Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மறுபடியும் முதல்ல இருந்தா?" - விக்கி ஐயாவிடம் ஒரு பாமரனின் கேள்வி....

Featured Replies

"மறுபடியும் முதல்ல இருந்தா?" - விக்கி ஐயாவிடம் ஒரு பாமரனின் கேள்வி....

 

 
625.500.560.350.160.300.053.800.900.160.

2013 ஆம் ஆண்டு அக்ரோபர் முதல் வடமாகாண முதலமைச்சராக இருந்து வரும் விக்கி அய்யா தலைமையில் அமைந்த அணிகள், இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக பிரேரணைகள் மட்டுமே ஏற்படுத்தி இருந்தன.

49 அதிகாரங்களை தாமாக கொண்டமைந்த மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மக்களின் அடிப்படை விடயங்கள் பலவற்றை தீர்ப்பதற்கான வடிகாலாக இருக்கும் போதும் அவை எவற்றையும் கருத்தில் எடுக்காது. மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை மட்டுமே கதைத்து காலத்தையும் 38 உறுப்பினர்களுக்குமான ஊதியம் உட்பட்ட செலவீனங்களையும் ஏற்படுத்தியது தான் மிகுதியாக உள்ளது.

காணி அதிகாரம் பெரும்பாலும் மத்திய அரசிடமும், 1992ம் ஆண்டு சட்ட திருத்தத்துடன் பிரதேச செயலர்களிடம் சில அதிகாரங்கள் இருக்கும் போதும், அவை மாகாண சபையிடம் இருந்தால் எல்லாம் சாதிக்கப்பட்டிருக்கும் என்கின்ற நிலையை மாயையாக தோற்றுவித்து, இருக்கின்ற மிகுதி அதிகாரங்களை தானும் மேற்கொள்ளாமல், தன் அமைசர்களையும் மேற்கொள்ள விடாமல் இருக்கின்ற நிலையிலேயே விக்கினேஸ்வரன் அய்யாவின் கையறு நிலை இருக்கின்றது.

மாகாண சபைக்கு உட்படட விதத்தில் இருக்கின்ற கைத்தொழில் நிலையங்களை மீள இயக்கவும் அதனோடு புதிய கைத்தொழில் சாலைகளை மத்திய அரசின் உதவியோடோ அல்லது வெளிநாட்டு உதவியோடோ அல்லது புலம்பெயர் வர்த்தக சமூகத்தோடோ இணைந்து செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை முறையாக எடுக்கவில்லை.

போராளிகளின் மீள் வாழ்வுக்கு சாதராண மட்டத்தில் கூட எவ்வித நடவடிக்கைகளோ திட்டங்களோ முன்வைக்கப்படாமை.

ஐந்து மாவட்டங்களிலும் இருக்கும் நாகரங்களில் இருக்கும் வியாபார நிலையங்களின் அபிவிருத்திக்கு அவர்களுடனோ அல்லது அவர்களின் சம்மேளனங்களுடனோ எவ்வித கலந்தாய்வுகளையும் மேற்கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவாமை.

இன்றைய உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப நகர வளர்ச்சிக்கு எவ்வித கட்டுமானங்களையும் எற்படுத்த தவறியமை. உதாரணமாக தீயணைப்பு சேவை யாழப்பாணத்தில் மாநகரச சபையில் மட்டுமே இருக்கின்றது. கிளிநொச்சியில் தீ ஏற்படடால் கிளிநொச்சி குளத்தில் இருந்து நீர் அள்ளிக்கொண்டு வந்து, எல்லாம் எரிந்த பின்புதான் தான் அணைக்க வேண்டும். இதுதான் உட்கட்டமைப்பு அபிவிருத்தி?.

மீன்பிடி கிராமங்களுக்கு அந்த மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான அபிவிருத்திக்கு உதவாத மீன்பிடி அமைச்சுடன் கூடிய வள வீணடிப்பு.

இன்றுவரை தனக்கு கீழ்வரும் மாவட்டங்களின் அரச அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும் ஒருங்கே அழைத்து மாகாண அபிவிருத்தியை பேச முடியாத கையாலாகாத நிலை.

சாதாரண ஆசிரியர் அதிபர் இடமாற்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படட மாகாண சபை தேவையில்லை. அதனை நிர்வாக அலுவலகமே மேற்கொள்ளும். அத்தனையும் தாண்டி சிந்திக்க முடியாத பெரும் லாயக்கில்லாத நிலையில் அமைச்சர்களை கொண்ட கூட்டம்.

இப்போது இருக்கும் அனைத்து விடயங்களும் தான் அடுத்தமுறையும் அவருக்கு இருக்கும் . இப்போது முடியாதது இன்னும் 4 வயது கூடின பிறகு அவருக்கு முடியுமாக இருக்குமா என்பது மாயாயாலம் தான்.

வெறும் அறிக்கைகையும் பிரேரணைகளையும் விடுவதாலும், தான் ஒரு முன்னாள் நீதிபதி என்கின்ற பதவிநிலையும் ஒரு மாகாணத்தை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லும் என்னும் மடமை அறிவுடன், இன்னும் சில அரசியல் கட்சி சார்ந்தோரின் பிழையான வழிகாட்டலால் மீண்டும் பிழையான தலைமைத்துவம் ஒன்று வடமாகாண சபைக்கு கிடைக்குமாக இருந்தால், வடமாகாண சபை ஓம் சுவாகா.

அப்ப அதுகாக்காக மாவை அண்ணை சரியான ஆளோ எண்டு கேட்டுப் போடாதையுங்கோ பிளீஸ்.

அப்ப யார் தான் அடுத்த முதல்வருக்கு பொருத்தமானவர்?

இவ்வளவும் மக்களின்ற கருத்துக்கள் தான். வேறேதுமில்லை.

- பாமரனின் கருத்து

http://www.ibctamil.com/gossip/80/100066

1 hour ago, நவீனன் said:

வெறும் அறிக்கைகையும் பிரேரணைகளையும் விடுவதாலும், தான் ஒரு முன்னாள் நீதிபதி என்கின்ற பதவிநிலையும் ஒரு மாகாணத்தை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லும் என்னும் மடமை அறிவுடன், இன்னும் சில அரசியல் கட்சி சார்ந்தோரின் பிழையான வழிகாட்டலால் மீண்டும் பிழையான தலைமைத்துவம் ஒன்று வடமாகாண சபைக்கு கிடைக்குமாக இருந்தால், வடமாகாண சபை ஓம் சுவாகா.

அப்ப அதுகாக்காக மாவை அண்ணை சரியான ஆளோ எண்டு கேட்டுப் போடாதையுங்கோ பிளீஸ்.

அப்ப யார் தான் அடுத்த முதல்வருக்கு பொருத்தமானவர்?

இவ்வளவும் மக்களின்ற கருத்துக்கள் தான். வேறேதுமில்லை.

- பாமரனின் கருத்து

குழப்பமே உன் மறுபெயர் பாமரனோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.