Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரித்துக்களை எடுத்துரைக்கச் சென்ற வடமாகாண முதல்வர்,இரணைதீவு மக்களின் கேள்விகளை அடுத்து தனக்கு காணி அதிகாரம் இல்லை என ஒப்புதல்

Featured Replies

உரித்துக்களை எடுத்துரைக்கச் சென்ற வடமாகாண முதல்வர்,இரணைதீவு மக்களின் கேள்விகளை அடுத்து தனக்கு காணி அதிகாரம் இல்லை என ஒப்புதல்

 

தமது காணிகளை மீளப் பிடித்துக்கொண்ட இரணைதீவுமக்களுக்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நிரந்தரமாக குடியேறுவதற்கான அனைத்துஉரிமைகளும் இருப்பதாக கூறிய வட மாகாண முதலமைச்சர் தனக்கு காணி அதிகாரம் இல்லை என்பதைமக்களின் கேள்விகளை அடுத்து பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

26 வருடங்களாக்கு முன்னர் தங்களைவிரட்டியடித்த ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு இரணைதீவில் மூன்று ஏக்கர் காணிகள் மாத்திரம்போதுமானது என்ற உண்மையை வட மாகாண சபை, ஆட்சி முடிவடைவதற்கு ஒருசில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அறிந்துகொண்டதாகவும்வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இரணைதீவு மக்கள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இரணைதீவு மக்களை நிரந்தரமாக குடியேறுவதற்கானஅனுமதியை ஸ்ரீலங்கா மத்திய அரசே வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வட மாகாணமுதலமைச்சருக்கு தமது காணி உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களின் கடுமையான கேள்விகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்டஇரணைத்தீவிற்கு பலவந்தமாக சென்று தமதுசொந்த காணிகளில் குடியேறியுள்ள மக்களை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்தனது வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சகிதம் நேரில் சென்றுசந்தித்த போதே மக்கள் இந்தக் கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.

1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து இரணைத்தீவில் இருந்து வெளியேறிய இந்த மக்கள்கிளிநொச்சி இரணைமாதா கிராமத்தில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

எனினும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டுவருடங்கள் பூர்த்தியடைந்தும் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர அனுமதிமறுக்கபப்ட்டதை அடுத்து இந்த மக்கள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதிநிலமீட்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு வருடம்பூர்த்தியடைகின்ற போதிலும் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாததை அடுத்து கடந்த ஏப்ரல்மாதம் 23 ஆம் திகதி இரணைதீவுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்பட்ட இரணைதீவு மக்கள்அங்குள்ள இரணைமாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

உரிய தங்குமிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரங்களும்இன்றிய நிலையில் இரணைதீவில் தங்கியிருந்த வண்ணம் நில மீட்புப் போராட்டத்தில்தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இந்த மக்களை பல்வேறு தரப்பினர் நேரில் சென்று சந்தித்துவருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாகவே வட மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டவர்கள் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று இரணைதீவுமக்களை சந்தித்துள்ளனர்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாககேட்டறிந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரணைதீவுமக்கள் நிரந்தரமாக அவர்களது சொந்தக் காணிகளில் மீளக்குடியமருவதற்கானபிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதுமிகவும் சிக்கலுக்குரியது என்று ஏற்றுக்கொண்டார்.

Image0
Image1
Image2
Image3
Image4
Image5
Image6

https://www.ibctamil.com/srilanka/80/100521?ref=home-imp-flag

சரி போனதுதான் போனீங்கள், சைக்கிள் காரர் மாதிரி புல்லையாவது சிரைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல. அடுத்த தேர்தலுக்காவது உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.