Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன்

Featured Replies

  • பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன்
 
May 2, 2018

பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன்

a3-copy.jpga4-copy.jpgIMG_1739-copy.jpgIMG_1740-copy.jpgIMG_1741-copy.jpgIMG_1742-copy.jpgIMG_1744-copy.jpgIMG_1745-copy.jpgIMG_1749-copy.jpgIMG_1751-copy.jpgIMG_1753-copy.jpgIMG_1754-copy.jpgIMG_1755-copy.jpgIMG_1756-copy.jpgIMG_1757-copy.jpgIMG_1759-copy.jpgIMG_1760-copy.jpgIMG_1761-copy.jpgIMG_1762-copy.jpgIMG_1764-copy.jpgIMG_1765-copy.jpg

கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் முன்னிரவு வேளையில் ‘உதயன்’ செய்தி நிறுவனத்தில் தலைமையகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். முன்னாள் விற்பனை முகாமையாளர் ஜோர்ஜ் சாகாயதாஸ், விநியோகப் பகுதிப் பணியாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவருமே அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பணியாளர்கள் படுகாயமடைந்தனர். உதயனின் சொத்துக்கள் பலவும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு இரையாக்கப்பட்டு பெரும் பொருள் சேதம் கொடுக்கப்பட்டது.

Untitled-2.........jpgUntitled-0-.........jpg

http://newuthayan.com/story/89649.html

  • தொடங்கியவர்
  • வலி சுமந்த நெஞ்சினராய்…!!
 

வலி சுமந்த நெஞ்சினராய்…!!

2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்­டாம் நாள். அது­வொரு செவ்­வாய்க்­கி­ழமை. இருண்­ட­தும் இரு­ளா­த­து­மான நிலமை. ஊர­டங்­குச் சட்­டம் போடப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால் போட்­டது போன்­ற­தொரு பிம்­மம். போர்க் காலத்­தில் தமி­ழர் தாயக மக்­க­ளின் ஏக அபி­மா­னத்தை வென்று தனக்கே உரித்­தான மிடுக்­கு­டன் நடை­போட்­டுக் கொண்­டி­ருந்த உத­யன், துப்­பாக்கி முனை­க­ளில் மீண்­டு­மொரு தடவை மிரட்­டப்­ப­டு­கி­றான். கடந்த 12 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நடந்த அந்­தச் சம்­ப­வ­மும், அதன் பின்­னர் குடா­நாட்­டில் நில­விய பதற்­ற­மும் கண்­க­ளின் முன்­னால் இன்­றும் நினை­வா­டு­கின்­றன, நிழ­லா­டு­கின்­றன.

குறித்த தினத்­தன்று, இரவு 7.40 மணி­ய­ள­வில் ‘உத­யன்’ பணி­ம­னைக்­குள் அத்­து­மீறி நுழைந்த ஆயு­தா­ரி­கள் கண்­மூ­டித்­த­ன­மான துப்­பாக்­கிச் சூட்டை நடத்­து­கின்­ற­னர். விற்­பனை முகா­மை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய ஜோர்ஜ் சகா­ய­தாஸ், விநி­யோ­கப் பகு­திப் பணி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய ரஞ்­சித்­கு­மார் என இரு பணி­யா­ளர்­கள் ஆயு­த­தா­ரி­க­ளின் துப்­பாக்கி வேட்­டு­க­ளில் சிக்­குண்டு துடி­து­டித்து சாவ­டை­கின்­ற­னர். இரண்­டு­பேர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

உத­யன் நிறு­வ­னத்­தின் கணி­னி­கள் உள்­ளிட்ட சாத­னங்­கள் அடித்து நொறுக்­கப்­ப­டு­கின்­றன. பெரும் பொரு­ளா­தா­ரச் சேதம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்டு இன்று 12 ஆண்­டு­கள் நிறை­வு­ று­கின்­றன.

எனி­னும் எவ­ரும் இது­வரை கைது­செய்­யப்­ப­ட­வில்லை. இது துய­ரி­லும் பெருந்­து­யர். ஊட­க­நி­று­வ­ன­மொன்று தாக்­கப்­பட்­டமை குறித்து இன்று­வரை உண்மை கண்­ட­றி­யப்­ப­டா­த­மை­யா­னது இலங்கை ஒரு சன­நா­யக சோச­லி­சக் குடி­ய­ரசா என்­பது தொடர்­பி­லும், இந்த நாட்­டின் சட்­டத்­துறை, நிர்­வா­கத்­துறை மற்­றும் நீதித்­து­றை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் இமா­லய அள­வில் சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளன. இந்­தச் சந்­தே­கங்­கள் ‘நல்­லாட்சி’ என்று கூறிக்­கொள்­ளும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சி­லும் தொடர்வது அபத்­தத்­தி­லும் அபத்­தம்.

