Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் சமஷ்டியும்

Featured Replies

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் சமஷ்டியும்

 

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இல்­லா­ம­லாக்கும் ஒரு பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி வெகு­வி­ரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. எனினும் இச்­செ­யற்­பாட்டை ஆட்­சே­பித்து முன்னாள் எம்.பி.யும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல மாகா­ண­ ச­பை­களை இரத்துச் செய்­தா­லன்றி நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வது சாத்­தி­ய­மல்ல என்­கிறார்.

இதற்­கான கார­ணத்தை அவர் தெரி­விக்­கையில் யாப்பின் 13 ஆம் ஷரத்தை நீக்­கா­மல்­அதைச் செய்­வது ஆபத்து என்­கிறார். இதை 20 ஆம் ஷரத்­தாக மக்கள் விடு­தலை முன்­னணி கொண்டு வரு­வது பற்றி கூட்டு எதி­ரணி இன்னும் கூடி ஆரா­ய­வில்லை எனவும் குறிப்­பி­டு­கிறார். ஆக 20 ஆம் திருத்­தச்­சட்­டத்தை எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது மக்கள் விடு­தலை முன்­னணி சமர்ப்­பிக்­க­வி­ருக்­கி­றது என்­கிறார்.

உடனே ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த பிர­தி­ய­மைச்சர் அஜித் பி.பெரேரா 20ஆம் சட்­டத்­தி­ருத்­தத்­துக்கு தனது கட்சி பூரண ஆத­ரவை வழங்கும் எனக்­கூ­றி­விட்டார். இதற்கு அவர் முன்­வைத்­துள்ள காரணம். தற்­போ­தைய ஜனா­தி­பதி பத­விப்­பி­ர­மாணம் செய்­த­போதே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வ­தாக ஏற்­றுக்­கொண்டார் என்­ப­தே­யாகும். கட்சி நலன் கரு­தாது நாட்டு நலன் கரு­தியே அர­சியல் நோக்­க­மின்றி இதைத்­த­னது கட்சி ஆத­ரிப்­ப­தாக அவர் கூறி­யுள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேசிய அரசின் நிர்­வா­கத்தில் நாடு தற்­போது பல துறை­களில் முன்­னே­றி­யுள்­ள­போதும் ஜனா­தி­பதி –பிர­தமர் எனும் கூட்­டுத்­த­லை­மை­யி­லான கலப்பு ஆட்சி முறையால் முறை­யான நிர்­வாகம் இருப்­பினும் பல விட­யங்­களில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­முறை தாக்கம் செலுத்­தியே வரு­கி­றது. எமது பாரா­ளு­மன்றம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­ருப்­பினும் இங்கு அதி­கா­ரங்­களில் பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் பிர­த­மரே அரசின் தலை­வ­ராக இருப்­பதால் அங்கு விரை­வாக அர­சியல் திட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டு விடு­கின்­றன. எனினும் இலங்­கையில் ஓர் அர­சியல் திட்­டத்தை நிறை­வேற்­றவும் கூடப் பல­வி­ட­யங்கள் நேரடி செல்­வாக்கைச் செலுத்­து­கின்­றன. தற்­போது இலங்­கையில் மக்­க­ளிடம் நல்­லி­ணக்கம் மேம்­பட்­டி­ருப்­ப­தாலும் 30 வருட யுத்தம் முடி­வுற்­றி­ருப்­ப­தாலும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்­கான தேவை இல்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவும் இந்நாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் இதே நிலைப்­பாட்டில் இருக்­கின்­றனர். அந்த வகையில் 8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் 2 ஆம் கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இரத்­தாக்கும் யோசனை முன்­வைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. இதற்கு கூட்டு எதி­ரணி ஆத­ரவை வழங்­கு­வ­தாகக் கூறி­யுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் பூரண ஆத­ரவை வழங்கும். இதில் எந்த அர­சியல் நோக்­கமும் இல்லை என்றார்.

