைத்து உள்ளே புகுந்து தள­பா­டங்­க­ளையும், ஏனைய இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­க­ளையும் துவம்சம் செய்­துள்­ளனர்.

முஸ்­லிம்கள் பொலி­ஸா­ருடன் தொடர்பு கொண்டு நிலை­மை­களை விளக்கி உள்­ளனர். உட­ன­டி­யாக வரு­கிறோம் என்று பதில் அளித்த பொலிஸார் காடை­யர்கள் தமது கைங்­க­ரி­யங்­களை நிறை­வேற்றி விட்டுச் சென்ற பிறகே அங்கு வந்­துள்­ளனர். மிகவும் கௌர­வத்­தோடு வாழ்ந்த முஸ்­லிம்கள் இப்­போது மற்­ற­வர்­க­ளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

   மற்­றொரு சம்­பவம் முஸ்­லிம்கள் மீது விஷேட அதி­ரடிப் படை­யினர் நடத்­திய மூர்க்­கத்­த­ன­மான தாக்­கு­த­லாகும். முஸ்­லிம்கள் மீது மிக மோச­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பிர­யோ­கித்­த­வாறே இரண்டு முஸ்­லிம்கள் மீது மிக மோச­மான தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

மற்றுமொரு முஸ்லிம் நபர் ஒருவர் வழங்­கி­யுள்ள சாட்­சி­யத்தின் படி அதி­ர­டிப்­ப­டை­யினர் தனது வீட்­டுக்குள் புகுந்த போது தானும் தனது நண்­பர்கள் சிலரும் அங்கு இருந்­த­தா­கவும் அவர்கள் பெண்­க­ளையும் சிறு­வர்­க­ளையும் அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார். வீட்டு மாடியில் இருந்து தானும் தனது நண்­பர்­களும் அதி­ரடிப் படை­யி­னரால் தர­த­ர­வென இழுத்துச் செல்­லப்­பட்­ட­தா­கவும் பின்னர் மோச­மான முறையில் தங்­களைத் தாக்கி சிங்­களக் கடை­களை சூறை­யாட தாங்கள் திட்­ட­மிட்­ட­தாக ஒப்புக் கொள்­ளு­மாறு தங்­களை துன்­பு­றுத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த இளைஞர் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு அடுத்த நாள் பிணையில் விடு­த­லை­யாகி கண்டி வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

முஸ்­லிம்கள் இந்தச் சம்­ப­வத்தில் இன­வாத தாக்­கு­த­லுக்கு ஆளா­கி­யி­ருந்த நிலை­யிலும் கூட அவர்கள் மீது தீவி­ர­வா­திகள் என பட்டம் சூட்டி புது­வ­கை­யான குற்­றச்­சாட்டை ஊட­கங்கள் சில முன்­வைத்­தன. ஜே.வி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­னா­யக்க சிங்­க­ள­வர்­க­ளி­னதும், முஸ்­லிம்­க­ளி­னதும் தீவி­ர­வாதத்தை முடி­வுக்கு கொண்டு வர வேண்டும் என்று கருத்து வெளி­யிட்­டதைத் தொடர்ந்தே இந்தப் பிர­சா­ரமும் ஆரம்­ப­மா­னது.

அது முதல் முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்தி­ரிக்கும் பிர­சா­ரங்­களும் தொடங்­கி­யுள்­ளன. எந்த ஒரு முஸ்­லி­மா­வது அப்­பாவி மக்கள் மீது வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து விட்டு தீவி­ர­வாத செயற்­பாட்டில் ஈடு­பட்­ட­மைக்­கான ஒரு சாட்­சி­யை­யா­வது அல்­லது தட­யத்­தை­யா­வது, ஆதா­ரத்­தை­யா­வது முன்­வைக்க முடி­யுமா? அல்­லது அவ்­வா­றான காரி­யத்தில் ஈடு­பட்ட ஒரு நப­ரை­யா­வது இவர்­களால் அடை­யாளம் காட்ட முடி­யுமா? முஸ்­லிம்­களை தீவி­ர­வா­திகள் எனக் குற்றம் சாட்டும் எவ­ரா­வது இவ்­வா­றான ஆதா­ரங்­களை முன்­வைத்து அதை நிரூ­பிக்க முடி­யுமா? எந்த ஒரு முஸ்­லிமும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சொந்­த­மான எந்த ஒரு விகா­ரை­யையும் சேதப்­ப­டுத்தவில்லை. சிங்­க­ள­வர்­களின் கடை­க­ளுக்கு தீ மூட்­ட­வில்லை, சிங்­க­ள­வர்­களின் வியா­பார மற்றும் கைத்­தொழில் நிலை­யங்­களைப் பட்டப் பகலில் பாது­காப்பு படை­யி­னரின் துணை­யோடு; சூறை­யா­ட­வில்லை. சிங்­க­ள­வர்­களின் வீடு­க­ளையும் குடி­யி­ருப்­புக்­க­ளையும் கிரா­மங்­க­ளையும் எந்த ஒரு முஸ்­லிமும் தீயிட்டுக் கொளுத்­த­வில்லை. இந்த நாட்டு முஸ்­லிம்கள் சமா­தா­ன­மான முறையில் வாழும் விருப்­பத்­தோடு மாறி மாறி பத­விக்கு வரும் அர­சுகள் தமது உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் பாது­காக்க வேண்டும் என்றே விரும்­பி­னார்கள்.

