Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீட்சி இல்லை

Featured Replies

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீட்சி இல்லை

13-aa350a991e1684d143fb2908feb3222b09726b60.jpg

 

கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய கொள்கை உரையை நாம் இப்போது விவாதிக்கின்றோம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார். அதனை அதே கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்திருந்தார்.

இந்த அர­சாங்கம் நாட்டை ஆளக்­கூடாது என்­ப­துதான் அவர்­க­ளது உரை­களின் முக்­கிய கருப்­பொருள் என்­பதை நாம் காணலாம். ஆட்­சி­பீ­டத்­திற்கு மீண்டும் அவர்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் அல்­லது நாட்டை அவர்கள் ஆள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு வகை­செய்­ய­ப்­பட வேண்டும் என்­பது அதன் பொரு­ளாகும். அவர்கள் இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்­தி­ருக்­கி­றார்கள். தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கு முன்னர் அவர்கள் பத்து வருடம் இந்த நாட்டை ஆட்சி செய்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் அர­சாங்­கத்தை ஒப்­ப­டைத்­த­போது, கழுத்­து­வரை கடனில் மூழ்­கி­யி­ருந்­தது.

நாட்டை எதிர்­நோக்­கி­யுள்ள மிகப் பெரிய பிரச்­சி­னை­களுள் ஒன்­றாக ஜனா­தி­ப­தி­யினால் இனங்­கா­ணப்­பட்­டி­ருப்­பது வெளிநாட்டுக் கடன்­களும் உள்­நாட்டுக் கடன்­க­ளு­மாகும். எனது உரையில் நான் நாட்டை முன்­னோக்கிக் கொண்டு செல்­வ­தற்­காக, நாட்டை ஒரு மாறு­பட்ட வழியில் நடத்திச் செல்­வ­தற்­காக, நாட்­டிற்கு மாறு­பட்ட எதிர்­காலம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­களை ஆராய்வேன். வெறு­மனே அர­சாங்­கங்­களை மாற்­று­வது பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­வைக்கப் போவ­தில்லை என்­பது எனது கருத்­தாகும். மாறாக, நாடு முன்­னோக்கி நகர்­வ­தற்கு, நாடு செழிப்­பு­று­வ­தற்கு, நாட்டை அதன் தற்­போ­தைய நிலை­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்கு என்ன செய்­ய­வேண்டும் என்ற வகையில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து சிந்­திக்க வேண்டும். எனவே, எனது உரை ஒரு முற்­றிலும் மாறு­பட்ட அடிப்­ப­டையில் அமைந்­தி­ருக்கும்.

ஜனா­தி­பதி தனது உரையில் மூன்று முக்­கிய பிரச்­சி­னை­களை இனங்­காட்­டினார். ஒன்று, பொரு­ளா­தாரம் இரண்­டா­வது, தேசியப் பிரச்­சி­னை­என்று பர­வ­லாகக் குறிப்­பி­டப்­படும் வடக்கு, கிழக்குப் பிரச்­சினை மூன்­றா­வது, இலஞ்ச மற்றும் மோசடிப் பிரச்­சினை. இம்­மூன்று பிரச்­சி­னை­களும் இந்­நாட்டின் எதிர்­கா­லத்­தின்­மீது பெரும் தாக்­கத்தைக் கொண்­டி­ருக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளாகும். எனினும், இவற்றுள் இரண்­டா­வது பிரச்­சினை பற்­றியே நான் எனது உரையில் பிர­தா­ன­மாக ஆராய்வேன். அதுதான் தேசியப் பிரச்­சினை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அப்­ப­கு­தியில் வாழு­கின்ற மக்கள் தொடர்­பான பிரச்­சினை. அது, 70 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நாடு சுதந்­திரம் பெற்ற காலம் முதல் இந்­நாட்டை வாட்டி வந்­துள்­ளது. வடக்கு, கிழக்கில் உள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­மைதான் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள ஏனைய எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கும் முதன்­மை­யான கார­ண­மாக இருந்து வரு­கி­றது.

வடக்கு, கிழக்கில் உள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­ாமை­யினால் தான் நாடு இன்­றைய மோச­மான நிலையில் உள்­ளது என்­பதும் ஊழலும் மோச­டியும் இன்­றைய உச்­ச­நி­லைக்கு மோச­ம­டைந்­துள்­ளன என்­பதும் எனது கருத்­தாகும்.

