Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம்

Featured Replies

`வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம்

 
 

ஓராண்டுத் தடை, இனி ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் கிடையாது, ஐ.பி.எல் அணிகளுக்கும் கேப்டன் ஆக முடியாது எனப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவரும் வறுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

ஸ்டீவ் ஸ்மித்

 

Photo: Twitter/ICC

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட். இந்தச் சூழ்ச்சி வெளியே தெரிய ஆரம்பித்தது. இதில், பான் கிராஃப்ட்டுடன் வார்னர், ஸ்மித் இருவரும் கூட்டுச்சதி செய்தது தெரிய வரவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ஏன் ஆஸ்திரேலிய பிரதமர் உட்பட அனைவரும் இந்தச் செயலுக்கு எதிராகக் குரல்கொடுக்க, மூவருக்கும் எதிராகத் தண்டனையை அறிவித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். வார்னர், ஸ்மித்துக்கு ஓராண்டு தடை மற்றும் பான் கிராஃப்ட்டுக்கு 9 மாதம் தடை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த அடியாக, ஐ.பி.எல் போட்டிக்கான ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன் பதவிகளிலிருந்தும் முறையே ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில், பந்தைச் சேதப்படுத்திய செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆஸ்திரேலிய அணி கேப்டன் என்ற முறையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்கு நானே பொறுப்பேற்கிறேன். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை தற்போது உணர்ந்துவிட்டேன். என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. இதனால் என் மனம் உடைந்துவிட்டது. ஓர் அணி கேப்டன் என்ற முறையில் நான் தோற்றுவிட்டேன். எனது நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கான பெருமையைப் பெற்றிருந்தேன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப்போவதில்லை. ஒரு வகையில் மற்றவர்களுக்கு இது ஒரு பாடம் ஆகும். அதேவேளையில் இது ஒரு மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன்" என்றார். முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்களிடம் வார்னர் மன்னிப்புக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

https://www.vikatan.com/news/tamilnadu/120588-it-was-a-failure-of-my-leadership-says-aussie-captain-smith.html

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: 'என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்' : கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்மித்

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்,ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனது பங்கு குறித்து மன்னிப்பு கோரிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் சிந்தினார்.

மன்னிப்பு கோரிய ஸ்டீவ் ஸ்மித்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமன்னிப்பு கோரிய ஸ்டீவ் ஸ்மித்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடை விதித்தது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்துள்ளது.

அதேவேளையில், பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டீவ் ஸ்மித், ''எனது தலைமை பொறுப்புக்கு கிடைத்த தோல்வி இது'' என்று கூறினார்.

David Warner and Steve Smithபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

''நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் நேசிக்கும் இந்த அற்புதமான விளையாட்டை குழந்தைகள் விரும்பி விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன்'' என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் மேலும் பேசிய ஸ்மித், ''எனது அணி சகாக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் நடந்த செயலுக்காக எங்கள் மீது கோபமும், ஏமாற்றமும் அடைந்துள்ள அனைத்து ஆஸ்திரேலியர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆஸ்திரேலிய கேப்டனாக நடந்த சம்பவத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

''இது குறித்து என் வாழ்நாள் முழுவதும் வருந்துவேன் என்பது எனக்கு தெரியும். சிறிது காலத்தில் இழந்த மரியாதையை பெறுவேன் என்றும், எனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதே போல், தனது டிவிட்டர் வலைதளத்தில் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரும், ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்,

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை

முன்னதாக, பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்தது.

இதனையடுத்து, வரவிருக்கும் 2018 ஐபிஎல் தொடரிலும் இந்த இரண்டு வீரர்களும் பங்கேற்க பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்) தடை விதித்துள்ளது.

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.

வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணை தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசின் அமைப்பான ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

http://www.bbc.com/tamil/sport-43584613

  • தொடங்கியவர்

கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்து மனம் உடைந்த 9 வயது ரசிகர்: ஸ்டீவ் ஸ்மித் மன்னிப்பு மெசேஜ்

 

 
smith1

படம். | ஏ.பி.

