Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

SLFP, UNPயுடன் இணைந்து கரைச்சி பிரதேசசபையினை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது…

Featured Replies

SLFP, UNPயுடன்  இணைந்து கரைச்சி பிரதேசசபையினை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது…

IMG_9644.jpg?resize=800%2C534

 

பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று 09-04-2018 கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

முதலில் தவிசாளர் தெரிவுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்ற போது தமிழரசு கட்சியின் அருணாசலம் வேழமாலிகிதன் முன்மொழியப்பட்டார். இதன் போது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் ஜ. மோகன்ராஜ் எழுந்து ரஜனிகாந் என்பவரை மாற்றுத் தெரிவாக முன்மொழிந்தார்

இதன் போது வாக்கெடுப்பு இரகசியமாக நடத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்ட போது  இந்தக் கோரிக்கை  வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மையின் அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

IMG_9660.jpg?resize=800%2C534

வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் 17 உறுப்பினர்களும், சுந்திரகட்சியை சேர்ந்த இருவரில் ஒருவரும் ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இணைந்து 19 உறுப்பினர்கள் வேழமாலிகிதனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மாற்றுத் தெரிவான ரஜனிகாந்துக்கு சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும், சிறிலங்கா சுந்திர கட்சியை சேர்ந்த ஒருவரும் என 13 பேர் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மேலதிக ஆறு மேலதிக வாக்குகளால் அ.வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யபட்டார்.

உபதவிசாளர் தெரிவின் போது தமிழரசு கட்சியின் சி. தவபாலனுக்கும், சுயேச்சைக் குழுவின் த.செல்வராணியும் முன்மொழியப்பட்டனர். இதுவும் பகிரங்க வாக்கெடுப்பு விப்பட்டு இதில் தமிழரசு கட்சியின் 17 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 20 பேர் தவபாலனுக்கும், சுயேச்சைக் குழுவின் 11 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவரும் இணைந்து 12 பேர் செல்வராணிக்கு வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈபிடிபியும் நடுநிலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/74257/

  • தொடங்கியவர்

கரைச்சி பிரதேசசபை தெரிவின் போது நிகழ்ந்த சம்பவங்கள் சபையின் மாண்பை மதிக்காத செயலென அவதானிகள் விசனம்

 

 
 

கரைச்சி பிரதேசசபை தெரிவின் போது நிகழ்ந்த சம்பவங்கள் சபையின் மாண்பை மதிக்காத செயலென அவதானிகள் விசனம்

பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் கரைச்சி பிரதேசசபையினை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.வழமை போலவே யாழ்ப்பாண பாணியில் சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இதனிடையே சபையில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது ஆதரவாளரான வேழமாலிகிதனை தவிசாளர் ஆக்கிய மகிழ்ச்சியில் நடனமாடும் காட்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பளை பிரதேச சபை தவிசாளர் சுரேன் உள்ளிட்ட குழுவினர் நடனமாட,ஆதரவாளர்கள் விசிலடிக்க கொண்டாட்டங்கள் சபா மண்டபத்தில் நடத்தப்பட்டமை சபையின் மாண்பை மதிக்காத செயலென அவதானிகள் தெரிவிக்கின்றனர் .

சந்திரகுமாரின் சமத்துவக்கட்சி கரைச்சிப்பிரதேச சபைக்கு போட்டிக்களத்திலிருந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.(15)sri

http://www.samakalam.com/செய்திகள்/கரைச்சி-பிரதேசசபை-தெரிவ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.