Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களத் தலைமைத்துவம் – சிக்கலில் சிக்கியிருக்கின்றது- கூறுகிறார் விக்கி.!!

Featured Replies

சிங்களத் தலைமைத்துவம் – சிக்கலில் சிக்கியிருக்கின்றது- கூறுகிறார் விக்கி.!!

Vigneshwaran-01-1.jpg
 
 
 
 

சிங்­க­ளத் தலை­மைத்­து­வம் சிக்­கல்­க­ளைச் சந்­திக்­கும் இந்­தத் தரு­ணத்­தில்­தான், ஒன்­று­பட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டி ­ருக்­கும் இடர்­க­ளைப் பற்றி எல்­லாம் உல­க­றி­யச் செய்ய வேண்­டும்.

சுயாட்­சியை வழங்க அவர்­களே முன்­வர வேண் டும். ஒரு கட்­டத்­தில் தமது தேவை­யின் நிமித்­தம் எமக்­கு­ரிய சுயாட்சி உரி­மையை அவர்­கள் கைய­ளிக்­கும் சந்­தர்ப்­பம் ஏற்­ப­டும் என்­ப­தில் நாங்­கள் திட­மான நம்­பிக்கை வைக்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் நேற்­றைய கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

 

இளை­ஞர்­கள் சுய­ந­லன்­மிக்­க­வர்­கள்
இளை­ஞர் குழாம் பல விதங்­க­ளில் முன்­னைய காலத்­தில் வாழ்ந்த எம்­ம­வர்­க­ளில் இருந்து வித்­தி­யா­ச­மா­ன­வர்­கள். நாம் வய­துக்­கும் முது­மைக்­கும் மதிப்­புக் கொடுத்­தோம். இன்று அப்­ப­டி­யில்லை. இன்­றைய பிள்­ளை­கள் உலக விட­யங்­கள் பல­தை­யும் பத்­துப் பதி­னைந்து வய­துக்கு முன்­னரே அறிந்து கொள்­கின்­றார்­கள். உலக ஞானம் அவர்­க­ளுக்கு நிரம்­ப­வும் உண்டு. அதே போல் சுய­ந­ல­மும் அவர்­க­ளுக்கு அதி­கம். உலக ஞானத்­தில் திளைத்­த­வர்­கள் பொது­வா­கவே சுய­ந­ல­மி­க­ளாக இருப்­பார்­கள் என்­பது ஞானி­க­ளின் கருத்து.

எமது காலத்­தின் பின்­னர் எமது அர­சி­யல் சமூக அமைப்­புக்­க­ளைக் கொண்டு நடத்­தப் போவது இளை­யோரே. திடீர் என்று தலை­மைத்­து­வம் அவர்­கள் வசம் செல்­வ­தி­லும் பார்க்க இப்­பொ­ழு­தி­ருந்தே அவர்­கள் தமது காரி­யங்­களை, கடப்­பா­டு­களை, கட­மை­களை உணர்ந்து நடக்­கத் தொடங்­கி­னால் அது­நன்மை தரும் என்று நம்­பு­கின்­றோம்.
தமிழ் மக்­கள் பேரவை இளை­ஞர் மகா­நாடு ஒன்­றினை நடத்த வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தது.

எதிர்­கால ஏக்­கம்
இன்று எம்­மி­டையே ஒரு வித பல­வீ­னம் உரு­வா­கி­யுள்­ளது. இளை­யோ­ரி­ட­மும் காணப்­ப­டு­கின்­றது. ஆயு­தங்­கள் மௌனிக்­கப்­பட்­ட­தும் நாம் தோற்­று­விட்­டோம் என்ற ஒரு மனோ நிலை எங்­கள் மன­தில் குடி­கொள்­ளத் தொடங்­கி­யுள்­ளது. எமது எதிர்­பார்ப்­புக்­களை நடை­மு­றைப்­ப­டுத்த இனி யார் வரப் போகின்­றார் என்ற ஒரு நம்­பிக்கை அற்ற நிலை எட்­டிப் பார்க்­கத் தொடங்­கி­யுள்­ளது. இதனை மாற்றி இளை­யோ­ரின் மன­தில் வலு­வேற்­று­வது எமது பொறுப்பு.

