Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்ற பாடம் எங்கே பெற்ற இணக்கம் எது?

Featured Replies

கற்ற பாடம் எங்கே பெற்ற இணக்கம் எது?

 

யுத்­தத்தை வென்று சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­திய முப்­ப­டை­யி­னரின் தியா­கத்தைப் பாராட்டி நினை­வு­கூரும் இச்­சந்­தர்ப்­பத்தில் யுத்த காலத்தில் உயி­ரி­ழந்த பொதுமக்­க­ளையும் நினை­வு­கூர வேண்டும் எனப் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். மே மாதம் 18ஆம் திகதி பயங்­க­ர­வாதம் தோற்­க­டிக்­கப்­பட்டு யுத்­தத்தில் வென்ற நாளாகும். பயங்­க­ர­வாதம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தா­லேயே சமா­தானம் உரு­வா­னது எனவும் கூறி­யுள்ளார்.

உண்­மையில் முப்­ப­டை­யினர் தற்­கொலை சார்ந்த கொரில்லா போர் முறையை முறி­ய­டித்து நாட்டை அமை­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இவர்கள் எல்லோர் மீதுமே போர்க்­குற்றம் சுமத்­தவும் முடி­யாது. எனினும் யுத்த வெற்றி மூலம் முப்­ப­டை­யினர் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­னார்கள் எனக்­கூற முடி­யாது. அப்­பா­வி­களை கொன்ற சில­ரையும் தப்­ப­வைத்து யுத்­தமே தீர்வு என­லாமா? ஏனெனில் யுத்த வெற்றி பக்கச் சார்­பான தீர்­வையே தரும். அதா­வது வென்ற தரப்பின் பக்­கமே நியா­யத்தை வழங்கும். போர் வெற்றி மூலம் தீர்வைத் திணிப்­பதா சமா­தானமா? எனவே சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தியது எனக் கூறாமல் அமை­தியை ஏற்­ப­டுத்­திய என்றே பிர­தமர் கூறி­யி­ருக்க வேண்டும். யுத்தம் நிறை­வு­பெற்று 9 வரு­டங்கள் கழிந்­தும்­கூட சமா­தான முன்­னெ­டுப்பு இல்­லா­தி­ருப்­பதன் காரணம் என்ன? யுத்த வெற்­றிதான் சமா­தா­னமா? யுத்­த­வெற்றி முப்­ப­டை­யி­னரின் பொறுப்பு, சமா­தானம் அரசின் பொறுப்­பே­யாகும்.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த பொது­மக்­க­ளையும் நினை­வு­கூ­ர்ந்தேயாக வேண்டும் எனவும் பிர­தமர் சொல்­கிறார். அந்த சூழ்­நிலை மீண்டும் ஏற்­ப­டா­த­வாறு ஏற்­பாடு செய்­தாக வேண்டும். வெறு­மனே நினை­வு­கூர்ந்து கொண்டு மட்­டுமே இருப்­பது தீர்­வு­மல்ல, சமா­தா­ன­மு­மல்ல. வென்றோர் கொண்­டா­டு­வதும் தோற்றோர் அழு­வ­துமா சமா­தானம்?

பயங்­க­ர­வாதம் என்­பது மன உளைச்­சலின் கார­ண­மாக உரு­வாகும் மூர்க்கத் தன்­மை­யாகும். இது உயர்­வுச்­சிக்­க­லாலும் ஏற்­ப­டலாம். தாழ்­வுச்­சிக்­க­லாலும் ஏற்­ப­டலாம். பேரி­ன­வா­தி­களால் வழி நடத்­தப்­பட்ட அரச பயங்­க­ர­வா­தத்­தா­லேயே அடக்­கு­மு­றைக்­குள்­ளாகும் தரப்பும் அதைக் கையாண்­டி­ருக்­கி­றது. எனினும் பேரின அரச பயங்­க­ர­வாதம் தன்னை ஒரு தலைப்­பட்­ச­மாக நியா­யப்­ப­டுத்­திக்­கொண்டு அதற்கு முகங்­கொ­டுக்க உரு­வான பயங்­க­ர­வா­தத்­தையே அழித்­தி­ருக்­கி­றது அவ்­வ­ள­வுதான்.