வடக்கு, கிழக்குப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­த­வரை இந்த நாடு ஒரு­போதும் மீட்­சி­பெற முடி­யாது. எதிர்­க்கட்சித் தலைவர் என்ற வகையில் இந்தப் பிரச்­சி­னைக்கு முடிந்­த­வரை அதி­கூ­டிய கவனம் செலுத்­து­வதை நான் எனது கட­மை­யாகக் கரு­து­கின்றேன். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்­டுதான் நான் அதனைச் செய்­கிறேன், ஏதோ ஒரு அர­சாங்­கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அல்ல. எனது இந்த வேண்­டுகோள், இந்தப் பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­ப­தற்­காக ஒன்­றி­ணை­யு­மாறு எல்லாப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், அர­சாங்­கத்தில் உள்ள அனை­வ­ருக்கும் எதிர்க்­கட்­சியில் இருக்கும் எல்­லோ­ருக்கும் விடுக்கும் வேண்­டு­கோ­ளாகும். முழு நாட்­டி­னதும் நலனைக் கருத்தில் கொண்­டுதான் நான் இந்த வேண்­டு­கோளை விடுக்­கிறேன். தமது அர­சியல் இருப்­பிற்­காக, தமது சொந்த அர­சியல் இலா­பத்தின் மேம்­பாட்­டிற்­காக வடக்கு, கிழக்குப் பிரச்­சினை தொடர வேண்­டு­மென விரும்­பு­கின்ற ஒரு சிலரைப் போலன்றி, அனைத்து இலங்­கை­யர்­களும் இந்­நாட்டின் சம அந்­தஸ்­து­டைய பிர­ஜை­க­ளாக இருக்கும் ஒரு பிரி­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத ஓர் இலங்­கையில் நியாயம், நீதி மற்றும் சமத்­துவம் என்ற அடிப்­ப­டையில், இலங்கை அதன் அர­சி­ய­ல­மைப்­பிற்கும் சட்­டங்­க­ளுக்கும் மட்­டுமே ஆட்­பட்­டி­ருக்கும் வகையில் வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்­டு­மென நான் விரும்­பு­கின்றேன். அத­னால்தான் நாங்கள் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை வரை­வதில் ஈடு­பட்­டி­ருக்­கிறோம். இந்த முழு விட­யத்­தையும் அதன் சரி­யான கண்­ணோட்­டத்தில் இடு­வ­தற்­காக இந்தப் பின்­ன­ணி­யில்தான் நான் ஜனா­தி­பதியின் கொள்கை அறிக்­கையின் சில அம்­சங்­க­ளையும் வேறு சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­க­ளையும் ஆராய்வேன்.

அதற்கு முன்னர், 1970 ஆம் ஆண்டில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தைப் பற்றிக் குறிப்­பி­டு­வ­தற்கு நீங்கள் எனக்கு அனு­மதி வழங்­கு­வீர்­க­ளாக. 1970 ஆம் ஆண்டில் தமி­ழ­ரசுக் கட்சி தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறி­யது இதுதான். முழு நாடும் இதனை அறிந்து கொள்ள வேண்டும். நான் (அதி­லி­ருந்து) மேற்கோள் காட்­டு­கிறேன்:

நாட்டின் பிர­ிவினை, நாட்­டுக்கோ தமிழ் பேசும் மக்­க­ளுக்கோ எந்த வகை­யிலும் நன்மை பயக்­காது என்­பது எமது திட­மான நம்­பிக்­கை­யாகும். எனவே, எமது நாட்டை இரண்­டாகப் பிரிப்­ப­தற்கு சார்­பு­ரை­ செய்யும் எந்த அர­சியல் இயக்­கத்­திற்கும் தமது ஆத­ரவை வழங்க வேண்­டா­மென தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நாம் வேண்­டுகோள் விடுக்­கிறோம்.

நாட்டை இரண்­டாகப் பிரிப்­பதை தாம் எதிர்ப்­ப­தா­கவும் நாட்டை இரண்­டாகப் பிரிப்­ப­தற்கு சார்­புரை செய்யும் எந்த அர­சியல் இயக்­கத்­திற்கும் எதி­ராக தமது வாக்­கு­களை வழங்க தமிழ் மக்­களைக் கோரியும் 1970 ஆம் ஆண்டில் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமி­ழ­ரசுக் கட்சி மேற்­கொண்ட நிலைப்­பாடு இதுதான். நாங்கள் பிரி­வி­னையைக் கோரி­யுள்ளோம் என்றும், எனவே நாடு இன்று இருக்கும் நிலை­மைக்கு நாங்­கள்தான் பொறுப்பு என்றும் சிலர் எண்­ணு­வ­தாகத் தோன்­று­வ­தால்தான் நான் இதனைக் கூறு­கின்றேன்.