உலக அதி கூடிய எடைக்­கு­ரிய குத்­துச் சண்டை வெற்றி வீர­னாக ஒரு காலத்­தில் வலம் வந்த மொக­மட் அலி குத்­துச் சண்டை அரங்­கி­னுள் நடந்து கொள்­ளும் விதத்­தைப் பார்த்­தி­ருக்­கின்­றீர்­களோ எனக்­குத் தெரி­யாது. வலை­யத்­த­ளங்­க­ளில் இப்­போ­தும் பார்க்­க­லாம். அரங்­கி­னுள் நட­ன­மா­டு­வது போல் அங்­கும் இங்­கு­மாக வலம் வரு­வார். அவர் தன்­மு­கத்­துக்கு எதி­ரி­யின் எந்த ஒரு குத்­தும் படா­மல் பார்த்­துக் கொள்­வார்.

எதி­ரி­யின் குத்­துக்­கள் பல­மாக இருந்­தால் தன் கைக­ளுக்­குள் எதி­ரி­யின் தலை­யைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடி­யா­மல் ஆக்­கி­வி­டு­வார். நடு­வர் அப்­போது இரு­வ­ரை­யும் பிரித்து விடு­வார். இவ்­வாறே நட­ன­மாடி சுற்­றுக்­களை ஒவ்­வொன்­றாக முடித்­துக் கொண்டு எதி­ரி­யைப் பலம் இழக்­கச் செய்­வார். அதா­வது பலம் கொண்ட மட்­டில் எதிரி குத்த எத்­த­னித்து எத்­த­னித்து அவை வீண்­போ­கவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்­கத் தொடங்­கி­வி­டு­வார். முக­மட் அலி நட­ன­மா­டிக் கொண்டு அவ­ரி­டம் இருந்து தப்­பிப் போய் கொண்­டி­ருப்­பார். திடீ­ரென்று ஒரு சுற்­றில் அலி­யின் குத்­துக்­கள் எதி­ரி­யின் மீது சர­மா­ரி­யா­கப் பொழிய அவர் சுருண்டு நிலத்­தில் விழுந்து விடு­வார். அலி வெற்­றி­வாகை சூடு­வார்.

சிக்­கி­யுள்ள சிங்­க­ளத் தலைமை
இதனை எதற்­காக இங்கு கூறி­னேன் என்று நினைப்­பீர்­கள். கார­ணம் இருக்­கின்­றது. எமக்கு உரித்­துக்­க­ளைத் தர­ம­றுக்­கும் சிங்­கள அர­சி­யல் தலை­மைத்­து­வம் தற்­போது வலுக்­கு­றைந்து வரு­கின்­றது. அர­சி­யல் பிரச்­ச­னை­கள், பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­கள், கடன் சுமை­கள், பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கடு­மை­யான சாடல்­க­ளுக்கு உள்­ளாகி வரு­வது இவ்­வா­றான பல இடர்­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றது சிங்­க­ளத் தலை­மைத்­து­வம். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை இயற்­றா­மல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்­பது அர­சின் மேல் உலக நாடு­க­ளுக்கு இருக்­கும் மதிப்­பைக் குறைத்­துக் கொண்டு வரு­கின்­றது. இந்த நேரத்­தில் நாங்­கள் மொக­மட் அலி­யி­டம் இருந்து பாடம் படித்­துக் கொள்ள வேண்­டும்.

இந்­தத் தரு­ணத்­தில்த்­தான் தமிழ் மக்­கள் ஒன்­று­பட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்­டி­ருக்­கும் இடர்­க­ளைப் பற்றி எல்­லாம் உல­க­றி­யச் செய்ய வேண்­டும். சுயாட்­சியை வழங்க அவர்­களே முன்­வர வேண்­டும். ஒரு கட்­டத்­தில் தமது தேவை­யின் நிமித்­தம் எமக்­கு­ரிய சுயாட்சி உரி­மையை அவர்­கள் கைய­ளிக்­கும் சந்­தர்ப்­பம் ஏற்­ப­டும் என்­ப­தில் நாங்­கள் திட­மான நம்­பிக்கை வைக்க வேண்­டும். நம்­பிக்கை ஒளி மல­ரத் தொடங்­கி­னால் இளை­யோர் ஏன் நாம் எல்­லோ­ருமே புதுத்­தென்பு பெறத் தொடங்கி விடு­வோம்.

