Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம்

Featured Replies

ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம்

இலைமறை காயாக இருந்த ஜே.வி.பி.யின் தலைவர்களில் ஒருவரான குமார் ஐயா என அழைக்கப்படும் கே. குணரட்னம் தனது குடும்பத்துடன் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜே.வி.பி.யின் அரசியல் நடவடிக்கைகளில் இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி.யின் தலைவராக இன்றுவரை இரகசியமாக இயங்கிவந்த குமார் ஐயாவை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் குறிவைத்ததால் அவர் மிக விரைவாக தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். அவரின் பாதுகாப்புக் கருதி ஜே.வி.பி.யின் மத்திய குழுவே அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி ஆலோசனை வழங்கியுள்ளது.

குமார் ஐயாவின் முடிவுகள் எடுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஜே.வி.பி.யின் மற்றுமொரு முக்கிய தலைவரே பொலிஸாருக்கும், புலனாய்வுத்துறைக்கும் தகவல் கொடுத்ததாக சில தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த முன்னணித் தலைவர், பொலிஸ் இரகசியப் பிரிவினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதாகவும், புலனாய்வு அமைப்பு குமார் ஐயாவை பின்தொடர்வதற்கும் இவரே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கியது அமைச்சரவையில் பங்கெடுக்க மறுத்தது போன்ற ஜே.வி.பி.யின் முக்கிய முடிவுகளுக்கு பின்னணியில் குமார் ஐயாவே இருந்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் நாட்டை விட்டு வெளியேறிய போது தனது மனைவியையும், வத்தளை சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வந்த தனது ஒரே பிள்ளையையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

குமார் ஐயாவின் சகோதரரான ரஞ்சித் எம். குணரட்ணமும் ஜே.வி.பி.யின் உறுப்பினராவார். அவர் கட்சியின் மத்திய குழுவில் ஒரு முக்கிய பதவி வகித்திருந்தார். எனினும், 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் நடைபெற்ற மோதல்களில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் குமார் ஐயா அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றிருந்தார். எனினும், 1994 ஆம் ஆண்டளவில் அவர் மீண்டும் நாடு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.