1970 ஆம் ஆண்டில் நடை­பெற்ற இந்தத் தேர்­தலின் பின்­னரும் 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்­னரும் தான் தனி­ய­ரசு ஒன்­றுக்­கான கோரிக்கை எழுந்­தது. எனினும், 1987 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட இந்­திய - இலங்கை சமா­தான ஒப்­பந்தம் மற்றும் அவ்­வொப்­பந்­தத்­தோடு வந்த ஒரு சில அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்கள் ஆகி­ய­வற்­றுக்குப் பின்னர் இந்த நாட்­டி­லுள்ள அனைத்துத் தமிழ்க் கட்­சி­களும் ஓர் ஐக்­கிய, பிரி­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத இலங்கை என்ற வரைச்­சட்­ட­கத்­தினுள் ஓர் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய, நியா­ய­மான தீர்வைக் காண்­ப­தற்குத் தயா­ராக இருந்து வரு­கின்­றன. அதுதான் எமது நிலைப்­பா­டாகும். அதுதான் கடந்த தேர்­தல்கள் அனைத்­திலும் எமது நிலைப்­பா­டாக இருந்­துள்­ளது. 1988 லிருந்து ஏறக்­குறைய மூன்று தசாப்­தங்­க­ளாக உள்ளூர் அதி­கார சபைகள் தேர்­தல்கள், மாகா­ண­சபைத் தேர்­தல்கள் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் என்று அனைத்துத் தேர்­தல்­க­ளிலும் அதுதான் எமது நிலைப்­பா­டாக இருந்து வரு­கி­றது

நான் முன்னர் குறிப்­பிட்­ட­வாறு, வடக்கு, கிழக்குப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­மையும், வேறு எவ­ரது கருத்­தொ­ரு­மைப்­பாடும் இன்றி அப்­போது பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­கத்­தினால் ஒரு தலைப்­பட்­ச­மாக 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­ட­மையும் தான் 1970 ஆம் ஆண்­டி­லி­ருந்து நிகழ்ந்­த­வைகள் அனைத்­திற்கும் வழி­வ­குத்­தன. அதனால் நாடு இன்­றைய நிலைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. நாடு இதே போக்கில் தொடர்ந்து சென்று எதிர்காலத்தில் இன்னும் மோச­ம­டைய வேண்­டு­மென நீங்கள் விரும்­பு­கி­றீர்­களா அல்­லது நாட்­டிற்கு ஒரு புதிய வழி­யையும் ஒரு புதிய எதிர்­கா­லத்­தையும் வழங்க விரும்­பு­கி­றீர்­களா? என்­ப­துதான் தற்­போ­தைய கேள்­வியாகும். இந்தச் சூழ்­நி­லை­யில்தான் கடந்த 8 ஆம் திகதி ஜனா­தி­பதியினால் பாரா­ளு­மன்­றத்தில் விடுக்­கப்­பட்ட அறிக்கை, ஜனா­தி­ப­தி­யினால் அதற்கு முன்னர் விடுக்­கப்­பட்ட வேறு சில அறிக்­கைகள், இப்­பா­ரா­ளு­மன்­றத்தை ஓர் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்றி இப்­பா­ரா­ளு­மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் தனது 4 தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போதும் மேற்­கொள்­ளப்­பட்ட கூற்­றுகள் ஆகி­ய­வற்றை நான் மேற்கோள் காட்ட விரும்­பு­கிறேன்.

ஜனா­தி­பதி 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய தனது உரை­யின்­போது, 8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது கூட்­டத்­தொ­டரில் நான் விடுத்த அறிக்­கையின் ஒரு விரி­வாக்­க­மாக இவ்­வு­ரையை ஆற்ற விரும்­பு­கிறேன் என்று கூறினார். அது அவர் 2015 செப்­டெம்பர் 1ஆம் திகதி ஆற்­றிய உரை. அந்த அறிக்­கையை நான் வாசிப்­ப­தற்கு முன்னர் மே மாதம் 08 ஆம் திகதி ஜனா­தி­பதி அவர்கள் ஆற்­றிய உரையில் அவர் என்ன கூறினார் என்­பதைக் குறிப்­பி­டு­கிறேன்.

ஓர் உறு­தி­யான நாட்டின் அடித்­தளம் நல்­லி­ணக்­க­மாகும். அர்த்­த­முள்ள நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்கு சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில் அர­சியல் தீர்­வு­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒரு கட்­ட­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்­து­வது முக்­கி­ய­மாகும். இக் குறிக்­கோளை அடை­யு­மு­க­மாக தற்­போ­துள்ள மாகாண சபை முறை­மையை வலுப்­ப­டுத்­து­வது இன்­றைய முக்­கிய தேவை­யாகும். எத்­த­கைய எதிர்ப்­புகள் இருப்­பினும், வடக்கு, கிழக்கில் வாழும் மக்­களின் அமை­தி­யின்மை பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தரத் தீர்வைக் காண்­ப­தற்­காக மக்­களின் கருத்­தொ­ரு­மைப்­பாட்­டு­டனும் இணக்­கப்­பாட்­டு­டனும் ஓர் அர­சியல் நிகழ்ச்சித் திட்­டத்தில் பிர­வே­சிப்­பது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