நம்­பிக்­கை­யீ­னத்­தால் தகாத விளைவு
இளை­யோ­ரி­டத்­தில் நம்­பிக்­கை­யீ­னம் குடி­கொண்­ட­தால்த்­தான் அவர்­கள் சில தகாத வழி­க­ளிலே செல்ல எத்­த­னிக்­கின்­றார்­கள். பரீட்­சை­க­ளில் போதிய புள்­ளி­கள் இல்­லாமை, மன­தில் குறிக்­கோள் இல்­லாமை, குடும்­பங்­க­ளுக்­குள் ஏச்­சுப் பேச்­சுக்­கள் என்று பல கார­ணங்­க­ளைக் கூற­லாம். சில­ருக்கு வெளி­நாட்­டுப் பணம் வந்து சேர்­வ­தால் அத­னைப் பாவிக்­கத் தெரி­யா­மல் திண்­டா­டும் நிலை­மை­யும் அவர்­களை ஆத்­தி­ரம் அடைய வைக்­கின்­றது. சிலர் வெளி­நாட்­டுப் பணத்தை உப­யோ­கித்து மோட்­டார் சைக்­கிள்­களை வாங்­கு­கின்­றார்­கள். மது அருந்­து­கின்­றார்­கள். வாக்கு வாதங்­க­ளில் ஈடு­ப­டு­கின்­றார்­கள். வன் செய­லி­லும் ஈடு­ப­டு­கின்­றார்­கள்.

அவர்­கள் மன­தில் குறிக்­கோள் இல்­லா­ததே இதற்­குக் கார­ணம். ஒன்­றில் உயர் கல்வி ரீதி­யாக நான் இந்­த­வா­றாக வரு­வேன் என்ற ஒரு குறிக்­கோள் இருக்க வேண்­டும். அல்­லது விளை­யாட்டு ரீதி­யாக அவ்­வா­றான குறிக்­கோள்­கள் இருக்­க­லாம் அல்­லது வணிக ரீதி­யா­கக் குறிக்­கோள்­கள்; இருக்­க­லாம். இல்லை என்­றால் ஏதா­வது ஒரு சம­யம் சார்­பான குறிக்­கோள்­கள் கூட இருக்­க­லாம். குறிக்­கோள்­கள் அவ­சி­யம் என்­பது எம் எல்­லோ­ருக்­குந் தெரி­யும். அர­சி­யல் ரீதி­யாக ஒரு குறிக்­கோ­ளை­யும் அதனை அடை­யும் வழி­மு­றை­க­ளை­யும் நாம் இளை­யோ­ருக்­குச் சொல்­லிக் கொடுத்­தோ­மா­னால் அவர்­களை நாம் எமது சமூ­கத்­தின் மிக வலு­வான ஒரு அல­காக மாற்­றி­ய­மைக்க முடி­யும்.

எண்­ணம் ஏன் வந்­தது ?

ஆகவே தான் இளை­ஞர் கருத்­த­ரங்­கங்­களை தமிழ் மக்­கள் பேரவை ஒழுங்கு படுத்த முன் வந்­த­மை­யின் கார­ணத்தை இப்­பொ­ழுது நீங்­கள் ஓர­ளவு உணர்ந்­தி­ருப்­பீர்­கள். இவ்­வா­றான ஒரு எண்­ணம் என்­னுள் பரி­ண­மித்­தது எப்­பொ­ழுது என்று கேட்­டீர்­க­ளா­னால் எனது விடை நகைச்­சு­வை­யாக இருக்­கும்.

என்­னைப் பத­வி­யில் இருந்து விரட்ட எம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் பல சதி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். ஆனால் ‘நாம் உங்­க­ளு­டன்’ என்று இளை­ஞர்­கள் ஒன்று கூடித் தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­திய போது நான் ஒன்­றைக் கூறி­னேன். அது நன்­றிப் பெருக்­கில் என்னை அறி­யாது வெளி­வந்த சொற்­கள். ‘நானும் உங்­க­ளு­டன் இருப்­பேன்’ என்று கூறி­னேன். பதவி பறி போகின்­றதோ இல்­லையோ ‘நான் உங்­க­ளு­டன்’ என்ற போது தான் என்­னால் இளைய சமு­தா­யத்­திற்கு ஆற்ற வேண்­டிய கட­மை­கள் என்ன என்ற கேள்வி உதித்­தது.

இளை­ஞர்­க­ளின் பலத்தை நன்­மைக்­கும் பாவிக்­க­லாம். தீய­ன­வற்­றிற்­கும் பாவிக்­க­லாம். தமிழ் மக்­கள் பேரவை அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யைக் கொடுத்து குறிக்­கோள்­க­ளைக் கொடுத்து மதிப்­பை­யும் கொடுக்க முன் வந்­தால் அவர்­கள் சமூ­கத்­தின் ஆர்­வ­லர்­க­ளாக மாறி­வி­டு­வார்­கள் என்ற முடி­வுக்கு வந்­தேன்.