முதல்­மு­றை­யல்ல
இவ்­வா­றான தாக்­கு­தல்­கள் உத­ய­னுக்குப் புதி­தல்ல. இதற்கு முன்­ன­ரும் ‘உத­யன்’ இத்­த­கைய கொலை வெறி­யா­ளர்­களை எதிர்­கொண்­ட­வன்­தான். இதற்­கெல்­லாம் அஞ்­சாத நிலை­யில் தனது பணி­களை நெஞ்­சு­ரத்­து­டன் மேற்­கொண்டு வரு­கின்­றான். இனி­யும் அப்­ப­டியே. கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்­கும் மேலாக எவ­ருக்­கும் விலை போகாது, சோரம் போகாது, நிமிர்ந்த நெஞ்­சு­டன் தனது கருத்­துக்­களை உண்­மை­யின் வாயி­லாக வெளிக் கொண­ரும் தனது பணி­யில் ‘உத­யன்’ சிறி­தும் சோர்­வ­டை­யாத நிலை­யில் தன்னை ஈடு­ப­டுத்தி வரு­கின்­றான். தமிழ் மக்­கள் மீதான கொடு­மை­கள், தமி­ழர் தாய­கத்­தில் அரங்­கே­றும் அவ­லங்­கள் ஆகி­ய­வற்றை உட­னுக்கு­டன் வெளிக்­கொண்டு வரும் பணி­யில் இரவு, பகல் முழு மூச்­சு­டன் ஈடு­பட்டு வரு­கின்­றான். ஆக, சமூக விரோ­தி­க­ளுக்­குச் சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கும் உத­யனை அவர்­கள் தாக்­கத்­தான் செய்­வார்­கள். அதுவே யதார்­த­மும்.

நான்­கா­வது துறை
ஒரு ஜன­நா­யக நாட்­டின் நான்­கா­வது தூண் அல்­லது நான்­கா­வது துறை என்று ஊட­கத்­து­றை­யைக் குறிப்­பி­டு­வார்­கள். சட்­டத்­துறை, நிர்­வா­கத் துறை, நீதித்­துறை ஆகி­ய­வற்­றுக்கு அடுத்த படி­யான இடம் இந்த ஊட­கத்­து­றைக்­குக் கொடுக்­கப்­ப­டு­கி­றது. சட்­டத்­துறை சட்­டத்தை ஆக்­கும், நிர்­வா­கத்­துறை அவ்­வாறு ஆக்­கப்­பட்ட சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும், நீதித்­துறை சட்­டங்­களை உயிர்ப்­பு­டன் வைத்­தி­ருக்­கும், தீர்ப்பு வழங்­கும். ஊட­கத்­து­றையோ அனைத்­துத் துறை­க­ளை­யும் கண்­கா­ணித்­துக் கொண்­டி­ருக்­கும். இத­னால்­தான் மேற்­கத்­திய நாடு­க­ளில் ஊட­கங்­கள் என்­றால் அதி­முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கி­றார்­கள். ஆனால் இலங்­கை­யிலோ இந்த நான்­கா­வது துறை நாயி­லும் கேவ­ல­மா­கவே மதிக்­கப்­ப­டு­கி­றது. இதனை நிரூ­பிக்­கும் வகை­யில் உத­யன் மீதான தாக்­குதல்களும் ஏனைய ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­கள் மீதான தாக்­கு­தல்­க­ளும் அமை­கின்­றன. இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வில்லை. இனி­வ­ரும் காலத்­தி­லா­வது முன்­னெ­டுக்­கப்­ப­டுமா என்­றால் அதற்­கு­ரிய அறி­கு­றி­கள் தெரி­யவே இல்லை.

பீனிக்ஸ் பற­வை­யாய்
சாம்­ப­ருக்­குள் இருந்து எழுந்து பறக்­கு­மாம் பீனிக்ஸ் பறவை. உத­ய­னும் ஒரு­வ­கை­யில் பீனிக்­ஸே­தான். ‘உத­யன்’ பத்­தி­ரிகை மீது காலத்­துக்­குக் காலம் நடத்­தப்­ப­டும் தாக்­கு­தல்­க­ளால், தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­கள் எந்­த­வி­த­மான பய­னை­ப் பெற்­ற­னர் என்றோ அல்­லது தமது சூழ்ச்­சி­யில் வெற்­றி­பெற்­ற­னரா என்றோ தெரி­ய­வில்லை. ஏனென்­றால், உத­ய­னின் குரல்­வ­ளையை நெரிப்­ப­தில் அவர்­கள் தொடர்ந்து சந்­திப்­ப­தென்­னமோ தோல்­வியை மட்­டுமே. உண்­மை­யான ஊட­க­வி­ய­லா­ளன் ஒரு போதுமே மௌனிக்க மாட்­டான். அந்த வரி­சை­யில் இமா­ல­யப் பலம் மிக்­க­வன் உத­யன்.

http://newuthayan.com/story/89743.html

சப்ரா பைனான்ஸ் மூலம் அடித்த காசில் உதயன் பீனிக்ஸ் பற­வை­யாய் எழுந்து வந்திருக்கலாம். ஆனால் அதிலே பணம் போட்டவர்கள் இன்னும் மீண்டு எழவே இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.