Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கின் தீர்வு யோசனை தயாராக இன்னும் 2 மாதங்கள் பிடிக்குமாம் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் விதாரண இந்தியா புறப்படமுன்னர் தகவல்

Featured Replies

கொழும்பு, மார்ச் 23

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தென்னிலங்கைத் தரப்பினால் முன் வைக்கப்படத் திட்டமிடப்பட்டிருக்கும் யோசனையைத் தயாரித்து இறுதி செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் பிடிக்கும்.

மேற்படி தீர்வுத்திட்ட யோசனையைத் தயாரிப்பதற்காக அமைக் கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

இவ்வார இறுதியில் மூன்று நாள் பயண மாகப் புதுடில்லிக்குப் புறப்படு முன்னர் தாம் வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

தாம் ஆட்சிக்கு வந்தால், இனப்பிரச் சினைத்தீர்வு தொடர்பாக தென்னிலங்கை யில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்து வதற்கான பேச்சுகளை மூன்று மாதங்களுக் குள் பூர்த்தி செய்வார் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்தே 2005நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து பதினாறு மாதங்கள் கடந்துவிட்டன. தெற்கில் இணக் கத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுகள் மாநாடுகள் கலந்துரையாடல்கள் இன் னும் பூர்த்தியாகவில்லை. அவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த டிசம்பரில் இந்திய வெளிவிவ கார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்து விரிவாகப் பேசியிருந் தார். அப்போது தென்னிலங்கை பிரேரிக் கும் தீர்வு யோசனையை தமது அரசு இரண்டு மாதங்களுக்குள் அதாவது பெப்ரவரி இறு திக்குள் தயார் செய்துவிடும் என ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளி விவகார அமைச்சருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார் எனக் கூறப்படுகின்றது.

இப்போது பெப்ரவரி தாண்டி மார்ச் இறுதி வந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதங்கள் தேவை என இப்போது அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் கூறியிருக்கின்றார்.

அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதி கள் குழுவின் தீர்வு யோசனை பெப்ரவரி யில் தயாராகியிருக்கவேண்டும், ஆனால் ஆளும் ஸ்ரீல.சு.கட்சி தனது யோசனைக ளைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் அதுவும் தாமதமாகி விட் டது என மேற்படி செவ்வியில் திஸ்ஸ விதாரண தெரிவித்திருக்கின்றார்.

""ஸ்ரீல. சு.கட்சியின் யோசனைகள் அடுத்தவார முற்பகுதியில் எனது கைக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். பின்னர் ஜாதிக ஹெல உறுமய, இ. தொ. கா. ஆகியவற்றின் திருத்தங்களும் தொட ரும் என எதிர்பார்க்கிறேன்.

""அதன் பின்பு திருத்தங்கள் ஒவ்வொன் றும், ஒன்றன்பின் ஒன்றாக ஷரத்துக்க ளாக பரிசீலிக்கப்படும்.

""இணக்கப்பாட்டுக்கு வரும் இந்த முயற்சியில் 13 கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அவை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வரும் என்பதை நான் கோடி காட்டுகிறேன்.' என்று விதாரண மேலும் தெரிவித்தார்.

http://www.uthayan.com/pages/news/today/02.htm

  • தொடங்கியவர்

சுமார் 2வாரங்களிற்க்கு முதல் 2வாரங்களில் தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று 1 செய்தி வந்தது, எப்போது 2மாதம் என்கிறார்கள்.................... உலகத்தை ஏமற்ற நல்ல வழிகள்

இந்தத் தீர்வுத்திட்டத்தில் புலிகளினுடனான போர்த்திட்டங்களும் அடங்குமா ?

  • தொடங்கியவர்

இந்தத் தீர்வுத்திட்டத்தில் புலிகளினுடனான போர்த்திட்டங்களும் அடங்குமா ?

இருந்தாலும் அதை சர்வதேசத்திடம் சமர்பிக்க முடியாது மகிந்து மந்தியால்

என்ன தீர்வு திட்டத்திற்கு 3 மாதம் பிடிக்குமா?

இல்லை இல்லை! இன்னும் 3 மாதத்திற்குள் எதை எதையோ பிடித்து விடலாம் என்று சிங்களம் பகற்கனவு காண்கிறது

என்ன தீர்வு திட்டத்திற்கு 3 மாதம் பிடிக்குமா?

இல்லை இல்லை! இன்னும் 3 மாதத்திற்குள் எதை எதையோ பிடித்து விடலாம் என்று சிங்களம் பகற்கனவு காண்கிறது

உண்மையும் அதுதான் ஆனால் யார் யார் எந்த இடத்தை காப்பாற்ற வேண்டம் என்பது அவர் அவர் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தது இருப்பினும் தமிழர் தரப்பு விடுதலைக்காக வித்திட்ட அமைப்பு விடுதலையை வரித்து கட்டி வாழும் தரப்பு ஆனால் சிங்களம் ஆக்கிரமிப்பு அரசு ஆதலால் விடிவுக்கு வித்திட்ட விடுதலை அமைப்புக்கே விடிவு உறுதி எனவே தமிழர் தலைவன் வார்த்தையில் உறுதி உண்டு அதை உண்மையாக்கும் உரிமை தமிழன் ஒவ்வொருவனுக்கும் உண்டு!

எனவே தலைவன் வழியை செம்மைப்படுத்துவோம்!!!!!!!!!!!!!!!!!

வாழ்க தமிழீழம்! வளர்க தமிழ்! நிமிர்க தமிழர் படை! விரைகதமிழ் உறவுகள்!

நன்றியுடன் நாதன்

தமிழர்களே அவர்கழ் தீர்வு வைகிறார்களோ இல்லையோ,எமது தலமை ஒரு தீர்கமான முடிவிற்கு வந்து விட்டது .wait and see

Suban

post-3762-1174669647_thumb.jpg

உலகத்தை ஏமற்ற தீர்வு திட்டம் என்று பொதியை(போலியான திட்டம்) வைத்துக்கொண்டு காலக்கெடுக்களை வைத்து தனது இராணுவ வெற்றிகளுக்கு காத்திருக்கிறர் குள்ள நரியார். எல்லோரும் வாயை பிளந்து கொண்டு இருக்க எல்லோரின் வாயிலும் பல் குழல் எறிகணையால் கொட்டுவார்........ நவீன துட்டன் -கைமுனு..பாய்ச்சா....வேட்டுவ கூட்டம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.