உண்­மையில் 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்­க­ளாணை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைக்கு எதி­ரா­கவே வழங்­கப்­பட்­டி­ருந்­தது. வென்ற பின் மைத்­திரி அதைக்­கூ­றியே பத­விப்­பி­ர­மாணம் செய்­தி­ருந்தார். எனவே மக்­க­ளா­ணையை மீறி சத்­தி­யப்­பி­ர­மா­ணத்­துக்கு மாறு­செய்யும் நிலை ஏற்­ப­டாமல் 8 வது பாரா­ளு­மன்­றத்தின் 2 ஆம் கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இரத்து செய்­தாக வேண்டும். இதைப் பாரா­ளு­மன்றம் மீறு­வதும் கூட மக்­க­ளா­ணைக்கு விரோ­த­மா­ன­தாகும். இது தன்னை நல்­லாட்சி எனக்­கூ­றிக்­கொண்டு வாக்­கு­று­தியை மீறவோ மக்­க­ளா­ணையைப் புறக்­க­ணிக்­கவோ முடி­யாது.

1987ஆம் ஆண்டு இந்­தியா இலங்­கை­யுடன் இயற்றி, இலங்­கைக்கு வழங்­கிய 13 ஆம் ஷரத்­துக்கும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைக்கும் எவ்­வித சம்­பந்­தமும் இல்லை. அதையும் மீள் பரி­சீ­லனை செய்து சீர்­ப­டுத்­தலாம் அல்­லது இந்­தி­யாவின் இணக்­கத்­தோடு இரத்­தாக்கி அதை­வி­டவும் சிறந்த தீர்வைக் கொண்டு வரலாம். 13 ஆம் ஷரத்து ஆட்­சித்­த­லை­மைக்கும் ஆட்­சித்­த­லை­மைக்கும் இடையில் நிகழ்ந்­ததே தவிர பாரா­ளு­மன்ற தலை­மைக்கும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கும் ஏற்­பட்­ட­தல்ல. அப்­ப­டி­யி­ருந்­தால்தான்13ஆம் ஷரத்தை நீக்­கு­வ­தற்­காக பேரி­ன­வா­திகள் ஏகோ­பித்து நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைக்கு எதி­ராக நிற்­பார்­களே!

உண்­மையில் பேரி­ன­வா­திகள் அந்த அதி­கா­ரத்தைத் தக்க வைப்­ப­தற்கு மும்­முரம் காட்­டு­வதன் காரணம் என்ன தெரி­யுமா? பெரும்­பான்மைச் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரிடம் நாட்டின் முழு அதி­கா­ரமும் தங்­கி­யி­ருப்­ப­தே­யாகும். பேரின ஆதிக்கம் ஜன­நா­ய­கமா? இல்­லையே?

13 ஆம் ஷரத்து இயற்­றப்­பட்­ட­போது அதை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்த்து மாகா­ண­ச­பைத்­தேர்­தலில் போட்­டி­யி­டவும் இல்லை. ஜே.ஆர். பேரி­ன­வா­தி­க­ளுக்கு சாத­க­மாக அதை சூச­க­மாக மாற்­றி­ய­மைத்­தி­ருந்த விடயம் தெரிந்த பிற­குதான் மாகாண சபை­களில் போட்­டி­யிட்டு சம­பங்­கா­ளி­யா­கி­யது. ஆரம்­பத்தில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஜனா­தி­பதி ஜே.ஆர். கொண்டு வரும் போது­கூட அதை எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிதான் இப்­போது மாகா­ண­சபை முறை­யையும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­யையும் பல­மாக ஆத­ரிக்­கி­றது.

இப்­போது 13 ஆம் ஷரத்து அப்­ப­டியே இருந்து விட்டுப் போகட்டும் என அது விரும்­பு­வது எதற்­காகத் தெரி­யுமா-? அறவே அதி­கா­ர­மற்ற, அதுவே இருந்து விட்டுப் போகட்டும். அது எடு­பட்டு விட்டால் அதை­வி­டவும் கூடு­த­லாகக் கொடுக்கும் நிலை ஏற்­பட்டு விடுமே என்­ப­தற்­கா­கத்தான். ஆக கெஹ­லிய ரம்­புக்­வெல்ல அதி­காரப் பர­வலால் வடக்கு கிழக்கில் அத்­து­மீ­றிப்­பட்டால் அதை கலைக்­கவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை வேண்டும் என்­கிறார். அதனால் தான் 13 ஆம் ஷரத்து இருக்­கின்­ற­வரை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­முறை இருந்தே ஆக­வேண்டும் என்­கிறார். காரணம் இப்­போ­தைக்கு 13 ஆம் ஷரத்து விட­யத்தில் ஓய்ந்து இருந்­த­போதும் இந்­தியா அதை இப்­போதும் உயிர்ப்­பி­லேயே வைத்­தி­ருக்­கி­றது என்­ப­தே­யாகும். இலங்கை அதை உரு­மாற்றி அமு­லாக்­கி­யதை அது அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றதே தவிர அதன் உயிர்ப்பை அழிக்க இட­ம­ளிக்­கா­தி­ருக்­கி­றது.