ஆக பாதிக்­கப்­பட்­டோரின் பயங்­க­ர­வா­தத்தை பேரின அரச பயங்­க­ர­வாதம் அழித்­தி­ருக்­கி­றது. இதுவா சமா­தானம்? பாது­காப்­புத்­து­றையில் 100 வீதம் சிங்­க­ளவர், தமிழ் ஆயுதப் போரா­ளி­களில் 100 வீதம் தமிழர். இதுவே இன அழி­வுக்கு அதிக கார­ண­மா­கி­யது. பொது­மக்­க­ளோடு போரா­ளி­களும் இருந்தால் அழிவு அதிகம் ஏற்­படும் என்­பது உண­ரப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆக பயங்­க­ர­வாதம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தா­லேயே சமா­தானம் உரு­வா­னது எனக்கூற­மு­டி­யாது. ரோஹண விஜே­வீ­ரவின் போராட்­டத்­துக்கும் பிர­பா­க­ரனின் போராட்­டத்­துக்கும் என்ன வித்­தி­யாசம் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன வின­வி­யி­ருப்­பதும் இங்கு நோக்­கத்­தக்­க­தாகும். வறு­மையால் உழன்ற ஏழை மக்­க­ளுக்­காகவும் தொழி­லா­ளர்­க­ளுக்­கா­கவும் முத­லா­ளித்­து­வத்தை எதிர்த்து ரோஹண விஜே­வீர போரா­டினார். அது போன்றே பேரின ஆயுத அதி­கார ஒடுக்குமுறை­க­ளுக்கு எதி­ராக பிர­பா­கரன் போரா­டி­யி­ருக்­கிறார் எனும் கருத்து அவ­ரது உரையில் தொனிக்­கி­றது? ரோஹண விஜே­வீர வர்க்க ரீதி­யான அதி­கா­ரத்தை எதிர்த்தும் பிர­பா­கரன் இன ரீதி­யான ஆயுத அதி­கார ஒடுக்கு முறையை எதிர்த்தும் போரா­டி­னார்கள் என்றா கூறு­கிறார்.

அப்­ப­டி­யானால் மக்கள் விடு­தலை முன்­னணி ஆயு­தப்­போ­ராட்­டத்தை கைவிட்டுவிட்டு ஜன­நா­யக நீரோட்­டத்தில் கலந்­தி­ருப்­பது போல தமிழ்த் தரப்­பி­னரும் இப்­போது வந்­தி­ருக்­கி­றார்கள். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முயற்சி அரை நூற்­றாண்டை நெருங்­கி­யும்­கூட இன்னும் மக்கள் மயப்­ப­ட­வில்லை. வடக்­கு–­கி­ழக்கு தமிழ்த் தரப்­பி­னரின் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்­தேர்­த­லி­லேயே மக்­க­ளா­ணையைப் பெற்­று­விட்­டது.

அது வலிந்து தாக்­கி­விட்டு ஒடுங்­கி­யது. இது வலிந்து தாக்­கப்­பட்டு ஒடுக்­கப்­பட்­டது. இரண்­டுக்கும் வித்­தி­யாசம் உண்டு. அது முழு இலங்­கைக்­கு­மான அதி­கா­ரத்தைப் பெறு­வ­தற்­கான போராட்டம். இது அப­க­ரிக்­கப்­பட்ட பங்கை மீட்­ப­தற்­கான போராட்டம். முழு நாட்டின் அதி­கா­ர­முமே அதன் நோக்கம் என்­பதால் அது இதை அங்­கீ­க­ரிக்­காது, அந்த நிலை­யுடன் அது இருப்­பதால் அதை இது ஏற்­காது. இதைத்தான் அனு­ர­கு­மார திசா­நா­யக்­கவும் சுமந்­தி­ரனும் பேசு­வதில் அர்த்­த­மில்லை எனும் பொருள்­பட நான் கூறி­யி­ருந்தேன்.

இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மைத்­திரி குழு, மஹிந்த குழு, ரணில் எதிர்ப்­புக்­குழு என மூன்­றாகப் பிரிந்­தி­ருக்­கி­றது. ரணில் எதிர்ப்­புக்­கு­ழுவில் 16 எம்.­பி.க்கள் இருக்­கி­றார்கள். இதன் சார்­பாகக் கருத்­து­ரைத்த சுசில் பிரேம் ஜயந்த எம்.பி. பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருக்­கிறார்.

இலங்­கையில் நிகழ்ந்த 30 ஆண்­டு­கால யுத்­தத்தை வென்ற எமது படை­யி­னரை இழி­வாக்கும் செயல்­களை நாம் அனு­ம­திக்­க­மாட்டோம். இரா­ணுவம் வென்ற நாளையும் நாம் கொண்­டாட வேண்டும். இரா­ணுவம் வென்ற நாளை குறித்து ராஜித சேனா­ரத்ன முன்­வைத்த கருத்­துக்கள் கண்­டிக்­கத்­தக்­க­தாகும். இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர் எனும் கருத்தை முன்­வைத்து நினை­வேந்தல் நிகழ்­வுகள் வடக்கில் இடம்­பெ­று­வதில் தவ­றில்லை என ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருக்­கிறார். இதன்­மூலம் இலங்கை இரா­ணுவம் குற்­ற­மி­ழைத்­தது எனும் நிலைப்­பாட்­டையே அவர் முன்­வைத்­துள்ளார். இதுவே அரசின் உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெரி­விக்க வேண்டும்.

இறுதி யுத்தம் பற்றி தற்­போதும்கூட சர்­வ­தேச அழுத்­தங்கள் எழு­கின்­றன. அவை இலங்­கையைத் தண்­டிக்க சரி­யான சந்­தர்ப்­பத்தை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் அரசு இத்­த­கைய கருத்­துக்­களைக்கூறி சர்­வ­தே­சத்­துக்கு வலிமை சேர்ப்­பது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

கடந்த 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த எமது இரா­ணு­வத்தை நாம் பாது­காக்க வேண்டும். இவர்கள் அவர்­களை தூக்கு மேடைக்கு அனுப்பும் செயற்­பா­டு­களை அரசு கைவி­ட­வேண்டும் என்றார்.

போர்க்­குற்­றத்­தையும் ஏற்­றுக்­கொண்டு, பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு, இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்ட பின்பே ஐ.நா. மைத்­திரி அர­சுக்கு 30/1 ஆம் ஷரத்தின் கீழான நிகழ்ச்சி நிரலை முன்­வைத்து அதை இலங்கை அரசு ஏற்றுக்கொண்­டுள்­ளது. இவற்­றின்­படி 30/1 ஆம் ஷரத்தின்படி­யுள்ள நிகழ்ச்சி நிரலை முறைப்­படி மைத்­திரி, ரணில் அரசு செய்­தாக வேண்டும். இது போர்க் குற்­றச்­சாட்­டி­லி­ருந்தும் இலங்­கையை விடு­விக்க ஐ.நா. வழங்­கி­யுள்ள வாய்ப்­பாகும்.

அந்த வகையில் போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­ட­தையும் பொறுப்­புக்­கூ­றலை ஒப்­புக்­கொண்­ட­தையும் இணை அனு­ச­ர­ணையைப் பெற்­றுக்­கொண்­ட­தை­யுமே இரா­ணு­வத்தை இழி­வு­ப­டுத்தல் எனக்­கூ­றப்­பட வேண்டும். போர்­க்குற்­றத்­தி­லி­ருந்து விலக்களிப்­பதும், தண்­ட­னை­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­பதும் இழி­வு­ப­டுத்தல் அல்ல, கௌர­வப்­ப­டுத்­த­லே­யாகும்.

