Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும்

Featured Replies

எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும்

 

என்­னு­டைய மக­னுக்கு என்ன நடந்­தது? என்­னு­டைய கணவர் எங்கே? என் சகோ­த­ர­னுக்கு நடந்­தது என்ன? இவ்­வா­றான கேள்­வி­களை எழுப்­பிய வண்ணம் காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் கடந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து வீதி­களில் இறங்கி போரா­டிக் ­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ்­வப்­போது அர­சாங்­கத்தை ஈர்க்கும் வகையில் பல்­வேறு இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்து இந்த காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் இவ்­வாறு தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்தக்­கோரி போராடி வரு­கின்­றனர். ஆனால் இது­வ­ரையும் எந்­த­வொரு சம்­பவம் தொடர்­பிலும் தீர்வு கிடைக்­க­வில்லை. காணாமல் போனோரை பொறுத்­த ­வ­ரையில் சுமார் 20ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

சர்­வ­தே­சத்தின் கடு­மை­யான அழுத்­தத்தின் பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ­வினால் ஓய்வு பெற்ற நீதி­பதி பர­ண­கம தலை­மையில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்டு காணா­மல்­போனோர் குறித்து ஆரா­யப்­பட்­ட ­போ­திலும் காணா­மல் ­போ­னோ­ருக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. எனினும் இந்த ஆணைக்­கு­ழு­விற்கே சுமார் 20ஆயிரம் எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் காணா­மல் ­போனோர் தொடர்பில் கிடைத்­தி­ருந்­தன.

எவ்­வா­றெ­னினும் யுத்தம் முடி­வ­டைந்த 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து காணாமல் போனோர் தொடர்பில் மக்கள் போராடி வரு­கின்ற போதிலும் மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்­காமல் இருப்­ப­துடன் என்ன நடந்­தது என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு அர­சாங்கம் தயக்கம் காட்­டியே வரு­கின்­றது. முன்­னைய அர­சாங்க காலத்தில் இது­ தொ­டர்பில் நம்­பிக்­கையை சித­ற­டிக்கும் வகையில் பல கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. எவ்­வா­றெ­னினும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்­கான நீதியை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தியே வரு­கின்­றனர்.

அது ­மட்­டு­மன்றி காணாமல் போனோரின் உற­வுகள் சர்­வ­தே­சத்தின் உத­வியை இந்த விட­யத்தில் ஆரம்­பத்தில் இருந்தே நாடி வரு­கின்­றனர். விசே­ட­மாக சர்­வ­தேச பொறி­முறை ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­ப­ட வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட மக்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் இந்த நிலை­மைக்கு முடிவை காணு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் இது­வரை மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்­க­வில்லை.

இந்த சூழலில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கண்ணீர் சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்தம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் வலி­யு­றுத்­தல்கள் மற்றும் இலங்­கையில் சிவில் சமூக துறை­யி­னரின் கோரிக்­கைகள், தமிழ் பேசும் மக்­கள் பிர­தி­நி­தி­களின் வலி­யு­றுத்தல் என்­ப­வற்றின் விளை­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினால் காணாமல் போனோர் குறித்து அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டுள்­ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த இது தொடர்­பான செயற்­பா­டுகள் கடந்த வருடம் இறு­தி ­ப­கு­தி­யி­லேயே இறு­தி ­கட்­டத்தை அடைந்­தன. அத­னூ­டாக தற்­போது அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டுள்­ள­துடன் அந்த அலு­வ­ல­கத்­திற்கு ஆணை­யா­ளர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

எனினும் இந்த அலு­வ­லகம் ஊடாக தமக்கு நீதி கிடைக்­குமா என்­பதில் பாதிக்­கப்­பட்ட மக்கள் சந்­தே­கத்­து­ட­னேயே இருக்­கின்­றனர். இதன் ஊடாக நீதி கி­டைக்­குமா அல்­லது மீண்டும் தாம் ஏமாற்­றப்­ப­டு­வோமா காலத்தை இழுத்­த­டிக்கும் செயற்­பா­டு தான் இதன் ஊடாக ஏற்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற சந்­தே­கங்கள் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றன. இங்கு பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வெல்­லாமல் எவ்­வி­த­மான பொறி­மு­றை­யையும் முன்­னெ­டுப்­பதில் அர்த்­த­மில்லை என்­பதை அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் புரிந்­து­ கொள்­ள­ வேண்டும்.

இந்த சூழலில் இந்த கா­ணா­மல்­போனோர் அலு­வ­லகம் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தப்­ப­ட ­வேண்டும். அதா­வது காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­படும் என்ற நம்­பிக்கை உரு­வாக்­கப்­ப­ட ­வேண்டும். அவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வதன் மூலமே இந்த செயற்­பாட்டை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கலாம். அத்­துடன் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தப்­பட்டால் மட்­டுமே அவர்கள் இந்த அலு­வல­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள். அத­னூ­டா­கவே காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை கண்டு பிடிக்­கு­மான சூழல் உரு­வாகும்.

