Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆவணங்கள் தேக்கம் சிறைச்சாலைகளில் அப்பாவிகள் பலர் வாடுகின்றனர்

Featured Replies

சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆவணங்கள் தேக்கம் சிறைச்சாலைகளில் அப்பாவிகள் பலர் வாடுகின்றனர்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தேங்கிக் கிடப்பதால் அப்பாவிகள் சிறையில் வாடுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மீனவர்கள் ஐவருக்கும் எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது அவர் அம்மீனவர்கள் சார்பில் மன்றில் ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர் நீதிமன்றில் கூறியதாவது;

"இம் மீனவர்கள் தொழிலுக்காக மன்னார் கடலுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இம்மீனவர்கள் மீது புலனாய்வு விசாரணைகளை நடத்தி சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கைகளை சமர்ப்பித்து எட்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வழக்கு தொடர்பில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவ்வறிக்கைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அப்பாவி மீனவர்கள் சிறையில் வாடுகின்றார்கள். சட்ட மா அதிபர் திணைக்களம் ஒன்றில் இம்மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது இம்மீனவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனது கட்சிக் காரர்கள் ஒவ்வொரு வழக்குத் தவணைகளுக்கும் தவறாமல் மன்றில் ஆஜராக்கப்படுகின்றார்களே அன்றி, இவ்வழக்கு தொடர்பில் வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

அப்போது நீதிவான், அவசர கால ஒழுங்க விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுவதற்கோ, விடுதலை செய்வதற்கோ நீதிவான் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாது என்று தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களம் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவதா? அல்லது விடுதலை செய்வதா? என்று தீர்மானிக்க முடியும். இல்லையேல் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா? என்ற முடிவுக்கு வர முடியும் என்றார்.

அத்துடன், இந்த மீனவர்கள் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்யவில்லையா? என்று நீதிபதி சட்டத்தரணியிடம் கேட்டார்.

அதற்கு இல்லையெனப் பதிலளித்த சிரேஷ்ட சட்டத் தரணி தவராசா, எனது கட்சிக் காரர்களை விடுதலை செய்யும் நியாயாதிக்கம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லையென நன்றாகவே தெரியும். ஆயினும் மீனவர்களின் அவலநிலையை நீதிவானுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமையையே செய்ததாகக் கூறினார்.

http://www.thinakkural.com/news/2007/3/26/...s_page24043.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.