போர்க்­குற்­றத்­தையும் ஏற்­றுக்­கொண்டு, பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்­ட­வர்கள் போர் வெற்­றியைக் கொண்­டா­ட­லாமா? இக்­கொண்­டாட்டம் அம்­மூன்று ஏற்­பு­ரை­க­ளுக்கு முர­ணா­காதா? அவற்றை ஏற்­றுக்­கொண்ட முறைப்­படி 30/1 ஷரத்தின் நிகழ்ச்சி நிரலை அமுல்­ப­டுத்­து­வதே கண்­டிப்­பாகும். ஐ.நா.வில் போர்க்­குற்­றத்தை ஏற்றுக்கொண்­ட­வர்கள் இலங்­கையில் வெற்­றியைக் கொண்­டா­டு­கி­றார்கள் என்றால் என்ன அர்த்தம்? இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டதால் அவர்­களை முன்­வைத்து நினை­வேந்தல் தேவை­யில்லை என சுசில் பிரேம் ஜயந்த கூறி­யி­ருக்­கிறார். இது­மட்­டு­மல்ல இரா­ணுவம் போர்க்­குற்றம் செய்­தது எனும் நிலைப்­பாட்டை ராஜித சேனா­ரத்ன கொண்­டி­ருப்­ப­தா­க­வும்­கூட அவர் கண்­டித்­தி­ருக்­கிறார். இதுவா அரசின் உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு எனவும் கேட்­டி­ருக்­கிறார்.

முழுப்­பூ­ச­ணிக்­காயை இவர் சோற்றில் மறைக்­கப்­பார்க்­கி­றாரே-? ஐ.நா.வில் அரசு போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு, பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றி­ருப்­பது இவ­ருக்குத் தெரி­யாதா?

 30/1 ஆம் ஷரத்­தையும், ஐ.நா.வின் நிகழ்ச்சி நிர­லையும் அமு­லாக்கும் மனம் இல்­லா­மலா அல்­லது சூழல் அமை­யா­த­தாலா? பொறுப்­பேற்று இணை அனு­ச­ரணை பெற்ற உறு­திப்­பா­டு­க­ளி­லி­ருந்து விலக நினைக்­கி­றார்கள். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உரிய தீர்­வையும் நிவா­ர­ணங்­க­ளையும் வழங்­கு­வதன் மூலமே இரா­ணு­வத்­துக்கு உத­வலாம். பாதிக்­கப்­பட்­டோரின் நினை­வேந்­த­லுக்குப் பதி­லாக இரா­ணு­வத்தைப் பாராட்டி ஆசு­வா­சப்­ப­டுத்­து­வதன் மூல­மாக அல்ல. வழமை போல் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் சிந்­தனை வேறா­கவே இருக்­கி­றது. இரா­ணுவம் யுத்­தத்தில் வென்­றதைப் பற்றி இவர் குறிப்­பி­டு­கையில், நாட்டு மக்­க­ளுக்கு எந்­த­வித அச்­சமுமின்றி தைரி­ய­மாக நட­மா­டவும் வடக்கு, கிழக்கு தமிழர் சுதந்­தி­ர­மாக வாழவும் முடிந்­தது என்­கிறார். எந்த யுத்தம் ஓய்ந்த பிறகும் இதே­நிலை ஏற்­ப­டத்­தானே செய்யும். இதன் மூலம் அடக்­கு­முறை கார­ண­மாக சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கை­யோடு போரா­டிய வடக்கு– கிழக்கு தமி­ழரின் போராட்டம் ஒடுக்­கப்­பட்­டது வெறும் கலகம் அடக்­கப்­பட்ட செயற்­பாடு போன்­றதே என இவர் கணித்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது.