வடக்கு, கிழக்­குக்கு வெளி­யே­யும்­கூட மாகா­ண­ச­பைகள் செயற்­பட்டு உரிய அதி­கா­ரங்­களை கோரு­வதால் அவையும் கூட அத்­து­மீ­றினால் அவற்­றையும் கலைக்க நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­வேண்டும் என்றே கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல கரு­து­கி­றார்போல் தெரி­கி­றது. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் வழங்­கிய ஆணை என்ன?

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­பட வேண்டும், இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும், இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான யாப்பு இயற்­றப்­பட வேண்டும், ஊழல்கள் ஒழிக்­கப்­பட வேண்டும், சர்­வ­தேச குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டும் இவற்றில் ஒன்­றா­வது நிறை­வே­றி­யுள்­ளதா?

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­பது என்றால் என்ன? அதன் அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்றத் தோடு பகிர்ந்து கொள்­வ­து­தானா? இல்லை முழு­மை­யாகப் பாரா­ளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்­குப்பின் நிகழ்ந்­த­தென்ன? ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொண்­டார்கள். இது மக்­க­ளா­ணைக்கு முர­ணான செயற்­பா­டாகும். அத்­தோடு இது உல­கி­லேயே இல்­லா­ததும் நடை­முறைச் சாத்­தி­ய­மற்­ற­து­மாகும். ஆட்­சியின் முக்கால் ஆயுள் கழிந்த பிற­குதான் இந்த பய­ணத்தை மேலும் தொடர முடி­யாது என எல்­லோரும் கரு­து­கி­றார்கள். அனு­ப­வ­மற்ற ஒன்றில் கைவைத்து அல்­லல்­ப­டு­வதை உணர்­கி­றார்கள்.

இதையே ஜனா­தி­பதி – பிர­தமர் எனும் கலப்பு கூட்டுத் தலை­மை­யி­லான ஆட்சி முறை­யினால் பல விட­யங்­களில் ஜனா­தி­பதி முறை தாக்கம் செலுத்­தியே வரு­கி­றது. எமது பாரா­ளு­மன்றம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­ருப்­பினும் இங்கு அதி­கா­ரத்தில் பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் பிர­த­மரே அரசின் தலை­வ­ராக இருப்­பதால் அங்கு விரை­வாக அர­சியல் திட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டு விடு­கின்­றன. எனினும் இலங்­கையில் ஓர் அர­சியல் திட்­டத்தை நிறை­வேற்­றவும் கூடப்­பல விட­யங்கள் நேரடி செல்­வாக்கைச் செலுத்­து­கின்­றன என அஜித் சி பெரேரா கூறி­யி­ருக்­கிறார். இதைப் பற்றி நான் பல வரு­டங்­க­ளுக்கு முன்பே கூறி­யி­ருக்­கிறேன்.

 இதனால் கைலி ஆணியில் மாட்­டிய நிலை­யி­லேயே நாடு இருக்­கி­றது. மெது­வாகத் தான் கழற்­றி­யாக வேண்டும் இன்றேல் கைலி கிழிந்து விடும். ஜனா­தி­பதி பொது அபேட்­ச­க­ரா­கவே போட்­டி­யிட்டு வென்­றி­ருந்தார். எனவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை அவர் ஏற்­றி­ருக்கக் கூடாது எனவும் கூறி­யி­ருந்தேன். இந்த உண்­மைதான் அண்­மையில் தயா­சிறி ஜய­சே­கர எம்.பி. கூறிய கருத்தில் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஆகி­யி­ருக்­கவும் கூடாது என்றேன். தற்­போது அவ­ருக்கு எதி­ரா­கவே பேரி­ன­வாதம் ராட்­சத உருவில் கிளம்பப் பார்க்­கி­றது.