இந் ­நி­லையில் இந்த காணா­மல் ­போ­னோரின் அலு­வ­லகத்­திற்கு கடந்த முப்­பது வரு­ட ­கா­ல­மாக மனித உரிமை செயற்­பாட்­டா­ள­ராக செயற்­பட்டு வரும் தென்­னி­லங்­கையின் மனித உரிமை செயற்­பாட்­டா­ள­ரான நிமல்கா பெர்­னாண்டோ ஒரு ஆணை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மக்கள் இந்த அலு­வ­லகம் ஊடாக நீதி கிடைக்­குமா என சந்­தே­கத்­துடன் இருக்­கின்ற நிலையில் இந்த நிலைமை குறித்து நிமல்கா பெர்­னாண்­டோ­விடம் நாம் வின­வினோம். அதா­வது மக்கள் எவ்­வாறு இந்த அலு­வ­லகம் மீது நம்­பிக்கை வைக்க முடியும் என்­பது எமது கேள்­வி­யாக இருந்­தது.

இது தொடர்பில் விட­யங்­களை முன்­வைத்த நிமல்கா பெர்­னாண்டோ இந்த அலு­வ­லகம் ஊடாக மக்­க­ளுக்கு நீதியை நிலை­ நாட்ட அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தாக கூறினார்.

அதா­வது காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்தின் மீது பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை வைக்­க­ வேண்டும். இந்த அலு­வ­ல­கத்தை முதலில் அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­ வேண்டும். அலு­வ­ல­கத்தை ஏற்று எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினால் மட்­டுமே நாம் ஒரு தீர்வை அடை­யலாம். அதனை விடுத்து வெறு­மனே நம்­பிக்கை வையுங்கள் என்று என்னால் கூறு­வதும் முறை­யா­காது. எனவே இந்த அலு­வ­ல­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து பாதிக்­கப்­பட்ட மக்கள் எமக்கு ஒத்­து­ழைப்பை வழங்­க­ வே­ண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளான உங்கள் கண்­ணீரின் ஊடா­கவே இந்த இந்த காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்தை நாங்கள் பெற்­று கொண்­டி­ருக்­கின்றோம். இந்த நாட்டில் மீண்டும் காணாமல் போகும் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை நாங்கள் விரும்­ப­வில்லை. இது பாதிக்­கப்­பட்ட மக்­களின் அலு­வ­ல­க­மாகும். அதனை வெற்­றி­ய­டைய செய்­வது அவர்­களின் கைக­ளி­லேயே தங்­கி­யி­ருக்­கின்­றது என்று நிமல்கா பெர்­னாண்டோ குறிப்­பிட்­டி­ருந்தார்.

எமக்கு தாய்­மார்­களின் மனை­வி­மார்­களின் சகோ­த­ரி­களின் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­கின்­றது. எமக்கு தக­வல்கள் தேவைப்­ப­டு­கின்­றன. தாய்­மார்­க­ளுடன் தக­வல்­களை தேடி எந்த இடத்­திற்கும் செல்­வ­தற்கும் எமது காணா­மல் ­போனோர் அலு­வ­லகம் தயா­ராக இருக்­கின்­றது. அந்­த­ள­விற்கு இந்த அலு­வ­ல­கத்­திற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த அலு­வ­ல­கத்தை உங்கள் அலு­வ­ல­க­மாக மாற்றி இதனை பயன்­ப­டுத்­தி கொள்­ளுங்கள் என்று நான் தாய்­மார்­க­ளிடம் கேட்­டு கொள்­கின்றேன். அதற்கு தேவை­யான உத­வி­களை நாம் செய்வோம் என்றும் பெர்­னாண்டோ எம்­மிடம் கூறி­யி­ருந்தார்.

அந்­த­ வ­கையில் காணா­மல் ­போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யாளர் என்ற வகையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கினால் காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை தேடி குறிப்­பிட்ட தூரம் வரை செல்ல முடியும் என நிமல்கா பெர்­னாண்டோ கூறு­கிறார். ஆனால் அதற்கு முதலில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை வைக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அதி­கா­ரத்தில் இருப்­போரின் கட­மை­யாக இருக்­கி­றது.

காரணம் கடந்த காலங்­களில் இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­களின் ஊடாக காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது கண்­டு­பி­டிக்­கவும் இல்லை, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை ­நாட்­டப்­ப­டவும் இல்லை. அதனால் தான் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்து நம்­பிக்­கை­ வைக்­காத நிலை­மையில் இருக்­கின்­றனர். எனவே மக்கள் மத்தியில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அதி­கா­ரத்தில் இருப்­போரின் பொறுப்­பாகும்.

கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஜனா­தி­ப­தியின் பொறுப்­பி­லி­ருந்த நல்­லி­ணக்க அமைச்சு தற்­போது அமைச்சர் மனோ கணே­ச­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத­னூ­டாக காணா­மல் ­போனோர் அலு­வ­ல­கமும் அந்த அமைச்சின் கீழ் வரு­கி­றது. அமைச்சர் மனோ கணேசன் கடந்த காலங்­களில் காணா­மல் ­போதல், மற்றும் கடத்­தல்­க­ளுக்கு எதி­ராக போரா­டி ­வந்­தவர் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். ஆனால் அவரின் கீழ் இந்த காணா­மல் ­போனோர் அலு­வ­லகம் இயங்­கு­வதை விட ஜனா­தி­ப­தியின் கீழ் இருப்­பது பொருத்­த­மாக இருக்­கலாம் என்­பது முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு கருத்­தாக இருக்­கின்­றது.

அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே நாட்டின் தலைவர் என்ற வகையில் நேர­டி­யாக தலை­யிட்டு செயற்­ப­டு­ப­வ­ராக இருந்தால் அது­னு­டைய விளைவும் தாக்­கமும் பாதிக்­கப்­பட்ட மக்கள் விட­யத்தில் சாத­க­மாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தே­சமும் இந்த விட­யத்தில் நம்­பிக்கை வைக்கும் நிலைமை உரு­வாகும் என கரு­தப்­ப­டு­கின்­றது.

இந்த சூழலில் அமைச்சர் மனோ கணே­சனும் இது ­போன்ற ஒரு கருத்­தையே வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அதா­வது காணாமல் போனோர் அலு­வ­லகம் தற்­போது எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள தேசிய ஒருங்­கி­ணைப்பு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சின் கீழ் அடங்­கு­கின்­றது. ஆனால் காணாமல் போனோர் விடயம் என்­பது மக்­களின் உணர்­வு­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். எனவே நாட்டின் முதல் குடி­மகன் என்ற வகையில் அப்­பொ­றுப்பு ஜனா­தி­ப­தியின் பொறுப்பின் கீழ் இருப்­ப­தையே நான் விரும்­பு­கின்றேன். அத­னா­லேயே அந்த பொறுப்பை ஏற்க மறுப்பு தெரி­வித்தேன். எனினும் அமைச்சர் என்ற வகையில் அந்த விட­யத்தில் நான் எனது பூரண ஒத்­து­ழைப்­பை வழங்­குவேன் என்று அமைச்சர் மனோ கணேசன் கூறி­யி­ருக்­கின்றார்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் நீதிக்­காக ஏங்­கிக் கொண்­டி­ருக்­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்கள் விட­யத்தில் நம்­பிக்­கை­யுடன் கூடிய வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­ வேண்டும். நிறு­வப்­பட்­டுள்ள இந்த காணா­மல் ­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­லகம் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்தி அடையும் வகை­யி­லான பொறி­மு­றையை நோக்கி செல்ல வேண்டும். பாதிப்­ப­டைந்தோர் நம்­பிக்கை வைக்­கா­விடின் எந்­த­வொரு திட்­டத்­தையும் முன்­னெ­டுப்­பதில் அர்த்­த­மில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு பல­வந்­த­மாக காணாமல் போனோர் குறித்து ஆராயும் ஐக்­கிய நாடுகள் செயற்­குழு இலங்­கைக்கு விஜயம் செய்து காணா­மல் ­போனோர் குறித்து ஆராய்ந்­தி­ருந்­தது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே அந்­த குழு இவ்­வாறு ஒரு அலு­வ­ல­கத்தை நிறு­வு­மாறு பரிந்­துரை செய்­தி­ருந்­த­துடன் அந்த பரிந்­து­ரையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு முன்­வைத்­தி­ருந்­தது.

அதன் பின்னர் அந்த பரிந்­துரை 2015ஆம் ஆண்டு இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்ட ஜெனிவா பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டது. அந்த வகை­யி­லேயே தற்­போது இந்த அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமது உற­வு­களை தொலைத்து விட்டு பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­கொள்ளும் வடக்கு, கிழக்கில் துன்­பங்­களும் துய­ரங்­களும் இன்­னல்­களும் சொற்­க­ளினால் விப­ரிக்க முடி­யா­த­ள­விற்கு உள்­ளன. தமது வாழ்க்­கையை கொண்டு நடத்த முடி­யா­மலும் பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க முடி­யா­மலும் சமூக பாது­காப்பு இல்­லா­மலும் இந்த மக்கள் எதிர்­கொள்ளும் வேதனைகள் ஏராளம். அதுமட்டுமன்றி கணவனை இழந்த குடும்பத்தலைமைகளாக கொண்ட குடும்பங்கள் தமது குடும்பங்களை கொண்டு நடத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிக அதிகமாகும். எனவே இந்த மக்கள் வாழ்வாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமாயின் இந்த காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்க வேண்டும்.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையை உலகில் எவரும் மறுக்க முடியாது. அதன் அடிப்படையிலேயே காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாறு காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை சரியான முறையில் கண்டுபிடிப்பதன் மூலமே அவர்களுக்கான நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கலாம்.

எனவே இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் தீர்வு காணும் வகையிலான பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது இந்த காணாமல் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களிடம் தகவல்களை பெறும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருக்கிறது. இது எந்த வகையில் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் ெசயற்பட போகின்றது என்பதை மக்களும் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின் றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-12#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.