Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா வான்படைத் தளத்துக்குச் செல்ல கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா வான்படைத் தளத்துக்குச் செல்ல கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி மறுப்பு

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 05:11 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளை பார்வையிடுவதற்குச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை சிறிலங்கா வான்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்ததாவது:

தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று நாம் சென்ற போதுஇ விமானப்படை அதிகாரி எம்மை தடுத்துள்ளார்.

எனினும் நாம் நீர்கொழும்பு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த விமானப் படையினரை பார்வையிட்டோம். மேலும் இன்றும் நாம் விமானப்படைத் தளத்திற்கு செல்லவுள்ளோம். இச்சம்பவத்தின் விதிகளின் படி எமக்கு அனுமதிகள் அளிப்பது முக்கியமானது என தெரிவித்தார்.

இதனிடையே போர்நிறுத்த உடன்பாட்டினால் தான் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் விமான ஓடுபாதையை நிர்மானித்தனர் என ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் இலகு விமானங்களை கொள்வனவு செய்துள்ளனர்இ சில அரசியல்வாதிகளும் ஏனையோரும் மிக் - 27 விமானக் கொள்வனவு தொடர்பான தமது தவறான தகவல்கள் மூலம் அதனை அழிப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=31241

அனைத்துலக ஊடகங்களின் பார்வையில் தமிழீழ வான்படையின் தாக்குதல்

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 05:47 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலானது அனைத்துலக ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் வலிமையையும்இ அரசாங்கத்தின் விமான எதிர்ப்புப் பிரிவின் பலவீனத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் 'தி ஏஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

எங்களை மிகவும் குறைவாக எண்ணாதேஇ எங்களை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என எண்ணாதே என இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துக்கு கூறுவதுடன்இ கண்டுபிடிக்கவோ அல்லது தாக்கியழிக்கவோ முடியாது அவர்களால் எப்படி இந்த தாக்குதலை நடத்த முடிந்தது என கொழும்பு மக்களும் தமது அரசாங்கத்தின் மீது கேள்வியைத் தொடுத்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடனான நீண்டகாலப் போரில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை நடத்தியுள்ளனர். சிறியரக வானூர்தியின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வான்படையினர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் ரைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பிபிசி இந்த வான் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திகளில் விடுதலைப் புலிகளின் வானூர்தி மற்றும் வானூர்தியோட்டிகளின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

முதலில் மிகப்பெரும் குண்டுச் சத்தம் கேட்டதுஇ நாம் எல்லோரும் யன்னலின் பக்கம் சென்றோம். பின்னர் அமைதி நிலவியதுஇ அதனைத் தொடர்ந்து பல குண்டுச் சத்தங்களும் இயந்திரத் துப்பாக்கிகளின் சூட்டுச்சத்தங்களும் கேட்டன என வானூர்தி நிலையத்தில் நின்ற பிரித்தானியாவின் பயணியான நீல் பட்லர் தெரிவித்தாவும் அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பயணிகளைத் தொடர்ந்து வானூர்தி நிலைய அதிகாரிகளும் ஓட்டமெடுக்கத் தொடங்கினார்கள். நான் வானூர்தி நிலையத்தின் கீழ்த்தளத்திற்கு ஓடியபோது அங்கு மக்கள் பயத்துடன் சிதறி ஓடியவண்ணம் இருந்தனர். அப்போதும் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டு ஓசைகள் கேட்டவண்ணம் இருந்தன.

வானில் சிவப்புநிற ஒளிவண்ணங்களாக ஒரு வாண வேடிக்கையை என்னால் வெளியில் காணமுடிந்தது. எனினும் வானூர்தியை என்னால் காண முடியவில்லை என நீல் தெரிவித்தாக பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிழக்கு மாகாணத்தை தாம் விடுவித்துள்ளதாகவும்இ மேலும் சில பகுதிகளே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கும் போது விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்காவின் செய்தித்தளமான சிஎன்என் தகவல் வெளியிட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வின் போது இரு விமானங்கள் முள்ளியவளையில் மலர் தூவும் வரை யாருக்குமே விடுதலைப் புலிகளிடம் வானூர்திகள் இருப்பது தெரியாது. அதன் பின்னர் அச்சமடைந்த சிறிலங்காவிற்கு இந்தியா ரடார் சாதனங்களை வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ள வான் தாக்குதலானது மிகவும் ஆபத்தானது. அவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த இலக்குகளை தாக்கலாம். இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் மனவுறுதியை வழங்கியுள்ளது. இந்த தாக்குதல் விடுதலைப் புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள சமயம் நிகழ்ந்துள்ளது என ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் மீது கண்மூடித்தனமான குண்டு விச்சுக்களை நடத்திவந்த சிறிலங்கா வான்படையினரின் கிபீர் மற்றும் மிக் - 27 ரக விமானங்களை குறிவைத்து விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக அசோசியட் பிரஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