ரணில் விடயம் வேறு சம்­பந்தன் விடயம் வேறு. ரணில் பெரும்­பான்மைச் சமூ­கத்தைச் சேர்ந்­தவர் என்­பதால் பெரிய கட்­சிகள் இன­ரீ­தியில் பார்க்­கப்­போ­வ­தில்லை. சம்­பந்­தனை இன­ரீ­தி­யிலே பார்ப்­பார்கள். இதனால் நம்­பிக்கை இல்­லாத்­தீர்­மா­னத்தை அவர் மீது கொண்டு வந்து அர­சையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் பேரி­ன­வா­திகள் குழப்­பி­ய­டிக்கப் பார்க்­கி­றார்கள். நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் நிறை­வே­றினால் அதை தமிழ் மக்கள் மீதான கருத்­துக்­க­ணிப்­பாகக் காட்டி முள்­ளி­வாய்க்­கா­லுக்கு அடுத்த வெற்றி என்றே கொண்­டா­டு­வார்கள். முள்­குத்­தாமல் சம்­பந்தன் ரோஜாவைப் பறிக்க வேண்டும் அப்­பதவி மலர்ப்­ப­டுக்கை அல்ல.

13 ஆம் ஷரத்து இருக்கும் நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வது நாட்­டுக்குள் கடும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். கூட்டு எதிரணி அவ்வாறு செய்ய அதரவளித்தால் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம் என விமல் வீரவன்சவும் எச்சரித்திருக்கிறார்.

 காரணம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் 20 ஆம் யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையே என்கிறார். 13 ஆம் ஷரத்து யாப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவது நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். பூரண சமஷ்டி அரசு ஏற்படாதிருக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே தடையாக இருக்கிறது என்கிறார். அந்தமுறை இல்லாதிருந்தால் சமஷ்டி உருவாகியிருக்கும் எனவும் கூறுகின்றார்.

எனவே பேரினவாதிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை வற்புறுத்து­வது பேரின ஒற்றையாட்சியை நிலை நிறுத்து­­­வதற்கேயாகும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அந்தவகையில் இன ரீதியிலான பிரதேச அதிகாரப்பரவலை உருவாக்கி இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதாயின் கண்டிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும்.

தற்­போ­துள்ள யாப்பை ஏற்­றுக்­கொண்டே சம்­பந்தன் தேர்­தலில் போட்­டி­யிட்­டு­வென்று எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்­கின்றார். பிரி­வினை கோர­மாட்டேன் என உயர்­நீ­தி­மன்­றத்­திலும் சத்­தியம் செய்­தி­ருக்­கின்றார். சமஷ்டி யாப்­புக்கு முர­ணா­ன­தல்ல என உயர் நீதி­மன்­றமும் தீர்ப்­ப­ளித்­து­விட்­டது. பிற­கென்ன? இந்­தியா என்ன சொன்­னது ஈழத்­துக்­கா­கவும் பிரி­வி­னைக்­கா­கவும் வடக்கு கிழக்கு தமி­ழ­ருக்கு உதவி வழங்­க­வில்லை. தற்­காப்பை உறுதி செய்து தீர்­வுக்கு வழி­கா­ணவே சமஷ்டி முறை­யான 13 ஆம் ஷரத்தை இயற்­றச்­செய்தோம் என இந்­தி­யாவும் கூறி­விட்­டது.