பல இலட்சம் தமிழர் கைதாக்­கப்­பட்டு போருக்கு அனுப்­பப்­பட்டு தீவி­ர­வா­தி­க­ளாக ஆக்­கப்­பட்­டார்­களாம். பலாத்­கா­ர­மாக அப்­படி அனுப்­பு­வது சர்­வ­தேச உடன்­ப­டிக்கைப்படி போர்க்­குற்­றமாம். அத்­த­கைய செயற்­பாட்டை முன்­னெ­டுத்த புலி­க­ளி­ட­மி­ருந்து தமி­ழரின் ஜன­நா­யக உரி­மை­களைப் படை­யினர் பாது­காத்து யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­னராம். பார்த்­தீர்­களா சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் வியாக்­கி­யா­னத்தை, இவர் இப்­ப­டித்தான் பல இலட்சம் தமிழர் புலி­களால் கைதாக்­கப்­பட்டே தீவிரவாதி­க­ளாக்­கப்­பட்டுப் போருக்கு அனுப்­பப்­பட்­டார்­களாம். 1976 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் வடக்கு– கிழக்கு தமி­ழரின் மக்­க­ளாணை பெற்ற சுய­நிர்­ணய, தனி இறைமை கோரிக்­கை­களை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஜே.ஆர். ஒடுக்­கி­ய­தா­லேயே அங்கு போராட்டம் தலைதூக்­கி­யது. ஆயுதம் மூலம் ஒடுக்­கு­தலா? ஆயுதம் மூலம் தற்­காத்துக் கொள்­ளு­தலா? எது போர்க்­குற்றம்?

சுய­நிர்­ணயம், இறைமை, அடிப்­படை இறை­மைகள் ஆகி­ய­வற்­றுக்­காக தற்­காப்­புக்­கென ஆயுதம் தூக்­கப்­ப­டு­வதை ஐ.நா. எதிர்ப்­ப­தாக யார் சொன்­னது? புலி­களை போர்க்­குற்­ற­வா­ளிகள் எனக்­கூ­றுவோர் தம்மை மனி­தா­பி­மான யுத்­த­வா­திகள் எனக் கூறிக்­கொண்­டார்கள்.

குறைந்த அழி­வோடு யுத்தம் முடிக்­கப்­பட்­டது என்­கி­றார்கள். காணா­ம­லாக்­கப்­பட்­டோரை 9 வரு­டங்­க­ளாகத் தேடு­கி­றார்கள். தமிழ்ப் போர்க்­கை­திகள் இல்லை என்­கி­றார்கள். விசா­ர­ணைக்கும் விருப்­ப­மில்லை. தீர்­வுக்கும் முனைப்பு இல்லை. ஒரு நரியின் தொண்­டையில் ஒரு முள் சிக்­கி­யதால் வருத்­த­முற்ற அது ஓர் அன்­னப்­ப­ற­வை­யிடம் இந்த முள்ளை எடுத்­து­விட்டால் பரிசு தருவேன் என்­றதாம், அதை நம்­பிய அன்­னப்­ப­றவை நரியின் வாய்க்குள் சொண்­டை­விட்டு முள்ளை எடுத்­து­விட்­டதாம். பின்னர் அன்­னப்­ப­றவை வாக்­கு­றுதி அளித்­த­வாறு பரிசைத் தரு­மாறு நரி­யிடம் கேட்­ட­போது நரி சொன்­னதாம் அன்­னமே உனது சொண்டு எனது வாய்க்குள் இருக்­கையில் நான் கடித்தால் எப்­படி இருந்­தி­ருக்கும்? அது போதாதா? வேறென்ன உனக்குப் பரிசு என்­றதாம்.