இந்த இன­வாத கூலிப்­ப­டை­யி­ன­ருக்கு இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளோடு சக­ஜ­மாக வாழ முடி­யா­விட்டால் அவர்­க­ளுக்கு வேறு எவ­ரோ­டுமே வாழ முடி­யாது.

மறு­பு­றத்தில் இத்­த­கைய தாக்­கு­தல்கள் கார­ண­மாக இந்த நாட்­டுக்கும் சிங்­கள இனத்­துக்கும் சர்­வ­தேச மட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள அப­கீர்த்தி பற்றி கொஞ்­ச­மா­வது இவர்­க­ளுக்குத் தெரி­யுமா?

அண்­மைய சம்­ப­வங்கள் நாட்­டுக்கு சர்­வ­தேச மட்­டத்தில் மிக மோச­மான கெட்ட பெயரை ஏற்­ப­டுத்தி உள்­ளன. இதை சரி­செய்ய இன்னும் பல வரு­டங்கள் செல்­லலாம். இந்த நாட்டுக்கு வருகை தர இருந்த உல்­லாசப் பய­ணிகள் பலர் தமது விஜ­யங்­களை இரத்துச் செய்­துள்­ளனர். பல நாடுகள் இலங்­கைக்கு செல்ல வேண்டாம் என தமது பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுத்­துள்­ளன. இந்த நாட்டில் அர­சியல் ரீதி­யான கொந்­த­ளிப்பும் பொரு­ளா­தார சரிவும் சம­கா­லத்தில் இடம்­பெற்று வரும் நிலையில், இவ்­வா­றான அநா­க­ரி­க­மான செயல்கள் முத­லீட்­டா­ளர்­களை இங்கு வர­வி­டாமல் தடுக்கும். இது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய விளைவை ஏற்­ப­டுத்தும்.

அர­சி­யல்­வா­திகள் இந்த நாட்டின் மீது அக்­கறை கொண்­ட­வர்கள் அல்ல என்­ப­தையே இது போன்ற சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. அவர்கள் தங்­க­ளது அதி­கா­ரத்­தையும் சொகு­சு­க­ளையும் தக்க வைத்துக் கொள்­வதில் தான் பெரும் ஆர்வம் கொண்­டுள்­ளனர்.

இந்த நாட்டின் சிங்­கள மற்றும் தமிழ் இனங்களைப் போலவே முஸ்­லிம்­களும் ஆயிரம் ஆண்டு­க­ளுக்கு முன்பே இங்கு குடி­யே­றி­ய­வர்கள். 1948 சுதந்­தி­ரத்­துக்குப் பின் ஆட்­சிக்கு வந்த சிங்­கள ஆதிக்கம் கொண்ட அர­சுகள் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளையும் சிறப்புக்களையும் பல விடயங்களில் தொடர்ந்து பறித்து வந்துள்ளன.

அரச துறையில், அரச துணை பிரிவுகளில் மற்றும் ஆயுதப் படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. முறையான கல்வி வாய்ப்புக்களும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. வெளியில் தெரியும் மாயைக்கு முற்றிலும் முரணாக முஸ்லிம் சமூகம் வறுமையால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே காணப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவே மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த நிலைமைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மிஞ்சியது வர்த்தகமும், வெளிநாட்டு வேைல வாய்ப்பும் மட்டும் தான். இப்போது இனவாதிகள் அவர்களின் கடைகளைத் தாக்கி அவர்களின் பல வருட உழைப்பால் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக முயற்சிகளை தீக்கிரையாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக் குறி வைத்துள்ளனர்.

வெகு விரைவில் இந்த இனவாத கும்பல் சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிட்டால் இலங்கை ஒரு தோற்றுப் போன தேசமாக சர்வதேச அரங்கில் சித்திரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த விடயங்களைக் கடுமையாகக் கையாளும் ஆற்றல் இந்த அரசுக்கு இல்லை என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். இதற்கு காரணம் 2015 ஜனவரி எட்டாம் திகதி இந்த அரசு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டது முதல் இவ்வாறான இனவாத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், இனவாதிகளும் ஊழல் பேர்வழிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அரசு வழங்கி வந்த வாக்குறுதிகள் இதுவரை காற்றில் கரைந்து போய் உள்ளனவே தவிர எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.