வான்படைத் தளப்பகுதியில் துப்பாக்கி வெடியோசைகளை கேட்டதாகவும்இ பெருமளவான வெளிச்சங்களை அவதானித்தாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தாக அது மேலும் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியானது எனவும் அவர்களிடம் நான்கு இலகு ரக வானூர்திகள் இருக்கலாம் எனவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. இது சிறிலங்காவிற்கு மட்டும் ஆபத்தானது அல்ல முழு பிராந்தியத்திற்கும் ஆபத்தானது என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இவை தவிர உலகெங்கும் உள்ள ஏராளமான ஊடக நிறுவனங்கள் வான் புலிகளின் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. உலகில் உள்ள விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒரு நாட்டுக்குரிய முழுக் கட்டுமானங்களையும் கொண்டுள்ள ஒரே அமைப்பு விடுதலைப் புலிகளே எனவும் அவை விபரித்துள்ளன

கண்காணிப்புக்குழுவை அனுமதித்தால் ஒரு சர்வதேச விமான நிலையத்தை இராணுவத்தேவை

களுக்காக பெரிதளவில் பாவிக்கப்பட்ட விடயம் வெளிக்கொண்டு வரப்படும். விமானப்படைக்கு

ஏற்பட்டிருக்கும் பாரிய அழிவுகள் (தற்போது 40 வீதம் எனக் கணிப்பீடு) வெளிவந்துவிடும் என்ற

காரணங்களுக்காக இப்போதைக்கு அனுமதிக்க மாட்டார்கள். எல்லாம் வேகமாகக் கிளியர் பண்ணி

ய பின்புதான்.

அதன் பின்னர் அவர்கள் இலகு விமானங்களை கொள்வனவு செய்துள்ளனர்இ சில அரசியல்வாதிகளும் ஏனையோரும் மிக் - 27 விமானக் கொள்வனவு தொடர்பான தமது தவறான தகவல்கள் மூலம் அதனை அழிப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரியதர்சன யாப்பா என்னத்தை சொல்லவாறார் அப்ப மிக்கில் கொஞ்சம்ம் காலி போல கிடக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுராதபுரம் வழியாக வந்ததா விடுதலைப் புலிகளின் தாக்குதல் விமானம்?

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:56 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினரின் தாக்குதலுக்கு முன்னதாக அனுராதபுரத்தில் நிலைகொண்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினரால் இரு அடையாளம் தெரியாத வானூர்திகள் அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அனுராதபுரத்தில் உள்ள ரடார் கருவிகள் அவற்றை கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தாக்குதல்களின் பின்னர் ரடார்களின் திரைகளில் இருந்து எவ்வாறு வானூர்திகள் தப்பிச் சென்றுள்ளன என்பது தொடர்பாகவும் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

நான் எனது பிரிவில் தூங்கிக்கொண்டு இருந்த சமயம் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றன. எமது அறையின் கூரைத்தகடுகள் நொருங்கி வீழ்ந்தனஇ நான் சீருடையை அணிந்து கொண்டு வெளியில் ஓடினேன் அதன்பின்னர் நோயாளர் காவு வாகனம் மூலம் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டேன் என இந்த தாக்குதலில் காயமடைந்த வான்படை சார்ஜன் ஆர்.டபிள்யு ராஜபக்ச தெரிவித்தார்.

இதனிடையே இந்த தாக்குதலை அடுத்து அவசரமாக ஆளும் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களை அழைத்த அரசாங்க தலைவர்இ மகிந்த ராஜபக்ச தற்போதைய நாட்டின் நிலைமைகளை விளக்கியதுடன்இ நிலைமை வழமைக்கு திரும்பியதும் வானூர்தி நிலைய வேலைகளை வழமைக்கு கொண்டு வருமாறும்இ சீதுவையில் மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க கொழும்பு பிரதான வீதியை திறக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

வான்வழித் தாக்குதலால் பங்கு சந்தையில் 12 பில்லியன் இழப்பு

விடுதலைப்புலிகளின் வான்படையினர் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலால் ரூ12 பில்லின் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்குகளை விற்பதில் பதட்டம் நிலவியதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை 892 பில்லியன் ரூபாவாக இருந்த பெறுமதி நேற்று 11.8 பி;லலியன் குறைந்து ரூபா 880 பில்லியனாக காணப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.