அது­போ­லத்தான் பேரி­ன­வா­திகள் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை, அமை­தி­யான வாழ்வு, அபி­வி­ருத்தி என்­றெல்லாம் கூறிக்­கொண்டு வடக்கு– கிழக்கு தமி­ழரின் சுயநிர்­ண­யத்­துக்கும் இறை­மைக்கும் அடிப்­படை உரி­மை­க­ளுக்கும் பிர­தி­யீ­டு­களைச் செய்ய என்­ணு­கி­றார்கள். ஆங்­கி­லேய ஆட்­சி­யாளர் இவர்­க­ளிடம் இவர்­களின் சுய­நிர்­ண­யத்­துக்கும் இறை­மைக்கும் அடிப்­படை உரி­மை­க­ளுக்கும் பக­ர­மாக மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள், அமை­தி­யான வாழ்வு, அபி­வி­ருத்தி என்­றெல்லாம் கூறி­யி­ருந்தால் இவர்கள் ஏற்­றி­ருப்­பார்­களா? மத்­திய கிழக்கில் அடக்­கு­முறை செய்யும் மேற்கு நாடு­களின் ஆதிக்­கத்தை எதிர்த்தே அங்­குள்ள மக்கள் தற்­கொ­லைக்­கான கொரில்லாப் போர் செய்­கி­றார்கள். இது உலக வல்­ல­ர­சு­களின் ஆதிக்­கத்­துக்கு எதி­ராக பல நாடு­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. வலிமை குறைந்த மூல­த­னங்­க­ளோடு வல்­ல­மை­யுள்ள சக்­தி­களை எதிர்ப்­ப­தற்கே இலகு வழி­யாக இது கையா­ளப்­ப­டு­கி­றது. இதே­வ­கைதான் மத்­திய கிழக்­கிலும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதில் உள்ளோர் முஸ்­லிம்­களே என்­ப­தால்தான் இதை முஸ்லிம் பயங்­க­ர­வாதம் என பாட்­டலி சம்­பிக்­க ரண­வக்க அடை­யா­ளப்­ப­டுத்­து­கிறார். இத்­த­கைய தாக்­கு­த­லுக்கே வல்­ல­ர­சுகள் அஞ்­சு­கின்­றன. எனினும் அவை புரியும் அரச பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை ஜன­நா­யகம் என நியா­யப்­ப­டுத்­து­கின்­றன. இதே மன­நி­லை­யில்தான் இவரும் இருக்கிறார்.

எமது நாட்டிலும் அதுபோல் ஒரு நிலை இருந்தபோதும் பொதுமக்கள் பலர் இறந்த நிலையிலும்கூட யுத்தத்தின் மூலம் ஏனைய பல பொதுமக்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எண்ணி தமிழ் மக்கள் நிம்மதி கொள்ளவேண்டும் என்றெல்லாம் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகிறார்.

வடக்கில் முஸ்லிம், சிங்கள மக்கள் வாழும் உரிமை இல்லை என பிரபாகரன் அறிவித்தாராம். அவர் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட பின் அந்த நிலை இப்போது இல்லையாம். இவர் தமிழரின் சுயநிர்ணயத்தையும் இறைமையையும் அடிப்படை உரிமைகளையும் நிலை நிறுத்திக்கொள்ளவே அப்படியொரு இறுக்கமான நிலைப்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அவர் கிழக்கையும் வடக்கோடு இணைக்க நினைத்திருக்கையில் கிழக்கில் மூன்றில் ஒரு பங்கினராகவே தமிழர்கள் இருந்ததால் அதற்கேற்ப தீர்வுகளை எடுத்திருக்கவேண்டும். அவர் ஆயுத முனைத்தீர்வை மட்டும் நம்பியதாலேயே பேரினவாதிகளும் ஆயுதமுனை வெற்றியால் முடித்து வைத்திருக்கிறார்கள். எனினும் அடக்குமுறையால் எழுந்த போராட்டத்தை ஒடுக்குவதால் மட்டும் தீர்வு வழங்கிவிட முடியாது.

பிரச்சினையின் தன்மையையும் ஆழ அகலத்தையும் அதற்கான நிரந்தரத் தீர்வையும் காணாது ஆயுத முனையில் மட்டுமே அடக்கி, ஒடுக்கி, முடக்க நினைப்பது வயிற்றுப்போக்கு உள்ளவனுக்குக் கொடுக்குப் பாய்ச்சியது போன்ற செய்கையாகும். எனவே தீர்வு எனும் மாத்திரையை வயிற்றுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் வைத்தியரும் மாத்திரையும் தற்போது இல்லை

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-02#page-5

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்... எதிர்க் கட்சி  தலைவர் பதவியை... எங்கிருந்து எடுத்தார்?  
சுமந்திரன்...  ஜனாதிபதி மைத்திரி பால சேனநாயக்காவின், சட்டத்தரணி  (வக்கீல்)  என்பது,   யாழ். களத்தில் எத்தனை பேருக்கு  தெரியும்.?  

எம் விரலை, வைத்து.... எம் கண்ணை... குத்தும்....  இவர்களை என்ன செய்வது?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.