வியாழக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ஸ்டீவ் ஸ்மித் அழுத காட்சியினால் காட்சிகள் தற்போது மாறியுள்ளன. ஸ்டீவ் ஸ்மித்துக்கு அதிகபட்ச தண்டனை என்று பலரும் அவருக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தின் தீவிரமான 9 வயது ரசிகர் ஒருவர் மனம் உடைந்து போனார். இவர் பெயர் டார்சி, சேனல் 9 ரிப்போர்ட்டர் தெபோரா நைட்டின் மகன் ஆவார்.

தன் ஆதர்சமான ஸ்டீவ் ஸ்மித் பந்து சேத சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்டது, அவர் கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட காட்சியும் தன் மகனை நிலைகுலையச் செய்துவிட்டது என்று தெபோரா நைட் தன் ட்வீட்டரில், “என் 9 வயது மகன் ஸ்டீவ் ஸ்மித்தின் மிகப்பெரிய விசிறி. அன்று செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் அழுததைப் பார்த்து மனம் உடைந்து விட்டான். 20 நிமிடங்கள் அவனை ஆறுதல் படுத்த வேண்டியதாயிற்று” என்று டீவிட் செய்ய இது நூற்றுக்கணக்கான முறை மறு பகிர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தெபோரா நைட்டுக்கு ஸ்மித்திடமிருந்து நேரடியாக மெசேஜ் வந்தது. அதில், “எனக்காக என் சார்பில் உங்கள் மகனிடம் மன்னிப்பு கேளுங்கள், அவரையும் நான் ஏமாற்றியுள்ளேன் என்பதை நினைத்து வருந்துகிறேன்” என்று மெசேஜ் செய்துள்ளார்.

இதனை வெகுவாகப் பாராட்டிய தெபோரா நைட், தன் மகனுக்கு இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் விளக்கி வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என்றும் தவறு செய்தால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதோடு, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரை மன்னிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23394672.ece

 

 

நீங்கள் கண்ணீர் விடுவதை உலகம் பார்க்க விரும்பியது: மனமுடைந்த ஸ்மித்துக்கு அஸ்வின் ஆறுதல்

 

 
ashwin1

படம். | ராய்ட்டர்ஸ்.

ஸ்மித் கண்ணீர் விட்டு அழுது தவறுக்கு மன்னிப்பு கேட்டதையடுத்து முன்பு மனதார தண்டனை கிடைக்க வேண்டுமென்று விரும்பியவர்களெல்லாம் திடீரென மனமாற்றம் அடைந்துள்ளனர்.

ஸ்மித்தின் கண்ணீருக்கு அவ்வளவு பலம் இருக்கிறது. இந்நிலையில் கவுதம் கம்பீர் அளவுக்கு தீவிர நிலைப்பாடு எடுத்து ஸ்மித்துக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லையென்றாலும் தமிழக வீரரும் இந்திய ஆஃப் ஸ்பின்னரும், கிங்ஸ் லெவன் கேப்டனுமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்மித்துக்கு தன்னளவில் ஆறுதலாக ட்வீட் செய்துள்ளார்.

“இந்த உலகம் நீங்கள் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்க்க விரும்பியது, நீங்கள் கண்ணீர் விட்டீர்கள் அல்லவா இனி அவர்கள் திருப்தியுடன் நிம்மதியாக வாழ்க்கையைவாழ்வார்கள். பரிவிரக்கம் என்பது வெறும் வார்த்தையல்ல மக்களிடம் இன்னமும் ஈரம் உள்ளது. உங்களுக்கும் பேங்க்ராப்டுக்கும் கடவுள் வலுவைத் தருவார்.

டேவிட் வார்னருக்கும் இதனை எதிர்த்துப் போராட வலு தேவைப்படும், அவர்கள் நாட்டு வீரர்கள் சங்கம் அவர்களுக்கான உதவிகளைச் செய்யும் என்று நம்புகிறேன்.

http://tamil.thehindu.com/sports/article23393408.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.