Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்

Featured Replies

'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர்

 

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற 'என் தரப்பிலான தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். 

டேவிட் வார்னர்

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

டேவிட் வார்னர்

 

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் நடந்த தவறு குறித்து தனது ரசிகர்களிடம் வார்னர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில்,  `ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மற்றும் கிரிக்கெட் உலக ரசிகர்களுக்கும். நான் சிட்னி திரும்பிக் கொண்டிருக்கிறேன். என் தரப்பிலான தவற்றுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதே கிரிக்கெட் விளையாட்டை நேசித்தேன். இந்த தவறினால், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் ரசிகர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நான் புரிந்து கொள்கிறேன். என் குடும்பத்தினருடன் நண்பர்களுடன் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களுடனும் நேரத்தைச் செலவிட இருக்கிறேன். மீண்டும் உங்களைச் சந்திப்பேன்' எனப் பதிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/sports/120571-my-apologies-for-mistakes-have-been-done-david-warner-tweet.html

  • தொடங்கியவர்

இனி ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்க முடியாது என்பது என் இதயத்தை நொறுக்குகிறது: கனத்த இதயத்துடன் வார்னர் பேட்டி

 

 
warner

செய்தியாளர்கள் சந்திப்பில் அழும் டேவிட் வார்னர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பால் டேம்பரிங் விவகாரத்தில் சூத்திரதாரியாகச் செயல்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து தடை விதிக்கப்பட்ட முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர், தன்னுடன் வீரர்கள் இனி களம் காண மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டதாகவும் இனி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடவே முடியாது என்றும் கனத்த இதயத்துடனும் கண்ணீரை அடக்கியபடியும் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, சக வீரர்கள், கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, தன் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், ரசிகர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பல கேள்விகளுக்கு வார்னர் பதிலளிக்கவில்லை, ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன் தனது ட்விட்டரில், “விடையளிக்காத கேள்விகள் உள்ளன என்பது எனக்கு தெரியும். நான் முழுதும் புரிந்து கொள்கிறேன். காலத்தில் நான் அனைத்தையும் விளக்குகிறேன். இப்போதைக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன் தீர்மானிக்கப்பட்ட நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

முறையான இடத்தில் தகுந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பேன். நான் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதனைத் தெளிவு படுத்தாதற்கு மன்னிக்கவும். என் கிரிக்கெட்டுக்கும், குடும்பத்துக்குமான விஷயங்கள் இதில் ஏகப்பட்டது அடங்கியிருப்பதால் நான் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் மதிக்கும், நேசிக்கும் என் சக வீரர்களுடன் நான் இனி களமிறங்க முடியாது என்பதை நினைக்கும் போது என் இதயம் உடைந்து நொறுங்குகிறது. நான் அவர்களுக்கு இழிவு தேடித்தந்து விட்டேன்.

அடுத்து என்ன என்பது எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. முதலில் என் குடும்ப நலம் முக்கியம்.

ஆனால் என் மனதின் எங்கோ ஒரு மூலையில் என்றாவது ஒருநாள் நான் மீண்டும் என் நாட்டுக்காக ஆடுவேன் என்ற நம்பிக்கைக் கீற்று தெரிகிறது. ஆனால் நான் இனி ஆட முடியாது என்ற உண்மையை உணர்ந்தேயிருக்கிறேன். வரும் வாரங்களில் இது எப்படி நடந்தது ஒரு மனிதனாக நான் யார் என்பதைப் பற்றி சிந்திப்பேன்.

ஆனால் இதனை நான் எப்படி அணுகப் போகிறேன் என்பது பற்றி இப்போதைக்கு என்னிடம் எந்த ஒரு கருத்தும் இல்லை. அனுபவஸ்தர்களிடம் நான் அறிவுரை கேட்டு என்னில் நான் நிறைய மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

நான் என்குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக என் மனைவி மற்றும் குழந்தைகள். உங்கள் அன்புதான் எனக்கு அனைத்திலும் முக்கியமானது. நீங்கள் நான் ஒன்றுமில்லை. உங்களை இந்த நிலைக்குத் தள்ளியதற்காக வருந்துகிறேன். என்ன நடந்ததோ அதற்கு முழுப்பொறுப்பேற்கிறேன். நான் எதில் ஈடுபட்டேனோ அதன் விளைவுகளுக்காக மிக ஆழமாக வருந்துகிறேன். ஒரு துணைக் கேப்டனாக என் பொறுப்பிலிருந்து தவறிவிட்டேன்.

நியூலேண்ட்ஸ் கேப்டவுன் 3-ம் நாள் ஆட்டத்தில் நடந்த விஷயத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன். நான் உண்மையில் வருந்துகிறேன், என்னை மன்னியுங்கள். நான் செய்த அந்தக் காரியம் என் வாழ்நாள் முழுதும் பெரிய கறையாகத் தொடரும் என்பதை அறிந்திருக்கிறேன்.

அடுத்த 12 மாதங்கள் ஆட முடியாது என்பது மிகவும் கடினமாக உள்ளது, மற்ற வீரர்கள் மட்டுமல்ல ஸ்டீவ், பேங்கிராப்ட் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த முடிவு மிகவும் வருந்தத்தக்கது, மன்னிப்பற்றது.

கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கூறுகிறேன், நான் உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னியுங்கள். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கிரிக்கெட் ரசிகரோ இல்லையோ அனைத்து ஆஸ்திரேலியர்களும் என்னை மன்னிக்க வேண்டும். என் செயல் என் நாட்டின் செல்வாக்கின் மீது ஏற்படுத்திய தாக்கத்துக்கு நானே பொறுப்பு. கிரிக்கெட் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்கவே எண்ணினேன் அதற்காகத்தான் எதையோ செய்யப்போய் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. இதற்காக நான் வாழ்நாள் முழுதும் வருந்துவேன்.

நாங்கள் மிக மோசமான முடிவை எடுத்து நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டோம். இன்று இங்கு உட்கார்ந்து கொண்டு இவ்வாறு பேசுவது வருத்தத்தை அளிக்கிறது, காரணம் அங்கு ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருக்கிறது, அதில் நாங்கள் ஆடியிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது காயமேற்படுத்துகிறது.

இவ்வாறு கூறினார் வார்னர்.

http://tamil.thehindu.com/sports/article23397961.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.