Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக் அமெரிக்க இராணுவத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் அமெரிக்க இராணுவத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்

[27 - March - 2007]

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த வெளிநாட்டுச் செயற்பாடுகளுக்கான தலைவர் எனக் கருதப்பட்டு வரும் மத்திய கிழக்கில் புலிகள் இயக்கத்துக்காகச் செய்யப்படும் உளவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் எனக் கருதப்படுபவருமான நபர் ஒருவரைக் கடந்த வாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த நபரிடம் மூன்று லப்டப் (Laptop) கணினிகளும், செய்மதி தகவல் ரிசீவர்கள் மற்றும் செய்மதித் தொடர்பு இருப்பு நிலையத்தைக் காட்டும் ஜி.பி.எஸ்.(Global Position System) உபகரணங்களும் அத்துடன், அமெரிக்கப் பாதுகாப்பு திணைக்களத்தால் யுத்த ஆயுதங்கள் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம், பெருந்தொகையான புகைப்படங்களும் இருந்ததாகவம் அவையாவும் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பொறுப்பெடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தால் மேற்படி நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தின் இலக்கம் 0031152 என்பதாகும். இந்த அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடயத்திற்கேற்ப அவர் எம் 4, எம் 9, எம்பி 05 கே, ஏகே 47 மற்றும் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தும் குளோக்9 போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும்.மேற்படி அனுமதிப்பத்திரத்தில் வானி கவ்லி எனப்படும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள உயர் உத்தியோகத்தர் கையொப்பம் இட்டுள்ளார். அத்துடன், `மேற்படி நபர் ஈராக் இராணுவத்தின் பாலைவனச் சீருடை அணிந்த நிலையில் அவருடைய புகைப்படமும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கேற்ப அவர் ஈராக் இராணுவத்தின் பாலைவனப் படைப்பிரிவில் பணியாற்றிய ஈராக் கூலிப் படையைச் சேர்ந்த ஒரு தமிழர் என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து புலிகளுக்கான உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்த நபர், ஈராக் இராணுவத்தில் பணியாற்றியவர் என்ற தகவலை அரச உயர் பாதுகாப்புப் பிரிவுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து வெளியாகியுள்ள அரச உயர்மட்ட பாதுகாப்புத் தகவல்களுக்கேற்ப மேற்படி நபரின் பெயர் மரியானோ வாஸ் என்பதும் அவர் கிழக்கு மாகாணத்தில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சிங்கள மொழி நன்கு பேசத்தெரிந்தவராக இருக்கும் இந்தத் தமிழர், ஈராக்கில் பாக்டாட் நகரில் அமெரிக்க இராணுவ உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாக்டாட் விமான நிலையம், ஷ்ரீலங்காவில் ரந்தெனிகல, விக்ரோரியா நீர்த்தேக்கம் ஆகியவற்றின் புகைப்படங்களும் அவரிடம் இருந்தன.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் அமைப்பு பற்றிய படமொன்றும் அவரிடம் இருந்துள்ளது. மேலும், அவரிடம் ஐந்து டிஜிட்டல் கமராக்கள் இருந்ததாகவும், எனவே, இவருடன் சேர்ந்து வேறு குழுவினரும் செயற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மரியானோ வாஸ் எனப்படும் நபர் ஈராக் படையில் பணியாற்றியிருப்பதிலிருந்து அமெரிக்க இராணுவத்தில் உளவு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுக் கூலிப்படையினர் சேர்த்துக்கொள்ளப்படுவதாகக் கருதப்படுகிறது. மேற்படி நபரால் சினைப்பர் ஆயுதங்கள் முதல் விமான அழிப்பு ஏவுகணைகள் வரையில் பயன்படுத்த முடியும் என அனுமதி கொடுத்து அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வழங்கியிருக்கும் அனுமதிப் பத்திரம் பற்றித் தற்போது பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டிருப்பதுடன் அது உண்மையான அனுமதிப்பத்திரமா போலியா என்பதுபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி அமெரிக்க இராணுவ அனுமதிப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரங்களுக்கேற்ப மரியானோ வாஸ், ஈராக் அமெரிக்கப் படையில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். மேலும், அவருடைய லெப்டொப் கணினியில் பதியப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப அண்மையில் அவர் சோமாலியாவிலுள்ள அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்துகொள்வதற்காக விண்ணப்பித்திருந்ததும் தெரியவந்துள்ளது.

மரியானோ வாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றிய சந்தேகங்களும் விசாரணைகளும் முடிவில்லாதவையாகவே இருக்கும். இவ்வாறு ஈராக் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய அவர், சிறிலங்காவுக்கு வந்து குறித்த கடுவெல பகுதியில் தாங்கியிருப்பது எதற்காக, அவர் எவ்வாறு ஈராக் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து கொண்டார், அவருக்கு இங்கு தங்கியிருக்க நிதி உதவிகளை யார் செய்கிறார்கள், அவர் இவ்வாறு உயர் தொழில் நுட்ப உபகரணங்களை எதற்காக வைத்திருக்கிறார் போன்ற முக்கிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக புலனாய்வுத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். திவயின விமர்சனப்பகுதி: 25/03/2007 -

தினக்குரல்

திவயின சொன்னால் அது கட்டாயமாக ஒண்மையாத்தான் இருக்கும்! :P

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவங்கள் மன்னித்து விடுங்கள்.. பத்திரிகை நல்ல இலாபமாக ஓடுவதற்கு பரப்பான செய்திகளும் தேவைதானே!.. போடட்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.