Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்''

Featured Replies

''தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்''

நா. யேகேந்திரநாதன்

மேற்கு நாடுகள் கிழக்கு திமோர் தென்சூடான் பேன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தனி நாடு பெற்றுக் கொடுத்துவிடும், போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கிழித்து எறியப்பட வேண்டும்..

இது அண்மைக்காலமாக ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே.வி.பி) பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆற்றி வரும் உரைகளின் சாராம்சம். இவரின் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தோனேசியாவின் கொடிய அடக்குமுறையிலிருந்து கிழக்குத் தீமோர் விடுதலைப் பெற்றது தவறு, அங்கு அந்த நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் இனவெறி இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டது சரி, கிழக்கு திமோர் விடுதலையின் மூலம் மிகுதி மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இனக்கொலை வெறியாட்டத்திலிருந்து தப்பியது தவறு என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. இங்கு போன்றே தென்சூடான் போன்N;ற நாடுகளும் காலம் காலமாக ஒரு அடிமை நாடாக அல்லல் பட வேண்டும் என்பதும் இவர்கள் விருப்பம் போலும்.

இதன் மூலம் இவர்கள் தெரிவிக்க விரும்புவது என்ன வெனில் இலங்கைத் திவில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கூட தாங்கள் இனவெறியர்களினதும் இன அழிப்புகளை மேற்கொள்பவர்களினதும் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் என்பது தான்.

ஜனதா விமுக்தி பெரமுனவினர் தாங்கள் மாக்சிய வாதிகள் எனவும், தொழிலாளர்கள,; விவசாயிகள் அரசியதிகாரத்தை நிலை நிறுத்தவே போராடுபவர்கள் எனவும் கூறிவருகின்றனர் செஞ்சட்டைகளை அணிந்து கொண்டு புரட்சிவாசிகள் போன்று வலம் வருகின்றனர். பிரமாண்டமான மேதின ஆர்ப்பாட்டங்களை நடத்தி உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் எனக் கோஷமிடுகின்றனா. இந்த உழைக்கும் மக்களின் அரசிலதிகாரத்தை நிலை நிறுத்தவே 1971ல் ஒரு புரட்சியை நடத்தி இருபத்தையாயிரும் சிங்கள இளைஞர்களைப் பலி கொடுத்ததாகவும், 1988, 89ல் இன்னொரு புரட்சியை நடத்தி எழுபதினாயிரம் இளைஞர்களைப் பலி கொடுத்தார்கள் எனவும் கூறி வருகின்றனர்.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் மாக்சியவாதிகளா என்ற கேள்வி பலதரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகிறது. அதற்குப் பதிலாக இவர்கள் செங்கொடிகளையும் செஞ்சட்டைகளையுமே காட்டி வருகின்றனர் சிங்கள உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினர் அதை நம்பியும் வருகின்றனர்.

மாக்சியத்தின் தந்தையான மேதை கார்ல் மாக்ஸ் அவர்கள் அயர்லாந்து தேசிய விடுதலைப் போராட்டம் இடம் பெற்ற காலத்தில் அப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இங்கிலாந்தின் தொழிலாள வர்க்கத்திற்கு அறை கூவல் விடுத்தாh.; பிரிட்டிஸ் தொழிலாளர்களும் அதை ஏற்று பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கான ஆயுதங்கள் உணவுப் பொருட்கள் முதலியவற்றைக் கப்பலில் ஏற்ற மறுத்து வேலை நிறுத்தம் செய்தனர். இது அயர்லாந்தின் போராளிகள் பிரிட்டிஷ் இராணவத்தை தோற்கடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியது. அப்படியானால் ஐரிஸ் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் படி அழைப்பு விடுத்த கார்ல்மாக்ஸ் தவறு செய்து விட்டாரா?

முதன் முதல் ஒரு உழைக்கும் மக்களின் அரசியலதிகாரத்தை சோவியத் யூனியனில் நிறுவிய மாமேதை லெனின் சகல தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்கினார். இதன் காரணமாக சில நாடுகள் சோவியத் ஒன்றியத்தை விட்டுப் பிரிந்து போனமையும், அவற்றில் சில மீண்டும் திரும்ப வந்து இணைந்தமையும் நாம் அறிவோம். அப்படியானால் லெனின் தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடியசுயநிர்ணய உரிமை வழங்கியமை மூலம் தவறு செய்துவிட்டாரா?

இவ்வாறே மாபெரும் சீனதேசம் தீபேத்திய மக்களுக்கும் லோலோமிஸோ பழங்குடியினருக்கும் பிரதேச சுயாட்சியுரிமையை வழங்கியதன் மூலம் சீனத் தலைவர் மாவோ சே துங் தவறு செய்து விட்டாரா?

பிரான்ஸ் ஏகாத்திபத்தியவாதிகளிடமிருந

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.