ஆக 13 ஆம் ஷரத்தை ஏற்­றுக்­கொண்டு சமஷ்­டியைப் பேரி­ன­வா­திகள் எதி­ர்க்க என்ன காரணம்? இந்­தியா வழங்­கிய சமஷ்டி முறையை ஜே.ஆர். சமஷ்­டி­யில்­லா­ம­லாக்­கி­ய­தே­யாகும். பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் இல்­லாத பின் அது உயி­ரற்ற உடல் போல் ஆகி­யது. வடக்கு கிழக்கு தமிழ் மக்­க­ளுக்­கான பிர­தேச அதி­காரப் பர­வ­லுக்­குத்­தானே இந்­தியா சமஷ்டி முறை­யி­லான 13 ஆம் ஷரத்தை வழங்­கி­யது. 7 சிங்­கள மாகா­ணங்­க­ளுக்கும் அல்­லவே ஆக 13 ஆம் ஷரத்து தற்­போது உள்­ளூ­ராட்சி அதி­கா­ரம்போல் அமுலில் இருப்­ப­தால்தான் அதைப் பேரி­ன­வா­திகள் தக்க வைக்க முயற்­சிக்­கி­றார்கள். யுத்­தத்­தின்­போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு 13 க்கும் மேல் வழங்­குவேன் எனக்­கூ­றியே மஹிந்த இந்­தி­யா­வி­ட­மி­ருந்து உதவி பெற்­று­வென்றார். அதன் வடி­வத்தை இந்­தியா கேட்­க­வு­மில்லை. மஹிந்த சொல்­லவும் இல்லை. அது அன்­றைய சூழல் காரணம் புலிகள் இரு தரப்­புக்கும் பொது எதி­ரி­யாக இருந்­த­தே­யாகும்.

யுத்தம் முடிந்­ததும் அதன் வெற்­றி­யையே தீர்­வாக்கி 13 ஆம் ஷரத்தை எடுத்­து­விட மஹிந்த தன்­னிச்­சை­யாக முயன்­றதை இந்­தியா தடுத்­து­விட்­டது. வலு­வற்ற 13 ஆம் ஷரத்தை எடுத்து விட்டு மேலும் பழியைத் தேடிக் கொள்ள வேண்­டுமா? என்­பதே இதற்குக் கார­ண­மாகும். இந்­தி­யாவால் அது அசலாக முன்­வைத்த 13 ஆம் ஷரத்­துக்­கென கடும் அழுத்­தத்தைக் கொடுக்க முடி­ய­வில்லை. காரணம் சீனா­வுடன் இலங்கை கொண்­டி­ருக்­கும் நெருக்­க­மே­யாகும். எனவே ஒரு தலைப்­பட்­ச­மாக 13 ஆம் ஷரத்தை இலங்கை அகற்­றி­வி­டு­வது இந்­தி­யாவின் சுய­கௌ­ர­வத்தைப் பாதிக்கும் விட­ய­மா­கி­விடும். எனவே 13 ஆம் ஷரத்தை உரு­மாற்றி இலங்கை அமு­லாக்கும் நிலையை இந்­தியா தடுக்கும் நிலையில் இல்லை.

மலையின் உச்­சிக்­குப்­போகும் ஒரு­வ­னுக்கு இன்­னொ­ருவன் துணை­யாகப் போகிறான் என வைத்­துக்­கொள்­ளுங்கள். ஏறு­பவன் சரியும் நிலையில் மட்­டுமே பக்­கத்­து­ணைவன் தூக்­கி­வி­டுவான். இவனைத் தோளில் சுமந்து கொண்டு அவன் உச்­சி­வரை போவானா? மாட்டான். அது­போன்­றதே வடக்கு, கிழக்கு தமி­ழ­ருக்­கான இந்­தி­யாவின் உதவி ஒத்­து­ழைப்பு என்­பதே யதார்த்­த­மாகும். எனவே மலை உச்­சிக்குப் போவேன் தனது சுய­மு­யற்­சி­யிலன்றி பக்­கத்­து­ணையின் மீது மட்­டுமே அதிக நம்­பிக்கை வைத்­தி­ருக்­கக்­கூ­டாது.

ஒரு ஷரத்து முழு யாப்­பையும் முடக்­கி­வி­டாது என நான் முன்பே கூறி­யி­ருக்­கிறேன். அதுவே 13 ஆம் ஷரத்து வலு­வி­ழந்­த­தற்குக் கார­ண­மாகும். அத்­தோடு மத்­திய அரசு பல்­லின வடி­வத்தைப் பெறாமல் இன ரீதி­யி­லான பிர­தேச சமஷ்டி நடை­மு­றைக்கு ஒத்­து­வ­ராது எனவும் கூறியிருக்கிறேன்.

வடக்கு, கிழக்கு தமிழருக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் நோக்கு வேறாகவும் தமிழ்ப் போராளிகளின் நோக்கு வேறாகவும் இருந்திருக்கிறது. இந்த முரண்பாடே பின்னடைவுக்கு வித்திட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இவை படிப்பினைகளாகட்டும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.