நாட்டைப் பீடித்­தி­ருக்கும் மிகவும் பார­தூர­மான பிரச்­சி­னை­களுள் ஒன்­றாக வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னையை ஜனா­தி­பதி இனங்­கண்­ட­மை­யால்தான் 8 ஆம் திகதி தான் ஆற்­றிய உரையில் ஜனா­தி­பதி வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னையைக் குறிப்­பிட்டார். 2015 செப்­டெம்பர் 1 ஆம் திகதி இப்­பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது கூட்­டத்­தொடரில் தான் உரை­யாற்­றி­ய­போது, ஜனா­தி­பதி விடுத்த அறிக்­கை­யி­லி­ருந்து நான் மேற்கோள் காட்­டு­கிறேன்.

 ஒரு தேசத்தின் அல்­லது நாட்டின் தனித்­துவம் அதன் அர­சி­ய­ல­மைப்பை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளது. அத­னால்தான் ஓர் அர­சியல் அமைப்பு மிக உயர்­வா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது. சுதந்­தி­ரத்­திற்குப் பிந்­திய 60 ஆண்­டு­களில் நாங்கள் மூன்று அர­சி­ய­ல­மைப்­பு­களை நிறை­வேற்­றி­யுள்ளோம். எனினும், நாம் அனை­வரும் ஒரே நாடு என்ற வகையில் இணங்­கி­யி­ருப்­ப­தற்கு ஏது­வாகும் ஓர் அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு எம்மால் முடி­யா­தி­ருப்­பது துர­திஷ்­ட­மாகும்.

2015 செப்­டெம்பர் 1 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றும்­போது ஜனா­தி­பதி கூறி­யது இதுதான். அதன் பின்னர் 8 ஆம் திகதி பார­ாளு­மன்­றத்தில் உரை­யாற்­றும்­போது அவர் நான் இப்­போது ஆற்­று­வது 2015 செப்­டெம்பர் 01 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது கூட்­டத்­தொ­டரில் நான் ஆற்­றிய உரையின் ஒரு தொடர்ச்­சி­யாகும் என்று கூறினார்.

2015 செப்­டெம்பர் 1 ஆம் திகதி தனது முத­லா­வது கொள்கை அறிக்­கையில் ஜனா­தி­பதி குறிப்­பிட்ட புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை வரைதல் தொடர்­பாக 2016 மார்ச் 9 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தி­லி­ருந்து மேற்கோள் காட்­டு­வ­தற்கு என்னை அனு­ம­திப்­பீர்­க­ளாக. அத்­தீர்­மானம் கூறு­வ­தா­வது,

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிப்­பதும், விருப்பு வாக்கு முறையை இல்­லா­தொ­ழிக்கும் ஒரு நியா­ய­மான பிர­தி­நி­தித்­துவ தேர்தல் முறை­மையை உறு­திப்­ப­டுத்­து­வதும், அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் ஜன­நா­யக உரி­மை­களை வலுப்­ப­டுத்­து­வதும், தேசியப் பிரச்­சி­னைக்கு ஓர் அர­சி­ய­ல­மைப்பு வாயி­லான தீர்வை வழங்­கு­வதும், தேசிய நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விப்­பதும், சட்ட ஆட்­சிக்கு மதிப்­ப­ளிக்கும் ஒரு கலா­சா­ரத்தை நிறு­வு­வதும், மனித கௌர­வத்­திற்கு உறு­தி­ய­ளிக்கும் அடிப்­படை உரி­மை­க­ளையும் சுதந்­தி­ரத்­தையும் மக்­க­ளுக்கு உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வதும் மற்றும் பொறுப்­பா­னதும் பொறுப்­புக்­கூ­று­வ­து­மான அர­சாங்­கத்தை ஊக்­கு­விப்­ப­து­மான ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது அவ­சி­ய­மாகி இருப்­ப­தாலும் அது மேலும் குறிப்­பி­டு­வ­தா­வது,

இலங்­கைக்­கான ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக கலந்­தா­ராய்தல் மற்றும் மக்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் நாடுதல் மற்றும் அர­சி­ய­ல­மைப்பின் 75 ஆம் உறுப்­பு­ரையின் கீழான அதன் அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கித்­த­லுக்­க­மைய, பாரா­ளு­மன்­றத்தின் பரி­சீ­ல­னைக்­காக அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மூ­லத்தின் நகல் ஒன்றைத் தயா­ரித்தல் ஆகிய நோக்­கங்­க­ளுக்­காக இத­ன­கத்துப் பின்னர் அர­சி­ய­ல­மைப்புச் சபை என்று குறிப்­பி­டப்­ப­டு­வதும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­து­மான ஒரு குழு இருத்தல் வேண்டும்.

 

  (தொடரும்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.