Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ஹெட்டிஆரச்சியை தப்பிக்க உதவியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்:

 

ஹெட்டிஆரச்சியை தப்பிக்க உதவியோரை  கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதி கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சிக்கு எவரேனும் அடைக்கலம் கொடுத்திருப்பின் அவர்களையும்,

அவர் தப்பி ஒழிந்திருக்க உதவி ஒத்தாசை அளித்த, அளிக்கும் எவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டார். 

5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே அவர் இவ்வுத்தரவை விடுத்தார்.

நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற அறிவித்தல் பிரகாரம் விளக்கமறியலில் உள்ள இரு சந்தேக நபர்களான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோர் சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை. இந் நிலையில் நீதிவான் அது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளை விளக்கம் கோரிய போது அவர்கள் சிறை வைத்தியசாலையில் இருப்பதாகவும் தவறுதலாக அழைத்து வர முடியாமல் போனதாகவும் கூறினர். இதனை கண்டித்து நீதிவான் அவ்விருவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட்டதுடன் பிற்பகல் அவர்களை மன்றில் ஆஜர் செய்த நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

வழக்கு விசாரணைகளின் போது நேற்று சட்ட மா அதிபர் சார்பில் எவரும் ஆஜராகாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபால ஆஜராகியிருந்தார். 

இந் நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் வாததுக்கு அமைவாக, நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பான பிரசன்னம் விட்டு விட்டு ஒழுங்கின்றி இருப்பதை அவதானித்த நீதிவான், அடுத்த தவணை முதல் ஒவ்வொரு தவணையிலும் சட்ட மா அதிபர் சார்பான பிரதி நிதி ஒருவர் மன்றில் ஆஜராக வேண்டும் என அறிவித்தார்.

இந் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டும், தேடப்படும் குற்றவாளியான ஹெட்டி ஆராச்சி தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு மன்றுக்கு ஜொடுத்த தகவல்களை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்றுள்ளதா என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பினார். குற்றப் புலனாய் வுப் பிரிவின் உயர் அதிகாரி, அமைச்சர்கள் கூடிய இடமொன்றில் இது தொடர்பில் கருத்துக்கள் பறிமாற்றப்பட்டதை முன்னிறுத்தி சட்டத்தரணி ஊடக செய்திகளையும் ஆதாரமாக கொண்டு இக்கேள்வியை எழுப்பினார். 

எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியால் நேற்று அக்கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.

இந் நிலையில் அது குறித்து அவதானம் செலுத்திய நீதிவான், ஹெட்டி ஆராச்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையை மீளவும் பிறப்பித்ததுடன் அவர் தொடர்பில் மேலும் இரு உத்தரவுகளைப் பிறப்பித்தார். 

 ஹெட்டி ஆராச்சி, ஒழிந்திருந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுத்தோர், கொடுப்போர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தால் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தோர், தகவல்களை மறைத்தோர் என அனைவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் அவ்வாறு ஹெட்டி ஆராச்சிக்கு எவரேனும் உதவி ஒத்தாசைகள் புரிந்திருப்பின் அவர்களது நோக்கம், அவர்கள் 5 மாணவர் உள்ளிட்ட கடத்தல்களுடன் ஏதேனும் வகையில் தொடர்புபட்டவர்களா என்பதையும் ஆராயுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் பணித்தார்.

 இந் நிலையிலேயே இது குறித்த மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்ப்ட்டு தற்போது பிணையில் உள்ள நிலையில் கடற்படை புலனயவுப் பிரிவின் முன்னாள் வீரரான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் ஆகியோர் விளக்கமறியலில் உள்ளனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.