இளை­யோரை தலை­யெ­டுக்க விட­வேண்­டும்

அர­சி­யல் கட்­சி­கள் இரண்­டாம் மட்ட அல்­லது மூன்­றாம் மட்ட இளை­யோ­ரைத் தலை­யெ­டுக்க விடாது அவர்­க­ளைத் தட்­டித் தட்டி வைப்­ப­தை­யும் நான் கண்­டுள்­ளேன். தலை­வர்­கள் தகைமை அற்­ற­வர்­க­ளாக இருக்­கும் போது தம்­மி­டத்தை மற்­ற­வர்­கள் பிடித்­துக் கொள்­வார்­களோ என்று அவர்­கள் சந்­தே­கிப்­பது நாம் கண்டு வரும் ஒரு நிகழ்வு. தகை­மை­யு­டை­ய­வர்­களை மேலெ­ழும்ப விட வேண்­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை தமிழ் மக்­கள் பேரவை செய்ய வேண்­டும். இளை­யோரை அடை­யா­ளம் கண்டு எம்­மு­டன் இணைத்­துக் கொள்ள முன் வர வேண்­டும். முத­லில் இளை­ஞர் அணிக்­குள்­ளும் காலம் செல்­லச் செல்ல மையச் செயற் குழு­வுக்­குள்­ளும் அவர்­களை ஈர்க்க வழி அமைக்க வேண்­டும்.

தமிழ் மக்­கள் பேரவை எமது இளைய சமு­தா­யத்தை எவ்­வாறு வழி நடத்­து­வது என்ற விட­யத்­தில் சிந்­தித்­துப் பற்­று­று­தி­யு­டன் செயற்­பட வேண்­டும். நாம் வெறும் கட­மைக்கு வேலை செய்­ப­வர்­க­ளாக இருந்­தால் எம்­மீது இளை­ஞர் சமு­தா­யத்­திற்கு சந்­தே­க­மும், ஆத்­தி­ர­மும், கோப­மும் வந்து விடும். எம்­முள் அன்­பும் கரி­ச­னை­யும் மேலெ­ழுந்­த­தால்த்­தான் அவர்­கள் எம் வழிக்கு வரு­வார்­கள்.

இளை­ஞர்­க­ளுக்­கான குறிக்­கோள்­களை அவர்­கள் மன­தில் உள்­ள­டக்க நாம் பாடு­பட வேண்­டும். கூடு­மான வரை­யில் வேலை­யில்­லா­த­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றுக் கொடுக்­க­வும் நாங்­கள் முன்­வர வேண்­டும். உன்­னத குறிக்­கோள்­களை இளை­ஞர் அணி­கள் மத்­தி­யில் விதைத்­தால் பயிர்­கள் செழித்து வள­ரு­வன. சமூ­கம் மறு­ம­லர்ச்சி அடை­யும். இளை­யோரை அர­சி­யல் ரீதி­யாக ஆற்­றுப்­ப­டுத்த நாம் எம்­மைத் தயார்ப்­ப­டுத்­திக் கொள்­வோம் – என்­றார்.

http://newuthayan.com/story/10/சிங்களத்-தலைமைத்துவம்-சிக்கலில்-சிக்கியிருக்கின்றது.html

4 hours ago, நவீனன் said:

சிங்களத் தலைமைத்துவம் – சிக்கலில் சிக்கியிருக்கின்றது-

சிங்களத் தலைமைகள் மிகமிக நீண்ட காலமாகவே சிக்கலில் தான் உள்ளது!

அந்த தமிழின படுகொலைகாரக் கும்பல்களை காப்பாற்ற காலம் காலமாக கைக்கூலி அரசியலில் கொடிகட்டி பறந்த / பறக்கும் அமிர்தலிங்கம், ....., ஆனந்தசங்கரி, ....,  டக்ளஸ், ......, கதிர்காமர்,.......,  சித்தார்த்தன்,.....,   முத்துசிவலிங்கம்,...... சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ....., முரளிதரன், ......, வித்தியாதரன்,....., சுவாமிநாதன்,....., விஜயகலா, ....,  மனோகணேசன்,....,  வகையறாக்கள் முண்டுகொடுத்து வந்துள்ளனர் / வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

B14_F5355-895_D-4_F42-_B70_E-_F8_FAAE719

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.