Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலை வீழ்த்துவதற்கு கூறிய பொய் எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது -கோத்­தபாய

Featured Replies

ரணிலை வீழ்த்துவதற்கு கூறிய பொய் எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது -கோத்­தபாய

 

 

 

என்னால் மாற்­றத்தை உரு­வாக்க முடியும் என்­பது மங்­கள சம­ர­வீ­ர­வுக்கும், என்னை விமர்­சிக்கும் நபர்­க­ளுக்கும் நன்­றாக தெரியும்.  அவ்­வாறு தெரிந்தே எனக்கு எதி­ராக  பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­வைக்­கின்­றனர். அன்று ரணிலை வீழ்த்த பொய்­களை கூறி­ய­வர்கள்  இன்று என்னை வீழ்த்­தவும் அதே பொய்­களை கூறு­கின்­றனர்.  ஆனால் நான் சாதித்துகாட்­டுவேன் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக்ஷ தெரி­வித்தார். 

நாம் ஒரு­போதும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­க­ளுடன் போரா­ட­வில்லை.  பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மட்­டுமே போரா­டினோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர்  கோத்­த­பாய ராஜபக் ஷவை முதன்­மைப்­ப­டுத்தி நாட­ளா­விய  ரீதியில் முன்­னெ­டுக்­கப்­படும் வியத்­மக வேலைத்­திட்­டத்தில் நேற்று முன்­தினம் பது­ளையில் நடை­பெற்ற கூட்­டத்தில்  கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  அங்கு உரை­யாற்­று­கையில் 

யுத்­தத்தை நிறை­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் நாம் வடக்கு கிழக்கில் முன்­னெ­டுத்த அபி­வி­ருத்­திகள் குறித்து எவரும் வாய் திறப்­ப­தில்லை. நாம் யாரையும் விமர்­சித்து செயற்­ப­ட­வில்லை. எமக்கு ஒரு சவால் இருந்­தது. அதனை எவ்­வாறு வெற்றி கொள்­வது என்­பதை நாம் அறிந்­து­கொண்டோம். அதை விடுத்து நாம் எதிர்க்­கட்­சியை விமர்­சித்­துக்­கொண்டு காலத்தை கடத்­த­வில்லை. எம்­முடன் சரி­யாக செயற்­ப­டக்­கூ­டிய அணி இருந்­தது.  இன்றும் அவ்­வணி எம்­முடன் உள்­ளது. அவர்­களை கொண்டு நாட்­டினை சரி­யான பாதையில் கொண்டு செல்­லவே வியத்­மக அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்ளோம். 

அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொண்டு அதன் பின்னர் கொள்­கையை உரு­வாக்­கு­வதில்  எந்த அர்த்­தமும் இல்லை. இந்த நாட்டில் உள்ள பிரச்­சி­னைகள் குழப்­பங்கள் என்ன என்­பதை அறிந்­து­கொண்டு அவற்றை சரி­செய்யும் கொள்­கையை இப்­போதே உரு­வாக்­கிக்­கொண்டு அதன் பின்னர் அதி­கா­ரத்தில் இருக்கும் போது அதனை  நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இலங்­கையின் கல்வி முறைமை, இளை­ஞர்­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்கள் எவ்­வாறு அமைய வேண்டும் என்ற சிந்­த­னைகள் எம்­மிடம் உள்­ளன. 

இந்த நாட்டில் நாம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்த அபி­வி­ருத்தி பய­ணங்கள் முழு­மை­யாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன. தேசிய பாது­காப்பு பாரிய அச்­சு­றுத்­தலில் உள்­ளது. நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்றால் தேசிய பாது­காப்பு பல­ம­டைய வேண்டும். நாட்டின் உறு­தி­யான பாது­காப்பு கொள்கை இல்­லா­விட்டால், தேசிய பாது­காப்பு பல­வீ­ன­மாக இருந்தால் எந்­த­வொரு சர்­வ­தேச முத­லீ­டு­களும் இலங்­கைக்கு வரப்­போ­வ­தில்லை. இன்று கொழும்பில் உள்ள பாரிய நிறு­வ­னங்­களை முத­லீட்­டா­ளர்­களை  நாட்­டுக்கு நானே கொண்­டு­வந்தேன். நான் பாது­காப்பு செய­லாளர் என்ற  பொறுப்பின் கீழேயே இவை அனைத்தும் நாட்­டிற்கு கொண்­டு­வந்தேன். 

நான் நேர­டி­யாக தலை­யிட்ட இந்த நாட்­டிற்கு பல்­வேறு முத­லீட்­டா­ளர்­களை அழைத்து வந்தேன். இன்று நாட்டில் ஒரு புதிய முத­லீட்­டா­ளர்­களும் வரு­வ­தாக தெரி­ய­வில்லை. ஏனெனில் இவர்­க­ளுக்கு முத­லீட்­டா­ளர்­களை தெரி­வு­செய்ய முடி­ய­வில்லை. மேலும் நாம் கொழும்பில் உரு­வாக்­கி ­கொ­டுத்த அடுக்­கு­மாடி வீடுகள் அனைத்­தையும் கடந்த மூண்டு ஆண்­டு­களில் தாம் நிர்­மா­ணித்­த­தாக கூறி விளம்­ப­ரப்­ப­டுத்தி வரு­கின்­றனர். ஆனால் கடந்த மூன்று ஆண்­டு­களில் மக்­க­ளுக்கு பலன் கிடைத்­ததா என்­பதை  மக்­க­ளிடம் கேட்க வேண்டும். 

மேலும் கடந்த காலங்­களில்  நானே வெள்ளை வான் கடத்தல் கலா­சா­ரங்­களை உரு­வாக்­கி­ய­தாக கூறு­கின்­றனர். மங்­கள சம­ர­வீர இவ்­வா­றான கருத்­துக்­களை கூறு­கின்றார். ஆனால்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளைக்­கொண்டு   மங்­கள சம­ர­வீர போன்­ற­வர்கள் அப்­போது எலும்­பு­களை தேடி எடுக்கும் பணி­களை முன்­னெ­டுத்­தனர். அவை இன்றும் எனக்கு நினைவில் உள்­ளன. அப்­ப­டி­யாயின்  ஐக்­கிய தேசியக் கட்­சியில் யார் வெள்ளை வான் கலா­சா­ரத்தை உரு­வாக்­கி­யது? அதற்கும் மங்­கள சம­ர­வீர பதில் கூற­வேண்டும். நாம் ஒரு­போதும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­க­ளுடன் போரா­ட­வில்லை, நாம் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மாத்­தி­ரமே போரா­டினோம். இந்த நாட்டில் பாரிய அச்­சு­றுத்­த­லாக இருந்த பொது­மக்­களை பாதித்த பயங்­க­ர­வாத அமைப்­பு­டனே நாம் போராட்டம் நடத்­தினோம். மாறாக அப்­பாவி மக்­களை ஒரு­நாளும் நாம் தண்­டிக்­க­வில்லை. அப்­பாவி தமிழ் மக்­களை தோற்­க­டிக்­கவும் இல்லை. 

கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து காணா­மல்­போன ஊட­க­வி­ய­லா­ளர்­களின் எண்­ணிக்கை எத்­தனை என்ற கேள்­வியை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில வின­வி­யுள்ளார். அதற்கு உரிய அமைச்சர் பூச்­சியம் என்ற பதிலை தெரி­வித்­துள்ளார். ஆகவே சில உண்­மை­களை அர­சாங்­கமே கூறு­கின்­றது. ஆனால் பொய்­யான கதை­களை கூறி எனது பய­ணத்தை தடுக்க முயற்­சித்து வரு­கின்­றனர்.  இன்று மங்­கள சம­ர­வீர என்னைப் பற்­றிய பல விமர்­சனக் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்றார். ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் அப்­போ­தைய எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக 'ரணிலால் முடி­யாது " என்ற போஸ்­டர்­களை  நாடு பூரா­கவும் ஓட்­டினார். 

இப்­போது ஒரு சில தினங்­க­ளுக்கு முன்னர் அதற்­கான விளக்­கத்தை கொடுத்­தி­ருந்தார். ரணிலால் முடியும் என்று தெரிந்தே அவ­ரது பய­ணத்தை தடுக்க பொய்­யான பிரச்­சாரம் செய்­த­தாக கூறு­கின்றார். அதேபோல் என்னாலும் மாற்றத்தை செய்துகாட்ட முடியும் என்பது தெரிந்தே மங்கள சமரவீர பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றார். என்னால் செய்துகாட்ட முடியும் என்பது இவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால் பொய்களை கூறுகின்றனர். ஆனால் மக்கள் பொய்களை நம்பப் போவதில்லை. அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் வேண்டும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றனர். எம்மால் இந்த நாட்டினை மீட்டுக்க முடியும். எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நாட்டினை கட்டியெழுப்புவோம், அதற்கு மக்கள் எம்முடன் கைகோருங்கள்.

http://www.virakesari.lk/article/33719

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.